Sunday, September 15, 2019

பிருஹஸ்பதியைத் தடுத்த இந்திரன்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 05

Indra resisted Vrihaspati! | Aswamedha-Parva-Section-05 | Mahabharata In Tamil

(அஸ்வமேதிக பர்வம் - 05)


பதிவின் சுருக்கம் : ஸம்வர்த்தர் மற்றும் பிருஹஸ்பதிக்கு இடையிலான சச்சரவு; மருத்தனைக் கண்டு பொறாமை அடைந்த இந்திரன்; மருத்தனின் புரோகிதரான பிருஹஸ்பதியை அவனுக்கு எதிராகத் தூண்டிய இந்திரன்...


யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, "ஓ! பேசுபவர்களில் சிறந்தவரே, அம்மன்னன் {மருத்தன்} எவ்வாறு அவ்வளவு பலசாலியானான்? மேலும், ஓ! இருபிறப்பாளரே {பிராமணரே}, அவன் எவ்வாறு அவ்வளவு தங்கத்தை அடைந்தான்?(1) மேலும், ஓ! மதிப்புக்குரிய ஐயா, அந்தச் செல்வம் அனைத்தும் இப்போது எங்கே இருக்கிறது? ஓ! தவசியே, அதை நாம் அடைவது எவ்வாறு?" என்று கேட்டான்.(2)


அதன்பேரில் வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "பிரஜாபதியான தக்ஷனின் எண்ணற்ற பிள்ளைகளான அசுரர்களும், தேவர்களும் (தங்களுக்குள் போரிடுவதற்காக) ஒருவரையொருவர் அறைகூவி அழைத்துக் கொண்டிருந்ததைப் போலவே, ஓ! மன்னா, அங்கிரஸின் மகன்களான பெருஞ்சக்தி கொண்ட பிருஹஸ்பதியும், அவருக்கு இணையான நோன்புகளைக் கொண்ட தவசியான ஸம்வர்த்தரும் ஒருவரையொருவர் அறைகூவி அழைத்தனர். பிருஹஸ்பதி மீண்டும் மீண்டும் ஸம்வர்த்தரைக் கவலை கொள்ளச் செய்யத் தொடங்கினார்.(4,5) ஓ! பாரதா, தொடர்ந்து தமது அண்ணனால் கவலைக்குள்ளான அவர், தமது வளங்களைக் கைவிட்டுத் திறந்த வெளியைத் தவிரத் தன் உடலை மறைக்க வேறொன்றும் இல்லாத நிலையில் காட்டுக்குச் சென்றார்[1].(6)

[1] "திகம்பரராகச் சென்றார், அதாவது முற்றிலும் நிர்வாண நிலையில் சென்றார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

(அந்நேரத்தில்) அசுரர்களை வென்று அவர்களை அழித்திருந்த வாசவன் {இந்திரன்}, தெய்வீக உலகங்களின் ஆட்சி உரிமையை அடைந்து, அங்கிரஸின் மூத்த மகனும், பிராமணர்களில் சிறந்தவருமான பிருஹஸ்பதியைத் தன் புரோஹிதராக நியமித்தான். முற்காலத்தில், வலிமை, ஆற்றல் மற்றும் குணம்மிக்க மனிதர்களில் ஒப்பற்றவனும்; சதக்ரதுவைப் போலப் பலமிக்கவனும், அற ஆன்மா கொண்டவனும், கடும் நோன்புகளைக் கொண்டவனுமான மன்னன் கரந்தமன் {ஸுவர்ச்சன்} தன் குடும்பப் புரோஹிதராக அங்கிரஸைக் கொண்டிருருந்தான்.(7-9) ஓ! மன்னா, அவன் தனது வாய் மூச்சின் மூலம் தியானத்தின் காரணமாக உண்டாக்கப்பட்ட வாகனங்களையும், போர்வீரர்களையும், பின்பற்றுவோர் பலரையும், விலைமதிப்புமிக்கச் சிறந்த கட்டில்களையும் கொண்டிருந்தான். மேலும் அவனது சொந்த நற்குணங்களின் மூலம் அந்த ஏகாதிபதி அனைத்து இளவரசர்களையும் தன் ஆளுகைக்குள் கொண்டு வந்தான்.(10,11)

மேலும், அவன் விரும்பிய காலம் வரை வாழ்ந்திருந்து தனது சட உடலுடனேயே அவன் சொர்க்கிற்கு உயர்ந்தான். பகைவர்களை வெல்பவனும், யயாதியைப் போன்ற அறவோனுமான அவனது மகன் அவிக்ஷித் {காரந்தமன்},(12) பூமி அனைத்தையும் தன் ஆட்சிப் பகுதிகளின் கீழ் கொண்டு வந்தான். தகுதியிலும், வலிமையில் அம்மன்னன் {அவிக்ஷித்} தன் தந்தைக்கு {ஸுவர்ச்சனுக்கு} ஒப்பானவனாக இருந்தான்.(13) அவன் {அவிக்ஷித்}, பெரும் சக்தி கொண்டவனும், வாசவனுக்கு ஒப்பானவனுமாக மருத்தன் என்ற பெயரில் ஒரு மகனைக் கொண்டிருந்தான். பெருங்கடல்களை ஆடையாக உடுத்தியிருக்கும் பூமாதேவி அவனிடம் ஈர்ப்பு கொண்டாள்.(14) அவன் எப்போதும் தேவர்களின் தலைவனை {இந்திரனை} எதிர்த்து வந்தான்; ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, வாசவனும் மருத்தனை எதிர்த்து வந்தான்.(15)

பூமியின் தலைவனான மருத்தன், தூய்மையானவனாகவும், கச்சிதம் கொண்டவனாகவும் இருந்தான். பெரும் முயற்சி செய்தாலும் சக்ரனால் {இந்திரனால்} அவனை வெல்ல முடியவில்லை.(16) அவனைக் கட்டுப்படுத்த இயலாத அவன், தேவர்களுடன் சேர்ந்து குதிரைகளைச் செலுத்தி வந்து பிருஹஸ்பதியை அழைத்து அவரிடம் இவ்வாறு பேசினான்.(17) அவன் {இந்திரன்}, "ஓ! பிருஹஸ்பதியே, எனக்கு ஏற்புடையதைச் செய்ய நீர் விரும்பினால், தேவர்கள் மற்றும் மூதாதையரின் ஆன்மாக்கள் சார்பாக மருத்தனுக்காக எந்தப் புரோகித அலுவல்களையும் செய்யாதீர். ஓ! பிருஹஸ்பதியே, நான் மூவுலகங்களின் ஆட்சி உரிமையைப் பெற்றிருக்கிறேன், மருத்தனோ வெறுமனே பூமியின் ஆட்சியாளனாக மட்டுமே இருக்கிறான்.(18,19) ஓ! பிராமணரே, தேவர்களின் இறவா மன்னனுக்குப் புரோஹிதராகச் செயல்படும் உம்மால், மரணத்திற்கு உட்படும் மருத்தனுக்கும் புரோஹிதச் செயல்பாடுகளைத் தயக்கமின்றி எவ்வாறு செய்ய முடிகிறது?(20) உமக்கு நன்மை நேரட்டும். என் தரப்பையோ, ஏகாதிபதியான மருத்தனின் தரப்பையோ அடைவீராக. மருத்தனைக் கைவிட்டு என்னிடம் வருவீராக" என்றான் {இந்திரன்}.(21)

தேவர்களின் அரசனால் இவ்வாறு அழைக்கப்பட்ட பிருஹஸ்பதி, சற்று நேரம் சிந்தித்து, இறவாதவர்களின் மன்னனிடம் மறுமொழி கூறினார்.(22) அவர் {பிருஹஸ்பதி}, "உயிரினங்களின் தலைவன் நீயே, உன்னிலேயே உலகங்கள் நிறுவப்பட்டுள்ளன. நமுசி, விஷ்வரூபன் மற்றும் பலன் ஆகியோரை அழித்தவன் நீயே.(23) ஓ! வீரா, தேவர்களுக்குச் செழிப்பை உண்டாக்கியவன் நீயே, ஓ! பலனைக் கொன்றவனே, சொர்க்கத்தையும், பூமியையும் ஆதரிப்பவன் நீயே.(24) ஓ! தேவர்களில் முதன்மையானவனே, ஓ! பாகனைத் தண்டித்தவனே, உனக்குப் புரோகித அலுவல் புரிந்த பிறகு, என்னால் ஒரு மானிட இளவரசனுக்கு எவ்வாறு தொண்டாற்ற முடியும்? நான் சொல்லப் போவதைக் கேட்பாயாக.(25) நெருப்பின் தேவன், வெப்பம் உண்டாக்குவதை நிறுத்தினாலோ, பூமி தன் இயல்பை மாற்றிக் கொண்டாலோ, சூரியன் ஒளி தருவதை நிறுத்தினாலோ கூட நான் ஒருபோதும் {நான் சொன்னதில்} வாய்மையில் இருந்து விலக மாட்டேன்" என்று சொன்னார் {பிருஹஸ்பதி என்றார் வியாசர்}".(25)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பிருஹஸ்பதியின் பேச்சைக் கேட்ட இந்திரன், பகை உணர்வுகள் தீர்ந்தவனாகி, அவரைப் புகழ்ந்துவிட்டு தன் மாளிகைக்குத் திரும்பச் சென்றார்".(27)

அஸ்வமேதபர்வம் பகுதி – 05ல் உள்ள சுலோகங்கள் : 27

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்