Saturday, September 28, 2019

அக்னியின் அச்சம்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 09

The fear of Agni! | Aswamedha-Parva-Section-09 | Mahabharata In Tamil

(அஸ்வமேதிக பர்வம் - 09)


பதிவின் சுருக்கம் : பிருஹஸ்பதியின் வருத்தம்; பிருஹஸ்பதியை ஏற்றுக்கொள்ளும்படி அக்னி தேவன் மூலம் மருத்தனிடம் சொன்ன இந்திரன்; மருத்தனின் மறுப்பு; அக்னியின் மறுப்பு...


{வியாசர் யுதிஷ்டிரனிடம் தொடர்ந்தார்}, "இந்திரன், "ஓ! பிருஹஸ்பதி, நீர் அமைதியாக உறங்குகிறீரா? உமது பணியாட்கள் உமக்கு ஏற்புடையவற்றைச் செய்கிறார்களா? நீர் தேவர்களின் நன்மையை நாடுகிறீரா? ஓ! பிராமணரே, தேவர்கள் உம்மைப் பாதுகாக்கிறார்களா?" என்றான்.(1)


பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, "ஓ! தேவர்களின் தலைவா, நான் என் படுக்கையில் அமைதியாக உறங்குகிறேன். என் பணியாட்கள் எனக்குப் பிடித்தவாறு நடந்து கொள்கிறார்கள், மேலும் நான் எப்போதும் தேவர்களின் நன்மையை நாடுகிறேன். அவர்களும் என்னை நன்றாகப் பேணிக் காக்கிறார்கள்" என்றார்.(2)

இந்திரன் {பிருஹஸ்பதியிடம்}, "பிறகு மனத்திலோ, உடலிலோ ஏன் இந்த வலி {துயரம்}? நீர் ஏன் இப்போது நிறம் மங்கி, தோற்றம் குலைந்திருக்கிறீர்? ஓ! பிராமணரே, உமக்கு வலியுண்டாக்கிய மக்கள் அனைவரையும் நான் கொல்லும் வகையில் அவர்கள் {அம்மக்கள்} யார் என்பதை என்னிடம் சொல்வீராக” என்று கேட்டான்.(3)

பிருஹஸ்பதி, "ஓ! இந்திரா, (பிராமணர்களுக்குப்) பெருங்கொடைகளுடன் மருத்தன் ஒரு பெரும் வேள்வியைச் செய்யப் போகிறான் என்றும், அவனது வேள்வியில் சம்வர்த்தன் புரோகிதனாகச் செயல்படப் போகிறான் என்றும் நான் கேள்விப்படுகிறேன். எனவே, அந்த வேள்வியில் அவன் புரோகிதராகச் செயல்படக்கூடாது என நான் விரும்புகிறேன்” என்றார்.(4)

இந்திரன் {பிருஹஸ்பதியிடம்}, "ஓ! பிராமணரே, புனித மந்திரங்கள் அனைத்தையும் அறிந்தவரான நீர் தேவர்களின் புரோஹிதரான போதே உமது விருப்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் அடைந்துவிட்டீர். மேலும், மரணம் மற்றும் முதுமையின் ஆதிக்கங்களையும் கடந்துவிட்டீர். உம்மைச் சம்வர்த்தரால் என்ன செய்ய முடியும்?" என்று கேட்டான்.(5)

பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, "பகைவனின் செழிப்பு ஒருவனது உணர்வுகளுக்கு எப்போதும் பெருந்துன்பத்தைத் தரும், இந்தக் காரணத்தினாலேயே நீ தேவர்களுடன் சேர்ந்து அசுரர்களையும், அவர்களின் உற்றார் உறவினர்களையும் துன்புறுத்தி, அவர்களில் மிகச் செழிப்பானவர்களைக் கொல்கிறாய்;(6) ஓ! தேவர்களின் தலைவா, என் பகைவன் செழிப்படைகிறான் என்ற எண்ணத்தில் என் தோற்றம் மாறியிருக்கிறது. எனவே, ஓ! இந்திரா, சம்வர்த்தனையும், மன்னன் மருத்தனையும் அனைத்து வழிமுறைகளினாலும் தடுப்பாயாக" என்றார்.(7)

அக்னியிடம் திரும்பிய இந்திரன், "ஓ! ஜாதவேதா, நான் சொல்வதைப் பின்பற்றி மன்னன் மருத்தனிடம் சென்று, பிருஹஸ்பதியை அவனிடம் கொடுத்து, இந்தப் பிருஹஸ்பதி அவனது வேள்வியைச் செய்து கொடுத்து அவனை இறவாதவனாக்குவார் {அமரனாக்குவார்} என்று அவனிடம் சொல்வாயாக" என்றான்.(8)

அக்னி {இந்திரனிடம்}, "ஓ! போற்றுதலுக்குரியவனே, இப்போதே நான் உன் தூதனாக அங்கே சென்று மன்னன் மருத்தனிடம் பிருஹஸ்பதியைக் கொடுக்கிறேன்" என்றான். இந்திரனின் சொற்களை உண்மையாக்கவும், பிருஹஸ்பதிக்கு மதிப்பளிக்கவும் அக்னி புறப்பட்டுச் சென்றான்".(9)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "பிறகு அந்த உயர்ஆன்ம நெருப்பு தேவன், குளிர் காலத்தின் இறுதியில் வரம்பற்றுச் சுழன்று முழங்கும் வலிமைமிக்கக் காற்றைப் போலக் காடுகளையும், மரங்கள் அனைத்தையும் சூறையாடியபடி தன் குற்றேவலைப் புரியச் சென்றான்.(10)

மருத்தன் {சம்வர்த்தரிடம்}, "காண்பீராக. இன்று நெருப்பின் தேவன் தன் சொந்த உடலுடன் வருவதைக் காண்கிறேன். எனவே, ஓ! முனிவரே {சம்வர்த்தரே}, அவனுக்கு ஓர் இருக்கையையும், நீரையும், ஒரு பசுவையும், கால் கழுவ நீரையும் அளிப்பீராக" என்றான்.(11)

அக்னி {மருத்தனிடம்}, "ஓ! பாவமற்றவனே, நீ அளிக்கும் காணிக்கைகளான நீர், இருக்கை மற்றும் கால் கழுவுவதற்கான நீர் ஆகியவற்றை நான் ஏற்கிறேன். இந்திரனின் ஆணைக்கிணங்க வந்திருக்கும் அவனது தூதனாக என்னை அறிவாயாக" என்றான்.(12)

மருத்தன் {நெருப்பு தேவனிடம்}, "ஓ! நெருப்பின் தேவா, தேவர்களின் மகிமைமிக்கத் தலைவன் {இந்திரன்} மகிழ்ச்சியாக இருக்கிறானா? எங்களிடம் நிறைவுடன் இருக்கிறானா? தேவர்கள் அவனிடம் மாறாப்பற்றுடன் இருக்கின்றனரா? இவை அனைத்திலும் முறையாக என்னைத் தெளிவடையச் செய்வாயாக" என்றான்.(13)

அக்னி {மருத்தனிடம்}, "ஓ! பூமியின் தலைவா, சக்ரன் முற்றான மகிழ்ச்சியுடனும், உன்னிடம் நிறைவுடனும், முதுமையில் இருந்து விடுதலைபெற்றவனாக உன்னை ஆக்கும் விருப்பத்துடனும் இருக்கிறான். தேவர்கள் அனைவரும் அவனிடம் மாறாப் பற்றுடன் இருக்கிறார்கள். ஓ! மன்னா, தேவர்கள் தலைவன் {இந்திரன்} சொன்ன செய்தியைக் கேட்பாயாக.(14) ஓ! இளவரசே, மருத்தனிடம் பிருஹஸ்பதியை அளிக்கவும், உன் வேள்வியை (தேவர்களின்) இந்தப் புரோஹிதர் செய்யவும், இறக்கக்கூடியவனாக மட்டுமே இருக்கும் உன்னை இறவா நிலை அடையச் செய்யும் நோக்கத்துடனும் என்னை உன்னிடம் அனுப்பியிருக்கிறான்" என்றான்.(15)

மருத்தன் {அக்னி தேவனிடம்}, "இருபிறப்பாள பிராமணரான சம்வர்த்தர் என் வேள்வியைச் செய்யப் போகிறார், மஹேந்திரனின் புரோஹிதராகச் செயல்பட்டவர் இப்போது இறக்கக்கூடிய மனிதர்களின் புரோஹிதராகச் செயல்படுவது நன்றாகத் தெரியவில்லை என நான் பிருஹஸ்பதியிடம் வேண்டுகிறேன்" என்றான்.(16)

அக்னி, "இந்தப் பிருஹஸ்பதி உன் புரோஹிதராகச் செயல்பட்டால், தேவராஜனின் (இந்திரனின்) ஆசியின் மூலம் தேவ மாளிகையின் உயர்ந்த பகுதியை நீ அடைவாய், மேலும் புகழடையும் நீ நிச்சயம் தேவலோகத்தை வெல்வாய்.(17) மேலும், ஓ! மனிதர்களின் தலைவா, பிருஹஸ்பதி உன் புரோஹிதராகச் செயல்பட்டால், மனிதர்கள் வசிக்கும் அனைத்துப் பகுதிகளையும், தெய்வீக உலகங்களையும், பிரஜாபதியால் உண்டாக்கப்பட்ட உயர்ந்த உலகங்கள் அனைத்தையும், ஏன் தேவர்களின் மொத்த அரசையும் நீ வெல்ல இயன்றவனாவாய்" என்றான்.(18)

சம்வர்த்தர் {அக்னி தேவனிடம்}, "நீ பிருஹஸ்பதியை மருத்தனிடம் அளிப்பதற்காக மீண்டும் ஒருபோதும் வராதே; ஓ! பாவகா, அவ்வாறு நீ செயல்பட்டால் கோபமடையும் நான் என் கடுந்தீயக் கண்களால் உன்னை எரித்துவிடுவேன் என்பதை அறிவாயாக" என்றார்".(19)

வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "அப்போது அக்னி நெருப்பால் அடையப்போகும் அழிவை அறிந்து, அரச மரத்தின் இலைகளைப் போல நடுங்கிக் கொண்டே தேவர்களிடம் திரும்பிச் சென்றான். பிருஹஸ்பதியோடு வரும் ஆகுதிகளைச் சுமப்பவனை (அக்னியைக்) கண்ட உயர் ஆன்ம சக்ரன் பின்வருமாறு சொன்னான்:"(20)

இந்திரன் {அக்னி தேவனிடம்}, "ஓ! ஜாதவேதா (அக்னியே), என் ஆணையின்படி பிருஹஸ்பதியை மருத்தனிடம் அளிக்கச் சென்றாய். வேள்வியைச் செய்யும் அம்மன்னன் என்ன செய்தான்? அவன் நான் சொன்னதை ஏற்றானா?" என்று கேட்டான்.(21)

அக்னி {இந்திரனிடம்}, "நீ சொன்னதை மருத்தன் ஏற்கவில்லை. என்னால் தூண்டப்பட்ட போது அவன் பிருஹஸ்பதியிடம் கரங்கூப்பி மீண்டும் மீண்டும் சம்வர்த்தரே தன் புரோஹிதராகச் செயல்படுவார் என்று சொன்னான்.(22) மேலும் அவன் உலகம் சார்ந்த, மற்றும் தெய்வீக உலகங்களையும், பிரஜாபதியின் உயர்ந்த உலகங்கள் அனைத்தையும் அடைவதைத் தான் விரும்பவில்லை என்பதையும், அவ்வாறு அவன் நினைத்திருந்தால், இந்திரனின் விதிமுறைகளைத் தானே ஏற்றுக் கொண்டிருப்பான் என்பதையும் உறுதியாகச் சொன்னான்" என்றான்.(23)

இந்திரன், "நீ அந்த மன்னனிடம் திரும்பச் சென்று, அவனைச் சந்தித்து, நான் சொல்லும் முக்கியம் நிறைந்த வார்த்தைகளையும், அவன் அதற்குக் கீழ்ப்படியவில்லையெனில் நான் என் வஜ்ராயுதத்தால் அவனைத் தாக்குவேன் என்பதையும் அவனிடம் சொல்வாயாக." என்றான்.(24)

அக்னி {இந்திரனிடம்}, "ஓ! வாசவா, இந்தக் கந்தர்வர்களின் மன்னன் {இந்தத் திருதராஷ்டிரன்} உன் தூதனாக அங்கே செல்லட்டும். நான் அங்கே செல்ல அஞ்சுகிறேன். ஓ! சக்ரா, தவப்பயிற்சிகளுக்கு அடிமையானவரும், பெரும் கோபத்திலிருப்பவருமான சம்வர்த்தர் சினத்துடன் இந்த வார்த்தைகளை என்னிடம் சொன்னார் என்பதை அறிவாயாக.(25) ‘மன்னன் மருத்தனிடம் பிருஹஸ்பதியை அளிப்பதற்காக எவ்வகையிலாவது நீ மீண்டும் இங்கே வந்தால், என் கடுந்தீயக் கண்களால் உன்னை நான் எரித்துவிடுவேன்’ என்று அவர் சொன்னார்" என்றான்.(26)

சக்ரன் {அக்னி தேவனிடம்}, "ஓ! ஜாதவேதா, வேறு பொருட்கள் அனைத்தையும் எரிப்பவன் நீயே, உன்னைச் சாம்பலாகக் குறைக்க வேறு எவராலும் முடியாது. ஓ! ஆகுதிகளைச் சுமப்பவனே, உன்னை நெருங்க உலகமனைத்தும் அஞ்சுகின்றன. உன்னுடைய இந்தச் சொற்கள் நம்பத்தகாதவையாகும்" என்றான்.(27)

அக்னி {இந்திரனிடம்}, "ஓ! சக்ரா, உன் கரங்களின் வலிமையால் நீ சொர்க்கம், பூமி மற்றும் ஆகாயத்தின் ஆட்சிப்பகுதிகளைச் சூழ்ந்து உள்ளடக்கினாய். அவ்வாறிருந்தும், (பழங்காலத்தில்) விருத்திரனால் எவ்வாறு தேவலோகத்தின் அரசுரிமையை உன்னிடம் இருந்து பறிக்க முடிந்தது?" என்று கேட்டான்.(28)

இந்திரன் {அக்னி தேவனிடம்}, "என்னால் என் பகைவர்களை அடங்கச் செய்ய முடியும். நான் விரும்பினால் மலையின் அளவை ஓரணுவாகக்கூட என்னால் குறைக்க முடியும். ஆனால், ஓ! வாஹ்னி, ஒரு பகைவனால் அளிக்கப்படும் சோம பானக் காணிக்கையை நான் ஏற்பதில்லை, பலவீனர்களை வஜ்ராயுதத்தால் நான் தாக்க மாட்டேன் (என்பதால் சில காலத்திற்கு விருத்திரனால் என்னை வெல்ல முடிந்தது). ஆனால் என்னிடம் பகை உண்டாக்கிக் கொள்வதன் மூலம் எந்த மனிதனால் அமைதியாக வாழ முடியும்?(29) நான் காலகேயர்களைப் பூமிக்கு விரட்டிவிட்டேன், தானவர்களைச் சொர்க்கத்தில் இருந்து அகற்றினேன், பிரஹலாதனின் இருப்பைச் சொர்க்கத்தில் முற்றுக்குக் கொண்டு வந்தேன். என்னிடம் பகையைத் தூண்டுவதன் மூலம் எந்த மனிதனால் அமைதியாக வாழ முடியும்?" என்று கேட்டான்.(30)

அக்னி, "ஓ! மஹேந்திரா, பழங்காலத்தில் இரட்டை தேவர்களான அஸ்வினிகளுடன் கூடிய சர்யாதியின் வேள்வியைச் சியவன முனிவர் நடத்தி, சோமக் காணிக்கையைத் தனியாகத் தானே பெற்றுக் கொண்டபோது, கோபத்தில் நிறைந்த நீ சர்யாதியின் வேள்வியைத் தடுக்க முயன்றாய் நினைவிருக்கிறதா?(31) அப்போது உன் வஜ்ரத்தால் சியவனரைப் பலவந்தமாகத் தாக்கினாய். ஓ! புரந்தரா, கோபமடைந்த அந்தப் பிராமணரால், தமது பக்தியின் சக்தியால் வஜ்ராயுதத்துடன் கூடிய உன் கரத்தை முடக்க முடிந்தது.(32) மேலும் சினத்தில் அவர் அனைத்து வடிவங்களையும் ஏற்க வல்லவனும், பயங்கரத் தோற்றம் கொண்டவனும், மதன் என்ற பெயர் கொண்டவனுமான ஓர் அசுரனை உனக்குப் பகைவனாக உண்டாக்கினார். நீ அவனைக் கண்டதும் அச்சத்தால் உன் கண்களை மூடிக் கொண்டாய்.(33) அவனுடைய பெருந்தாடைகளில் ஒன்று பூமியிலும், மற்றொன்று தேவலோகத்திலும் விரிந்திருந்தது. நூறு யோஜனைகள் நீளம் கொண்ட ஆயிரம் கூரிய பற்களுடன் அவன் காணப் பயங்கரனாக இருந்தான்.(34) வெள்ளித் தூண்களைப் போல இருந்த நான்கு முக்கியப் பற்கள் இருநூறு யோஜனை நீளம் கொண்டவையாக இருந்தன. அவன் தன் பற்களைக் கடித்துக் கொண்டும், சூலத்தை உயர்த்திக் கொண்டும் உன்னைக் கொல்லும் நோக்கோடு உன்னைத் தொடர்ந்த போது,(35) அந்தப் பயங்கர ராட்சசனைக் கண்ட நீ, பார்வையாளர்கள் அனைவருக்கும் (பரிதாபம் நிறைந்த) காட்சிப் பொருளானாய். ஓ! தானவர்களைக் கொன்றவனே, அந்த ராட்சசனிடம் கொண்ட அச்சத்தால் கூப்பிய கரங்களுடன் பணிந்து அந்தத் தவசியின் பாதுகாப்பை நீ கேட்டாய்.(36) ஓ! சக்ரா, பிராமணர்களின் வலிமை க்ஷத்திரியர்களுடையதைவிடப் பெரியதாகும். பிராமணர்களைவிட சக்திமிக்கவர்கள் வேறு எவரும் இல்லை. ஓ! சக்ரா, பிராமணர்களின் சக்தியை முறையாக அறிந்த நான், சம்வர்த்தருடன் ஒருபோதும் மோதலை விரும்பவில்லை" என்றான் {அக்னி}.(37)

அஸ்வமேதபர்வம் பகுதி – 09ல் உள்ள சுலோகங்கள் : 37

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்