Wednesday, September 19, 2018

வேள்வியும் பிரம்மமும்! - சாந்திபர்வம் பகுதி – 272

Brahma and Sacrifice! | Shanti-Parva-Section-271 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 99)


பதிவின் சுருக்கம் : வேள்வியில் உயிர்க்கொலை நேர்வதால் அஃது இழிந்ததென்பற்காக நாரதர் சொன்ன உஞ்சவிருத்தி பிராமணரின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "(இதயத் தூய்மை, அல்லது தேவ மகிமை என்ற) ஒரே நோக்கத்திற்காக உள்ளவை எனக் கருதப்படும் பல்வேறு வகை வேள்விகளில், ஓ! பாட்டா, எந்த வேள்வியானது, சொர்க்கத்தையோ, செல்வத்தையோ அடைவதற்காக அல்லாமல் அறத்திற்காக (அல்லது அறமீட்டுவதற்காக) மட்டுமே விதிக்கப்பட்டிருக்கிறது என்பதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாக, வேள்விகளைச் செய்வதற்காக உஞ்ச முறையின்படி வாழ்ந்து வந்த ஒரு பிராமணரைக் குறித்து முன்பு நாரதரால் சொல்லப்பட்ட வரலாற்றை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(2)

நாரதர் {பீஷ்மரிடம்}, "அறத்திற்காகத் தனித்தறியப்பட்ட ஒரு முதன்மையான நாட்டில் {விதர்ப்ப நாட்டில்} ஒரு பிராமணர் வாழ்ந்து வந்தார்[1]. தவங்களில் அர்ப்பணிப்புடன், உஞ்ச முறையின் படி வாழ்ந்து வந்த அந்தப் பிராமணர், வேள்விகளில் விஷ்ணுவைத் துதிப்பதில் மெய்யுறுதிப்பாட்டுடன் ஈடுபட்டு வந்தார்[2].(3) அவர், சியாமாகம் {சாமைத்தானியம்}, ஸூர்யபர்ணி {மாஷபருணி [ஒரு பயறு வகை]}, ஸுவர்ச்சலை {பிராமிசகம் / ஆளிவிதைகள்} மற்றும் கசப்பானவையும், சுவையில் இனிமையற்றவையுமான வேறுவகைக் கீரைகளை {சாகங்களையும்} தம் உணவாகக் கொண்டார். எனினும், அவரது தவத்தின் விளைவாக இவை அனைத்தும் இனிமையாகச் சுவைத்தன.(4) எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைக்காமல், வானப்பிரஸ்த வாழ்வை வாழ்ந்த அவர் தவ வெற்றியை அடைந்தார். ஓ! எதிரிகளை எரிப்பவரே {பீஷ்மரே}, கிழங்குகளையும், கனிகளையும் கொண்டு அவர், தமக்குச் சொர்க்கத்தை அளிக்கவல்ல வேள்விகளில் விஷ்ணுவைத் துதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்[3].(5)

[1] கும்பகோணம் பதிப்பில், "விதர்ப்ப தேசத்தில் சிறந்ததான தர்மோத்தரமென்ற ராஜ்யத்தில் உஞ்சவிருத்தி செய்யும் ஒரு பிராம்மணரிஷி இருந்தார்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அந்தப் பிராமணர், அறம் பயிலும் நாடுகளில் சிறந்த விதர்ப்பத்தில் வாழ்ந்து வந்தார்" என்றிருக்கிறது.

[2] "அறுவடை செய்யும் உழவர்களால் களங்களில் கைவிடப்படும் தானியங்களைச் சேகரித்து அவற்றில் வாழும் ஒரு மனிதர் உஞ்ச முறையின்படி வாழ்பவராக அழைக்கப்படுகிறார். இங்கே குறிப்பிடப்படும் யக்ஞம் என்பது ஸ்ருதிகளில் விளக்கப்பட்டவாறு விஷ்ணுவைக் குறிக்கும் என உரையாசிரியர் ஊகிக்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[3] "அவர் விலங்குகளை அடைய முடியாத காரணத்தால் வேள்விகளில் ஒருபோதும் விலங்குகளைக் கொல்லாமல் இருந்தார். எனவே, அவர் அவ்விலங்குகளுக்குப் பதிலாகக் காய்கறிகளைப் பயன்படுத்தினார். தம்மைச் சொர்க்கத்திற்கு இட்டுச் செல்லும் என்ற நோக்கத்தில் செய்யப்பட்ட அவரது வேள்விகள் நோக்கத்தால் உண்மையில் கொடூரமானவையாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.



சத்தியர் என்ற பெயரைக் கொண்ட அந்தப் பிராமணருக்கு, பஷ்கரதாரிணி {புஷ்கரமாலினி / புஷ்கரசாரினி} என்ற பெயரில் ஒரு மனைவி இருந்தாள். அவள் தூய மனதைக் கொண்டவளாக இருந்தாள், மேலும் அவள் கடும் நோன்புகள் பலவற்றால் தன்னை மெலியச் செய்திருந்தாள். (அவள் நன்மையைத் தரும் மனநிலையில் இருந்தாலும், அவளது கணவர், இவ்வாறு கொடூரமான வேள்விகளுக்கு அடிமையாக இருந்தார்). அவள் தன் தலைவரின் ஒழுக்கத்தை அங்கீகரிக்கவில்லை. எனினும், (வேள்வி செய்வதற்காக) அவரது மனைவியாக அவரருகில் அமர அழைக்கும்போது, அவரது சாபத்திற்கு அஞ்சிய அவள், அவரது நடத்தைக்குத் தக்கவே தன்னைத் தகவமைத்துக் கொண்டாள். அவளது உடலை மறைத்திருந்த ஆடைகள் மயில்களின் (உதிர்ந்த) தோகைகளாலானதாக இருந்தது.(6,7) இதில் அவள் விருப்பமில்லாதவளாக இருந்தாலும், ஹோத்ரியாக {தீக்ஷிதராக} இருந்த தன் தலைவரின் ஆணையின் பேரில் அந்த வேள்வியைச் செய்தாள். அந்தக் காட்டில், அந்தப் பிராமணரின் ஆசிரமத்திற்கருகில், மானின் வடிவத்தை ஏற்றவரும் சுக்ர குலத்தைச் சேர்ந்தவரும், அறம்சார்ந்தவருமான பர்னாதர் என்பவர் வாழ்ந்து வந்தார்[4]. அவர் {பர்னாதர்}, சத்தியர் என்ற பெயர் கொண்ட அந்தப் பிராமணரிடம் வெளிப்படையாகப் பேசும் வகையில், "மந்திரங்கள் மற்றும் சடங்குகளுக்குரிய பிற பொருட்களில் குறைபாடுள்ள இதுபோன்ற வகையில் உமது வேள்வி நிறைவடைந்தால், நீர் மிகவும் முறையற்ற வகையில் செயல்பட்டவராவீர். எனவே, உமது வேள்வி நெருப்புக்கான ஆகுதிகளைச் செய்வதற்காக என்னைக் கொன்று துண்டுகளாக வெட்டுவீராக. இதைச் செய்து, பழியற்றவராகி, சொர்க்கத்திற்கு உயர்வீராக" என்றார்.(8-10)

[4] கும்பகோணம் பதிப்பில், "தர்மமறிந்ததும், சருகுகளைப் புஜிப்பதுமான ஒரு மிருகமானது சுக்ரர் பலமுறை கட்டளையிட்டதனால் அந்த வனத்தில் அவர் சமீபத்தில் வஸித்துக் கொண்டிருந்தது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அந்தக் காட்டில், மிகத் தொலைவில் அல்லாமல் அருகிலேயே சுக்ர குல வழியில் வந்த ஒரு மனிதர் வசித்து வந்தார். அவர் மானின் வடிவில் இருந்தார், அவர் பொறாமை கொண்டவராகவும், அதர்மத்தைப் பின்பற்றுபவராகவும் இருந்தார்" என்றிருக்கிறது.

அப்போது சூரிய வட்டிலின் தலைமைத் தேவியான சாவித்திரி உடல் கொண்ட வடிவத்துடன் அந்த வேள்விக்கு வந்து, அந்த மான் செய்யச் சொன்னதை அந்தப் பிராமணர் {சத்தியர்} செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினாள். இவ்வாறு வற்புறுத்திய அந்தத் தேவியிடம் அந்தப் பிராமணர், "நான் வசிக்குமிடத்திற்கு அருகிலேயே வாழும் இந்த மானை நான் கொல்ல மாட்டேன்" என்று மறுமொழி கூறினார்.(11)

இவ்வாறு அந்தப் பிராமணரால் சொல்லப்பட்ட தேவி சாவித்திரி, விலகியவளாக அந்த வேள்வியின் (பிற) குறைகளைக் காண்பதைத் தவிர்க்கவும், பாதாள உலகை ஆய்வு செய்யவும் விரும்பி அந்த வேள்வி நெருப்புக்குள் நுழைந்தாள்.(12) பிறகு அந்த மானானது {கலைமானானது}, (தன்னைத் துண்டுகளாக வெட்டி வேள்வி நெருப்பில் ஊற்றுமாறு) சத்தியரிடம் மன்றாடிக் கேட்டது. எனினும், நட்புடன் அவரை {மானின் வடிவத்தில் இருந்த பர்னாதரை} ஆரத்தழுவி, "செல்வீராக" என்று சொல்லி விடைகொடுத்து அனுப்பினார்.(13) இதனால் அந்த மான் அந்த இடத்தை விட்டுச் செல்வதாகத் தெரிந்தது. ஆனால் எட்டு அடி எடுத்து வைத்ததும் மீண்டும் திரும்பி, "உண்மையில் என்னை நீர் கொல்வீராக. உம்மால் கொல்லப்படும் நான் நியாயமான கதியை நிச்சயம் அடைவேன் என்று உமக்கு உண்மையாகச் சொல்கிறேன். நான் உமக்கு (தெய்வீகப்) பார்வைக் கொடுக்கிறேன். தெய்வீக அப்சரஸ்களையும், உயர் ஆன்ம கந்தர்வர்களின் அழகிய வாகனங்களையும் காண்பீராக" என்றது.(15)

ஏக்கத்துடன் கூடிய கண்களால், நீண்ட நேரம் (அந்தக் காட்சியைக்) கண்டும், (வேள்விக்காக வேண்டும்) அந்த மானைக் கண்டும், கொலையால் மட்டுமே சொர்க்கவாசத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கையிலும், (அந்த மான் சொன்ன ஆலோசனையை) அவர் அங்கீகரித்தார் {தீர்மானம் கொண்டார்}.(16) தர்மனே மானாகி அந்தக் காட்டில் பல வருடங்கள் மானாக வாழ்ந்து வந்தான். (வாய்ப்பைக் கண்டு மயங்கிய பிராமணரைக் கண்ட) தர்மன், அவரது விடுதலைக்கான ஆலோசனைகளைச் சொல்லும் வகையில், "வேள்வி குறித்த விதிகளுக்கு இஃது (உயிரினங்களைக் கொல்வது) இணக்கமானதில்லை" என்றான்[5].(17)

[5] கும்பகோணம் பதிப்பில், "மிருகமாகிப் பல வருஷங்கள் வனத்தில் வஸித்துக் கொண்டிருந்த அந்தத் தர்மமானது அந்தப் பாவத்திற்குப் பரிஹாரத்தைச் செய்து கொண்டது. இது யாகத்திற்கு ஏற்பட்ட நல்ல விதியில்லை" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.

அந்தப் பிராமணரின் மனம் மானைக் கொல்ல விரும்பிய இந்தச் சிந்தனையின் விளைவால், அவர் செய்த பெரிய அளவிலான தவங்கள் மிகவும் குறைந்த நிலையை அடைந்தன. எனவே, உயிரினங்களுக்குத் தீங்கிழைப்பது வேள்வியின் எந்தப் பகுதியுமாகாது[6].(18) சிறப்புமிக்கத் தர்மன், (தன் உண்மை வடிவை ஏற்று), அந்தப் பிராமணர் வேள்வி செய்வதற்காகப் புரோஹித அலுவலைச் செய்து துணைபுரிந்தான். அதன் பிறகு, அந்தப் பிராமணர் (புத்துயிர் பெற்ற) தமது தவங்களின் விளைவால், தமது மனைவியின் மனநிலையை அடைந்தார்[7]".(19) வெகுமதிகளைப் பொறுத்தவரையில் தீங்கிழையாமை என்ற அறமே முழுமையானதாகும். எனினும், கொடுமையைக் கொண்ட அறமானது, (முடிவுடன் கூடிய) சொர்க்கம் என்ற அளவுக்கு மட்டுமே நன்மையைத் தரும். நான் உம்மிடம் பிரம்மத்தை உச்சரிப்பவர்களின் அறமான வாய்மை அறத்தைக் குறித்துப் பேசிருக்கிறேன்" {என்றார் நாரதர்}.(20)

[6] கும்பகோணம் பதிப்பில், "அப்பொழுது மிருகஹிம்ஸை செய்ய நினைத்த அவருடைய அவ்வித அபிப்பிராயத்தால் பெரிய தவம் நசித்துவிட்டது. ஆகையால், ஹிம்ஸையானது யாகத்திற்கு உரியதன்று" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில் இதைத் தர்மனே சொல்வது போல் வருகிறது. "மானைக் கொன்று வேள்வி செய்ய உமது மனத்தில் நினைக்காதீர். அதனால் பெருந்தவங்கள் அழிவடையும். வேள்விகளில் எந்த வன்முறையும் இருக்கக்கூடாது" என்று தர்மன் சொல்வது போல வருகிறது.

[7] "இங்கே சொல்லப்படும் சமாதானம் Samaadhaanam என்பது தியானத்தில் ஆழ்வது, அல்லது உலகில் எந்தப் பற்றும் கொள்ளாத மனநிலையைக் குறிக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "பிறகு அவர் தவத்தினால் மனைவியின் பெரிய ஸமாதானத்தையும் அடைந்தார்" என்றிருக்கிறது.

சாந்திபர்வம் பகுதி – 272ல் உள்ள சுலோகங்கள் : 20

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்