Sunday, January 05, 2020

வியாசரின் வருகை! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 27

The arrival of Vyasa! | Asramavasika-Parva-Section-27 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 27)


பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரனின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு பெரும் முனிவர்களின் ஆசிரமங்களைப் பார்த்த யுதிஷ்டிரன்; திருதராஷ்டிரன் இருந்த ஆசிரமத்திற்கு வந்த சதயூபனும், வியாசரும்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! மன்னா, அறம்சார்ந்தவர்களான அந்தத்தவசிகளின் ஆசிரமத்தில், மங்கல நட்சத்திரக்கூட்டத்தின் சிறப்பியல்பைக் கொண்ட அந்த இரவை இவ்வாறே அவர்கள் கழித்தனர்.(1) அப்போது அங்கே நிகழ்ந்த உரையாடல் அறநெறி மற்றும் செல்வம் குறித்த பல சிந்தனைகளைக் கொண்டதாக இருந்தது. ஸ்ருதிகளில் இருந்து பல்வேறு குறிப்புகளையும், இனிமை நிறைந்த சொற்களையும் கொண்டதாக அஃது இருந்தது.(2) ஓ! மன்னா, பாண்டவர்கள் விலைமதிப்புமிக்கப் படுக்கைகளைவிட்டு, வெறும் தரையில் தங்கள் தாயின் அருகில் தங்களைக் கிடத்திக் கொண்டனர்.(3)


உண்மையில், அந்த வீரர்கள், உயர் ஆன்ம மன்னன் திருதராஷ்டிரனுடைய உணவை உண்டு அந்த இரவைக் கழித்தனர்.(4) அந்த இரவு கடந்ததும், தன் காலைச் செயல்கள் அனைத்தையும் செய்த மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பிகளின் துணையுடன் அந்த ஆசிரமத்தை ஆய்வு செய்தான்.(5) அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, திருதராஷ்டிரனின் ஆணையின் பேரில், தன் குடும்பத்துப் பெண்கள், பணியாட்கள் மற்றும் புரோகிதருடன், அந்த ஆசிரமத்திற்குள் தான் விரும்பிய அனைத்துத் திசைகளிலும் திரிந்து கொண்டிருந்தான்.(6)

சுடர்மிக்க நெருப்புகளுடன் கூடிய வேள்விப் பீடங்கள் பலவற்றையும், அவற்றில் அமர்ந்திருந்தவர்களும், தேவர்களைக் கௌரவிக்கும் வகையில் ஆகுதிகளை ஊற்றித் தங்கள் தூய்மைச் சடங்குகளைச் செய்பவர்களான பல தவசிகளையும் அங்கே கண்டான்.(7) அந்தப் பீடங்கள் காட்டின் கனிகள் மற்றும் கிழங்குகளாலும், மலர்க்குவியல்களாலும் நிறைந்திருந்தன. தெளிந்த நெய்யின் புகை அவற்றில் இருந்து சுருண்டு மேலெழுந்தது. அதுதவிர, அவை வேதங்களின் உடல்வடிவங்களைப் போலத் தெரிந்த உடல்களைக் கண்ட தவசிகள் பலரும், சகோதரத்துவம் கொண்ட பலரும் அங்கே நிறைந்திருந்தனர்.(8)

மான்கூட்டங்கள் அனைத்து வகை அச்சத்தில் இருந்தும் விடுபட்டு அங்கேயும் இங்கேயும் ஓய்ந்து, மேய்ந்து கொண்டிருந்தன. ஓ! மன்னா {ஜனமேஜயா}, அங்கே இனிய இசையொலிகளை எழுப்புவதில் ஈடுபடும் எண்ணற்ற பறவைகளும் இருந்தன.(9) மயில்கள், தாத்யூகங்கள், கோகிலங்களின் {குயில்களின்} இசையொலி மற்றும் வேறு குருவிகளின் இனிய பாடல்களும் மொத்த காட்டிலும் எதிரொலித்துக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது.(10) சில இடங்களில் கல்விமான்களான பிராமணர்களால் ஓதப்படும் வேத மந்திரங்களை எதிரொலித்துக் கொண்டிருந்தன. சில இடங்கள், காட்டில் திரட்டப்பட்ட கனிகள் மற்றும் கிழங்குகளின் பெருங்குவியல்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(11)

அப்போது மன்னன் யுதிஷ்டிரன், அந்தத் தவசிகளுக்காகத் தான் கொண்டு வந்திருந்த தங்கத்தாலான அல்லது தாமிரத்தாலான குடுவைகளையும்,(12) ஓ! பாரதா {ஜனமேஜயா}, மான்தோல்கள், விரிப்புகள் {கம்பளங்கள்}, மரத்தாலான வேள்விக்கரண்டிகள் {ஸ்ருக்குகள், ஸுர்வங்கள்}, கமண்டலங்கள், மரத்தாலான தட்டுகள் {ஸ்தாலிகள்}, குடங்கள் மற்றும் பாத்திரங்களை அவர்களுக்குக் கொடுத்தான்.(13) இரும்பாலான பல்வேறு வகைப் பாத்திரங்கள், சிறு பாத்திரங்கள், வெவ்வேறு அளவிலான குடுவைகள் ஆகியனவும், தவசிகளில் ஒவ்வொருவரும் எவ்வளவு விரும்பினார்களோ அவ்வளவும் மன்னனால் கொடுக்கப்பட்டன.(14) அற ஆன்மா கொண்ட மன்னன் யுதிஷ்டிரன், காட்டுக்குள் இவ்வாறு உலவி, தவசிகளின் பல்வேறு ஆசிரமங்களைக் கண்டு, பல கொடைகளைக் கொடுத்து, தன் பெரிய தந்தை {திருதராஷ்டிரன்} இருந்த இடத்திற்கே திரும்பி வந்தான்.(15)

அவன் {யுதிஷ்டிரன்} பூமியின் தலைவனான மன்னன் திருதராஷ்டிரன், தன் காலைச் சடங்குகளைச் செய்து முடித்து, தன்னருகில் காந்தாரியுடன் சுகமாக அமர்ந்திருப்பதைக் கண்டான்.(16) அற ஆன்மா கொண்ட ஏகாதிபதி, பணிவுடன் தலைகுனிந்திருக்கும் ஒரு சீடரைப் போல அந்த இடத்தின் அருகில் அமர்ந்திருக்கும் தன் தாயான குந்தியையும் கண்டான்.(17) அவன் தன் பெயரை அறிவித்துக் கொண்டு அந்த முதிர்ந்த மன்னனை {திருதராஷ்டிரனை} வணங்கினான். அந்த முதிய மன்னன், "அமர்வாயாக" என்ற சொற்களைச் சொன்னான். திருதராஷ்டிரனின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு, குசப்புல்லாலான ஒரு பாயில் யுதிஷ்டிரன் அமர்ந்தான்.(18) ஓ! பாரதக் குலத்தோனே {ஜனமேஜயனே}, பீமனும், பாண்டுவின் பிற மகன்களும், அந்த மன்னனை வணங்கி, அவனது பாதத்தைத் தீண்டி, அவனது அனுமதியைப் பெற்றுக் கொண்டு கீழே அமர்ந்தனர்.(19) அவர்களால் சூழப்பட்ட அந்த முதிர்ந்த குரு மன்னன் மிக அழகானவனாகத் தெரிந்தான். உண்மையில் அவன் தேவர்களுக்கு மத்தியில் இருக்கும் பிருஹஸ்பதியைப் {Vrihaspati} போன்ற வேத காந்தியில் ஒளிவீசினான்.(20)

அவர்கள் அமர்ந்ததும், குருக்ஷேத்திரவாசிகளான சதயூபன் உள்ளிட்ட பெரும் முனிவர்கள் பலரும் அங்கே வந்தனர்.(21) சிறப்புமிக்கவரும், கல்விமானும், பெருஞ்சக்தி கொண்டவரும், தெய்வீக முனிவர்களாலேயே கூட மதிக்கப்படுபவருமான வியாசர், தம்முடைய எண்ணற்ற சீடர்களுக்குத் தலைமை தாங்கியவராக யுதிஷ்டிரனுக்குத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்.(22) குரு மன்னன் திருதராஷ்டிரன், பெருஞ்சக்தி கொண்ட குந்தியின் மகன் யுதிஷ்டிரன், பீமசேனன் மற்றும் பிறரும் எழுந்து நின்று, சில அடிகள் முன்னோக்கி நகர்ந்து அந்த விருந்தினர்களை வணங்கினார்கள்.(23)

சதயூபன் மற்றும் பிறரால் சூழப்பட்டிருந்தவரும், அருகில் நெருங்கி வந்தவருமான வியாசர் திருதராஷ்டிரனிடம், "அமர்வாயாக" என்றார்.(24) அதன்பிறகு சிறப்புமிக்க வியாசர் கருப்பு மான்தோலில் வைக்கப்பட்ட குசப்புற்களாலானதும், பட்டுத் துணியால் மூடப்பட்டதுமான ஒரு சிறந்த இருக்கையில் அம்ரந்தார். அவர்கள் அவருக்காக அந்த இருக்கையை ஒதுக்கியிருந்தனர்.(25) வியாசர் அமர்ந்ததும், தீவில் பிறந்தவரான அந்தத் தவசியிடம் அனுமதி பெற்றுக் கொண்டு, பெருஞ்சக்தி கொண்ட அந்த முதன்மையான மறுபிறப்பாளர்கள் அனைவரும் அமர்ந்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.(26)

ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 27ல் உள்ள சுலோகங்கள் : 26

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்