Friday, October 04, 2019

காமகீதை - ஆசையை வெல்வதெப்படி? - அஸ்வமேதபர்வம் பகுதி – 13

Kamagita- How to overcome desire? | Aswamedha-Parva-Section-13 | Mahabharata In Tamil

(அஸ்வமேதிக பர்வம் - 13)


பதிவின் சுருக்கம் : ஆசை வெல்லப்பட முடியாதது என்பதையும், அதை வெல்வதற்குரிய வழிமுறையையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்...


வாசுதேவன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதக் குலக்கொழுந்தே, (நாடு முதலியவை போன்ற) புறப்பொருட்களைக் கைவிடுவதன் மூலம் விடுதலை {முக்தி} அடையப்படுவதில்லை, சதைக்கு (உடலுக்குத்) தீனிபோடும் பொருட்களைக் கைவிடுவதன் மூலமே அஃது அடையப்படுகிறது.(1) புறப் பொருட்களை மட்டுமே கைவிட்டவனும், அதே வேளையில் ஆசைகள் மற்றும் சதைப் பலவீனங்கள் ஆகியவற்றில் மூழ்கியவனுமான மனிதனால் அடையப்படும் அறம் {பண்பு} மற்றும் மகிழ்ச்சி ஆகியன நமது எதிரிகளின் பங்காகட்டும் {நமது எதிரிகளுக்கு உண்டாகட்டும்}.(2) இரண்டு எழுத்துகளைக் கொண்டது மிருத்யுவாகும் (ஆன்மாவின் மரணம் அல்லது கேடு ஆகும்), மூன்று எழுத்துகளைக் கொண்டது சாஸ்வத பிரம்மம் அல்லது நித்திய ஆன்மாவாகும். இஃது அல்லது அஃது என்னுடையது என்ற அகங்காரம், அல்லது உலகம் சார்ந்த பொருட்களுக்கு அடிமையாக இருக்கும் நிலையே மிருத்தியுவாகும், மேலும் அவ்வுணர்வின்மையே சாஸ்வதமாகும்.(3) ஓ! மன்னா, பிரம்மம் மற்றும் மிருத்யு ஆகிய இவ்விரண்டும் அனைத்து உயிரினங்களின் ஆன்மாக்களிலும் தங்கள் இருக்கையைக் கொண்டு, புலப்படாத நிலையிலேயே நீடித்து நிச்சயம் ஒன்றோடொன்று போர்புரியச் செய்கின்றன[1].(4)


[1] கும்பகோணம் பதிப்பில், "மம {என்னுடையது} என்னும் இரண்டக்ஷரம் ஸம்ஸாரத்திற்குக் காரணமாகும்; நமம {என்னுடையதன்று} என்பது சாஸ்வதமான பிரம்மத்தை அடையக் காரணமாகும். ஆகையால், பிரம்மத்திற்குக் காரணமான பற்றின்மையும், ஸம்ஸாரத்திற்குக் காரணமான பற்றும் சித்தத்திலேயே காணப்படாமலிருந்து கொண்டு பிராணிகளைச் சண்டையிடும்படி செய்கின்றன. ஸம்சயமில்லை" என்றிருக்கிறது.

ஓ! பாரதரே, எந்த உயிரினமும் ஒருபோதும் அழிவடைவதில்லை என்பது உண்மையானால், ஓர் உயிரினத்தின் உடலைத் துளைப்பதன் (அழிப்பதன்) மூலம் ஏற்படும் அதன் மரணத்தினால் ஒருவன் குற்றவுணர்வை அடையத் தேவையில்லை.(5) அசைவன மற்றும் அசையாதனவற்றை உள்ளடக்கிய படைப்புடன் கூடிய மொத்த பூமியின் அரசுரிமையையும் அடைந்த மனிதன் அதனிடம் பற்று கொள்ளாமலோ, அதனை அனுபவிப்பதில் மூழ்காமலோ இருந்தால் அம்மனிதனுக்கு இவ்வுலகம் என்ன செய்யும்?(6) ஆனால், ஓ! பிருதையின் மகனே, உலகத்தைத் துறந்து காட்டில் துறவியாகக் காட்டுக்கிழங்குகளையும் உணவுகளையும் உண்டு வாழும் மனிதன் உலகில் உள்ள நல்ல பொருட்களில் ஏக்கம் கொண்டு, அவற்றுக்கு அடிமையாக இருந்தால் அவன் தன் வாயில் மிருத்யுவை (மரணத்தைக்) கொண்டிருக்கலாம் {அவன் மிருத்யுவின் வாயில் இருக்கிறான்} என்று சொல்லப்படுகிறது.(7) ஓ! பாரதரே, புறத்திலும், அகத்திலும் உமக்குள்ள எதிரிகளின் தன்மையை (உமது ஆன்மப் பார்வையின் மூலம்) கவனமாகக் காண்பீராக. நிலையான உண்மையின் இயல்பைக் காண இயன்ற மனிதன், பேரச்சத்தின் (கேட்டின் {அழிவின்}) ஆதிக்கத்தைக் கடக்க இயன்றவனாவான்.(8)

உலகம் சார்ந்த ஆசைகளில் மூழ்கியுள்ளோரின் ஒழுக்கத்தை மனிதர்கள் உவப்பாகப் பார்ப்பதில்லை, ஆசை இல்லாமல் (ஆசையை வேராகக் கொள்ளாத) எந்தச் செயலுமில்லை, மேலும் ஆசைகள் (காமங்கள்) அனைத்தும் மனத்தின் அங்கங்களை (கிளைகளைப்) போன்றனவாகும். எனவே, இதை அறிந்த ஞானிகள் தங்கள் ஆசைகளை அடக்குகின்றனர். பரமாத்மாவோடு ஒன்றிணையும் யோகியானவன், தனது முந்தைய பல்வேறு பிறவிகளின் நடைமுறைகள் {பழக்கங்கள்} காரணமாக, (விடுதலை {முக்தி} அடைவதற்கு) யோகத்தையே மிகச் சரியான வழியாக அறிகிறான். ஆன்மாவின் ஆசைகள் பக்தி மற்றும் அறத்தைக் கடத்துவனவல்ல, ஆசைகளை அடக்குவதே முற்றான உண்மை அறத்தின் வேராக இருக்கிறது என்பதை நினைவுகூரும் மனிதர்கள், முன்னேற்றத்தை அடைந்து விடலாம் என்ற நோக்கத்தோடு ஈகை பயில்தல், வேத கல்வி, தவம், உலகம் சார்ந்த செழிப்பை அடைவதற்கான வேத சடங்குகள், விழாக்கள், வேள்விகள், அறவிதிகள், தியானம் ஆகியவற்றில் ஈடுபடுவதில்லை.(9-11) பழங்கதைகளை அறிந்த தவசிகள், இந்த உண்மையை விளக்கும் வகையில் காமகீதை என்ற பெயரில் அழைக்கப்படும் இந்தக் கதைகளை உரைக்கின்றனர். ஓ! யுதிஷ்டிரரே, அவற்றை விளக்கமாகச் சொல்கிறேன் கேட்பீராக.(12)

(காமன் சொல்கிறான்) ("அனைத்து ஆசைகளையும் அடக்குதல், யோகப் பயிற்சி முதலிய) உரிய வழிமுறைகளைப் பின்பற்றாமல் எந்த உயிரினத்தாலும் என்னை அழிக்க இயலாது.(13) ஒரு மனிதன் என் சக்தியை அறிந்தும், வேண்டுதல்கள் {ஜபங்கள்} முதலியவற்றை முணுமுணுப்பதன் மூலம் என்னை அழிக்க முனைந்தால், நானே அவனுக்குள் உள்ள அகநிலைத் தன்னுணர்வு என்று நம்பச் செய்து, வஞ்சிப்பதன் மூலம் நான் அவனை வெல்வேன்[2]. பல்வேறு கொடைகளுடன் கூடிய வேள்விகளின் மூலம் அவன் என்னை அழிக்க விரும்பினால்,(14) அசையும் படைப்புகளுக்கு மத்தியில் மிகவும் அறம்சார்ந்த உயிரினமாக அவனது மனத்தில் தோன்றி வஞ்சிப்பேன், வேதங்கள் மற்றும் வேதாங்கங்களில் தேர்ச்சி அடைவதன் மூலம் என்னை அவன் ஒழிக்க விரும்பினால், அசைவில்லாத படைப்புகளுக்கு மத்தியில் உள்ள அற ஆன்மாவாக அவனது மனத்திற்குத் தோன்றி அவனை வெல்வேன்.(15)

[2] கும்பகோணம் பதிப்பில், "எவன் ஆயுதத்திலுள்ள {ஜபாதி சாஸ்திரத்திலுள்ள} பலத்தைத் தெரிந்து கொண்டு என்னைக் கொல்ல முயற்சி செய்கிறானோ அவனுடைய அந்த ஆயுதத்தில் {மனத்தில்} நான் மறுபடியும் தோன்றுகிறேன்" என்றிருக்கிறது.

வாய்மையைத் தன் பலமாகக் கொண்ட ஒரு மனிதன், பொறுமையின் மூலம் என்னை வெல்ல விரும்பினால்,(16) நான் புலப்படாதவனாக அவனது மனமாகவே அவனுக்குத் தோன்றுவேன். கடும் அறப்பயிற்சிகள் செய்யும்  {கடும் விரதங்களுடன் கூடிய} மனிதன், தவத்தின் மூலம் என்னை அழிக்க விரும்பினால்,(17) அவன் என்னை அறிந்து கொள்வதைத் தடுக்கும் வகையில் தவத்தின் தோற்றத்திலேயே அவனது மனத்தில் நான் தோன்றுவேன். கல்விமானான ஒரு மனிதன்,(18) விடுதலையை {முக்தியை} அடையும் நோக்கத்துடன் என்னை அழிக்க விரும்பினால், விடுதலையை நோக்கமாகக் கொண்ட அத்தகைய மனிதனின் முகத்தில் சிரித்து மகிழ்ந்தாடுகிறேன். எந்த உயிரினத்தாலும் கொல்லப்படவோ, அழிக்கப்படவோ முடியாதவனாகவும், எப்போதும் நீடித்திருக்கும் ஒப்பற்றவனாகவும் நானே இருக்கிறேன் {நான் எவனாலும் கொல்லப்பட முடியாதவன்" என்றான் காமன்}.(19)

ஓ! இளவரசே {யுதிஷ்டிரரே}, இந்தக் காரணத்தினால் நீரும் உமது ஆசைகளை (காமத்தை) அறத்தின் பக்கம் திருப்பினால் அந்த வழிமுறையின் மூலம் நீர் உமக்கான நன்மையை அடையலாம்.(20) எனவே, கொடைகளுடன் கூடிய குதிரை வேள்வியையும், பெரும் காந்தியுடையவையும், கொடைகளுடன் கூடியவையுமான பல்வேறு வேள்விகள் பிறவற்றையும் உரிய முறையில் செய்வதற்கு ஆயத்தமாவீராக.(21) போர்க்களத்தில் கொல்லப்பட்டுக் கிடக்கும் உமது நண்பர்களைக் கண்டு மீண்டும் துயரம் உம்மை ஆட்கொள்ள வேண்டாம். இந்தப் போரில் கொல்லப்பட்ட மனிதர்களை மீண்டும் உயிருடன் உம்மால் பார்க்க முடியாது.(22) எனவே, இம்மையில் புகழை அடையவும் (மறுமையில்) மிகச் சரியான வழியை அடையவும் கொடைகளுடன் கூடிய மகத்தான வேள்விகளை நீர் செய்வீராக" என்றான் {கிருஷ்ணன்}".(23)

அஸ்வமேதபர்வம் பகுதி – 13ல் உள்ள சுலோகங்கள் : 23

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்