Monday, April 15, 2013

யயாதி வரலாறு! | ஆதிபர்வம் - பகுதி 75

The History of Yayati! | Adi Parva - Section 75 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 11)

பதிவின் சுருக்கம் : நகுஷனைச் சுமந்த முனிவர்கள்; யயாதி வரலாற்றுச் சுருக்கம்; நகுஷனுக்குப் பிறந்த யயாதி; இளமையைப் பெற விரும்பிய யயாதி, தனக்கு அவர்களது இளமையை அளிக்கும்படி தனது மகன்களிடம் வேண்டுவது; இளையவனான பூரு இக்கோரிக்கையை ஏற்பது; பூருவை அரியணையில் அமர்த்திய யயாதி...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "படைப்புத் தலைவன் தக்ஷன், சூரியனின் மகன் மனு, பரதன், குரு, பூரு, அஜமீடன் ஆகிய அரச முனிகளின் புனிதமான, அறத்திற்குக்கட்டுப்பட்ட, பதிவு செய்யப்பட்ட பரம்பரை ஆய்வை நான் உரைக்கும்போதே கேட்பாயாக. ஓ பாவங்களற்றவனே! {ஜனமேஜயனே}, யாதவர்கள், குருக்கள் மற்றும் பாரதக் குலத்தின் பரம்பரை ஆய்வையும் நான் உனக்கு உரைக்கிறேன். இந்தப் பரம்பரை ஆய்வுகள் புனிதமானவை.  அவற்றை உரைப்பது என்பது மனத்தில் அமைதியை ஏற்படுத்தும் பெரிய செயலாகும். இதை உரைப்பது, செல்வம், புகழ் மற்றும் நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.  ஓ பாவங்களற்றவனே! {ஜனமேஜனே}, நான் பெயர் குறிப்பிட்ட அனைவரும் மிகுந்த காந்தியைக் கொண்டவர்கள், சக்தியால் பெரும் முனிவர்களுக்குச் சமமானவர்கள் ஆவர்.(1-3)



பிரசேதஸ் {ப்ராசீனபர்ஹி} பத்து மகன்களைப் பெற்றான். அவர்கள் அனைவரும் தவத்துறவுகளுக்குத் தங்களை அர்ப்பணித்து, எல்லா அறங்களையும் தங்களுக்குள் கொண்டிருந்தனர். பழங்காலத்தில் அவர்கள், தங்கள் வாயில் உண்டாகும் நெருப்பினால், விஷம் நிறைந்த செடிகள் பலவற்றையும், பூமியை போர்த்திக் கொண்டிருந்தவையும் மனிதர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தவையுமான எண்ணிலடங்காப் பெரிய மரங்கள் பலவற்றையும் எரித்தனர்.(4) இந்தப் பத்து பேருக்குப் பிறகு {பிராசேதஸர் என்று சொல்லப்படும்} தக்ஷன் என்றொருவன் பிறந்தான். இந்தத் தக்ஷனின் மூலமே பூமியில் உண்டான அனைத்து உயிர்களும் உண்டாயின. ஓ மனிதர்களில் புலியே! அதனால்தான் அவன் {தக்ஷன்} எல்லோருக்கும் முப்பாட்டன் என்று அழைக்கப்படுகிறான்.(5) பிரசேதஸுக்குப் பிறந்த தக்ஷன், வீரணியுடன்[1] கலந்து, தன்னைப்போன்றே கடுந்தவங்களை இயற்றும் ஆயிரம்  மகன்களைப் பெற்றான்.(6) அவர்களுக்கு நாரதர், முக்திக்கு வழிவகுக்கும் சாங்கிய தத்துவத்தைப் போதித்தார்.(7) ஓ ஜனமேஜயா, அந்தப் படைப்புத் தலைவன் தக்ஷன், உயிரினங்களை உருவாக்குவதில் ஆர்வங்கொண்டு, ஐம்பது மகள்களைப் பெற்றான். அவர்கள் அனைவரையும் தனது வாரிசாகவும் (அந்த மகள்கள் பெற்றெடுக்கும் மகன்களும் தன்சார்பாக அறச்செயல்கள் செய்வதற்காக) நியமித்தான்[2].(8) தர்மனுக்குப் பத்து மகள்களையும், கசியபருக்கு பதிமூன்று மகள்களையும், சந்திரனுக்கு நேரத்தைக் குறித்துக் காட்ட நியமிக்கப்பட்டிருந்த தன் மற்ற இருபத்தேழு மகள்களையும் அளித்தான்.(9)

[1] வீரணனுடைய மகள் என்பதால் வீரணி

[2] அந்த ஐம்பது பெண்களையும் புத்ரிகைகளாக நிச்சயஞ்செய்து கொண்டான்.

மரீசியின் மூத்த மகனான கசியபர், அந்தப் பதிமூன்று மனைவியருள் மூத்தவளிடம் இந்திரனைத் தங்கள் தலைவனாகக் கொண்ட ஆதித்தியர்கள் என்ற தேவர்களையும், விவஸ்வானையும் (சூரியன்) பெற்றார். விவஸ்வானுக்கு யமன் பிறந்தான்.(10,11) அந்த மார்த்தாண்டன் (விவஸ்வான் [சூரியன்]) யமனுக்குப் பிறகு, பெரும் புத்திசாலித்தனத்தைக் கொடையாகக் கொண்ட மனுவைப் பெற்றான்.(12) மனு பெரும் ஞானம் கொண்டவராக இருந்து, அறத்துக்குத் தன்னை அர்ப்பணித்தார். அவரே ஒரு பரம்பரையின் உற்பத்தியாளராக இருந்தார். மனுவின் குலத்தில் பிறந்தவர்களே மனிதர்கள், அதனாலேயே அவர்கள் மானவாஸ் {மானவர்கள் [மனிதர்கள்]}[3] என்று அழைக்கப்படுகிறார்கள்.(13) இந்த மனுவின் மூலமே பிராமணர்கள், க்ஷத்திரியர்கள் மற்றும் அனைத்து மனிதர்களும் உற்பத்தியாகினர். ஓ ஏகாதிபதியே! {ஜனமேஜயா}, அதன்பிறகு பிராமணர்கள், க்ஷத்திரியர்களுடன் சேர்ந்து ஒன்றாக இருந்தனர்.(14) மனுவின் மகன்களான பிராமணர்கள், வேதக் கல்விக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். மனு மேலும் பத்துப் பிள்ளைகளைப் பெற்றார். அவர்கள் வேனன், திருஷ்ணு, நரிஷ்யன், நாபாகன், இக்ஷ்வாகு,(15) காரூஷன், சர்யாதி, எட்டாவதாக இளை என்ற பெண், ஒன்பதாவதாகப் பிருஷத்ரன், பத்தாவதாக நாபாகரிஷ்டன் {அரிஷ்டன்} ஆகியோராவர். அவர்கள் அனைவரும் க்ஷத்திரியர்களுக்கான செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.(16) இவர்களைத் தவிர்த்து மனுவுக்கு இந்தப் பூமியில் ஐம்பது மகன்கள் இருந்தனர்.(17) ஆனால், அவர்கள் அனைவரும் ஒருவருவருக்கொருவர் சண்டையிட்டு அழிந்துவிட்டதாக நாம் கேள்விப்படுகிறோம்.

கல்வியறிவுபெற்ற புரூரவஸ் {மனுவின் மகளான} இளை என்பவளுக்குப் பிறந்தவன்.(18)[3] இளையே அவனுக்குத் தாயாகவும் தந்தையாகவும் இருந்ததாக நாம் கேள்விப்படுகிறோம். அந்தப் பெரும் புரூரவசுக்குக் கடலில் உள்ள பதிமூன்று தீவுகளில் ஆதிக்கம் இருந்தது. அவன் மனிதனாக இருந்தாலும், அவனைச் சுற்றி மனிதசக்திக்கு அப்பாற்பட்டவர்களே நட்பாக இருந்தனர்.(19) புரூரவஸ் தனது பலத்தால் போதை கொண்டு, பிராமணர்களிடம் சண்டையிட்டு, அவர்களின் கோபத்தைப் பற்றி கவலை கொள்ளாமல், அவர்களது செல்வத்தை எடுத்துக் கொண்டான்.(20) இதைக் கண்ட சனத்குமாரர்கள் பிரம்மலோகத்திலிருந்து வந்து, அவனுக்கு நல்ல ஆலோசனைகளைக் கூறினர். ஆனால் அவையனைத்தையும், புரூரவஸ் நிராகரித்தான்.(21) பலத்தால் போதையுண்ட அந்தக் கஞ்சத்தனமான ஏகாதிபதி {புரூரவஸ்}, காரணக் காரியங்களை அறியும் சக்தியை இழந்ததைக் கண்ட அந்த முனிவர்கள், பெரும் கோபம் கொண்டு, தங்கள் சாபத்தால் அவனை {புரூரவஸை} உடனே அழித்தனர்.(22) கந்தர்வலோகத்திலிருந்து மூன்று வகையான நெருப்பை (வேள்வி காரியங்களுக்காக) முதலில் இங்கே கொண்டு வந்தது அந்தப் புரூரவஸே. அவன் அங்கிருந்து அப்சரஸ் ஊர்வசியையும் கொண்டு வந்தான்.(23) அந்த இளையின் மகன் {புரூரவஸ்}, ஊர்வசியிடம் ஆறு மகன்களைப் பெற்றான். ஆயுஸ், தீமான், அமாவஸு, திருடாயுஸ், வனாயுஸ், சதாயுஸ் ஆகியன அவர்களது பெயர்கள்.(24) அதில் ஆயுஸ் என்பவன் சுவர்ணபானுவின் மகளிடம் {சுவர்ணபானவியிடம்}, நகுஷன், விருத்தசர்மன், ரஜிங்கயன், அநேனஸ் என்ற மகன்களைப் பெற்றான் என்று சொல்லப்படுகிறது.(25) ஓ ஏகாதிபதியே! {ஜனமேஜயனே}, ஆயுஸின் மகன்கள் அனைவரிலும், நகுஷன் என்பவன் பெரும் புத்திசாலித்தனத்தையும், பெரும் வீரத்தையும் கொடையாகக் கொண்டு அவனது அரசை அறத்துடன் ஆண்டு வந்தான். (26)

[3] சந்திரனுக்கும், பிரஹஸ்பதி எனப்படும் தேவகுருவின் மனைவியான தாராவிற்கும் பிறந்தவர் புதன். மனு, புத்திரனுக்காக மித்ரா வருணயாகம் செய்ய அதில் ஏற்பட்ட பிழையின் காரணமாக இளை பெண்ணாகப் பிறந்தாள். அதன் பின்னரே ஒன்பது மகன்கள் பிறந்தனர். அவள் புதனை மணந்து புரூரவஸைப் பெற்றாள். பின்னர் யக்ஞ புருஷனைக் குறித்து யாகஞ்செய்து, அந்த யாகத்தில் தோன்றிய ஸ்ரீயக்ஞபதியினுடைய அனுக்கிரகத்தினால் இளையானவள் மீண்டும் ஆண் பிள்ளையாகி சுத்தியும்னன் என்ற பெயரைப் பெற்றான். இதனாலேயே இளாவே புரூரவஸூக்கு தாயும் தந்தையுமாக கருதப்பட்டான்(ள்). இளாவுக்கு அதன் பின் உத்கலன், கயன், விதானன் என்று மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். அந்த சுத்தியும்னனோ, முன்பு பெண்ணாக இருந்ததனாலே ஆட்சியுரிமை பெறவில்லை. ஆயினும் வசிஷ்ட மாமுனிவரின் சொற்படி, அவனது தந்தை பிரதிஷ்டானம் என்ற நகரத்தைப் புரூரவனுக்குக் கொடுத்தான். பிரதிஷ்டானம் என்ற இந்த இடம் இன்று உத்திரப்ரதேச மாநிலம், பிராயக்ராஜ் {அலாகாபாத்} அருகில் உள்ள Jhusi ஆகும். https://en.wikipedia.org/wiki/Jhusi சில ஆய்வாளர்கள் புரூரவஸ் இருந்தது பாரசீகம் (பெர்ஷியா) என்றும் சொல்கிறார்கள்.


மன்னன் நகுஷன், பித்ருக்களையும், தேவர்கள், முனிவர்கள், பிராமணர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், ராட்சசர்கள், க்ஷத்திரியர்கள் மற்றும் வைசியர்களையும் சமமாகப் பாவித்துத் தாங்கினான்.(27) கள்வர்க்கூட்டங்களைத் தன் பலம் வாய்ந்த கரங்களால் ஒடுக்கினான். முனிவர்கள் தனக்குக் கப்பம் கட்டும்படியும், அவர்கள் சுமை சுமக்கும் விலங்குகளாகத் தன்னை அவர்களின் முதுகில் சுமக்கும்படியும் செய்தான்.(28) தனது அழகால், அறத்தால், வீரத்தால், சக்தியால் தேவர்களையும் வெற்றிக் கொண்டு, இந்திரனைப் போல் ஆட்சி செய்தான்.(29) நகுஷன் இனிமையான பேச்சுக் கொண்ட ஆறு மகன்களைப் பெற்றான். அவர்கள் யதி, யயாதி, ஸம்யாதி, ஆயாதி, மற்றும் துருவன்[4] ஆகியோராவர்.(30)

[4] கங்குலியில் ஐவர்தான் சொல்லப்பட்டுள்ளனர். மன்மதநாததத்தரின் பதிப்பில், "யதி, யயாதி, ஸம்யாதி, ஆயாதி, அயதி மற்றும் துருவன் ஆகிய ஆறுபேர் குறிப்பிடப்படுகின்றனர். கும்பகோணம் பதிப்பிலும் அவ்வாறே ஆறு பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர். பிபேக்திப்ராயின் பதிப்பில், அவர்களது பெயர்களில் சில மாறுபடுகின்றன. "யதி, யயாதி, ஸம்யாதி, ஆயாதி, பஞ்சன் மற்றும் உத்தவன்" ஆகியோரே அந்த அறுவர் என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மூலத்தில் யதி, யயாதி, ஸம்யாதி, ஆயாதி, பாஞ்சம், உத்தவன் என ஆறு பெயர்கள் சொல்லப்பட்டுள்ளன. பாஞ்சம் என்பதை ஐந்தாவதாக என்று கங்கூலி மொழிபெயர்த்திருக்கக் கூடும். விஷ்ணுபுராணம், பாகவதம், பிரம்மபுராணம் போன்ற புராணங்களில் யதி, யயாதி, ஸம்யாதி, ஆயாதி, வியாதி, க்ருதி என்ற ஆறுபேர் சொல்லப்படுகிறார்கள்.

யதி, துறவை மேற்கொண்டு முனிவராகிப் பிரம்மனுக்குச் சமமாக உயர்ந்தான். யயாதி பெரும் வீரமும், அறமும் கொண்ட ஏகாதிபதி ஆனான்.(31) அவன் இந்த முழு உலகத்தையும் ஆண்டான். பல வேள்விகளைச் செய்தான். பித்ருக்களை மிகுந்த மரியாதையுடன் வழிபட்டான். அவன் எப்போதும் தேவர்களை மதித்தான்.(32) அவன் முழு உலகத்தையும் தனது கட்டுக்குள் கொண்டு வந்து, எதிரிகளால் அழிக்கப்பட முடியாதவனாக இருந்தான். யயாதியின் மகன்கள் அனைவரும் பெரும் வில்லாளிகளாக இருந்தனர். அவர்கள் அனைத்து அறங்களும் கொண்டு பிரகாசிப்பவர்களாகவும் இருந்தனர்.(33) ஓ மன்னா, (அவனது {யயாதியின்} இரு மனைவியரான) தேவயானி மற்றும் சர்மிஷ்டைக்குப் பிறந்தனர். தேவயானிக்கு யதுவும், துர்வசுவும் பிறந்தனர்.(34) சர்மிஷ்டைக்குத் திருஹ்யு, அநு மற்றும் பூரு ஆகியோர் பிறந்தனர். ஓ மன்னா, தனது குடிகளை அறம்சார்ந்து பல காலம் ஆண்ட யயாதி,(35) முதுமை தனது அழகை அழிப்பதைக்கண்டு கலங்கினான்.

ஓ பாரதா! {ஜனமேஜயா}, முதுமையால் தாக்குண்ட அந்த ஏகாதிபதி {யயாதி}, தனது மகன்களான யது, துர்வசு, திருஹ்யு, அநு, மற்றும் பூருவிடம் இப்படிப் பேசினான்,(36) "நீங்கள் எனது அன்புக்குரிய மகன்களாக இருக்கிறீர்கள். இளம்பெண்களிடம் என் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள, நான் இளம் மனிதனாக இருக்க விரும்புகிறேன். எனக்கு நீங்கள் உதவுவீர்களா?" என்று கேட்டான்.

அதற்குத் தேவயானிக்குப் பிறந்த மூத்த மகன்,(37,38) "ஓ மன்னா, உமக்கு என்ன வேண்டும்? நீர் உமது இளமையைப் பெறக் கேட்கிறீரா?" என்று கேட்டான். யயாதி, "ஓ மகன்களே, எனது முதுமையை ஏற்பீராக.(39) உங்கள் இளமையைக் கொண்டு நான் இன்பமாக இருப்பேன். பெரும் வேள்வியின் போது, முனிவர் உசானஸால் (சுக்ரன்) நான் சபிக்கப்பட்டேன். ஓ மகன்களே, உங்கள் இளமையைக் கொண்டு நான் இன்பமாக இருப்பேன்.(40) உங்களில் யாராவது ஒருவன் எனது முதுமையை ஏற்றுக் கொண்டு, எனது உடலால் இந்த நாட்டை ஆண்டுக் கொள்ளுங்கள். உங்கள் இளமையால் புத்துயிர் ஊட்டப்பட்டு, நான் இன்பமாக இருப்பேன். எனவே எனது மகன்களே, எனது முதுமையை ஏற்றுக் கொள்ளுங்கள்" என்றான்.(41)

ஆனால் எந்த மகனும் அவனின் {யயாதியின்} முதுமையை ஏற்றுக்கொள்ள முன் வரவில்லை. பிறகு, அவனது இளைய மகன் பூரு அவனிடம் {யயாதியிடம்} வந்து,(42) "ஓ மன்னா, நீர் மீட்டெடுக்கப்பட்ட இளமையுடனும், புத்துயிர் ஊட்டப்பட்ட உடலுடனும் மறுபடியும் இன்பமாக இருப்பீராக. நான் உமது முதுமையை ஏற்றுக் கொள்கிறேன். உமது உத்தரவின் பேரில் இந்த நாட்டை ஆள்கிறேன்" என்றான்.(43) இப்படிச் சொல்லப்பட்ட அந்த அரச முனி {யயாதி}, தனது அறத்தன்மை கொண்ட ஆன்ம பலத்தால், முதுமையைத் தனது உயர் ஆன்ம மகனுக்கும் {பூருவுக்கும்}, பூருவின் இளமையைத் தனக்கும் மாற்றிக் கொண்டு இளமையை அடைந்தான்.(44) அந்த ஏகாதிபதியின் {யயாதியின்} வயோதிகத்தை ஏற்றுக் கொண்ட பூரு, நாட்டை ஆண்டான்.(45)

அதன்பிறகு, ஆயிரம் வருடங்கள் கடந்தும், மன்னர்களில் புலியான அந்த யயாதி, ஒரு புலியைப் போன்ற பலத்துடனும், வலுவுடனும் இருந்தான்.(46) அவன் தனது இரு மனைவியரிடமும் {தேவயானி, சர்மிஷ்டையிடம்} இன்பமாக ஆயிரம் வருடங்கள் வாழ்ந்தான். மேலும், சித்ரரதனின் (கந்தர்வ மன்னன்) நந்தவனத்தில் அப்சரஸ் விஸ்வாசியுடனும் இன்பமாக இருந்தான்.(47) இப்படியெல்லாம் இன்பமாக இருந்தும்கூட, அந்தப் பெரும் மன்னன் மனநிறைவு அடையவில்லை. பிறகு அந்த மன்னன் {யயாதி} புராணங்களில் அடங்கிய பின்வரும் உண்மைகளை நினைவுகூர்ந்தான்.(48) {அந்த யயாதி} "உண்மையாக, ஒருவனது ஆசைகள் இன்பங்களால் நிறைவடையாது. மாறாக, நெருப்பில் வேள்வி நெய்யை விட்டால் எரிவது போல, அது சுடர்விட்டு எரியவே செய்யும்.(49) ஒருவன், இந்த முழு உலகத்தில் உள்ள செல்வங்கள், வைரம், தங்கம், மிருகங்கள், பெண்கள் என அனைத்தையும் அனுபவித்து இன்பமாக இருந்தாலும், அவனால் மனநிறைவை அடைய முடியாது.(50) ஒரு மனிதன், எந்த உயிர்வாழும் பொருளுக்கும், எண்ணத்தாலும், செயலாலும், பேச்சாலும் எந்தப் பாவமும் செய்யாமல் இருந்தால், அவன் பிரம்மனைப் போன்று தூய்மையானவனாக இருப்பான்.(51) எப்போது ஒருவன் எதற்கும் பயப்படாதவனாக இருக்கிறானோ, எப்போது எதற்கும் பயத்தை ஏற்படுத்தாமல் இருக்கிறானோ, எப்போது எதற்கும் ஆசைப்படாமல் இருக்கிறானோ, எப்போது எதற்கும் எந்தத் தீங்கையும் செய்யாமல் இருக்கிறானோ அப்போதே அவன் பிரம்மனைப் போன்ற தூய நிலையை அடைய முடியும்" {என்று புராணங்களில் உரைக்கப்பட்டிருக்கும் உண்மைகளை நினைத்துப் பார்த்தான்}.(52)

பெரும்ஞானியான அந்த ஏகாதிபதி {யயாதி}, இவற்றை எண்ணிப் பார்த்து ஒருவனது ஆசைகளால் என்றும் மனநிறைவு கொள்ள முடியாது என்பதில் மனநிறைவு கொண்டு, தனது மனத்தை தியானத்தின் பக்கம் திருப்பினான். தனது மகனிடம் சென்று, அவனுக்கு உரிய முதுமையை ஏற்றுக் கொண்டான்.(53) அவன், தனது ஆசைகளில் மனநிறைவுகொள்ளாத நிலையில் இருந்தாலும், இளமையைத் தன் மகனுக்குத் திருப்பிக் கொடுத்து, அவனை (பூருவை) அரியணையில் அமர்த்தி, அவனிடம்,(54) "நீயே எனது உண்மையான வாரிசு, எனது குலத்தைத் தொடர வைக்கப் போகும் நீயே எனது உண்மையான மகன். இந்த உலகத்தில் எனது குலம் உனது பெயரால் அறியப்படட்டும்" என்றான் {யயாதி}.(55)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பிறகு அந்த மன்னர்களில் புலி{யயாதி}, தனது மகன் பூருவை அரியணையில் அமர்த்தி, தன்னை தவத்துறவுகளுக்கு அர்ப்பணித்து, பிருகு {பிருகுதுங்கம்} என்ற மலைக்குச் சென்றுவிட்டான்.(56) பெரும் தவத் தகுதிகளை அடைந்து, பல வருடங்களுக்குப் பிறகு காலத்தால் கட்டுப்படுத்த முடியாத இடத்திற்குச் சென்றான். அவன் உண்ணா நோன்பு இருந்து, தனது மனித உடலைவிட்டுத் தனது மனைவிகளுடன் தேவலோகத்திற்கு உயர்ந்தான்."(57)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்