Wednesday, September 19, 2018

அறத்தின் மேன்மை! - சாந்திபர்வம் பகுதி – 273

The greatness of virtue! | Shanti-Parva-Section-273 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 100)


பதிவின் சுருக்கம் : ஒருவன் மேன்மையடைவதற்கு அறமே காரணமென யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "எந்த வழிமுறைகளின் மூலம் ஒரு மனிதன் பாவம் நிறைந்தவனாகிறான்? எதன் மூலம் அவன் அறமீட்டுகிறான்? எதன் மூலம் அவன் துறைவை அடைகிறான்? எதன் மூலம் அவன் விடுதலையை {முக்தியை} வென்றெடுக்கிறான்?" என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "நீ கடமைகள் அனைத்தையும் அறிவாய். உன் தீர்மானங்களை உறுதி செய்து கொள்வதற்காக மட்டுமே நீ இக்கேள்வியைக் கேட்கிறாய். விடுதலை {முக்தி}, துறவு, பாவம், அறம் ஆகியவற்றை, அவற்றின் வேர் வரை இப்போது கேட்பாயாக.(2) ஐந்து {புலன் நுகர்} பொருட்களை (வடிவம் {ஒளி}, சுவை, மணம், ஒலி, தீண்டல் {ஊறு})[1] உணரும் எவனுடைய விருப்பமும் முதலில் அவற்றின் பின்னால் ஓடுவதிலேயே இருக்கிறது. உண்மையில், ஓ! பாரதக் குலத்தின் தலைவா, புலன்களின் அகப்பாட்டெல்லைக்குள் அவை வந்ததும், விருப்போ வெறுப்போ எழுகிறது.(3) ஒருவன், அந்தப் பொருளை அடைவதற்காக (விரும்பியதை அடைவதற்காகவும், வெறுப்பதைத் தவிர்ப்பதற்காகவும்) முனைந்து, அதிக உழைப்பைக் கோரும் செயல்களைத் தொடங்குகிறான். அவனுக்கு மிக ஏற்புடையவையாகத் தோன்றும் வடிவங்களையும், மணங்களையும் (எஞ்சிய மூன்று புலன்களுக்குரிய மூன்று பொருட்களையும்) மீண்டும் மீண்டும் அனுபவிப்பதற்காகத் தன்னால் முடிந்த சிறந்த முறையில் முயற்சிக்கிறான்.(4)

[1] கும்பகோணம் பதிப்பில், "புருஷனானவன் (சப்தஸ்பர்ச ரூப ரஸ கந்தங்களென்கிற) ஐந்து விஷயங்களுடைய அனுபவத்திற்காக இச்சையை முன்னிட்டுப் பிரவ்ருத்திக்கிறானல்லவா?" என்றிருக்கிறது.

படிப்படியாக, பற்று {ராகம்}, வெறுப்பு {த்வேஷம்}, பேராசை {லோபம்}, தீர்மானப்பிழை {மோகம்} ஆகியவை எழுகின்றன.(5) பேராசை மற்றும் பிழையில் மூழ்கியதும், பற்று மற்றும் வெறுப்பினால் பாதிப்படைந்ததுமான மனம் ஒருபோதும் அறத்தை நோக்கிச் செல்லாது.(6) உண்மையில், அவன் கபடமான முறையில் அறத்தை அடைய முயற்சிக்கிறான், கபடமான முறையில் செல்வத்தை அடைய விரும்புகிறான். ஓ! குருகுலத்தின் மகனே {யுதிஷ்டிரனே}, கபடத்தால் செல்வத்தை ஈட்டுவதில் ஒருவன் வெல்லும்போது,(7) அத்தகைய ஈட்டலில் முழுமையாகத் தன் இதயத்தை நிறுத்துகிறான். அப்போதுதான் அவன், நலன்விரும்பிகள் மற்றும் விவேகிகளால் நயமாகக் கண்டிக்கப்பட்டாலும், அறிவுக்குச் சரியாகப் பொருந்தக்கூடியவையும், சாத்திரவிதிகளுக்கு இணங்கக்கூடியவையுமான பதில்களை அனைவருக்கும் அளித்து, பாவம் நிறைந்த செயல்களைச் செய்யத் தொடங்குகிறான்.(8)

அவன் பாவம் நிறைந்த வகையில் சிந்திப்பதாலும், பாவம் நிறைந்த வகையில் பேசுவதாலும், பாவம் நிறைந்த வகையில் செயல்படுவதாலும், பற்று மற்றும் பிழையில் பிறந்த அவனது மூவகைப் பாவங்கள் மிக வேகமாக அதிகரிக்கின்றன.(9) அவன் பாவ வழியில் நடக்கத் தொடங்கும்போதே, நல்லோர் அவனது தீய தன்மையைக் குறித்துக் கொள்கின்றனர். எனினும், அந்தப் பாவம் நிறைந்த மனிதனுக்கு ஒப்பான மனநிலையுடன் கூடியவர்கள், அவனுடன் நட்பு கொள்கின்றனர்.(10) அவன் இம்மையில் மகிழ்ச்சி அடைவதில் வெல்வதில்லை. அவ்வாறிருக்கையில், மறுமையில் எவ்வாறு மகிழ்ச்சியை அடைவான்? இவ்வாறே ஒருவன் பாவம் நிறைந்தவனாகிறான். அறவோர் குறித்து இப்போது உனக்குச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(11) அத்தகைய மனிதன் எந்த அளவுக்குப் பிறரின் நன்மையை நாடுகிறானோ, அந்த அளவுக்குத் தனக்கான நன்மையை அடைவதில் வெல்கிறான். பிற மக்களுக்கான நன்மை நிறைந்த கடமைகளைப் பயில்வதன் மூலம், அவன் மிக உயர்ந்த கதியை இறுதியில் அடைகிறான்.(12)



எவன், தன் ஞானத்தின் உதவியுடன் மேற்குறிப்பிட்ட குற்றங்களைக் காண்கிறானோ, எவன் மகிழ்ச்சி எது, துன்பம் எது, அவை ஒவ்வொன்றும் எவ்வாறு அடையப்படுகிறது என்பதைத் தீர்மானிப்பதில் திறம் பெற்றவனாக இருக்கிறானோ, எவன் நல்லோரிடம் மதிப்புடன் காத்திருக்கிறானோ {பணிவிடை செய்கிறானோ},(13) அவன் நல்லோருடனான பழக்கம் மற்றும் அத்தகைய தோழமை ஆகிய இரண்டின் விளைவால் அறத்தை ஈட்டுவதில் முன்னேற்றமடைகிறான். அத்தகையவனின் மனமானது, அறத்தில் திளைக்கும், அவன் அறத்தையே தன் ஆதரவாகச் செய்து கொண்டு வாழ்வான்.(14) அவன் செல்வத்தை ஈட்டுவதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினால், அத்தகைய செல்வத்தை நல்வழிகளில் அடைவதற்கு மட்டுமே அவன் விரும்புவான்.(15) உண்மையில், அவன் தகுதியை {புண்ணியத்தைக்} காணும் பொருட்களின் வேர்களில் மட்டுமே நீரை ஊற்றுவான். இவ்வழியிலேயே ஒருவன் அறவோனாகி, நல்லோரைத் தன் நண்பர்களாக அடைகிறான்.(16)

நண்பர்கள், செல்வம், பிள்ளைகள் ஆகியவற்றை அடைவதன் விளைவால் அவன் இம்மையிலும், மறுமையிலும் மகிழ்ச்சியாக இருக்கிறான். (இன்பத்தைப் பொறுத்தவரையில்) எந்த உயிரினமும், தான் பெறும் ஒலி, தீண்டல், சுவை, வடிவம் மற்றும் மணம் ஆகியவற்றில் சிறப்பாளுமையை அறத்தின் கனியாக {தர்ம பலமாக} அடைகிறது. இதை நினைவில் கொள்வாயாக. ஓ! யுதிஷ்டிரா, அறத்தின் கனியை {தர்மபலத்தைப்} பெற்ற மனிதன் இன்பத்திற்கு வசப்படுவதில்லை.(17,18) (புலப்படத்தக்க) இத்தகைய அறத்தின் கனிகளில் நிறைவடையாமல், ஞானக்கண்ணால் வழிநடத்தப்படும் அவன் துறவை மேற்கொள்கிறான். அவன் ஞானக்கண்ணை அடையும்போது, சுவை மற்றும் மணம் முதலிய ஆசைகளின் நிறைவில் இன்பங்கொள்வதை நிறுத்துகிறான்.(19) அவன் தன் மனத்தை ஒலி, தீண்டல், வடிவம் முதலியவற்றை நோக்கி ஓட அனுமதிக்காத போதுதான், ஆசையில் இருந்து விடுபடுவதில் வெல்கிறான். எனினும் அவன் அறத்தையோ, அறச்செயல்களையோ ஒருபோதும் கைவிடமாட்டான்.(20)

பிறகு, உலகங்கள் அனைத்தும் அழியத்தக்கனவே என்பதைக் காணும் அவன், (சொர்க்கம் மற்றும் இன்பம் ஆகிய வடிவங்களிலான வெகுமதிகளுடன் கூடிய) அறத்தைக் கைவிட முனைந்து, (நன்கறியப்பட்ட) வழிமுறைகளின் மூலம் விடுதலையை {முக்தியை} அடைய முயற்சிக்கிறான்.(21) பாவம் நிறைந்த அனைத்துச் செயல்களையும் படிப்படியாகக் கைவிடும் அவன், துறவை மேற்கொண்டு, அற ஆன்மாவாகி, இறுதியில் விடுதலையை {முக்தியை} அடைவதில் வெல்கிறான்.(22) ஓ! மகனே {யுதிஷ்டிரனே}, ஓ! பாரதா, நீ கேட்ட பாவம், அறம், துறவு, விடுதலை {முக்தி} ஆகியவற்றைக் குறித்து நான் இப்போது சொன்னேன்.(23) எனவே, ஓ! யுதிஷ்டிரா, நீ அனைத்துச் சூழ்நிலைகளிலும் அறத்தையே பின்பற்ற வேண்டும். ஓ! குந்தியின் மகனே, அறத்தைப் பின்பற்றும் உனக்கு வெற்றி நித்தியமானதாகும்" என்றார் {பீஷ்மர்}[2].(24)

[2] "இங்கே குறிப்பிடப்படும் தர்மம் dharma நிஷ்காம தர்மமாகும் Nishkaam dharm {ஆசையற்ற அறம்}. ஏனெனில் சகாம தர்மங்கள் Sakaama dharma {ஆசைகளுடன் கூடிய அறங்கள்} நித்தியமானவையல்ல, சொர்க்கம் போன்ற பொருட்களுக்கு ஒரு முடிவு உண்டு" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

சாந்திபர்வம் பகுதி – 273ல் உள்ள சுலோகங்கள் : 24

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்