Friday, September 13, 2019

அஸ்வமேத யாகம் செய்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 03

Do thou Aswamedha Sacrifice! | Aswamedha-Parva-Section-03 | Mahabharata In Tamil

(அஸ்வமேதிக பர்வம் - 03)


பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனிடம் குதிரை வேள்வியைச் செய்யச் சொன்ன வியாசர்; அதற்குப் போதிய பொருளின்மையைச் சுட்டிக்காட்டிய யுதிஷ்டிரன்; மருத்தனின் வேள்வியில் எஞ்சிய பொருளைக் கொண்டு வரச் சொன்ன வியாசர்...


வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! யுதிஷ்டிரா, உனக்கு ஞானம் போதவில்லை என நான் கருதுகிறேன். ஒருவனும் தன் சொந்த ஒழுக்கத்தால் எந்தச் செயலையும் செய்வதில்லை.(1) ஓ! கௌரவமளிப்பவனே, தெய்வமே நல்ல, அல்லது தீய செயல்களில் அவனை ஈடுபடுத்துகிறது. இதில் வருந்துவதற்கு எங்கே இடமிருக்கிறது?(2) இழிசெயல்களைச் செய்துவிட்டதாக நீயே கருதிக் கொள்கிறாய். எனவே, ஓ! பாரதா, பாவத்தைக் களையும் வழியைக் கேட்பாயாக.(3)


பாவமிழைப்பவர்கள், ஓ! யுதிஷ்டிரா, தவம், வேள்வி மற்றும் கொடைகளின் மூலம் தங்களை அவற்றிலிருந்து எப்போதும் விடுவித்துக் கொள்ளலாம்.(4) ஓ! மன்னா, ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, பாவம் நிறைந்த மக்கள், வேள்வி, தவங்கள் மற்றும் ஈகையினால் தூய்மையடைகின்றனர்.(5) உயர் ஆன்ம தேவர்களும், அசுரர்களும் அறத்தகுதியை ஈட்டுவதற்காக வேள்விகளைச் செய்கின்றனர்; எனவே, வேள்விகள் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவையாகின்றன.(6) உயர் ஆன்ம தேவர்கள் வேள்விகளின் மூலமே இவ்வளவு அற்புதமிக்கப் பலசாலிகளாக வளர்ந்தனர்; சடங்குகளைச் செய்தே அவர்கள் தானவர்களை வெற்றி கொண்டார்கள்.(7)

ஓ! யுதிஷ்டிரா, ராஜசூயம், குதிரை வேள்வி ஆகியவற்றையும், சர்வமேதம் மற்றும் நரமேதம் ஆகியவற்றையும் செய்வதற்கு நீ ஆயத்தமாவாயாக[1].(8) தசரதனின் மைந்தனான ராமனைப் போன்றோ, துஷ்மந்தன் {துஷ்யந்தன்} மற்றும் சகுந்தலையின் மைந்தனும், பூமியின் தலைவனும், அதிகப் பலம் வாய்ந்தவனும், உன் மூதாதையுமான மன்னன் பரதனைப் போன்றோ, விதிக்கு இணக்கமான வகையில் தக்ஷிணைகளுடன் கூடிய குதிரை வேள்வியை {அஸ்வமேத யாகத்தை} நீ செய்வாயாக" என்றார் (9,10).

[1] "நரமேதம் என்பது மனித வேள்வியாகும். அந்தக் காலத்தில் மனிதர்களைப் பலி கொடுக்கும் வேள்வி நடைமுறை வழக்கில் இருந்தது என்பது இதன் மூலம் தெரிகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, "குதிரை வேள்வியானது இளவரசர்களைத் தூய்மையடையச் செய்யும் என்பது ஐயத்திற்கு அப்பாற்பட்டதாகும். ஆனால், நீர் கேட்கத்தகுந்த ஒரு கருத்தையும் நான் கொண்டுள்ளேன்.(11) ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, பெரும் எண்ணிக்கையிலான இரத்த உறவினர்களைப் படுகொலை செய்து விட்டு சிறு அளவிலான கொடையை அளிப்பதற்குக் கூட நான் இயலாதவனாக இருக்கிறேன்; கொடுப்பதற்கு என்னிடம் செல்வமேதும் இல்லை.(12) துன்பத்தில் இருப்பவர்களும், பச்சையான {ஆறாத புதிய} காயம் கொண்டவர்களும், பரிதாப நிலையில் இருப்பவர்களும், மன்னர்களின் மகன்களுமான இந்தச் சிறுவர்களிடம் என்னால் செல்வத்தை வேண்ட முடியாது.(13) ஓ! இருபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நானே பூமியை அளித்துவிட்டு, பெருஞ்சோகத்தில் இருக்கும்போது, ஒரு வேள்வியைச் செய்வதற்காக எவ்வாறு என்னால் கப்பம் விதிக்க முடியும்?(14)

ஓ! தவசிகளில் சிறந்தவரே, துரியோதனனின் குற்றத்தால் பூமியின் மன்னர்கள் அழிவை அடைந்தனர், {அதன் காரணமாக} நாங்களும் சிறுமைகளை அறுவடை செய்தோம்.(15) செல்வத்துக்காகத் துரியோதனன் பூமியைப் பாழாக்கினான்; தீய மனம் கொண்ட அந்தத் திருதராஷ்டிர மகனின் {துரியோதனனின்} கருவூலமும் வெறுமையாக உள்ளது.(16) (இவ்வேள்வியில்) பூமியே தக்ஷிணை; முதல் சந்தர்ப்பத்தில் பரிந்துரைக்கப்பட்ட விதி இதுவே ஆகும். இவ்வாறு அனுமதிக்கப்பட்டிருந்தாலும், கல்விமான்களால் இவ்விதி வழக்கமாகத் தலைகீழாகவே செய்யப்படுகிறது.(17) மேலும், ஓ! தவசியே, (இந்தச் செயல்முறைக்கு) மாற்றாக எதையும் கொள்ள நான் விரும்பவில்லை.[2] ஓ! மதிப்பிற்குரிய ஐயா, இக்காரியத்தில், உமது ஆலோசனையைச் சொல்லி எனக்கு உதவுவதே உமக்குத் தகும்" என்றான் {யுதிஷ்டிரன்}.(18)

[2] கும்பகோணம் பதிப்பில், "அஸ்வமேதமென்னும் இந்தப் பெரிய யாகத்தில் பூமியே தக்ஷிணையென்று கற்றறிந்தவர்கள் கண்டிருக்கின்றனர். மிகுந்து வைத்துக் கொள்வது விதிக்கு மாறாகும். தபோதனரே, (இதற்கு) பிரதியாக வேறு தக்ஷிணையைக் கொடுத்து யாகம் செய்ய எனக்கு இஷ்டமில்லை" என்றிருக்கிறது.

பிருதையின் மகனால் {குந்தியின் மகன் யுதிஷ்டிரனால்} இவ்வாறு சொல்லப்பட்டதும், சிறிது நேரம் சிந்தித்த கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்}, நீதிமானான அம்மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்},(19) "(இப்போது) வெறுமையாக இருக்கும் இந்தக் கருவூலம் நிறையும். ஓ! பிருதையின் மகனே, உயர் ஆன்ம மருத்தனின் வேள்வியில் பிராமணர்களால் விட்டுச் செல்லப்பட்ட தங்கம் இமவான் (இமய) மலையில் இருக்கிறது" என்றார்[3].(20,21)

[3] "மன்னன் மருத்தன் இமய மலையில் வைத்துப் பிராமணர்களுக்குப் பொன் கொடுத்து ஒரு வேள்வியைச் செய்தான். அவர்களால் மொத்த அளவையும் சுமந்து செல்ல முடியாததால், முடிந்த அளவுக்கு எடுத்துக் கொண்டு, எஞ்சியதை அங்கேயே விட்டுச் சென்றனர்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, "மருத்தனால் செய்யப்பட்ட அவ்வேள்வியில் எவ்வாறு அவ்வளவு தங்கத்தைத் திரட்ட முடிந்தது? மேலும், ஓ! பேசுபவர்களில் முதன்மையானவரே, அவன் {மருத்தன்} எப்போது {எக்காலத்தில்} ஆட்சி செய்தான்?" என்று கேட்டான்.(22)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பிருதையின் மகனே, கரந்தம குலத்தில் உதித்த அம்மன்னனை {மருத்தனைக்} குறித்துக் கேட்க ஆவல் உனக்கிருந்தால், பெரும் பலம் மிக்கவனும், பெருஞ்செல்வம் கொண்டவனுமான அந்த ஏகாதிபதி எப்போது ஆண்டான் என்பதைச் சொல்கிறேன் கேட்பாயாக" என்றார்.(23)

அஸ்வமேதபர்வம் பகுதி – 03ல் உள்ள சுலோகங்கள் : 23

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்