Wednesday, June 26, 2019

புலால்மறுத்தல்! - அநுசாஸனபர்வம் பகுதி – 114

Denial of meat! | Anusasana-Parva-Section-114 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 114)


பதிவின் சுருக்கம் : நான்கு வகை அஹிம்ஸை; புலால் மறுத்தல் ஆகியவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இதன்பிறகு, பெரும் சக்தி கொண்டவனும், நாநயமிக்க மனிதர்களில் முதன்மையானவனுமான மன்னன் யுதிஷ்டிரன், கணைப்படுக்கையில் கிடக்கும் பெரும்பாட்டனிடம் {பீஷ்மரிடம்} பின்வரும் சொற்களைச் சொன்னான்.(1)


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பெரும் நுண்ணறிவுமிக்கவரே, வேதங்களின் அதிகாரத்தினால் வழிநடத்தப்படும் முனிவர்கள், பிராமணர்கள் மற்றும் தேவர்கள் ஆகியோர் அனைவரும் கருணையையே தன் குறியீடாகக் கொண்ட அறத்தை மெச்சுகிறார்கள்.(2) ஆனால், ஓ! மன்னா, நாம் உம்மிடம் கேட்பது என்னவென்றால்: சொல், எண்ணம், செயல் ஆகியவற்றில் பிறருக்குத் தீங்கிழைத்த மனிதன், துன்பத்தில் இருந்து தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வதில் எவ்வாறு வெல்கிறான்?" என்று கேட்டான்.(3)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "பிரம்மத்தை ஓதுபவர்கள், கருணை, அல்லது தீங்கிழையாமை {கொல்லாமை / அஹிம்ஸை} நான்கு வகையானது என்று சொல்லியிருக்கின்றனர். இந்த நான்கு வகைகளில் ஒன்று நோற்கப்படாவிட்டாலும் கருணையறம் {அஹிம்ஸை} நோற்கப்பட்டதாகாது என்று சொல்லப்படுகிறது.(4) நான்கு கால்களைக் கொண்ட விலங்குகள் யாவும் மூன்று கால்களில் நிற்க இயலாததைப் போலவே கருணையறத்தாலும் நான்கு வகைகளில் ஒன்றில்லாவிட்டாலும் நிற்க இயலாது.(5) பிற உயிரினங்களின் காலடித்தடங்கள் அனைத்தையும் யானையின் காலடித்தடம் விழுங்கிவிடுவதைப் போலவே வேறு அறங்கள் அனைத்தும் கருணையறத்தில் {அஹிம்ஸையில்} உள்ளடங்கிவிடுகிறது என்று சொல்லப்படுகிறது. செயல்கள், சொற்கள் மற்றும் எண்ணங்களின் மூலமாக ஒருவன் தீங்கிழைக்கும் குற்றவாளியாகிறான்[1].(6,7)

[1] "ஒரு கொலையைச் செய்வதன் மூலம் ஒருவன் குற்றவாளியாகிறான். பிறரை கொலை செய்யச் செய்வதன் மூலமும் ஒருவன் குற்றவாளியாகிறான். மனத்தால் ஒரு கொலைச் செயலைச் செய்தவனும் குற்றவாளியே ஆகிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

தொடக்கத்திலேயே அதை மனத்தில் இருந்து அகற்றும் ஒருவன் அடுத்ததாக அதைச் சொல் மற்றும் எண்ணத்தில் இருந்தும் விலக்க வேண்டும். இவ்விதியின்படி இறைச்சியுண்பதைத் தவிர்க்கும் ஒருவன் மூன்று வழிகளில் {எண்ணம், சொல் மற்றும் செயல் வழிகளில்} தூய்மையடைந்தவனாகச் சொல்லப்படுகிறான்.(8) பிரம்மம் ஓதுபவர்கள் (இறைச்சியுண்ணும் பாவத்திற்கான) மூன்று காரணங்களைக் குறிப்பிடுவதாகக் கேள்விப்படுகிறோம். அந்தப் பாவம் மனம், சொற்கள் மற்றும் செயல்களில் பற்றியிருக்கலாம்.(9) இந்தக் காரணத்தினாலேயே தவங்களுடன் கூடிய ஞானம் கொண்ட மனிதர்கள் இறைச்சி உண்பதைத் தவிர்க்கிறார்கள். ஓ! மன்னா, இறைச்சியுண்பதால் ஏற்படும் குற்றங்களை {தோஷங்களை} உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக.(10)

பிற விலங்குகளின் இறைச்சியானது ஒருவனுடைய மகனின் சதையைப் போன்றதாகும். அறியாமையில் மயங்கி இறைச்சியுண்ணும் மூடன், மனிதர்களில் இழிந்தவனாகக் கருதப்படுகிறான்.(11) தந்தையும், தாயும் இணைவதால் சந்ததி உண்டாகிறது. அதே வகையிலேயே ஓர் ஆதரவற்ற, பாவம் நிறைந்த இழிந்தவன் இழைக்கும் கொடுமையே, பெரும் துன்பம் நிறைந்த மறுபிறவிகளைக் கொண்ட சந்ததியை மீண்டும் மீண்டும் உண்டாக்குகிறது.(12) சுவையுணர்வு அல்லது சுவையின் அறிவுக்குக் காரணமாக நாக்கு இருப்பதைப் போலவே, பற்றானது சுவையிலிருந்தே உண்டாகிறது எனச் சாத்திரங்கள் அறிவிக்கின்றன[2].(13) நன்கு தோல்நீக்கப்பட்டு, உப்புடனோ, உப்பில்லாமலோ சமைக்கப்படும் இறைச்சியை ஒருவன் எவ்வடிவில் உண்டாலும், அது படிப்படியாக மனத்தை ஈர்த்து, அதற்கு அவனை அடிமையாக்குகிறது.(14)

[2] "இறைச்சி உண்பதன் மூலம் ஒருவனுடைய இறைச்சியுண்ணும் ஆசை அதிகரிக்கிறது. இவ்வாறே இறைச்சியில் சுவை அல்லது விருப்பம் உண்டாகிறது. எனவே சிறந்த நடைமுறை முற்றிலும் தவிர்ப்பதே ஆகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

இறைச்சியுண்டு வாழும் மூட மனிதர்களால் (தெய்வீகப்) பேரிகைகள், மிருதங்கங்கள், யாழ் மற்றும் தந்திக்கருவிகளின் இனிய இசையைக் கேட்பதில் எவ்வாறு வெல்ல முடியும்?(15) உணரப்பட முடியாதது, விவரிக்க முடியாதது, கற்பனை செய்ய முடியாதது என இறைச்சி குறித்து {இல்லாததைச்} சொல்லும் ஊனுண்பவர்கள் அதன் சுவையில் மயக்கமடைந்து அதை உயர்வாக மெச்சுகிறார்கள்.(16) இவ்வாறு இறைச்சியைப் புகழ்வதும் பாவம் நிறைந்ததாகும். பழங்காலத்தில், அறவோர் பலர், தங்கள் உடலின் சதையைக் கொடுத்து, பிற உயிரினங்களின் சதையைக் காத்தார்கள். பலன்தரும் அத்தகைய செயல்களின் விளைவாக அவர்கள் சொர்க்கத்திற்குச் சென்றார்கள்.(17) ஓ! ஏகாதிபதி, இவ்வழியில் கருணையறமானது, நான்கு கருத்துகளால் சூழப்பட்டுள்ளது. இவ்வாறு அனைத்து அறங்களையும் தன்னகத்தே கொண்ட கருணையறத்தைச் சொன்னேன்" என்றார் {பீஷ்மர்}[3].(18)

[3] தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்.   (திருக்குறள் 251)

அநுசாஸனபர்வம் பகுதி – 114ல் உள்ள சுலோகங்கள் : 18

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்