Sunday, July 22, 2018

பிரம்மஞானியின் அறிகுறிகள்! - சாந்திபர்வம் பகுதி – 229

The indications of a Brahmagnani! | Shanti-Parva-Section-229 | Mahabharata In Tamill

(மோக்ஷதர்மம் - 565)


பதிவின் சுருக்கம் : பிரம்ம ஞானிகளின் குறியீடுகளைப் பற்றித் தேவலருக்கும் ஜைகீஷவ்யருக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "எந்த மனநிலை, கடமைகளின் எந்த வழிமுறை, எந்த ஞானம், எந்தச் சக்தி ஆகியவற்றைக் கொண்டு ஒருவன், மாற்றமில்லாததும், தொடக்ககால இயற்கைக்கு {பிரகிருதிக்கு} எட்டாததுமான பிரம்மத்தை அடைவதில் வெல்கிறான்?" என்று கேட்டான்[1].(1)

[1] "வேறு அனைத்தும் பிரகிருதியின் பாதிப்புக்கு உள்ளாகும். பரமாத்மா மட்டுமே அதனால் பாதிக்கப்படாததாகும். எனவே, பிரம்மமானது "பிரகிருதிக்கும் மேம்பட்டது" என்று எப்போதும் சொல்லப்படுகிறது. இங்கே பிரகிருதியானது மிகப் பரந்தவகையில் பொருள் கொள்ளப்படுகிறது." எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "நிவிருத்தி எனும் அறமொழுகுவதில் ஈடுபடுபவனும், குறைவாக உண்பவனும், புலன்களை முழுமையாகக் கட்டுப்படுத்தியவனுமான ஒருவனால், மாற்றமில்லாததும், தொடக்ககால இயற்கைக்கு மேலானதுமான பிரம்மத்தை அடையமுடியும்.(2) ஓ! பாரதா, இது தொடர்பாகப் பழங்கதையில் ஜைகீஷவ்யருக்கும், அசிதருக்கும் இடையில் நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(3) ஒரு காலத்தில் பெரும் ஞானம் கொண்டவரும், கடமை மற்றும் அறநெறி குறித்த உண்மைகளை முழுமையாக அறிந்தவருமான ஜைகீஷவ்யரிடம் அசித தேவலர் பேசினார்.(4)

தேவலர் {ஜைகீஷவ்யரிடம்}, "புகழப்படும்போது நீர் மகிழ்ச்சியடைவதில்லை. பழிகூறப்படும்போதோ, நிந்திக்கப்படும்போதோ நீர் கோபவசப்படுவதில்லை. உண்மையில் உமது ஞானம்தான் என்ன? இஃதை எங்கிருந்து பெற்றீர்? உண்மையில் அந்த ஞானத்தின் புகலிடம் எது?" எனக் கேட்டார்".(5)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இவ்வாறு தேவலரால் கேட்கப்பட்டவரும், கடும் தவங்களை உடைய தூய்மையானவருமான ஜைகீஷவ்யர் நம்பிக்கை நிறைந்தவையும், ஆழமான கருத்தைக் கொண்டவையும், உயர்ந்த முக்கியத்துவம் கொண்டவையுமான வார்த்தைகளைச் சொன்னார்.(6)



ஜைகீஷவ்யர் {அசித தேவலரிடம்}, "ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, அறச்செயல்களைச் செய்வோர் அனைவரின் மதிப்பீட்டில் எது உயர்ந்த கதியோ, எது உயர்ந்த லட்சியமோ, எது அமைதி நிலையோ அஃதை உமக்குச் சொல்லப் போகிறேன்.(7) ஓ! தேவலரே, புகழ்வோரிடமும், பழிப்போரிடமும் ஒன்றாகவே நடந்து கொள்பவர்களும், தங்கள் சொந்த நோன்புகள் மற்றும் நற்செயல்களை மறைப்பவர்களும்,(8) பதில்குற்றச்சாட்டுகளை வைப்பதில் ஒருபோதும் ஈடுபடாதவர்களும், நன்மையாக இருந்தாலும் (நன்மையை உண்டாக்குவதற்குப் பதில்) தீமையை உண்டாக்கும் என்று கணக்கிடப்படுபவற்றை ஒருபோதும் செய்யாதவர்களும், அடைந்த தீங்கிற்குப் பதில்தீங்கு செய்ய விரும்பாதவர்களுமான மனிதர்களே ஞானம் கொண்டவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்[1].(9) வரப்போவதை நினைத்து அவர்கள் ஒருபோதும் வருந்துவதில்லை. தங்கள் முன்னிலையில் இருப்பவற்றை மட்டும் கருத்தில் கொண்டு செய்ய வேண்டியதைச் செய்வார்கள். கடந்த காலத்தில் நடந்தவற்றுக்காக ஒருபோதும் அவர்கள் துயரில் ஈடுபட மாட்டார்கள், அல்லது அவற்றைத் தங்கள் மனங்களில் நினைத்தும் பார்க்க மாட்டார்கள்.(10)

[1] "வட்டார {வங்க} மொழிபெயர்ப்பாளர்கள் இருவரும், 8ம் சுலோகத்தின் இரண்டாவது வரியையும், 9ம் சுலோகத்தின் முதல் வரியையும் தவறாகப் பெயர்த்திருக்கிறார்கள். கே.பி.சிங்கா சில பகுதிகளைத் தவிர்த்திருக்கிறார். பர்துவான் மொழிபெயர்ப்பாளர் வழக்கம்போலவே பொருளில்லாமல் எழுதியிருக்கிறார். நிஹ்னுவந்தி Nihnuvanti என்ற வினைச்சொல்லுக்குப் பொருள் "மறைப்பது" அதாவது "தற்புகழ்ச்சி செய்து கொள்ளாமல் இருப்பது" என்பதாகும். வதிஷ்யந்தி vadishyanti என்ற வினைச்சொல் அஹிதேஹிதம் ahite hitam என்ற தொடருக்குப் பின்பு சொல்லப்பட வேண்டும். ஏனெனில் ஹிதாஹிதம் hita ahitam என்பது எதிரிடை எதிர்முன்னிலை என்ற வழிமுறையில் படிக்கப்பட வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "தேவலரே, நிந்திப்பவர்களிடத்திலும், கொண்டாடுகிறவர்களிடத்திலும் எப்பொழுதும் ஸமமாயிருந்து கொண்டு எவர்கள் அதை விலக்குகிறார்களோ அவர்களின் நடத்தையும், புண்ணியத்தையும் சொல்கிறேன். அவர்கள் அஹிதமான செய்கையைச் சொன்னாலும் சொல்லுகிறவனைப் பற்றி யாதொன்றும் பேச மாட்டார்கள். நல்ல புத்தியுள்ளவர்கள் அடிப்பவனையும் திருப்பி அடிக்க விரும்பமாட்டார்கள்; கிட்டாத பொருளைப் பற்றிச் சோகப்படமாட்டார்கள்; ஸமயத்தில் கிட்டியதைச் செய்வார்கள்; சென்றவைகளைப் பற்றியும் சோகப்படமாட்டார்கள்; அவர்களை நினைக்கவும் மாட்டார்கள்" என்றிருக்கிறது.

ஓ! தேவலரே, சக்தியையும், ஒழுங்குபடுத்தப்பட்ட மனங்களையும் கொண்ட அவர்கள், மரியாதையுடன் வேண்டிக் கொள்ளப்பட்டால், எது எவ்வழியில் செய்யப்பட வேண்டுமோ, அஃதை அவர் அனைத்துப் பொருட்களைப் பொறுத்தவரையில் எவை அவர்களுக்காகக் காத்திருக்குமோ அவற்றைத் தங்கள் விருப்பப்படியே செய்வார்கள்[2].(11) முதிர்ந்த அறிவு, பெரும் ஞானம், முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்ட கோபம் ஆகியவற்றுடன் ஆசைகளைத் தங்கள் ஆளுகையின் கீழ் வைத்திருக்கும் அவர்கள் எவருக்கும் எண்ணத்திலோ, சொல்லிலோ, செயலிலோ தீங்கிழைப்பதில்லை.(12) பொறாமை அற்ற அவர்கள் எவருக்கும் தீங்கிழைக்கமாட்டார்கள். தற்கட்டுப்பாடு கொண்ட அவர்கள், அடுத்தவரின் செழிப்பைப் பார்த்து ஒருபோதும் துன்பப்பட மாட்டார்கள்.(13) அத்தகைய மனிதர்கள் மிகைப்படுத்திப் பேசுவதையோ, மற்றவர்களைத் துதிபாடுவதில் ஈடுபடுவதையோ, அவர்களைக் குறித்துத் தவறாகப் பேசுவதையோ ஒருபோதும் செய்ய மாட்டார்கள். தங்களைப் புகழ்பவர்களாலோ, பழிப்பவர்களாலோ அவர்கள் ஒருபோதும் பாதிப்படைவதில்லை.(14) அவர்கள் தங்கள் ஆசைகள் அனைத்தையும் பொறுத்தவரையில் அமைதியான மனநிலையில் இருந்து, அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்வதிலேயே ஈடுபடுவார்கள். அவர்கள் ஒருபோதும் கோப வசப்படுவதோ, மகிழ்ச்சிக்கூத்தாடுவதோ, எவ்வுயிருக்கும் தீங்கிழைப்பதோ கிடையாது.(15)

[2] "இந்தச் சுலோகத்தைக் கே.பி.சிங்கா தவறாக மொழிபெயர்த்திருக்கிறார்" எனக் கங்குலி இங்கே தெரிவிக்கிறார். கும்பகோணம் பதிப்பில், "சக்தியும், உறுதியான விரதமுமுள்ளவர்கள் பொருள் விருப்பத்துடன் வந்த பெரியோர்களுக்குத் தம்சக்திக்குத் தக்கபடி உபகாரஞ்செய்வார்கள்.

அவர்கள், தங்கள் இதய முடிச்சுகள் அனைத்தையும் அவிழ்த்து மிக மகிழ்ச்சியாகக் கடந்து செல்வார்கள். அவர்களுக்கு நண்பர்கள் எவருமில்லை, அதே போல அவர்களும் பிறருக்கு நண்பராயிருப்பதில்லை.(16) அவர்களுக்கு எதிரிகள் எவரும் கிடையாது, அதே போல அவர்களும் பிற உயிரினங்களுக்கு எதிரிகளாக இருப்பதில்லை. உண்மையில், இவ்வழியில் வாழக்கூடிய மனிதர்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவே தங்கள் வாழ்வைக் கடத்துவார்கள்[3].(17) ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, அறம் மற்றும் அறநெறிகளின் விதிகளில் ஞானத்தை அடைவோரும், அவ்விதிகளை நடைமுறையில் பயில்வோரும் இன்பத்தை அடைவதில் வெல்வார்கள், அதே வேளையில் அறவழியில் இருந்து வீழ்ந்தவர்கள் துன்பங்கள் மற்றும் துயரங்களால் பீடிக்கப்படுவார்கள்.(18) நான் இப்போது அறவழியைப் பின்பற்றுகிறேன். பிறரால் இகழப்படுவதன் மூலம், அவர்களிடம் நான் ஏன் எரிச்சல் அடைய வேண்டும்? அல்லது பிறரால் புகழப்படுவதன் மூலம், அவர்களிடம் நான் ஏன் நிறைவு கொள்ள வேண்டும்?(19) மனிதர்கள் தாங்கள் ஈடுபடும் செயல்களில் இருந்து அவர்கள் விரும்பிய எந்தப் பொருளையும் அடையட்டும். (ஈட்டல் மற்றும் இழத்தலில் நான் வேறுபாடற்றவனாக இருக்கிறேன்). புகழும், இகழும் என் வளர்ச்சிக்கோ, குறைவிற்கோ பங்களிக்க இயலாதவையாக இருக்கின்றன[4].(20)

[3] கும்பகோணம் பதிப்பில், "ஹ்ருதயக்ரந்தியென்னும் அஜ்ஞானத்தை விலக்கிவிட்டு ஸுகமாக உலாவி கொண்டிருப்பார்கள். மற்ற பிராணிகளுக்கும் பந்துக்களாயிருக்கிற இவர்களுக்கு வேறு பந்துக்களில்லை. எவர்கள் ஒருவனுக்கும் விரோதிகளல்லரோ அவர்களுக்கு விரோதிகளுமில்லை. இவ்விதம் நடக்கிற மனிதர்கள் எப்போதும் ஸுகமாக ஜீவிப்பார்கள்" என்றிருக்கிறது.

[4] கும்பகோணம் பதிப்பில், "மனிதர்கள் எதை எதை விரும்புகிறார்களோ விரும்பங்காரணத்தால அதை அதை அடைகிறார்கள். நிந்தையாலும், ஸ்துதியாலும் குறைவும் வளர்ச்சியும் எனக்கு உண்டாவதில்லை" என்றிருக்கிறது.

பொருட்களின் உண்மைகளைப் புரிந்து கொண்டவன், அவமதிப்பையே கூட அமுதமாக எண்ணி நிறைவை அடைவான். அறிவுள்ள மனிதன், மதிப்பையே நஞ்சாக எண்ணி உண்மையில் எரிச்சலடைவான்.(21) இந்தக் களங்கங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவன் பிறரால் அவமதிக்கப்பட்டாலும் இம்மையிலும், மறுமையிலும் அச்சமில்லாமல் உறங்குவான். மறுபுறம், அவனை அவமதிப்பவனோ அழிவை அடைவான்.(22) எந்த ஞானியர் உயர்ந்த கதியை அடைய முனைவார்களோ அவர்கள் இத்தகைய ஒழுக்கத்தைப் பின்பற்றியே வெற்றியை அடைவார்கள்.(23) தன் புலன்கள் அனைத்தையும் வென்ற மனிதன், வேள்விகள் அனைத்தையும் செய்தவனாகக் கருதப்படுகிறான். அத்தகைய மனிதன், அழிவில்லாத்தும், தொடக்கக் கால இயற்கையும் {பிரகிருதியும்} எட்டமுடியாமல் விஞ்சி நிற்கும் உயர்ந்த ஏணியுமான பிரம்மத்தை அடைவான்.(24) தேவர்கள், கந்தர்வர்கள், பிசாசங்கள், ராட்சசர்கள் ஆகியோராலும் கூட இந்த உயர்ந்த கதியை அடைந்தவனின் ஏணியை எட்ட முடியாது" என்றார் {ஜைகீஷவ்யர்}".(25)

சாந்திபர்வம் பகுதி – 229ல் உள்ள சுலோகங்கள் : 25

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்