Thursday, September 26, 2019

முஞ்சவான் மலையின் தங்கம்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 08

The gold in Munjaban! | Aswamedha-Parva-Section-08 | Mahabharata In Tamil

(அஸ்வமேதிக பர்வம் - 08)


பதிவின் சுருக்கம் : இமயத்தில் உள்ள முஞ்சவான் மலையில் இருக்கும் தங்கத்தைக் குறித்து மருத்தனுக்குச் சொன்ன ஸம்வர்த்தர்; அங்கே சென்று சிவனைத் துதித்து தங்கத்தை அடைந்த மருத்தன்; கவலையடைந்த பிருஹஸ்பதி; பிருஹஸ்பதியிடம் சென்ற இந்திரன்...


சம்வர்த்தர் {மருத்தனிடம்}, "இமய மலையின் உச்சியில் முஞ்சவான் என்ற பெயரில் ஒரு சிகரம் இருக்கிறது. அங்கே உமையின் துதிக்கத்தக்க தலைவன் (மஹாதேவன்) தொடர்ந்து தவம் செய்து கொண்டிருக்கிறான். வலிமைமிக்கவனும், வழிபடத்தகுந்தவனும், பெரும் பலம் கொண்டவனுமான அந்தத் தேவன் திரிசூல தாரியாக, பல வகைப் பூதகணங்களால் சூழப்பட்டவனாக, அங்கே பெரும் காட்டு மரங்களின் நிழலிலோ, குகைகளிலோ, அந்தப் பெரும் மலையின் முரட்டுச் சிகரங்களிலோ தன் மனைவியான உமையுடன் தன் விருப்பம் போல் திரிந்து கொண்டிருக்கிறான்.(2,3) ருத்திரர்கள், ஸாத்யர்கள், விஷ்வேதேவர்கள், வசுக்கள், யமன், வருணன், தன் பணியாட்களுடன் கூடிய குபேரன்,(4) பூதங்கள், பிசாசங்கள், அஸ்வினி தேவர்கள், கந்தர்வர்கள், அப்ஸரஸ்கள், யக்ஷர்கள், தெய்வீக முனிவர்கள்,(5) சூரிய தேவர்கள் {ஆதித்யர்கள்}, காற்றுகளுக்குத் தலைமை தாங்கும் தேவர்கள் {மருத்துகள்}, அனைத்து வகையான ராட்சசர்கள் ஆகியோர் அங்கே பல்வேறு பண்புகளைக் கொண்டவனும், உயர்ந்த ஆன்மாவுமான உமையின் தலைவனை வழிபடுகின்றனர்.(6)


மேலும், ஓ! மன்னா {மருத்தனே}, அங்கே அந்தத் துதிக்கத்தக்க தேவன், வினோதமான கொடூரத் தோற்றங்களுடன் கூடியவர்களும், முரடர்களும், விளையாட்டுத்தனம் கொண்டவர்களுமான குபேரனின் தொண்டர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறான்.(7) தன்காந்தியில் ஒளிரும் அந்த மலை காலைச் சூரியனைப் போலப் பிரகாசமானதாக இருக்கிறது.(8) இயற்கையான சதையாலான கண்களுடன் கூடிய எந்த உயிரினத்தாலும் அதன் வடிவத்தையோ, கட்டமைப்பையோ, அங்கே நிலவும் வெப்பம் அல்லது குளிரையோ, சூரியன் ஒளிர்கிறானா? காற்று வீசுகிறதா என்பதையோ உறுதிப்படுத்த முடியாது.(9) மேலும், ஓ! மன்னா, அங்கிருக்கும் எவரையும் முதுமை, பசி, தாகம், மரணம் அல்லது அச்சம் என ஏதும் பீடிக்காது.(10) ஓ! வெற்றியாளர்களில் முதன்மையானவனே {மருத்தா}, அம்மலையின் அனைத்துப் பக்கங்களிலும், சூரியக் கதிர்களைப் போன்ற பிரகாசத்துடன் கூடிய தங்கச் சுரங்கங்கள் இருக்கின்றன. மேலும், ஓ! மன்னா, குபேரனுக்கு நன்மை செய்ய விரும்புபவர்களும், உயர்த்திய கரங்களுடன் கூடியவர்களுமான அவனது தொண்டர்கள், அழையாமல் நுழைபவர்களிடம் இருந்து அந்தத் தங்கச் சுரங்கங்களைப் பாதுகாக்கின்றனர்.(11)

நீ அங்கே சென்று, சர்வன், வேதன், ருத்ரன், சிதிகண்டன் {கறுத்த கழுத்த கொண்டவன்}, ஸுரூபன், ஸுவர்சன் {நல்ல காந்தி கொண்டவன்}, கபர்தின் {சடையுள்ளவன்}, கராலன் {பயங்கரன்}, ஹர்யக்ஷன் {பொன்னிறக்கண்ணன்}, வரதன்,(13) திரயக்ஷன் {முக்கண்ணன்}, பூஷ்ணோதந்தபித் {சூரியனின் பற்களைத் தகர்த்தவன்}, வாமனன் {குள்ளன்}, சிவன் {நலம் அருள்பவன்}, யாம்யன் {அடக்குபவன்} அவ்யக்தரூபன், ஸத்விருத்தன் {நன்னடை கொண்டவன்}, சங்கரன்,(14) க்ஷேம்யன் {நன்மை செய்பவன்}, ஹரிகேஸன் {பொன்னிற மயிர் கொண்டவன்}, ஸ்தாணு, புருஷன், ஹரிநேத்ரன் {பொன்னிறக் கண்ணன்}, முண்டன், கிருசன் {கோபமுள்ளவன்}, உத்தரணன் {கரையேற்றுபவன்},(15) பாஸ்கரன் {பிரகாசிப்பவன்}, ஸுதீர்த்தன், தேவதேவன், ரம்ஹன் {வேகமுள்ளவன்}, உஷ்ணீஷி {தலைப்பாகை கொண்டவன்}, ஸுவக்த்ரன் {நன்முகம் கொண்டவன்}, ஸஹஸ்ராக்ஷன் {ஆயிரங்கண்ணன்}, மீடுவான் {அனைத்தையும் படைப்பவன்},(16) கிரிசன் {மலையில் படுப்பவன்}, பிரஸாந்தன் {பேரமைதி கொண்டவன்}, யதன் {சந்நியாசி}, சீரவாஸன் {மரவுரியாடை கொண்டவன்}, வில்வதண்டன் {வில்வத்தாலான தண்டம் கொண்டவன்}, சித்தன், ஸர்வதண்டதரன் {அனைவரையும் பாதுகாப்பவன்},(17) மிருகவியாதன் {வேள்வியெனும் மானை அடிக்கும் வேடன்}, மஹான், தனேசன் {வில் கொண்டவன்}, பவன் {படைப்பவன்}, வரன் {சிறந்தவன்}, ஸோமவக்த்ரன் {சந்திரன் போன்ற முகம் கொண்டவன்}, ஸித்தமந்த்ரன், சக்ஷு {கண்ணாக இருப்பவன்},(18) ஹிரண்யபாஹு {பொன்மயக்கரங்கொண்டவன்}, உக்ரன், திக்பதி {திசைகளின் தலைவன்}, லேலிஹானன் {கடைவாயை நாவால் நனைப்பவன்}, கோஷ்டன், சித்தமந்திரன், விருஷ்ணு, பசுபதி, பூதபதி {பூதங்களின் தலைவன்},(19) விருஷன், மாத்ருபக்தன் {தாய்பக்தி கொண்டவன்}, ஸேனானி {படைத்தலைவன்}, மத்யமன், ஸ்ருவஹஸ்தன் {எதிர்பார்க்கும் முகம் கொண்டவன்}, யதி, தன்வி {வில்லாளி}, பார்கவன், அஜன் {பிறப்பற்றவன்},(20) கிருஷ்ணநேத்ரன் {கறுத்த கண் கொண்டவன்}, விரூபாக்ஷன் {பெருவிழியோன்}, தீக்ஷ்ணதம்ஷ்ட்ரன் {கூரிய கோரப் பற்களைக் கொண்டவன்}, தீக்ஷ்ணன், வைஸ்வானரமுகன் {அக்னியை முகத்தில் கொண்டவன்},(21) மஹாத்யுதி, அனங்கன், ஸர்வன் {அனைத்துமாக இருப்பவன்}, திக்பதி, விலோஹிதன் {மிகச் சிவந்தவன்}, தீப்தன் {பிரகாசிப்பவன்}, தீப்தாக்ஷாயன் {பிரகாசிக்கும் கண்களைக் கொண்டவன்}, மஹௌஜன் {சிறந்த ஒளி கொண்டவன்},(22) வசுரேதஸ், ஸுவபு {நல்ல உடல் கொண்டவன்}, பிருது {பருத்தவன்}, கிருத்திவாஸன் {யானைத் தோலை உடையாகக் கொண்டவன்},(23) கபாலமாலி {மண்டையோட்டு மாலை கொண்டவன்}, ஸுவர்ணமுகுடன் {தங்க கிரீடம் கொண்டவன்}, மஹாதேவன், கிருஷ்ணன் {கறுத்தவன்}, திரயம்பகன் {முக்கண்ணன்}, அனகன் {குற்றமற்றவன்},(24) குரோதனன் {கோபமுள்ளவன்}, நிருஸம்ஸன் {கொடூரங்கொண்டவன்}, மிருது {மென்மையானவன்}, பாஹுஸாலிதண்டி {கையில் தண்டம் கொண்டவன்}, தப்ததபஸ், அக்ரூரகர்மன் {கொடூரத்தன்மையற்றவன்}, ஸஹஸ்ரஸிரஸ் {ஆயிரந்தலையோன்}, ஸஹஸ்ரசரணன் {ஆயிரங்காலோன்}, ஸ்வதாஸ்வரூபன், பஹுரூபன் {பலவடிவகங்களைக் கொண்டவன்}, தம்ஷ்ட்ரி {கோரப்பற்களைக் கொண்டவன்},(25) பினாகி {பினாகம் என்ற வில்லைக் கொண்டவன்}, மஹாதேவன், மஹாயோகி {பெரும் யோகி}, அவ்யயன் {அழிவற்றவன்}, திரிஸூலஹஸ்தன் {திரிசூலத்தைக் கையில் கொண்டவன்}, வரதன் {வரமளிப்பவன்}, திரயம்பகன் {முக்கண்ணன்}, புவனேஸ்வரன்,(26) திரிபுரக்னன், திரினயனன், திரிலோகேஸன் {மூவுலகங்களுக்கும் ஈசன்}, மஹௌஜன் {சிறந்த பலம் கொண்டவன்}, ஸர்வபூதபிரபவன் {அனைத்துக்கும் மூலமானவன்}, ஸர்வபூததாரணன் {அனைத்துக்கும் கொடுப்பவன்}, தரணீதரன் {பூமியைத் தரிப்பவன்},(27) ஈஸானன், சங்கரன், ஸர்வன், சிவன், விஸ்வேஸ்வரன், பவன், உமாபதி, பஸுபதி, விஸ்வரூபன், மஹேஸ்வரன்,(28) விரூபாக்ஷன், தஸபுஜன் {பத்துக் கரங்களைக் கொண்டவன்}, விருஷபத்வஜன் {காளை கொடி கொண்டவன்}, உக்ரன், ஸதாணு, சிவன், ரௌத்ரன், ஸர்வன், கிரீசன், ஈஸ்வரன்,(29) ஸிதிகண்டன் {நீலகண்டன்}, அஜன், ஸுக்ரன், பிருது {பருத்தவன்}, பிருதுஹரன் {பருத்தவைகளை அழிப்பவன்}, வரன், விஸ்வரூபன், விரூபாக்ஷன், பஹுரூபன் {பல வடிவங்களைக் கொண்டவன்}, உமாபதி,(30) அனங்காங்கஹரன் {மன்மதனின் உடலை அழித்தவன்}, ஹரன் {அபகரிப்பவன்}, ஸரண்யன், மஹாதேவன், சதுர்முகன் {நான்முகன்} என்று அறியப்படும் அந்தத் துதிக்கத்தக்க தேவனை ஆற்றுப்படுத்துவாயாக.(31) அங்கே சென்று அந்தத் தேவனை {மேற்கண்ட பெயர்களைச் சொல்லி} வணங்கி, அவனது பாதுகாப்பை அடைய ஏங்கிக் கேட்பாயாக. ஓ! இளவரசே, உயர் ஆன்மாவும், பெருஞ்சக்தி கொண்டவனுமான மஹாதேவனை இவ்வாறு வணங்கினால் நீ தங்கத்தை அடைவாய்.(32) இவ்வாறு அங்கே செல்லும் மனிதர்கள் தங்கத்தை அடைவதில் வெல்கிறார்கள்[1]" என்றார் {சம்வர்த்தர்}.

[1] கும்பகோணம் பதிப்பில், "மஹாதேவரும், வேகமுள்ளவரும், மஹாத்மாவுமான அவருக்கு நமஸ்காரம் செய்து, அந்த ஸுவர்ணத்தை அடைவாய். மனிதர்கள் அவரிடத்தில் மனத்தைச் செலுத்திக் கணங்களுக்குப் பதியாயிருக்கும் தன்மையையும் அடைகின்றனர். ஸுவர்ண பாத்திரங்களைப் பற்றி என்ன ஸந்தேகம்? ஆகையால், நீ (சீக்கிரம்) செல். தாமதம் செய்யாதே. உனக்கு மிகப்பெரிய லாபம் கிடைக்கும். ஆகையால், ஸுவர்ணத்தைக் கொண்டு வருவதற்காக யானைகளுடனும், குதிரைகளுடனும், ஒட்டகங்களுடனும், உன்னுடைய ஆட்கள் அவ்விடம் செல்லுக" என்றிருக்கிறது.

இவ்வாறு சொல்லப்பட்ட கரந்தமனின் மகன் மருத்தன், அந்த அறிவுறுத்தலுக்கு ஏற்றபடியே செய்தான்.(33) மேலும் அவன் தன் வேள்வியைச் செய்வதற்காக மனித சக்திக்கு மீறிய ஏற்பாடுகளைச் செய்தான். கைவினைஞர்கள் அவ்வேள்விக்காகத் தங்கத்தாலான பாத்திரங்களை உற்பத்தி செய்தனர்[2].(34) தேவர்களின் செல்வத்தைக் காட்டிலும் மேன்மையானதாக இருந்த மன்னன் மருத்தனின் நிறைந்த செல்வத்தைக் கேள்விப்பட்ட பிருஹஸ்பதியும், தமக்கு எதிரான சம்வர்த்தர் செல்வந்தராகிறான் என்ற எண்ணத்தால், இதயம் பீடித்தவராகக் கவலையடைந்து, நிறம் மங்கி, மிகவும் மெலிந்து போனார்.(35,36) பிருஹஸ்பதி வருத்தமடைந்திருப்பதைத் தேவர்களின் தலைவன் அறிந்தபோது, இறவாதவர்களால் தொண்டாற்றப்பட்ட அவரிடம் சென்று இவ்வாறு சொன்னான்" {என்றார் வியாசர்}.(37)

[2] கும்பகோணம் பதிப்பில், "இவ்விதம் சொல்லக்கேட்ட காரந்தமபுத்திரனான அந்த மருத்தன், அவர் சொன்னபடி செய்தான். கங்காதரரை நமஸ்கரித்து உத்தமமான தனத்தை அடைந்தான். மஹாதேவருடைய அருளால் அந்தத் தனத்தை அடைந்து குபேரன் போலானான். பிறகு, மனிதர்களால் செய்ய முடியாத யாகத்திற்கேற்ற எல்லா ஏற்பாடுகளையும் செய்தான். அந்த யாகத்திற்காகச் சிற்பிகள் ஸுவர்ணமயமான பாத்திரங்களையும், யாகசாலைகளையும், ஸாமக்ரிகளையும் அப்பொழுது ஸம்வர்த்தருடைய கட்டளையினால் நன்றாகச் செய்தார்கள்" என்றிருக்கிறது.

அஸ்வமேதபர்வம் பகுதி – 08ல் உள்ள சுலோகங்கள் : 37

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்