Friday, September 13, 2019

அரசமுனி மருத்தன்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 04

Royal sage Marutta! | Aswamedha-Parva-Section-04 | Mahabharata In Tamil

(அஸ்வமேதிக பர்வம் - 04)


பதிவின் சுருக்கம் : ஸம்வர்த்தர் மற்றும் மருத்தன் ஆகியோரின் வரலாற்றை யுதிஷ்டிரனுக்குச் சொல்லத் தொடங்கிய வியாசர்; இமய மலையின் வடபுறத்தில் வேள்வி செய்யத் தொடங்கிய ராஜரிஷி மருத்தன்...


யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, "ஓ! அறம் சார்ந்தவரே, அரசமுனியான மருத்தனின் வரலாற்றை நான் கேட்க விரும்புகிறேன். ஓ! துவைபாயனரே {வியாசரே}, ஓ! பாவமற்றவரே, அதை நீர் எனக்குச் சொல்வீராக" என்றான்.(1)


வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! குழந்தாய், கிருத யுகத்தில் மனு (பூமியின்) செங்கோல் தரித்த தலைவராக இருந்தார். அவரது மகன் பிரசாந்தி {பிரஜாதி} என்று அறியப்பட்டான்.(2) பிரசாந்திக்கு க்ஷுபன் {க்ஷுதன்} என்ற மகன் இருந்தான். தலைவனான மன்னன் இக்ஷ்வாகு, க்ஷுபனின் மகனே ஆவான்.(3) ஓ! மன்னா, அவனுடைய {இக்ஷ்வாகுவினுடைய} நூறு மகன்களும் முதன்மையான பக்தி கொண்டவர்களாக இருந்தனர். மன்னன் இக்ஷ்வாகுவினால் அவர்கள் அனைவரும் ஏகாதிபதிகளாக்கப்பட்டனர்.(4) அவர்களில் மூத்தவனான விம்சன், ஒரு முதன்மையான வில்லாளியானான். ஓ! பாரதா, மங்கலனான விவிம்சன், விம்சனின் மகனாவான்.(5)

ஓ! மன்னா, விவிம்சனுக்குப் பதினைந்து மகன்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும், பலமிக்க வில்லாளிகளாகவும், பிராமணர்களை மதிப்பவர்களாகவும், வாய்மை பேசுபவர்களாகவும்,(6) மென்மையானவர்களாகவும், எப்போதும் நல்லதையே பேசுபவர்களாகவும் இருந்தனர். அனைவருக்கும் மூத்தவனான கனீநேத்ரன், தன் தம்பிகள் அனைவரையும் ஒடுக்கினான்.(7) மொத்த நாட்டையும் கைப்பற்றி, தொல்லைகள் அனைத்தையும் களைந்த கனீநேத்ரனால் தன் மேலாதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை; மக்களும் அவனிடம் நிறைவடையவில்லை.(8) ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவனே, அவனை அரியணையில் இருந்து இறக்கிய அவர்கள், அவனது மகனான ஸுவர்ச்சனுக்கு {ஸுவர்ச்சஸுக்கு} அரசுரிமையில் அதிகாரம் வழங்கி, (தங்கள் இதயங்களில்) மகிழ்ந்திருந்தனர்.(9)

தந்தையின் தீய நடத்தையையும், அவன் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதையும் கண்ட அவன் {ஸுவர்ச்சன்}, மக்களுக்கு நன்மை செய்வதில் எப்போதும் முனைப்புள்ளவனாகவும், பிரம்மத்தில் அர்ப்பணிப்புள்ளவனாகவும், வாய்மை பேசுபவனாகவும், புலன்கள் மற்றும் எண்ணங்களை அடக்கித் தூய்மை பயில்பவனாகவும் இருந்தான். தொடர்ந்த அறம் பயில்பவனான அந்த உயர் ஆன்மாவிடம் {ஸுவர்ச்சனிடம்} குடிமக்களும் நல்ல நிறைவுடன் இருந்தனர்.(10,11) அவன் {ஸுவர்ச்சன்} தொடர்ந்து அறச்செயல்கள் செய்து வந்ததால் அவனது கருவூலங்களும், வாகனங்களும் வெகுவாகக் குறைந்தன. அவனது கருவூலம் வெறுமையானதால், சிற்றரசு இளவரசர்கள் அவனைச் சூழ்ந்து தொல்லை கொடுக்கத் தொடங்கினர்.(12) கருவூலம், குதிரைகள் மற்றும் வாகனங்கள் எண்ணிக்கையில் குறைந்திருக்கும் வேளையில், பல பகைவர்களால் இவ்வாறு ஒடுக்கப்படும்போது, மன்னன் தன்னை ஆதரிப்பவர்களுடனும், தன் தலைநகரின் குடிமக்களுடனும் பெருந்தொல்லைக்கு ஆளானான்.(13) அவனது {ஸுவர்ச்சனது} சக்தி பெரிதும் குறைந்தாலும், அம்மன்னனின் சக்தி அறத்தில் நிறுவப்பட்டிருந்ததால் பகைவர்களால் அவனைக் கொல்ல இயலவில்லை.(14) அவன் தன் குடிமக்களுடன் சேர்ந்து பெருந்துன்பத்தின் எல்லையை அடைந்தபோது, அவன் தன் கையை (வாயினால்) ஊதினான், அதிலிருந்து படைகள் தோன்றின.(15) அவன் தன் ஆட்சிக்குட்பட்ட பகுதியின் எல்லைகளில் வாழ்ந்தபடியே அந்த மன்னர்கள் அனைவரையும் வெற்றி கொண்டான். ஓ! மன்னா, இந்தச் சூழ்நிலையிலிருந்து அவன் கரந்தமன்[1] என்று {என்ற பெயரால்} கொண்டாடப்பட்டான்.(16)

[1] "கரந்தமன் என்றால் கையை {கரத்தை} ஊதியவன் என்று பொருள்" எனக் கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில் இருக்கிறது.

அவனது மகன், (முதலாம்) காரந்தமன் {அவிக்ஷித்}, திரேதா யுகத்தின் தொடக்கத்தில் இந்திரனுக்கு இணையான ஒளியைக் கண்டு, அருள் கொண்டவனாகவும், தேவர்களாலும் வெல்லப்பட முடியாதவனாகவும் இருந்தான்.(17) அந்நேரத்தில் அனைத்தும் மன்னர்களும் அவனது கட்டுப்பாட்டில் இருந்தனர்; அதே போல, அவன் தன் செல்வம் கொண்டு செய்த செயல்களாலும், தன்னுடைய ஆற்றலாலும் அவர்களுக்கு மத்தியில் பேரரசனானான்.(18) சுருக்கமாக {சொல்வதென்றால்}, அவிக்ஷித் என்ற பெயரைக் கொண்ட அந்த அறம் சார்ந்த மன்னன் {முதலாம் காரந்தமன்}, வீரத்தில் இந்திரனைப் போன்றவனாக இருந்தான்; மேலும் அவன் வேள்விகள் செய்வதில் அர்ப்பணிப்புள்ளவனாகவும், தன் புலன்களை அடக்கியவனாகவும் இருந்தான்.(19) அவன், சக்தியில் சூரியனுக்கு ஒப்பானவனாகவும், பொறுமையில் பூமாதேவியைப் போன்றவனாகவும், புத்தியில் இந்திரனைப் போன்றவனாகவும், அமைதியில் இமவான் {இமய} மலையைப் போன்றவனாகவும் இருந்தான்.(20) கல்விமானும், திறன்மிக்கவருமான அங்கிரஸைப் புரோகிதராகக் கொண்டவனும், நூறு குதிரை வேள்விகளைச் செய்தவனுமான அந்த மன்னன் {அவிக்ஷித் / முதலாம் காரந்தமன்}, தன் செயல், எண்ணம், பேச்சு, தற்கட்டுப்பாடு மற்றும் பொறுமை ஆகியவற்றின் மூலம் தன் குடிமக்களின் இதயங்களை மகிழ்ச்சியடையச் செய்தான்.(21,22)

மன்னர்களின் தலைவனும், மருத்தன் என்ற பெயரைக் கொண்டவனுமான அவனுடைய மகன் நற்குணங்களில் தன் தந்தையை விஞ்சியவனாகவும், நீதிமானாகவும், பெரும் புகழைக் கொண்டவனாகவும் இருந்தான்; பத்தாயிரம் யானைகளின் வலிமையுடன் கூடிய அவன் இரண்டாவது விஷ்ணுவைப் போலவே இருந்தான்.(23) அந்த அறம் சார்ந்த ஏகாதிபதி, ஒரு வேள்வியைச் செய்ய விரும்பி, இமயத்தின் வடக்குப் பக்கத்தில் இருந்த மேரு மலைக்குச் சென்று பளபளக்கும் தங்கப் பாத்திரங்களை ஆயிரக்கணக்கில் உண்டாக்கச் செய்தான். அங்கே அந்த உயர்ந்த தங்க மலையில் அவன் {யாகத்திற்கான} சடங்குகளைச் செய்தான்.(24,25) பொற்கொல்லர்கள் {தட்டார்கள்}, எண்ணற்ற கலன்களையும் {குண்டங்களையும்}, பாத்திரங்களையும், சட்டிகளையும் {ஸ்தாலிகளையும்}, இருக்கைகளையும் செய்தனர்.(26) வேள்விச்சாலை இந்த இடத்தில் அருகிலேயே இருந்தது. பூமியின் அறம்சார்ந்த தலைவனான மன்னன் மருத்தன், பிற இளவரசர்களுடன் சேர்ந்து அங்கே ஒரு வேள்வியைச் செய்தான்" என்றார் {வியாசர்}.(27)

அஸ்வமேதபர்வம் பகுதி – 04ல் உள்ள சுலோகங்கள் : 27

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்