Sunday, January 05, 2020

வியாசரின் உறுதிமொழி! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 28

The promise of Vyasa! | Asramavasika-Parva-Section-28 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 28)


பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரனின் நலம் விசாரித்த வியாசர்; விதுரனின் உண்மை வடிவம் முதலியவற்றைக் கூறியது; மற்ற முனிவர்களால் செய்ய முடியாத திருதராஷ்டிரனுடைய விருப்பத்தைச் செய்வதாக உறுதிமொழி அளித்தது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "உயர் ஆன்ம பாண்டவர்கள் அனைவரும் அமர்ந்ததும், சத்தியவதியின் மைந்தனான வியாசர்,(1) "ஓ! வலிய கரங்களைக் கொண்ட திருதராஷ்டிரா, உன்னால் தவங்கள் செய்ய முடிந்ததா? ஓ! மன்னா, காட்டில் வசிப்பதில் உன் மனம் நிறைவடைகிறதா?(2) போரில் உன் மகன்கள் கொல்லப்பட்டதில் பிறந்த உன் துயரம் உன் இதயத்தில் இருந்து மறைந்ததா? ஓ! பாவமற்றவனே, உன் கருத்துகள் அனைத்தும் இப்போது தெளிவடைந்துள்ளனவா?(3) உன் இதயத்தை உறுதியாகச் செய்து கொண்டு காட்டு வாழ்வுக்கான விதிமுறைகளை நீ பின்பற்றுகிறாயா? என் மருமகளான காந்தாரி, துயரில் மூழ்கத் தன்னை அனுமதித்துக் கொள்கிறாளா?(4) அவள் பெரும் ஞானம் கொண்டவளாவாள். புத்தியுள்ள அந்த ராணி {காந்தாரி}, அறம், பொருள் ஆகிய இரண்டையும் புரிந்து கொண்டவளாவாள். செழிப்பு மற்றும் வறுமை ஆகிய இரண்டுக்கும் தொடர்புடைய உண்மைகளை அவள் நன்கறிந்தவளாவாள். அவள் இன்னும் வருந்துகிறாளா?(5)


ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, பெரியோருக்குத் தொண்டாற்றுவதில் உள்ள அர்ப்பணிப்பின் விளைவால் தன் பிள்ளைகளை விட்டகன்ற குந்தி, உன் தேவைகளைக் கவனித்துப் பணிவுடன் உனக்குத் தொண்டாற்றுகிறாளா?(6) உயர்ந்த மனம் கொண்டவனும், உயர் ஆன்மாவும், தர்மனின் மகனுமான மன்னன் யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் மற்றும் இரட்டையர்கள் போதுமான அளவுக்குத் தேற்றப்பட்டனரா?(7) இவர்களைக் கண்டதில் நீ மகிழ்ச்சியடைகிறாயா? அனைத்துக் களங்கங்களில் இருந்தும் உன் மனம் விடுபட்டிருக்கிறதா? ஓ! மன்னா, ஞானம் பெருகியதன் விளைவால் உன் மனோநிலை தூய்மையடைந்ததா?(8) ஓ! மன்னா, ஓ! பாரதா, எந்த உயிரினத்திற்கும் தீங்கிழையாமை, வாய்மை மற்றும் கோபத்தில் இருந்து விடுதலை என்ற இந்த முத்தொகை காரியங்கள் அனைத்திலும் முதன்மையானதாகும்.(9) உன்னுடைய இந்தக் காட்டு வாழ்க்கை இன்னும் உனக்குத் துன்பத்தைத் தருகிறதா? காட்டின் விளைச்சலில் இருந்து உன் சொந்த முயற்சியின் மூலமே உனக்கான உணவை உன்னால் ஈட்டிக் கொள்ள முடிகிறதா? உண்ணா நோன்புகள் இப்போது உனக்குத் துன்பத்தைத் தருகின்றனவா?(10)

ஓ! மன்னா, தர்மனின் சுயமாக இருந்த உயர் ஆன்ம விதுரன் எவ்வாறு இவ்வுலகிவிட்டு அகன்றான் என்பதை நீ அறிந்தாயா?(11) மாண்டவ்யரின் {ஆணிமாண்டவ்யரின்} சாபத்தின் மூலம் அறத்தேவன் விதுரனாகப் பிறந்திருந்தான். அவன் {விதுரன்} பெரும் நுண்ணறிவைக் கொண்டவனாக இருந்தான். உயர்ந்த தவங்களையும், உயர்ந்த ஆன்மாவையும், உயர்ந்த மனத்தையும் கொண்டவனாக அவன் இருந்தான்.(12) தேவர்களுக்கு மத்தியில் பிருஹஸ்பதியும், அசுரர்களுக்கு மத்தியில் சுக்ரனும் கூட இந்த முதன்மையான மனிதனைப் போல இத்தகைய நுண்ணறிவைக் கொண்டிருந்ததில்லை.(13) முனிவர் மாண்டவ்யர் நெடுங்காலம் ஈட்டிய தன் தவச் சக்தியை அழித்து அறத்தின் நித்திய தேவனை {தர்மதேவனை} கலங்கடித்தார் {சபித்தார்}[1].(14) பெரும்பாட்டனின் ஆணையின் பேரிலும், என் சொந்த சக்தியின் மூலமும், விசித்ரவீரியனுக்கு உரிய நிலத்தில் பெரும் நுண்ணறிவுமிக்க விதுரன் என்னால் உண்டாக்கப்பட்டான்.(15)

[1] "ஒரு பிராமணர் மற்றொருவரைச் சபிக்கும்போதெல்லாம் அவருடைய தவங்கள் அழிவை அடைகின்றனர். பொறுமையே பிராமணனின் உயர்ந்த பண்பு. அவனுடைய பலமே பொறுமையில்தான் அடங்கியிருக்கிறது. எனவே, மாண்டவ்யர் தர்மனை சபித்தபோது கடினமாக ஈட்டப்பட்ட தவங்களின் ஒரு பகுதியை அவர் அழிக்க வேண்டியிருந்தது. முன்பு தர்மனின் அவையில் சிறுவர்களின் வேண்டுதல் கேட்கப்பட முடியாது. மாண்டவ்யர் குற்றங்களுக்கான தண்டனைகளின் காரியத்தில் அந்த வேண்டுதலை அனுமதிக்கத் தர்மனைக் கட்டாயப்படுத்தினார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். ஆணி மாண்டவ்யரின் கதை ஆதிபர்வம் பகுதில் சொல்லப்பட்டுள்ளது.

ஓ! மன்னா, நித்தியமான தேவர்களுக்குத் தேவன் {தர்மன்} உன் தம்பியாக இருந்தான். அவனுடைய {விதுரனின்} தாரணை மற்றும் தியான பயிற்சிகளின் விளைவால் கல்விமான்கள் அவனைத் தர்மனாக அறிந்தனர்[2].(16) வாய்மை, தற்கட்டுப்பாடு, இதய அமைதி, கருணை மற்றும் கொடைகளுடன் சேர்ந்து அவன் {தர்மன்} வளர்கிறான். எப்போதும் தவங்களில் ஈடுபடும் அவன் நித்தியமானவனாவான்.(17) அந்த அறத் தேவனின் யோக பலத்தின் மூலமே குரு மன்னன் யுதிஷ்டிரனும் தன் பிறப்பை எடுத்தான். எனவே, யுதிஷ்டிரன், பெரும் ஞானமும், அளவிலா நுண்ணறிவும் கொண்ட தர்மனாக இருக்கிறான்.(18) தர்மன் இம்மையிலும், மறுமையிலும் இருக்கும் நெருப்பையோ, காற்றையோ, நீரையோ, நிலத்தையோ, வெளியையோ போன்றவனாவான்.(19) ஓ!மன்னர்களின் மன்னா, அவன் எங்கும் செல்ல வல்லவனாகவும் மொத்த அண்டத்திலும் நீக்கமற நிறைந்தவனாகவும் இருக்கிறான். முதன்மையான தேவர்கள், அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைந்தவர்கள் மற்றும் தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள் ஆகியோரால் மட்டுமே காணப்படக்கூடியவனாக அவன் இருக்கிறான்.(20)

[2] "தாரணை மற்றும் தியானம் ஆகிய இரண்டும் யோகத்தின் நிலைகளாகும். முன்னது, ஒரு பொருளில் மனத்தை நிலைகொள்ளச் செய்வதாகும்; பின்னது, சூழ்ந்திருக்கும் பொருட்களில் இருந்து மனத்தை நுண்மமாக்கி விலக்குவதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

தர்மனே விதுரனாவான்; விதுரனே பாண்டுவின் (மூத்த) மகனாவான் {யுதிஷ்டிரனாவான்}. ஓ! மன்னா, அந்தப் பாண்டுவின் மகனை உன்னால் காண முடியும். அவன் உன் முன்னிலையில் ஒரு பணியாளாக இருக்கிறான்.(21) பெரும் யோக பலம் கொண்டவனும், நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையாவனும், உயர் ஆன்மாகக் கொண்டவனுமான உன் தம்பி {விதுரன்}, குந்தியின் மகனான உயர் ஆன்ம யுதிஷ்டிரனைக் கண்டு அவனது மேனிக்குள் புகுந்துவிட்டான்.(22) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, உனக்கும் நான் பெரும் நன்மையைச் செய்வேன். ஓ! மகனே, நான் உன் ஐயங்களை விலக்கவே இங்கே வந்திருக்கிறேன் என்பதை அறிவாயாக.(23) வேறு எந்தப் பெரும் முனிவராலும் இதற்கு முன்பு செய்யப்படாத அருஞ்செயலையும், என் தவங்களின் விளைவால் ஏற்படும் சில ஆச்சரியங்களையும் நான் உனக்குக் காட்டப் போகிறேன்.(24) ஓ! மன்னா, என்னிடம் இருந்து எதை நீ அடைய விரும்புகிறாய்? எதைப் பார்க்கவோ, தீண்டவோ, கேட்கவோ விரும்புகிறாய் என்பதை எனக்குச் சொல்வாயாக. ஓ! பாவமற்றவனே, நான் அதை நிறைவேற்றுவேன்" என்றார் {வியாசர்}.(25)

ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 28ல் உள்ள சுலோகங்கள் : 25

*********ஆஸ்ரமவாஸ உபபர்வம் முற்றும்*********


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்