Thursday, October 03, 2019

இந்திரன் விருத்திரன் போர்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 11

The war between Indra and Vritra! | Aswamedha-Parva-Section-11 | Mahabharata In Tamil

(அஸ்வமேதிக பர்வம் - 11)


பதிவின் சுருக்கம் : விருத்திரனுக்கும் இந்திரனுக்கும் இடையில் நடந்த போரைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அற்புதச் செயல்களைச் செய்யும் வியாசர் மன்னனுடனான {யுதிஷ்டிரருடனான} தமது பேச்சை நிறைவு செய்த போது, உயர்ந்த பலம் கொண்டவனான வசுதேவர் மகன் (கிருஷ்ணன்) அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} பேசினான். பிருதையின் மகனான அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, மனம் பீடிக்கப்பட்டவனாகவும், உறவினர்களற்றவனாகவும், போரில் கொல்லப்பட்ட உற்றாருடையவனாகவும் கிரகணத்தால் இருளடைந்த சூரியனைப் போன்றோ, புகையும் நெருப்பைப் போலவோ இருப்பவனாகவும், விழுந்த சிகரம் போலத் தெரிபவனாகவும் இருப்பதை அறிந்த விருஷ்ணி குலத் தூணானவன் (கிருஷ்ணன்), தர்மனின் மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} ஆறுதல் அளிக்கும் வகையில் அவனிடம் இவ்வாறு பேசினான்.(1-3)


வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்}, "இதயக் கோணல்கள் அனைத்தும் அழிவுக்கே (நித்திய தண்டனைக்கே) வழிவகுக்கும், மேலும் ஒழுக்கமனைத்தும் பிரம்மத்திற்கே (ஆன்மச் சிறப்புக்கே) வழிகுக்கும். இதுவே, இது மட்டுமே உண்மை ஞானங்கள் அனைத்தின் குறிக்கோளும், நோக்கமுமாகும். (இதைப் புரிந்து கொண்டவனை) மனத்தின் கவனச்சிதறலால் என்ன செய்துவிட முடியும்?(4) உமது சொந்த சதைக்குள் {உடலுக்குள்} இன்னும் மறைந்திருக்கும் பகைவர்களை நீர் அறியவில்லை என்பதால், உமது கர்மமும் ஒழியவில்லை, உமது பகைவர்களும் அடக்கப்படவில்லை.(5) (எனவே) இந்திரனுக்கும், விருத்திரனுக்கும் இடையில் நடந்த போர் குறித்த கதையை நடந்தவாறே, அதனை நான் கேட்டவாறே உண்மையில் உமக்கு உரைக்கப் போகிறேன்.(6)

பழங்காலத்தில், ஓ! மன்னா, பிருத்வியானது (பூமியானது) விருத்திரனால் சூழப்பட்டது. மணங்கள் அனைத்தின் இருக்கையாக இருக்கும் பூமிக்குரிய பொருள் {தன்மை} இவ்வாறு பிரிக்கப்பட்டதால், அனைத்துப் பக்கங்களிலும் கெட்ட மணங்கள் {துர்நாற்றங்கள்} எழுந்தன. நூறு வேள்விகளைச் செய்தவன் (இந்திரன்) இச்செயலால் மிகவும் சினமடைந்தவனாக விருத்திரன் மீது தன் வஜ்ராயுதத்தை ஏவினான்.(7,8)

வலிமைமிக்கவனான இந்திரனின் வஜ்ராயுத்தால் ஆழமாகக் காயமடைந்த விருத்திரன் (நீர்நிலைகளுக்குள்) நுழைந்தான். அவ்வாறு செய்ததால் அவன் அவற்றின் தன்மைகளை அழித்தான்.(9) விருத்திரனால் நீர்நிலைகள் கைப்பற்றப்பட்டதும், அவற்றின் நீர்த்தன்மைகள் அவற்றைவிட்டு அகன்றன. இதனால் பெருங்கோபம் அடைந்த இந்திரன் மீண்டும் தன் வஜ்ராயுதத்தால் அவனைத் தாக்கினான்.(10)

மிகப்பெரும் பலசாலியான இந்திரனின் வஜ்ரத்தால் தாக்கப்பட்ட அவன் (விருத்திரன்) ஜோதிக்குள் (ஒளிப்பொருளுக்குள்) தஞ்சம்புகுந்து, அதன் உள்ளார்ந்த இயல்பைச் சுருக்கினான்.(11) விருத்திரனால் மூழ்கடிக்கப்பட்ட ஒளிரும் பொருள் அதன் தன்மை, நிறம் மற்றும் வடிவத்தை இழந்ததும்(12) கோபம் நிறைந்த இந்திரன் மீண்டும் தன் வஜ்ரத்தை அவன் மேல் ஏவினான்.

அளவற்ற சக்தி கொண்ட இந்திரனால் மீண்டும் இவ்வாறு காயமடைந்த(13) விருந்திரன், திடீரென வாயுவுக்குள் நுழைந்து, அதன் உள்ளார்ந்த இயல்பைக் கெடுத்தான்.(14) விருத்திரனால் ஆட்கொள்ளப்பட்ட அந்தப் பொருள் {வாயு} அதன் தன்மையையும், தீண்டலையும் இழந்தது. மீண்டும் கோபத்தால் நிறைந்த இந்திரன், அவன் மீண்டும் தன் வஜ்ரத்தை வீசினான்.

அந்த வலிமைமிக்கவனால் (இந்திரனால்) காயமடைந்த அவன் ஆகாசத்தை (வெளியை) மூழ்கடித்து அதன் உள்ளார்ந்த தன்மையைப் பறித்தான். விருத்திரனால் மூழ்கடிக்கப்பட்ட ஆகாசத்தின் இயல்பு, ஒலி ஆகியவை அழிந்தன. நூறு வேள்விகளைச் செய்த தேவன் இதனால் பெருஞ்சினம் கொண்டு அவனை மீண்டும் தன் வஜ்ரத்தால் தாக்கினான்.(15,16)

வலிமைமிக்க இந்திரனால் இவ்வாறு தாக்கப்பட்ட அவன் {விருத்திரன்} திடீரென (சக்ரனின் {இந்திரனின்}) உடலுக்குள் நுழைந்து அதன் முக்கியப் பண்புகளை அபகரித்தான்.(17) விருத்திரனால் பீடிக்கப்பட்ட அவன் {இந்திரன்} பெரும் மாயையில் நிறைந்திருந்தான்.

ஓ! மதிப்பிற்குரிய ஐயா, பாரதக் குலத்தில் பெரும் வலிமைமிக்கவரே,(18) (அவன் இவ்வாறு பீடிக்கப்பட்டபோது) வசிஷ்டர் அவனுக்கு ஆறுதலளித்தார் என்றும், நூறு வேள்விகளைச் செய்த தேவன் {இந்திரன்}, தன் உடலுக்குள் இருந்த விருத்திரனை தன் புலப்படாத வஜ்ரத்தின் மூலம் கொன்றான் என்று கேள்விப்படுகிறோம். ஓ! இளவரசரே, இந்தத் தெய்வீக ரகசியம் சக்ரனால் பெருந்தவசிகளுக்குச் சொல்லப்பட்டது, பதிலுக்கு அவர்கள் அஃதை எனக்குச் சொன்னார்கள்" என்றான் {கிருஷ்ணன்}.(19,20)

அஸ்வமேதபர்வம் பகுதி – 11ல் உள்ள சுலோகங்கள் : 20

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்