Sunday, March 31, 2013

துஷ்யந்தன் வேட்டை! | ஆதிபர்வம் - பகுதி 69

The Hunting of Dushmanta! | Adi Parva - Section 69 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 5)

பதிவின் சுருக்கம் : காட்டுக்கு வேட்டையாட படைகளுடன் சென்ற துஷ்யந்தன்; விலங்குகளை வேட்டையாடி அவற்றை அச்சுறுத்தியது...

ஜனமேஜயன், "உயர் ஆன்ம பரதனின் பிறப்பு, வாழ்வு மற்றும் சகுந்தலையின் பிறப்பு குறித்தும் நான் உம்மிடம் கேட்க விரும்புகிறேன். ஓ புனிதமானவரே! {வைசம்பாயனரே}, மனிதர்களில் சிங்கமான துஷ்யந்தனைக் குறித்தும், அவ்வீரன் சகுந்தலையை எப்படி அடைந்தான் என்பது குறித்த அனைத்தையும் நான் கேட்க விரும்புகிறேன்.(1) ஓ உண்மையை அறிந்தவரே, புத்திசாலிகள் அனைவரிலும் முதன்மையானவரே {வைசம்பாயனரே}, அனைத்தும் எனக்குக் கூறுவதே உமக்குத் தகும்" என்றான்.(2)



வைசம்பாயனர் சொன்னார், "முன்பொரு காலத்தில் அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவன் (மன்னன் துஷ்யந்தன்), தனது பெரும் படையின் துணையுடன் காட்டுக்குள் சென்றான். அவன் தன்னுடன் நூற்றுக்கணக்கான குதிரைகளையும், யானைகளையும் கூட்டிச் சென்றான்.(3) அந்த ஏகாதிபதியுடன் {துஷ்யந்தனுடன்} சென்ற படைகள் நான்கு வகையானவையாக (காலாட்படை வீரர்கள், தேர் வீரர்கள், குதிரைப்படை, யானைப்படைகளாக) இருந்தன. வீரர்கள் வாள்கள், ஈட்டிகள் தரித்தவர்களாக, தங்கள் கரங்களில் கதாயுதங்கள் மற்றும் தடித்த தண்டங்களைக் கொண்டவர்களுமாக இருந்தனர்.(4) அந்த ஏகாதிபதி {துஷ்யந்தன்}, வேல்கள், பராசங்கள் ஆகியவற்றைத் தங்கள் கரங்களில் கொண்ட நூற்றுக்கணக்கான வீரர்கள் சூழத் தன் பயணத்தைத் தொடங்கினான். மன்னன் தன் அணிவகுப்பில் சென்ற போது, வீரர்களின் சிங்க முழக்கங்கள், சங்குகள் மற்றும் துந்துபி ஒலியின் இசை, தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலி, பெரும் யானைகளின் பிளிறல்கள் ஆகியவை, குதிரைகளின் கனைப்பொலிகள் மற்றும் பல்வேறு ஆடைகளில் இருந்த பணியாட்கள் தாங்கி வந்த பல்வேறு ஆயுதங்களின் உரசல்கள் ஆகியவற்றுடன் கலந்து அங்கே காதைப் பிளக்கும் அமளி எழுந்தது.(5-7)

பெரும் அழகைக் கொடையாகக் கொண்ட மங்கையர், வீரனும், தன் சொந்த புகழை அடைந்தவனுமான அந்த ஏகாதிபதியை {துஷ்யந்தனை} அழகிய மாளிகைகளின் மாடிகளில் நின்றபடியே கண்டனர்.(8) எதிரிகளை அழிப்பவனும், எதிரிகளின் யானைகளை விரட்டும் திறன் கொண்டவனுமான அவனை {துஷ்யந்தனை}, அம்மங்கையர் சக்ரனை {இந்திரனைப்} போலக் கண்டு, அவனே வஜ்ரதாரி {இந்திரன்} என நம்பவும் செய்தனர் {அறிந்திருந்தனர்}.(9) அவர்கள் {அந்த மங்கையர்}, "இந்த மனிதர்களில் புலி {துஷ்யந்தன்}, போரில் வசுக்களுக்கு இணையான ஆற்றலைக் கொண்டவனாக, தன் கரங்களுடைய வலிமையின் விளைவால், எஞ்சி நிற்கும் எந்த எதிரியுமற்றவனாகவும் இருக்கிறான்” என்றனர்.(10) இதைச் சொன்ன அந்த மங்கையர் அன்பினால் அந்த ஏகாதிபதியின் தலையின் மீது மலர்களைப் பொழிந்து அவனை மனநிறைவு கொள்ளச் செய்தனர்.(11)

ஆசிகளைச் சொல்லும் பிராமணர்களில் முதன்மையானோரால் வழியெங்கும் பின்தொடரப்பட்ட மன்னன் {துஷ்யந்தன்}, இதயத்தில் பெருமகிழ்ச்சியுடன் மான்களைக் கொல்லும் ஆவலால் காட்டை நோக்கிச் சென்றான்.(12) மதங்கொண்ட யானையின் முதுகில் அமர்ந்து, தேவர்களின் மன்னனை {இந்திரனைப்} போலத் தெரிந்த அந்த ஏகாதிபதியை {துஷ்யந்தனை}, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் ஆகியோரில் பலர் பின்தொடர்ந்து சென்றனர்.(13) குடிமக்களும் பிற வகையைச் சார்ந்தவர்களும் அந்த ஏகாதிபதியைச் சிறிது தூரத்திற்குப் பின்தொடர்ந்து சென்றனர்.(14) இறுதியாக, அவர்கள் மன்னனின் உத்தரவால் மேலும் {பின்தொடர்ந்து} செல்லாமல் நின்றனர்.

காற்றின் வேகத்தைக் கொண்ட தன் தேரில் ஏறிய மன்னன், தனது தேர்ச்சக்கரத்தின் சடசடப்பொலியால் பூமி முழுவதையும், ஏன் சொர்க்கத்தையும் கூட நிறைத்தான். அப்படி அவன் செல்கையில், தன்னைச் சுற்றிலும் (தேவலோகத் தோட்டமான) நந்தனத்தைப் போன்ற ஒரு காட்டைக் கண்டான்.(15,16) அது வில்வம், எருக்கு {ஆர்கா}, கருங்காலி {கதிரா} (பாக்கு), விளா {கபிதா}, வெள்வேல {தவ} மரங்கள் நிறைந்ததாக இருந்தது. மேலும் அங்கு மண் சமமற்றதாக இருப்பதையும், அருகில் உள்ள மலைகளில் இருந்து தளர்ந்து விழுந்த பாறைகள் சிதறிக் கிடப்பதையும் அவன் கண்டான்.(17) நீரற்று, மனிதர்களற்று இருந்த அது {அந்த நிலம்}, பல யோஜனைகள் தொலைவிற்குப் பரந்து கிடப்பதையும் கண்டான். அது மான்கள், சிங்கங்கள், இரைதேடும் விலங்குகள் பலவற்றால் நிறைந்திருந்தது.(18)

மனிதர்களில் புலியான மன்னன் துஷ்யந்தன், தன் அணிவகுப்பில் இருந்த போர்வீரர்கள் மற்றும் பணியாட்கள் உதவியோடு, எண்ணற்ற விலங்குகளைக் கொன்று அந்தக் காட்டையே கலங்கடித்தான்.(19) துஷ்யந்தன், அடிக்கும் தொலைவில் இருந்த எண்ணற்ற புலிகளைத் தனது கணைகளால் வீழ்த்தினான்.(20) மேலும் அந்த மன்னன், வெகு தொலைவில் இருந்த விலங்குகளைக் {கணைகளால்} காயப்படுத்தி, மிக அருகில் இருந்த விலங்குகளைத் தன் கனமான வாளால் கொன்றான்.(21) ஈட்டி தரித்தவர்கள் அனைவரிலும் முதன்மையான அவன் {துஷ்யந்தன்}, தன் ஈட்டிகளை ஏவி அவற்றில் பலவற்றைக் கொன்றான். கதாயுதம் சுழற்றும் கலையை நன்கறிந்தவனும், அளவிலா ஆற்றலைக் கொள்ளவனுமான அம்மன்னன், {துஷ்யந்தன்}, அந்தக் கானகத்தில் அச்சமில்லாமல் திரிந்தான்.(22) சில நேரங்களில் தன் வாளைக் கொண்டும், சில நேரங்களில் தன் கதாயுதம் மற்றும் கனமான தண்டம் ஆகிவற்றை வேகமாக இறக்கியும் அந்தக் காட்டுவாசிகளைக் {விலங்குகளைக்} கொன்றான்.(23)

அற்புதமான சக்தி கொண்ட மன்னனாலும், போர் விளையாட்டுகளில் மகிழ்பவர்களும், அவனது அணிவகுப்பில் இருந்தவர்களுமான வீரர்களாலும் அந்தக் காடு இப்படிக் கலக்கப்பட்ட போது பெரும் எண்ணிக்கையிலான சிங்கங்கள் அங்கிருந்து ஓடத் தொடங்கின.(24) தங்கள் தலைவர்களை {தலைமை விலங்குகளை} இழந்த விலங்குக் கூட்டங்கள், அச்சத்தாலும், கவலையாலும் கதறிக் கொண்டே அனைத்துத் திசைகளிலும் சிதறி ஓடத் தொடங்கின.(25) ஓடியதால் களைப்புற்ற அவை, முற்றிலும் காய்ந்து போயிருந்த ஆற்றுப் படுகைகளை அடைந்து, தங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்ள முடியாமல் அனைத்துப் பக்கங்களிலும் கீழே விழ ஆரம்பித்தன. அப்படி விழுந்த சில விலங்குகள் பசித்திருந்த வீரர்களால் உண்ணப்பட்டன.(26,27) அதே வேளையில் பிற {விலங்குகள்}, முகாம்களை அடைந்து, நெருப்பு கொளுத்தி சுடப்பட்டப் பிறகு அவர்களால் {அவ்வீரர்களால்} உண்ணப்பட்டன.(28)

வலுவான யானைகள் பல, தாங்கள் அடைந்த காயங்களால் பித்தடைந்து, மிதமிஞ்சிய அச்சத்தை அடைந்து துதிக்கைகளை உயர்த்தியபடியே தப்பி ஓடின. அந்தக் காட்டு யானைகள், சிறுநீர் கழித்தும், தங்கள் வயிற்றின் உள்ளடக்கங்களை வெளியேற்றியும், பெரும் அளவிலான இரத்தத்தைக் கக்கியும் எச்சரிக்கையின் வழக்கமான அறிகுறிகளைக் காட்டி ஓடுகையில் வீரர்கள் பலரை மிதித்துக் கொன்றன.(29,30) விலங்குகளால் நிறைந்திருந்த அந்தக் காடு, பணியாள் கூட்டத்துடன் கூடிய அந்த மன்னனின் கூரிய ஆயுதங்களால், விரைவில் சிங்கங்கள், புலிகள் மற்றும் காட்டின் பிற ஏகாதிபதிகளற்றதாகச் செய்யப்பட்டது" {என்றார் வைசம்பாயனர்}.(31)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்