Saturday, January 04, 2020

விதுரப்பிரவேசம்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 26

Enter Vidura! | Asramavasika-Parva-Section-26 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 26)


பதிவின் சுருக்கம் : ஒருவரையொருவர் நலம் விசாரித்த திருதராஷ்டிரனும், யுதிஷ்டிரனும்; கூட்டத்தைக் கண்டு விதுரன் விலகிச் செல்வதைக் கண்ட யுதிஷ்டிரன்; விரைந்து சென்ற யுதிஷ்டிரனுக்குள் யோகத்தால் பிரவேசித்த விதுரன்; இந்த அதிசயத்தைத் திருதராஷ்டிரனிடம் சொன்ன யுதிஷ்டிரன்...


திருதராஷ்டிரன், "ஓ! யுதிஷ்டிரா, நீ உன் தம்பிகளுடனும், நகர மற்றும் மாகாணவாசிகளுடனும் அமைதியாகவும், இன்பமாகவும் இருக்கிறாயா?(1) உன்னைச் சார்ந்திருப்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? உன் அமைச்சர்கள், பணியாட்கள், பெரியோர், ஆசான்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?(2) உன் ஆட்சிப்பகுதிகளில் வாழ்வோர் அச்சமின்றி இருக்கிறார்களா? மனிதர்களின் ஆட்சியாளர்கள் பின்பற்றும் பழைமையானதும், மரபுசார்ந்ததுமான ஒழுக்கத்தை நீ பின்பற்றுகிறாயா?(3) நீதி மற்றும் நேர்மையால் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை அலட்சியம் செய்யாமல் நீ உன் கருவூலத்தை நிரப்புகிறாயா? பகைவர்கள், நடுநிலையாளர்கள், கூட்டாளிகள் ஆகியோரிடம் உரிய முறையில் நடந்து கொள்கிறாயா?(4)


(வேள்விகளுக்காகவும், அறச் சடங்குகளுக்காகவும் விதிக்கப்படும்) முதற்கொடைகளை அளித்துப் பிராமணர்களை முறையாகக் கவனித்துக் கொள்கிறாயா? ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, உன் பகைவரே உன் நடத்தையால் நிறைவடைந்திருக்கும்போது குடிமக்கள், உன் பணியாட்கள் மற்றும் உற்றார் உறவினரைக் குறித்துச் சொல்வதற்கு என்ன இருக்கிறது? ஓ! மன்னர்களின் மன்னா, பித்ருக்களையும், தேவர்களையும் அர்ப்பணிப்புடன் நீ துதிக்கிறாயா?(5,6) ஓ! பாரதா, விருந்தினர்களுக்கு உணவும், பானமும் கொடுத்து நீ அவர்களை வழிபடுகிறாயா? உன் ஆட்சிப்பகுதிகளில் உள்ள பிராமணர்கள், தங்கள் வகைக்கான கடமைகளில் அர்ப்பணிப்புடன் அறப்பாதையில் நடக்கிறார்களா?(7) உன் நாட்டுக்குள் இருக்கும் க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், மற்றும் உன் உறவினர்கள் அனைவரும் தங்கள் தங்களுக்குரிய கடமைகளை நோற்கிறார்களா? உன் குடிமக்களில் பெண்கள், பிள்ளைகள், முதியவர்கள் ஆகியோர் (துன்பமான சூழ்நிலையில்) வருந்தாமல், (வாழ்வின் தேவைகளுக்காக) பிச்சை எடுக்காமல் இருப்பார்கள் என நான் நம்புகிறேன். ஓ! மனிதர்களில் சிறந்தவனே, உன் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், உன் வீட்டில் முறையாகக் கௌரவிக்கப்படுகிறார்களா? ஏகாதிபதி, அரசமுனிகளுக்குரிய இந்தக் குலமானது உன்னைத் தங்கள் மன்னனாக அடைந்து, புகழ் மற்றும் மகிமையில் இருந்து வீழாதிருக்கிறது என நான் நம்புகிறேன்" என்றான் {திருதராஷ்டிரன்}".(9)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இவ்வாறு சொன்ன அந்த முதிர்ந்த மன்னனிடம் அறநெறியையும், நீதியையும் நன்கறிந்தவனும், செயல்கள் மற்றும் வாக்கில் நன்கு திறம்பெற்றவனுமான யுதிஷ்டிரன், தன் நலம் குறித்த சில கேள்விகளை முன்வைத்துப் பினவருமாறு பேசினான்.(10)

யுதிஷ்டிரன் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, உமது அமைதியும், தற்கட்டுப்பாடும், இதய அமைதியும் வளர்கின்றனவா? என் தாயான இவள் களைப்பும், தொல்லையுமின்றி உமக்குத் தொண்டாற்ற இயன்றவளாக இருக்கிறாளா?(11) ஓ! மன்னா, இவளது காட்டுவாசம் கனியை {பயனை} விளைவிக்குமா? குளிர் மற்றும் காற்று ஆகியவற்றாலும் {ஆகியவற்றுக்கு வெளிப்பட்டும்}, நடப்பதனால் உண்டாகும் களைப்பாலும் மெலிந்திருப்பவளும், இப்போது கடுந்தவப்பயிற்சிகளில் அர்ப்பணிப்பு மிக்கவளாக இருப்பவளும், என் பெரியன்னையுமான இந்த ராணி {காந்தாரி} வலிமையும், சக்தியும் மிக்கவர்களும், க்ஷத்திரிய வகைக் கடமைகளில் அர்ப்பணிப்புடன் இருந்தவர்களும், போர்க்களத்தில் கொல்லப்பட்டவர்களுமான இவளது பிள்ளைகளை எண்ணி இன்னும் வருந்தாமல் இருக்கிறாளா?(12,13) இந்தப் படுகொலைக்குப் பொறுப்பான இழிந்த பாவிகளான எங்களை இவள் குற்றஞ்சாட்டுகிறாளா? ஓ! மன்னா, விதுரர் எங்கே? எங்களால் அவரை இங்குக் காண முடியவில்லையே. நோன்புகளை நோற்பவரான சஞ்சயர் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார் என நான் நம்புகிறேன்" என்றான்".(14)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இவ்வாறு சொல்லப்பட்ட திருதராஷ்டிரன், மன்னன் யுதிஷ்டிரனுக்குப் பதிலளிக்கும் வகையில், "ஓ! மகனே, விதுரன் நன்றாக இருக்கிறான். அவன் உணவனைத்தையும் கைவிட்டு, காற்றை மட்டுமே உண்டு, கடுந்தவங்களைச் செய்து வருகிறான். அவன் மெலிந்திருக்கிறான், அவனது தமனிகளும், நரம்புகளும் புலப்படுகின்றன. இந்த வெறுங்காட்டில் சில வேளைகளில் பிராமணர்களால் அவன் பார்க்கப்படுகிறான்" என்றான்.(16)

திருதராஷ்டிரன் இதைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, தொலைவில் விதுரன் தென்பட்டான். அவன் தன் தலையில் சடாமுடி தரித்து, வாயில் சரளைக் கற்களை வைத்துக் கொண்டு, மிக மிக மெலிந்தவனாகக் காணப்பட்டான். அவன் {விதுரன்} முற்றிலும் நிர்வாணமாக இருந்தான். அவனது உடல் முழுவதும் புழுதியும், காட்டு மலர்களின் சாறும் படிந்திருந்தன.(17) க்ஷத்ரி {விதுரன்} தொலைவில் தென்பட்ட போது, அந்தச் செய்தி யுதிஷ்டிரனுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஓ! மன்னா, திடீரென நின்ற விதுரன், (பல மனிதர்கள் நிறைந்திருந்த) ஆசிரமத்தை நோக்கித் தன் கண்களைச் செலுத்தினான் (அவர்களைக் கண்டான்).(18) மன்னன் யுதிஷ்டிரன் தனியனாக அவனைப் பின்தொடர்ந்து சென்றபோது, ஆழ்ந்த காட்டுக்குள் நுழைந்த அவன் {விதுரன்}, பின்தொடர்ந்து வருபவனுக்குச் சிலவேளைகளில் தென்படுபவனாகவும், சில வேளைகளில் தென்படாதவனாகவும் ஓடினான்.(19)

அவன் {யுதிஷ்டிரன்}, "ஓ! விதுரரே, ஓ! விதுரரே, நான் உமக்குப் பிடித்தவனான மன்னன் யுதிஷ்டிரன் வந்திருக்கிறேன்" என்று உரக்கச் சொன்னான். யுதிஷ்டிரன், இவ்வாறு கூச்சலிட்டவாறே பெரும் முயற்சியுடன் விதுரனைப் பின்தொடர்ந்தான்.(20)

நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையான விதுரன், அந்தக் காட்டில் தனிமையான ஓரிடத்தை அடைந்து, மரமொன்றில் சாய்ந்து கொண்டு அசையாமல் நின்றான்.(21) அவன் மிக மிக மெலிந்திருந்தான். (சிறப்பியல்புகள் அனைத்தும் மொத்தமாக மறைந்த நிலையில்) அவன் {விதுரன்} மனிதன் என்ற வடிவத்தை மட்டுமே தக்க வைத்திருந்தான். எனினும் (இத்தகைய மாற்றங்கள் இருந்தாலும்), பெரும் நுண்ணறிவைக் கொண்ட யுதிஷ்டிரன் அவனை அடையாளம் கண்டு கொண்டான்.(22)

யுதிஷ்டிரன், அவனுக்கு எதிரில் நின்று கொண்டு, "நான் யுதிஷ்டிரன் வந்திருகிறேன்" என்றான். உண்மையில், விதுரனை முறையாக வழிபட்டு, விதுரன் கேட்கும் வகையில் யுதிஷ்டிரன் இந்தச் சொற்களைச் சொன்னான்.(23) அதே வேளையில் விதுரன் நிலைத்த கண்களுடன் மன்னனைப் பார்த்தான். மன்னன் மீது இவ்வாறு பார்வையைச் செலுத்திய அவன் யோகத்தில் அசைவற்றவனாக நின்று கொண்டிருந்தான்.(24) பெரும் நுண்ணறிவைக் கொண்ட அவன் {விதுரன்} அப்போது (தன் யோக சக்தியின் மூலம்) அங்கங்களுடன் அங்கங்களை இணைத்து யுதிஷ்டிரனின் உடலுக்குள் நுழைந்தான். அவன் தன் உயிர் மூச்சை மன்னனுடைய உயிர் மூச்சுடனும், தன் புலன்களை மன்னனின் புலன்களுடனும் கலந்தான்.(25) உண்மையில், சுடர்மிக்க சக்தியுடன் கூடிய விதுரன், யோக சக்தியின் துணையுடன் இவ்வாறு நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் உடலுக்குள் நுழைந்தான்.(26)

அப்போது விதுரனின் உடல், நிலைத்த பார்வை கொண்ட கண்களுடன் மரத்திலேயே சாய்ந்திருந்தது. அதிலிருந்து உயிர் தப்பிவிட்டது என்பதை மன்னன் விரைவில் கண்டான்.(27) அதே வேளையில் அவன் {யுதிஷடிரன்} தான் முன்பைவிடப் பலசாலியாகவும், முன்பைவிடக் கூடுதலான நற்பண்புகள் மற்றும் சிறப்புகளுடன் இருப்பதாகவும் உணர்ந்தான். ஓ! ஏகாதிபதி, பெருங்கல்வியும், சக்தியும் கொண்டவனும், பாண்டுவின் மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், தான் மனிதர்களின் மத்தியில் பிறப்பதற்கு முன்பு இருந்த நிலையை நினைத்துப் பார்த்தான்[1]. வலிமையும், சக்தியும் நிறைந்த அவன் {யுதிஷ்டிரன்}, வியாசரின் மூலம் யோகப் பயிற்சி குறித்துக் கேள்விப்பட்டிருந்தான்.(28, 29)

[1] "யுதிஷ்டிரன் தர்மத்தின் சுயமாவான். விதுரரும், முனிவர் ஆணி மாண்டவ்யரின் சாபத்தின் மூலம் சூத்திரனாகப் பிறக்க நேரிட்ட தர்மனாவார். எனவே, இவர்கள் இருவரும் ஒரே சாரம் கொண்டவர்களாவர். விதுரர் தமது மனிதவுடலை இட்டபோது, யுதிஷ்டிரனின் உடலுக்குள் புகுந்து, அதன் மூலம் பின்னவனைப் பலமடையச் செய்தார்" எனக் கங்கலி இங்கே விளக்குகிறார்.

பெருங்கல்வி கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், விதுரனின் உடலுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்யவும், அதை முறையாக எரிக்கவும் {தகனம் செய்யவும்} விரும்பினான். அப்போது காட்சிக்குப் புலப்படாத குரல் ஒன்று,(30) "ஓ! மன்னா, விதுரன் என்றழைக்கப்படுபவனுக்குரிய இவ்வுலடல் எரிக்கப்படக்கூடாது. இவனில் உன்னுடலும் இருக்கிறது. இவன் அறத்தின் நித்திய தேவனாவான்.(31) ஓ! பாரதா, ஸாந்தானிகம் என்ற பெயரால் அறியப்படும் இன்பலோகம் இவனுடையதாகும்[2]. இவன் யதிகளின் கடமைகளை நோற்றவனாவான். ஓ! பகைவரை எரிப்பவனே, இவனுக்காக நீ வருந்தலாகாது" என்றது.(32)

[2] கும்பகோணம் பதிப்பில், "இவருக்கு வைகர்த்தனமென்னும் உலகம் கிடைக்கப் போகிறது" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "'ஸாந்தானிகமென்னும் உலகங்கள்' என்பது வேறுபாடம்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போன்றே இருக்கிறது.

இவ்வாறு சொல்லப்பட்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், அந்த இடத்தில் இருந்து திரும்பி நடந்தது அனைத்தையும் விசித்திரவீரியனின் {திருதராஷ்டிரனிடம்} அரசமகனிடம் தெரிவித்தான்.(33) பெருங்காந்தி கொண்ட அந்த மன்னனும் {திருதராஷ்டிரனும்}, அங்கே இருந்த மனிதர்கள் அனைவரும், பீமசேனனும் பிறரும் இதைக் கேட்டு ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(34)

நடந்ததைக் கேட்ட மன்னன் திருதராஷ்டிரன் நிறைவடைந்தவனாகத் தர்மனின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்}, "நீர், கிழங்குகள் மற்றும் கனிகள் உள்ளிட்ட இந்தக் கொடைகளை நீ என்னிடம் இருந்து பெறுவாயாக. ஓ! மன்னா, ஒருவனுடைய விருந்தினன் அவன் உண்பதையே தானும் உண்ண வேண்டும் என்று சொல்லப்படுகிறது" என்றான்.(35) இவ்வாறு சொல்லப்பட்ட தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, "அவ்வாறே ஆகட்டும்" என்று மன்னனுக்கு {திருதராஷ்டிரனுக்குப்} பதிலளித்தான். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்} கொடுத்த கனிகளையும், கிழங்குகளையும் உண்டான்.(36) பிறகு அவர்கள், அந்த முதிர்ந்த மன்னனால் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கனிகளையும், கிழங்குகளையும் உண்டு, நீரைப் பருகிய பிறகு ஒரு மரத்தினடியில் தங்கள் படுக்கைகளை விரித்து அந்த இரவைக் கழித்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.(37)

ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 26ல் உள்ள சுலோகங்கள் : 37

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்