Tuesday, October 15, 2019

ஜனனம்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 18

Birth! | Aswamedha-Parva-Section-18 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 03)


பதிவின் சுருக்கம் : ஜீவன் கருவறையை அடைவது முதலியவற்றைக் குறித்துக் காசியபருக்குச் சொன்ன சித்தர்...


பிராமணர் {சித்தர் காசியபரிடம்}, "ஜீவன் செய்யும் நல்ல மற்றும் தீய செயல்கள் அழிவடைவதில்லை. உடலுக்குப் பின் உடலைப் பெறுவதன் மூலம் அந்தச் செயல்கள் அவற்றுக்குத் தொடர்புடைய கனிகளை {பலன்களை} உண்டாக்குகின்றன.(1) கனி சுமக்கும் மரம், விளைச்சலுக்கான காலம் வரும்போது, பெரும் அளவிலான கனிகளை விளைவிப்பத்தைப் போலவே, தூய இதயத்துடன் அடையப்படும் தகுதியும் {புண்ணியமும்}, (பேரின்பம் எனும்) பயிரைப் பெருமளவில் விளைவிக்கச் செய்யும்.(2) அதே போலவே, பாவம் நிறைந்த இதயத்துடன் செய்யப்படும் பாவம், துன்பமெனும் பெரும்பயிரை விளைவிக்கும். ஆன்மா (அல்லது ஜீவன்), மனத்தை மேலே கொண்டு செயல்படுமாறு தன்னிடமே சொல்லிக் கொள்கிறது.(3) ஜீவன், தான் செய்யும் செயல்கள் அனைத்துடன், காமம் மற்றும் கோபத்தில் மூழ்கி, கருவறைக்குள் எவ்வாறு நுழைகிறது என்பதைக் கேட்பாயாக.(4)


குருதியுடன் கலந்த உயிர்வித்தானது, பெண்களின் கருவறைக்குள் புகுந்து, (அவனது) நல்ல அல்லது தீய செயல்களின் மூலம் பிறந்த (ஜீவனின்) களமாகிறது.(5) அதன் நுட்பம் மற்றும் புலப்படா நிலை ஆகியவற்றின் விளைவால் ஜீவனானது, உடலுக்குப் பின் உடலை அடைந்தாலும் எதனுடனும் பற்று கொள்வதில்லை. எனவே, அது {ஜீவன்} நித்திய பிரம்மம் என்றழைக்கப்படுகிறது[1].(6) அதுவே (ஜீவன், அல்லது பிரம்மமே) உயிரினங்கள் அனைத்தின் வித்தாகிறது. அதன் விளைவாலேயே உயிரினங்கள் உயிருடன் வாழ்கின்றன. கருவில் பகுதி, பகுதியாக அனைத்து அங்கங்களிலும் நுழையும் ஜீவன், மனத்தின் குணத்தை ஏற்றுக் கொண்டும், பிராணனுக்குச் சொந்தமான பகுதிகள் அனைத்துக்குள்ளும் வசித்துக் கொண்டும் (உயிரை {வாழ்வை}) ஆதரிக்கிறது. இதன் விளைவாக மனத்துடன் கூடிய கருவானது தன் அங்கங்களை அசைக்கத் தொடங்குகிறது.(7,8)

[1] "நீலகண்டர் இந்தச் சுலோகத்தை முற்றிலும் வேறு வகையில் விளக்குகிறார். அவரைப் பொறுத்தவரையில், ‘நுட்பம் மற்றும் புலப்படா நிலையின் விளைவால் ஜீவன் எதனுடன் பற்றுக் கொள்ளாமல் இருக்கிறது. அதன் காரணமாக, பிரம்ம அறிவைக் கொண்ட ஒருவன், பிரம்மத்தை அறிந்தவனாகி, தன் விருப்பத்தின் பெரும் நோக்கத்தை அடைந்து, இவ்வாறாவதில் (அனைத்துப் பொருட்களில் இருந்தும் தொடர்பறுந்த நிலையை அடைவதில்) வெல்கிறான்’ என்ற பொருளைச் சொல்கிறார். இந்த விளக்கம் வலிந்து பெறப்படுவதாகத் தெரிகிறது.

உருக்கப்பட்ட இரும்பானது (வார்ப்புக்குள்) ஊற்றப்படும்போது, அந்த வார்ப்பின் வடிவைப் பெறுவதைப் போலவே, ஜீவனும் கருவை அடைந்து அவ்வாறே ஆகிறது.(9) இரும்புத்திரளுக்குள் நுழையும் நெருப்பானது, அதை வெகுவாகச் சுடுவதைப் போலவே, கருவில் வெளிப்படும் ஜீவனும் அவ்வாறே செய்கிறது என்பதை அறிவாயாக.(10) அறையில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கு (அதனுள் இருக்கும் அனைத்துப் பொருட்களையும்) கண்டுபிடிப்பதைப் போல, மனமும், உடலின் பல்வேறு அங்கங்களைக் கண்டுபிடிக்கிறது.(11) முந்தைய உடலில் ஜீவன் செய்யும் நல்ல அல்லது கெட்ட செயல்கள் எதனையும் நிச்சயம் அஃது அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ வேண்டும்.(12) அவ்வாறு அனுபவிக்கவும், சகித்துக் கொள்ளவும் செய்வதன் மூலம் முந்தைய செயல்கள் தீர்ந்து, ஜீவனானது, விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கும் தியானத்தில் உள்ள கடமைகளின் அறிவை அடைவதில் வெல்லும் வரை மீண்டும் மீண்டும் வேறு செயல்களைக் குவிக்கிறது.(13)

ஓ! மனிதர்களில் சிறந்தவனே, இதைப் பொறுத்தவரை, மீண்டும் மீண்டும் நிகழும் மறுபிறவி சுழற்சிகளின் போது, ஜீவனை மகிழ்ச்சியடையச் செய்யும் செயல்களைக் குறித்து நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(14) கொடைகள் {தானம்}, தவம் செய்வது {விரதம்}, பிரம்மச்சரியம், விதிக்கப்பட்டுள்ள விதிகளின்படி பிரம்மம் தரித்தல், தற்கட்டுப்பாடு, அமைதி, அனைத்து உயிரினங்களிடமும் கருணை,(15) ஆசைகளைக் கட்டுப்படுத்தல், கொடூரந்தவிர்த்தல், பிறருக்கு உரியதை அபகரிக்காமல் இருத்தல், போலியான செயல்கள் அனைத்தையும் மனத்தாலும் செய்யாதிருத்தல்,(16) தாய்க்கும், தந்தைக்கும் மதிப்புடன் தொண்டாற்றுதல், தேவர்களையும், விருந்தினர்களையும் கௌரவித்தல், ஆசான்களை வழிபடுதல், இரக்கம், தூய்மை, அனைத்து உறுப்புகளையும் நிலையாகக் கட்டுப்படுத்தல்,(17) நற்செயல்கள் அனைத்தையும் செய்தல் ஆகியவை நல்லொழுக்கமென அமைவதாகச் சொல்லப்படுகிறது. அத்தகைய ஒழுக்கத்திலிருந்தே உயிரினங்கள் அனைத்தையும் நிலையாகப் பாதுகாக்கும் அறம் எழுகிறது.(18) இத்தகைய ஒழுக்கத்தை  நல்லோருக்கு மத்தியில் எப்போதும் ஒருவன் காணலாம். உண்மையில், அத்தகைய ஒழுக்கம் அங்கேயே நிலையாக வசிக்கிறது. அமைதியான ஆன்மாக்களைக் கொண்ட மனிதர்கள் செய்யும் நடைமுறைச் செயல்களே  அறத்தைக் குறிக்கின்றன.(19) நிலையான அறமாக அமையும் நடைமுறைச் செயல்கள் அவர்களுக்கு மத்தியிலேயே வைக்கப்பட்டிருக்கின்றன. அறம் நோற்கும் ஒருவன் ஒருபோதும் துன்ப கதியை அடைய மாட்டான்.(20)

உலகமானது, அறத்தில் இருந்து வீழும்போது, நல்லோரின் ஒழுக்கத்தின் மூலமே அறப்பாதையில் {மீண்டும்} அது நிலைநிறுத்தப்படுகிறது. யோகியானவன் விடுதலையடைகிறான் {முக்தியடைகிறான்}, எனவே அவன் இவர்களை {நல்லோரை} விடவும் சிறந்தவனாக இருக்கிறான்.(21) நீதிமானாகச் செயல்படும் ஒருவன், தான் செய்ய வேண்டியவற்றை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிறப்பாக நீண்ட காலம் செய்து வரும்போதே உலகத்திலிருந்து அவன் வீடுபேறடைவது நிகழ்கிறது.(22) ஓர் உயிரினமானது தான் முந்தைய பிறவியில் செய்த செயல்களின் பலன்களை இவ்வாறே அடைகிறது. இந்தச் செயல்கள் அனைத்தும் காரணமாக அமைவதன் விளைவாகவே ஒருவன், தனது உண்மை வடிவில் இருந்து வேறு பட்ட நிலையில் இவ்வுலகை அடைகிறான்.(23) இந்தக் கேள்வியைப் பொறுத்தவரையில் இவ்வுலகில் ஐயமிருக்கிறது. (ஜீவனால்) ஓருடல் ஏற்கப்படுவது முதலில் எதனால் தீர்மானிக்கப்படுகிறது?(24)

உலகமனைத்துக்குப் பெரும்பாட்டனான பிரம்மன் முதலில் தன் உடலை அமைத்துக் கொண்டு, அதன்பிறகு, அசையும் மற்றும் அசையாத உயிரினங்களைக் கொண்ட மூன்று உலகங்களையும் முழுமையாகப் படைத்தான்.(25) முதலில் தன்னுடலை ஏற்றப் பிறகே அவன் பிரதானத்தைப் படைத்தான். அனைத்தையும் எது மறைக்குமோ, உயர்ந்தது என அனைவரும் எதனை அறிந்தார்களோ அந்தப் பிரதானமே உடல்கொண்ட உயிரினங்கள் அனைத்தின் பொருள் காரணமாக அமைகிறது.(26) காணக்கூடிய இஃது {உடல்} அழியத்தக்கதென்றும், மற்றது {காணமுடியாத ஆன்மா} இறப்பற்றது மற்றும் அழிவில்லாதது என்றும் சொல்லப்படுகிறது. (காணப்படக்கூடிய) இது க்ஷரம் (அழியக்கூடியது) என்று சொல்லப்படுகிறது; எனினும், மற்றது {ஆன்மா} இறப்பற்றது (என்றும்) அக்ஷரம் (அழிவற்றது) என்றும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு புருஷனாலும் மொத்தமாகப் பகிர்ந்து கொள்ளப்பட்ட {உடல், ஆன்மா மற்றும் பிரம்மம் ஆகிய} இவை மூன்றும் {உடல் மற்றும் ஜீவன் என்ற} இருமையாக இருக்கின்றன[2].(27) முதலில் (உடல் கொண்ட வடிவில் தோன்றிக்) காணப்பட்ட பிரஜாபதி {பிரம்மன்}, (பிறகு) அடிப்படை பூதங்கள் அனைத்தையும், அசைவற்ற உயிரினங்கள் அனைத்தையும் படைத்தான். இதுவே பண்டைய கேள்வியாகும் {பழைமையான வேதமாகும்}.(28)

[2] "பரந்தவாமிர்தமாக்ஷரம் என்பது அமிர்தம் மற்றும் அக்ஷரத்தைக் குறிக்கிறது. முதல் வரியானது க்ஷரம், அல்லது பொருள் உறை அல்லது உடலைக் குறித்தும் அதன் பிறகு பரம் அல்லது மற்றது குறித்தும் பேசுகிறது. இதில் மற்றது என்பது அமிர்தம் அல்லது தூய்மையான நிலையில் இருக்கும் பிரம்மத்தைக் குறிக்கும் சுத்தீத சைத்தன்யம் என்றும், அக்ஷரம், அல்லது பொருள் உறையில் {உடலுக்குள்} இருக்கும் ஜீவன் என்ற இருவகைகளில் இருக்கிறது. இரண்டாவது வரியில் வரும் திரையம் என்பது க்ஷரம் {உடல்}, அமிர்தம் {பிரம்மம்} மற்றும் அக்ஷரத்தை {ஜீவனைக்} குறிக்கிறது. மிதுனம் என்பது இருமையாகும். ஒவ்வொரு புருஷனும் க்ஷரம் {உடல்} மற்றும் அக்ஷரம் {ஜீவன்} என்ற இருமையில் உண்டானவன் என்று இந்த ஸ்லோகம் சொல்கிறது. தெலங்க் அவர்கள் இந்தச் சுலோகத்தை முற்றிலும் வேறான வகையில் பொருள் கொண்டிருக்கிறார். அவர் திரையானம் என்பதை மொத்தமாகப் புறக்கணித்து மிதனும் என்பதை இணை (ஆண் மற்றும் பெண்) என்று குறிப்பதாகப் பொருள் கொள்கிறார். நான் கண்ட உரைகள் அனைத்தும் திரையானம் என்ற சொல்லைக் கொண்டிருக்கின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "இந்தச் சரீரமானது க்ஷரமென்றும், சரீரத்தைக் காட்டிலும் வேறானதும், அழிவற்றதுமான ஜீவன் அக்ஷரமென்றும் சொல்லப்படுகின்றன. சரீரம், ஜீவன், பிரம்மன் இம்மூன்றினுள் சரீரமும், ஜீவனும் முற்றும் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறாக இருக்கின்றன" என்றிருக்கிறது.

அதில் (உடலை ஏற்றுக் கொண்டதில்), காலம், பல்வேறு உயிரினங்களுக்கு மத்தியில் நிகழ்ந்த குடிபெயர்வுகள், மறுபிறவிகள் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் பெரும்பாட்டன் ஓர் எல்லையை விதித்தான்.(29) நுண்ணறிவு கொண்டவனும், தன் ஆன்மாவைக் கண்டவனுமான ஒரு மனிதன், முற்பிறவிகள் குறித்துச் சொல்வதைப் போலவே நான் சொல்வது அனைத்தும் முறையானவையும், சரியானவையுமாகும்.(30) இன்பமும், துன்பமும் நிலையில்லாதவை என்று சரியான பார்வையில் காண்பவனும், உடலைப் புனிதமற்ற திரட்டாகவும், அழிவை செயற்பாட்டு விதியாகவும் கருதுபவனும்,(31) சிறிய அளவிலான இன்பமும் கூட உண்மையில் துன்பமே என்பதை நினைவுகூருபவனுமான மனிதன், கடப்பதற்கு மிக அரிதான உலகம் சார்ந்த இடம்பெயர்வு எனும் இந்தப் பயங்கரப் பெருங்கடலை {ஸம்ஸரஸமுத்திரத்தைக்} கடப்பதில் வெல்வான்.(32) முதுமை, மரணம் மற்றும் நோயால் துன்புற்றாலும், பிரதானத்தைப் புரிந்து கொள்ளும் ஒருவன், நனவுநிலையுடன் கூடிய உயிரினங்கள் அனைத்தினுள்ளும் வசிக்கும் நனவுநிலையை {சைதன்யத்தைச்} சமமாகப் பார்ப்பான்.(33) பரம இருக்கையை {மேலான கதியை} நாடும் ஒருவன், (வேறு) பொருட்கள் அனைத்திலும் முற்றிலும் பாகுபாடற்றவனாக ஆகிறான். ஓ! மனிதர்களில் சிறந்தவனே, இது தொடர்பாக வாய்மைக்கு ஏற்புடைய வகையில் நான் உனக்கு ஞானத்தைப் போதிக்கப் போகிறேன்.(34) ஓ! கல்விமானான பிராமணா {காசியபா}, அந்த அழிவற்ற இருக்கையை {மேலான கதியை} நான் அறிவிக்கும்போது, சிறந்த ஞானமாக அமைவதை நீ முழுமையாகப் புரிந்து கொள்வாயாக" என்றார் {சித்தர்}.(35)

அஸ்வமேதபர்வம் பகுதி – 18ல் உள்ள சுலோகங்கள் : 35

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்