Wednesday, September 25, 2019

உடன்பட்ட ஸம்வர்த்தர்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 07

Samvarta assented! | Aswamedha-Parva-Section-07 | Mahabharata In Tamil

(அஸ்வமேதிக பர்வம் - 07)


பதிவின் சுருக்கம் : வேள்வி செய்வதற்குப் பிருஹஸ்பதியிடம் அனுமதி பெற்று வருமாறு மருத்தனிடம் கேட்ட ஸம்வர்த்தர்; முன்கதையை ஸம்வர்த்தரிடம் சொன்ன மருத்தன்; நிபந்தனையின் பேரில் வேள்வி செய்வதற்கு இணங்கிய ஸம்வர்த்தர்...


{வியாசர் யுதிஷ்டிரனிடம் தொடர்ந்தார்}, சம்வர்த்தர் {மருத்தனிடம்}, "நீ எவ்வாறு என்னை அறிந்து கொண்டாய்? மேலும் என்னைக் குறித்து உனக்குச் சொன்னது யார்? என் நன்மையை விரும்புவாயெனில் இதனை எனக்கு உண்மையாகச் சொல்வாயாக.(1) நீ உண்மையைச் சொன்னால், உன் விருப்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் நீ அடைவாய், நீ என்னிடம் பொய்யைச் சொன்னால், உன் தலை நூறு துண்டுகளாகப் பிளக்கும்" என்றார்.(2)


மருத்தன் {சம்வர்த்தரிடம்}, "தமது வழியில் திரிந்து கொண்டிருந்த நாரதர், நீர் எங்கள் குடும்பப் புரோஹிதரின் மகன் என உம்மைக் குறித்து என்னிடம் சொன்னார், இது (இந்தத் தகவல்) என் மனத்தை (உம்மிடம்) சீரிய நிறைவடையச் செய்தது" என்றான்.(3)

சம்வர்த்தர் {மருத்தனிடம்}, "இதை நீ என்னிடம் உண்மையாகவே சொல்லியிருக்கிறாய். வேள்விகளைச் செய்யும் ஒருவனாக அவர் (நாரதர்) என்னை அறிவார். தற்போது நாரதர் எங்கே வாழ்கிறார் என்பதை இப்போது எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டார்.(4)

மருத்தன் {சம்வர்த்தரிடம்}, "தெய்வீகத் தவசிகளின் இளவரசரான அவர் (நாரதர்), உம்மைக் குறித்த இந்தச் செய்தியை எனக்குச் சொல்லிவிட்டு, உமது பாதுகாப்பில் என்னை விட்டுவிட்டு நெருப்புக்குள் நுழைந்தார்" என்றான்".(5)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "மன்னனிடம் (மருத்தனிடம்) இருந்து இந்த வார்த்தைகளைக் கேட்ட சம்வர்த்தர் பெரும் நிறைவை அடைந்தார், மேலும் அவர் (மருத்தனிடம்), "நானும் இவையனைத்தையும் செய்யவல்லவனே" என்றார்.(6)

பிறகு, ஓ! இளவரசே, பித்தனைப் போல அலைந்து திரியும் அந்தப் பிராமணர் {சம்வர்த்தர்}, கொடுஞ்சொற்களால் மருத்தனை மீண்டும் மீண்டும் வசைபாடி,(7) "பெருமூளைக் கோளாறால் பீடிக்கப்பட்டவனும், தன்மனத்தின் சீரற்ற இச்சைகளின்படி எப்போதும் செயல்படுபவனும், இத்தகைய ஒருமை மனநிலை கொண்டவனுமான என்னைப் புரோஹிதராகக் கொண்டு ஏன் இந்த வேள்வியைச் செய்ய நீ விரும்புகிறாய்?(8) என் அண்ணன் {பிருஹஸ்பதி} வேள்விகளை நடத்த வல்லவர், அவர் வாசவனிடம் (இந்திரனிடம்) சென்று அவனது வேள்விகளைச் செய்து வருகிறார், நீயும் உன் வேள்வியை அவரைக் கொண்டே செய்வாயாக.(9) என் வீட்டுப் பொருட்களையும், அகநிலை உணவர்வுபெற்ற தேவர்களையும், வேள்வி செய்யும் வாடிக்கையாளர்களையும் என அனைத்தையும் என்னிடம் இருந்து பலவந்தமாக அபகரித்துக் கொண்டு, என் உடலை மட்டுமே இப்போதைக்கு என்னிடம் விட்டு வைத்திருக்கிறார்,(10) ஓ! அவிக்ஷித்தின் மகனே {மருத்தனே}, அனைத்து வகையிலும் அவர் என் மதிப்புக்குரியவர் என்பதால், அவரது அனுமதியின்றி எவ்வழியிலும் என்னால் உன் வேள்வியைச் செய்ய இயலாது.(11) எனவே, வேள்வி செய்யும் விருப்பமேதும் உனக்கிருந்தால், முதலில் நீ அந்தப் பிருஹஸ்பதியிடம் சென்று, அவரது அனுமதியைப் பெற்றுக் கொண்டு என்னிடம் திரும்பி வருவாயாக" என்றார்.(12)

மருத்தன், "ஓ! சம்வர்த்தரே, நான் முதலில் பிருஹஸ்பதியிடம்தான் சென்றேன், ஆனால் வாசவனின் {இந்திரனின்} ஆதரவை விரும்பிய அவர், வேள்வி செய்பவனாக என்னை விரும்பவில்லை.(13) அவர் {பிருஹஸ்பதி}, "இறவாதவர்களின் புரோஹிதர் என்ற நிலையை அடைந்த பிறகு, இறந்து போகிறவர்களுக்குப் பணி செய்ய நான் விரும்பவில்லை. பூமியின் தலைவனாகியிருக்கும் மருத்தன் எப்போதும் தன்னை எதிர்க்கும் விருப்பம் கொண்டிருக்கிறான் என்றும், மருத்தனின் வேள்வியைச் செய்ய வேண்டாம் என்றும் சொல்லி சக்ரனால் (இந்திரனால்) நான் தடுக்கப்பட்டேன்" என்று சொன்னார். அவ்வாறே ஆகட்டும் என்று பலனைக் கொன்றவனிடம் (இந்திரனிடம்) சொன்னதன் மூலம் உமது அண்ணன் {பிருஹஸ்பதி} அதற்கு இணங்கினார்.(15) ஓ! தவசிகளில் சிறந்தவரே {சம்வர்த்தரே}, தேவர்களின் தலைவனுடைய பாதுகாப்பை அடைவதில் அவர் வென்ற பிறகு, இதய நிறைவுடன் நான் அவரிடம் சென்றேன் என்றாலும் அவர் எனக்குப் புரோஹிதராகச் செயல்பட மறுத்துவிட்டார்.(16) இவ்வாறு மறுக்கப்பட்ட நான் இப்போது நான் கொண்டுள்ள அனைத்தையும் செலவு செய்து உம்மைக் கொண்டு ஒரு வேள்வியைச் செய்து, உமது நற்காரியங்களின் தகுதியால் வாசவனை விஞ்ச விரும்புகிறேன்.(17) ஓ! பிராமணரே {சம்வர்த்தரே}, என்னிடம் எக்குற்றமும் இல்லாமலே பிருஹஸ்பதியால் மறுக்கப்பட்ட நான் இப்போது அவரிடம் சென்று இந்த வேள்வியைச் செய்வதில் அவரது உதவியை நாட விரும்பவில்லை" என்றான்.(18)

சம்வர்த்தர் {மருத்தனிடம்}, "ஓ! மன்னா, நான் உன்னிடம் கேட்கப் போகும் அனைத்தையும் செய்வதற்கு இணங்கினால், நிச்சயம் நீ விரும்பும் அனைத்தையும் நிறைவேற்ற என்னால் முடியும்,(19) என்றாலும், உன் வேள்வியை நான் செய்து கொண்டிருக்கிறேன் என்பதைப் பிருஹஸ்பதியும், புரந்தரனும் (இந்திரனும்) அறிய நேர்ந்தால், கோபத்தால் நிறையும் அவர்கள், உனக்குத் தீங்கிழைக்க அவர்களால் இயன்ற அனைத்தையும் செய்வார்கள் என்றும் உணர்கிறேன்.(20) எனவே, நான் என் பொறுமையையும், மாறாநிலையையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக உன் நிலையுறுதியை எனக்கு உறுதிப்படுத்துவாயாக, மாறாக நான் உன்னிடம் கோபமடைந்தால், உன்னையும், உன் குடும்பத்தாரையும் சாம்பலாகக் குறைத்துவிடுவேன் (அழித்துவிடுவேன்)" என்றார்.(21)

மருத்தன் {சம்வர்த்தரிடம்}, "எப்போதேனும் நான் உம்மைக் கைவிட்டால், மலைகள் இருக்கும் வரையும், ஆயிரங்கதிர் சூரியன் தொடர்ந்து வெப்பத்தை வெளியிடும் வரையும் ஒருபோதும் நான் அருள் உலகங்களை அடையமாட்டேன்,(22) நான் உம்மைக் கைவிட்டால், ஒருபோதும் உண்மை ஞானத்தை அடையாதவனாக, உலகம் சார்ந்த (பொருள்) தேடல்களுக்கு அடிமையாகவே நான் நீடித்திருப்பேன்" என்றான்.(23)

சம்வர்த்தர் {மருத்தனிடம்}, "ஓ! அவிக்ஷித்தின் மகனே, இந்தச் செயலைச் செய்வதில் உன் மன விருப்பம் சிறந்திருக்கிறது, ஓ! மன்னா, அதே போலவே, நானும் வேள்வியைச் செய்வதற்கான {சிறந்த} திறனை என் மனத்தில் கொண்டிருக்கிறேன்,(24) ஓ! மன்னா, நீ கொண்டிருக்கும் நல்ல பொருட்கள் அனைத்தும் அழியாதனவாகும், மேலும், சக்ரனையும், தேவர்களையும், கந்தர்வர்களையும் விட நீ அவற்றை {செல்வத்தை} அதிகமாக ஆள்வாய்.(25) என்னைப் பொறுத்தவரையில், செல்வம் திரட்டுவதிலோ, வேள்விக் கொடைகளிலோ விருப்பமேதுமில்லை, இந்திரனுக்கும், என் அண்ணனுக்கும் ஏற்பில்லாததை மட்டுமே நான் செய்யப் போகிறேன் {விரும்புகிறேன்}.(26) நிச்சயம் நான் உன்னைச் சக்ரனுக்கு இணையானவனாக ஆக்குவேன், மேலும் உனக்கு ஏற்புடையதையே செய்வேன் என்பதையும் நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்[1]" என்றார் {சம்வர்த்தர்}.(27)

[1] கும்பகோணம் பதிப்பில், "அவிக்ஷித்தின் குமாரனே, உனக்குக் கர்மங்களில் நல்ல புத்தி உண்டாகுக. வேந்தனே, எனக்கும் யாகம் செய்விக்க வேண்டுமென்கிற எண்ணம் இருக்கிறது. அரசனே, குறைவற்றதும், உத்தமமுமான திரவியமிருக்குமிடத்தையும் உனக்குச் சொல்கிறேன். அதனால், தேவர்களையும், கந்தர்வர்களையும், இந்தரனையும் நீ கீழ்ப்படுத்தக்கூடும். எனக்குப் பணத்திலாவது, சிஷ்யர்களிடத்திலாவது விருப்பமில்லை. ஆனால், ஸஹோதரரான பிருஹஸ்பதி, இந்திரன் இருவர்களுக்கும் அப்ரியத்தைச் செய்ய விரும்புகிறேன். உன்னை நிச்சயம் இந்திரனுக்குச் சமமாகவும் செய்துவிடுகிறேன். உனக்குப் பிரியத்தையும் செய்கிறேன். இதை உனக்கு உண்மையாகச் சொல்கிறேன்" என்றிருக்கிறது.

அஸ்வமேதபர்வம் பகுதி – 07ல் உள்ள சுலோகங்கள் : 27

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்