Saturday, October 05, 2019

ஹஸ்தினாபுரம் திரும்பிய யுதிஷ்டிரன்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 14

Yudhishthira entered Hasitnapur! | Aswamedha-Parva-Section-14 | Mahabharata In Tamil

(அஸ்வமேதிக பர்வம் - 14)


பதிவின் சுருக்கம் : வியாசர் முதலியோர் யுதிஷ்டிரனைத் தேற்றியது; பீஷ்மர் முதலியோருக்கு ஈமச் சடங்குகளைச் செய்து ஹஸ்தினாபுரம் திரும்பிய யுதிஷ்டிரன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "நண்பர்களை இழந்த அரசமுனி யுதிஷ்டிரன், பெரும் தவத்தகுதிகளைக் கொண்ட இந்த முனிவர்களால் இவ்வாறு ஆறுதல் சொல்லப்பட்டான்.(1) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, வழிபடத்தகுந்த விஷ்டரஸ்ரவனாலும் {கிருஷ்ணனாலும்}, கிருஷ்ண துவைபாயனர் {வியாசர்}, தேவஸ்தானர், நாரதர், பீமன், நகுலன், கிருஷ்ணை (திரௌபதி), சகாதேவன், புத்திமானான விஜயன் {அர்ஜுனன்} ஆகியோராலும், இன்னும் பிற பெரும் மனிதர்களாலும், சாஸ்திரங்களை நன்கு அறிந்த பிராமணர்களாலும் உற்சாகமளிக்கப்பட்ட அந்த மனிதர்களின் தலைவன் {யுதிஷ்டிரன்}, தனது மன நோய்கள், தன் அன்புக்குரிய உறவினர்களின் மரணத்தால் எழுந்த கவலைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டான்.(2-4)


இறந்து போன தன் நண்பர்களுக்கான ஈமச் சடங்குகளைச் செய்த அந்த ஏகாதிபதி யுதிஷ்டிரன், பிராமணர்கள் மற்றும் தேவர்களைக் கௌரவித்து, கடல்களைக் கச்சையாகக் கொண்ட பூமியின் அரசுரிமையைத் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தான்.(5) தன் நாட்டை மீட்ட அந்தக் குரு இளவரசன் {யுதிஷ்டிரன்}, அமைதியான மனத்துடன் கூடியவனாக, அங்கிருந்த வியாசர், நாரதர் மற்றும் பிற தவசிகளிடம் இவ்வாறு சொன்னான்.(6)

{யுதிஷ்டிரன்}, "பெரியவர்களும், புராதனமானவர்களும், முதிர்ந்தவர்களுமான உங்களைப் போன்ற தவசிகளின் வார்த்தைகளால் ஆறுதலடைந்தேன், இப்போது கவலைக்கான எந்தக் காரணமும் எனக்கில்லை.(7) அதேபோல, நான் பெருஞ்செல்வத்தை அடைந்திருக்கிறேன், அதைக் கொண்டு தேவர்களை வழிபடுவேன். எனவே, உங்கள் துணையுடன் நான் இப்போது அந்த வேள்வியைச் செய்வேன்.(8) ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, அந்த (இமாலயப்) பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது என்று நாம் கேள்விப்படுகிறோம். எனவே, ஓ! பிராமணரே, தவசியே, பாட்டனே, உமது பாதுகாப்பின் கீழ் நாங்கள் இமய மலைகளைப் பாதுகாப்பாக அடையும் வகையில் ஆணையிடுவீராக. நான் செய்யப் போகும் வேள்வி முழுமையாக உமது கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது, மேலும், துதிக்கத்தகுந்த தெய்வீக முனிவரான நாரதர் மற்றும் தேவஸ்தானர் ஆகியோரும் எங்கள் நலத்திற்கான நல்ல பொருள் பொதிந்த சிறந்த சொற்களைச் சொல்லியிருக்கின்றனர்.(9,10) பெருஞ்சோதனைகளும், துன்பங்களும் நிறைந்த காலத்தில் பேறற்ற எந்த மனிதனும், அறம்சார்ந்த மனிதர்களால் அங்கீகரிக்கப்படும் இத்தகைய ஆசான்கள் மற்றும் நண்பர்களின் தொண்டைப் பெறும் நற்பேற்றைப் பெற்றதில்லை" {என்றான் யுதிஷ்டிரன்}.(11)

மன்னனால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பெருந்தவசிகள், மன்னனிடமும் {யுதிஷ்டிரனிடமும்}, கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனிடமும் இமய மலைப் பகுதிகளுக்குச் செல்லுமாறு ஆணையிட்டுவிட்டு, அங்கே கூடியிருந்த கூட்டத்தின் முன்னிலையே மறைந்து போனார்கள். அதன்பிறகு, தர்மனின் அரச மகனான மன்னன் {யுதிஷ்டிரன்} சற்று நேரம் அங்கே அமர்ந்திருந்தான்.(12,13) பீஷ்மர் மாண்டதன் விளைவால் பாண்டவர்கள் அப்போது அவருடைய ஈமச் சடங்குகளைச் செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இவ்வாறு அவர்கள் ஈடுபட்டிருந்தபோது, பீஷ்மர், கர்ணன் மற்றும் முதன்மையான பிற கௌரவர்களின் சடலங்களுக்கு இறுதிச் சடங்குகளில் {உத்தரக்கிரியைச் செய்வதில்} பிராமணர்களுக்கு அவர்கள் பெருங்கொடைகளை அளித்ததால் நெடுங்காலம் கடந்ததைப் போலத் தெரிந்தது. அப்போது அந்தக் குருகுல வழித்தோன்றல்களில் முதன்மையானவன் {யுதிஷ்டிரன்},(14,15) (போரில் கொல்லப்பட்ட வீரர்களுக்கான) ஈமச்சடங்குகளைத் திருதராஷ்டிரனோடு சேர்ந்து செய்து, பிராமணர்களுக்கு அபரிமிதமான செல்வத்தைக் கொடையளிதான். முன்னே செல்லும் திருதராஷ்டிரனுடன் கூடிய அந்தப் பாண்டவத் தலைவன் {யுதிஷ்டிரன்}(16) ஹஸ்தினாபுர நகரத்திற்குள் நுழைந்தான். ஞானக்கண்களைக் கொண்டவனும், தன் பெரியப்பாவுமான அரசனுக்கு {திருதராஷ்டிரனுக்கு} ஆறுதல் சொன்ன அந்த அறம்சார்ந்த இளவரசன் {யுதிஷ்டிரன்}, தன் தம்பிகளுடன் சேர்ந்து பூமியைத் தொடர்ந்து ஆண்டான்" {என்றார் வைசம்பாயனர்}.(17,18)

அஸ்வமேதபர்வம் பகுதி – 14ல் உள்ள சுலோகங்கள் : 18

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்