Tuesday, April 16, 2013

உயிர்மீட்பு ஞானத்தை அடைந்த கசன்! | ஆதிபர்வம் - பகுதி 76

Kacha obtained knowledge of Sanjivani! | Adi Parva - Section 76 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 12)

பதிவின் சுருக்கம் : பிருஹஸ்பதியின் மூத்த மகன் கசனிடம் வேண்டிக் கொண்ட தேவர்கள்; பிருஹஸ்பதியின் மகன் கசன் என்பதை அறிந்தும் சுக்கிராச்சாரியார் அவனைத் தன் சீடனாக ஏற்றுக் கொண்டது; சுக்ராச்சாரியரின் மகள் தேவயானிக்குப் பணிவிடை செய்த கசன்; கசனைக் கொன்ற அசுரர்கள்; கசனுக்காகத் தேவயானி அழவே, அவனை உயிர்மீட்ட சுக்ராச்சாரியார்; மீண்டும் மீண்டும் கசனைக் கொன்ற அசுரர்கள்; மீண்டும் மீண்டும் உயிர்ப்பித்த சுக்ராச்சாரியர்; பிராமணர்கள் மதுவருந்தக்கூடாது என்ற விதிமுறையைக் கொண்டு வந்த சுக்கிராச்சாரியார்; வந்த காரியம் வெற்றியடைந்தாலும் சுக்ராச்சாரியாரிடமே பல காலம் தங்கிப் பணிவிடை செய்த கசன்...

ஜனமேஜயன், "ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவரே! பிரஜாபதியைத் தொடர்ந்து பத்தாவது நபராக வரும் எங்கள் மூதாதையர் யயாதி, எப்படிக் கிடைக்க முடியாதவளான சுக்ரனின் மகளை மனைவியாகக் கொண்டார்.(1) இது குறித்து விவரமாக அறிய நான் விரும்புகிறேன். வம்சங்களை நிறுவிய ஒவ்வொரு ஏகாதிபதிகளைக் குறித்தும் தனித்தனியாக எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(2)

வைசம்பாயனர் சொன்னார், "ஏகாதிபதி யயாதி, இந்திரனுக்கு நிகரான காந்தியுடன் இருந்தான். ஓ ஜனமேஜயா, உனது கேள்விக்கான மறுமொழியாகச் சுக்ரனும், விருஷபர்வனும் எப்படி அவனுக்குத் தங்கள் மகள்களை உரிய சடங்குகளுடன் அளித்தனர் என்பதை நான் உரைக்கிறேன். குறிப்பாக அவன் எப்படித் தேவயானியுடன் கலந்தான் என்பதையும் சொல்கிறேன்.(3,4)

பழங்காலத்தில், மூன்று உலகங்களின் அரசுரிமைக்காகத் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் அடிக்கடி போர்கள் நிகழ்ந்தன.(5) தேவர்கள், வெற்றியில் ஆசை கொண்டு, அங்கீரஸின் மகனைத் (பிருஹஸ்பதியைத்) தங்கள் வேள்விகளை நடத்தும் புரோகிதராக நியமித்தனர். அதே நேரத்தில், அவர்களது எதிரிகளோ {அசுரர்களோ}, கல்விமானான உசானஸை {சுக்கிராச்சாரியரை} அதே காரியத்திற்காக தங்கள் புரோகிதராக நியமித்தனர்.(6) அந்த பிராமணர்கள் இருவருக்கிடையிலும் செருக்குடன் கூடிய பகை எப்போதும் இருந்து வந்தது. போர்களில் தேவர்களால் கொல்லப்படும் தானவர்களை,(7) தனது ஞானத்தால் சுக்ரன் உயிர்ப்பித்துக் கொண்டிருந்தார். மறுபடியும் உயிர் கிடைத்த அவர்கள் மீண்டும் தேவர்களுடன் போர் புரிந்தனர்.(8) அசுரர்களும் போர்க்களத்தில் பல தேவர்களைக் கொன்றனர். ஆனால், பெரும் சக்தி கொண்ட காவ்யர் (சுக்ரன்) அறிந்த சஞ்சீவனி அறிவியலை, வெளிப்படையான மனம் கொண்ட பிருஹஸ்பதி அறியாததால், வீழ்ந்த தேவர்களின் உயிரை அவரால் மீட்க முடியவில்லை. அதனால், தேவர்கள் மிகுந்த கவலைக்குள்ளாகினர்.(9,10)

அந்தத் தேவர்கள் இதயத்தில் பெரும் துயரம் கொண்டு, கல்விமானான உசானஸைக் கண்டு பயந்து, பிருஹஸ்பதியின் மூத்த மகனான கசனிடம் சென்று பேசினார்கள். அவர்கள் அவனிடம்,(11) "நாங்கள் உன்னை வணங்குகிறோம். எங்களிடம் கருணை கொள்ளும் நீ, நாங்கள் பெரிதாக நினைக்கும் காரியத்தைச் செய்து எங்களுக்கு உதவி செய்வாயாக. அளவில்லா ஆற்றலைக் கொண்ட பிராமணர் சுக்ரன் அறிந்திருக்கும் ஞானத்தைக் கூடிய விரைவில் உனதாக்கிக் கொள்வாயாக. அந்தப் பிராமணரை நீ விருஷபர்வன் சபையில் காணலாம்.(12,13) அவர் எப்போதும் தானவர்களையே காப்பார், ஆனால் அவர்களின் எதிரிகளான நம்மைக் காக்க மாட்டார். நீ அவரை விட வயதில் இளையவன்தான். எனவே, நீ அவரை மரியாதையுடன் வழிபட முடியும்.(14) அவருக்குப் பிடித்தமான மகளான, தேவயானியையும் நீ வழிபடலாம். நிச்சயமாக உன் ஒருவனால் மட்டுமே அவர்கள் இருவரையும் வழிபட்டு அவர்களை மனநிறைவு கொள்ளச் செய்ய முடியும். அதைச் செய்ய வேறு ஒருவனாலும் இயலாது.(15) தேவயானியை உனது ஒழுக்கத்தாலும், சுதந்தர மனப்பான்மையாலும், இனிமையாலும், பொதுவான நடத்தையாலும் மனநிறைவு கொள்ளச் செய்து, அந்த ஞானத்தை உன்னால் நிச்சயம் அடைய முடியும்" என்றனர்.(16)

பிருஹஸ்பதியின் மகன் {கசன்}, தேவர்களால் இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்ட பிறகு, "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி, விருஷபர்வன் இருக்கும் இடத்திற்குச் சென்றான்.(17) இப்படித் தேவர்களால் அனுப்பப்பட்டக் கசன், விரைவாக அசுரர்களின் தலைநகர் வந்து சுக்ரனைக் கண்டான். அவரைக் கண்டு, அவரிடம்,(18) "என்னை உமது சீடனாக ஏற்றுக் கொள்வீராக. நான் அங்கீரஸ் முனிவரின் பேரன், பிருஹஸ்பதியின் மைந்தன். எனது பெயர் கசன்.(19) நீர் எனது குருவானால், நான் ஆயிரம் வருடங்களுக்குப் பிரம்மச்சரிய வாழ்வுமுறையைப் பயில்வேன். ஓ பிராமணரே! எனக்கு ஆணையிடுவீராக" என்றான்.(20) இதைக் கேட்டச் சுக்ரன், "ஓ கசா! நீ வரவேற்கப்படுகிறாய், உன் வார்த்தைகளை ஏற்றுக் கொள்கிறேன். உன்னை மரியாதையுடன் நடத்துவேன். உன்னை அப்படி நடத்துவதால், பிருஹஸ்பதியை நான் மதித்ததாக ஆகும்" என்றார்."(21)

வைசம்பாயனர் தொடர்ந்தார், சுக்ரன் என்றும் அழைக்கப்பட்ட காவியரால், அல்லது உசனாஸால் ஆணையிடப்பட்ட கசன், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி, தான் குறிப்பிட்ட அந்த உறுதியை {ஆயிரம் வருடப் பிரம்மசரியம்} அப்போதே ஏற்றான்.(22) ஓ பாரதா! {ஜனமேஜயா}, தான் குறிப்பிட்ட உறுதியை ஏற்றக் கசன், ஏற்ற சமயங்களில், தனது குருவையும், (அவரது மகளான) தேவயானியையும் மனம் நிறையச் செய்தான்.(23) உண்மையில், அவன் அவர்கள் இருவரையுமே வழிபட்டான். அவன் இளமையாக இருந்ததால், பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும், பல விதமான வாத்தியங்களை வாசித்துக் கொண்டும் விரைவிலேயே தேவயானியின் மனத்தைக் கவர்ந்தான்.(24) தேவயானியும் இளமையுடனே இருந்தாள். ஓ பாரதா, அவன், அந்த இளம்பெண் தேவயானிக்கு மலர்களையும், பழங்களையும்கொடுத்தும், அந்த மங்கை எப்பணியைக் கொடுத்தாலும் உடனே நிறைவேற்ற ஆயத்தமாக இருந்தும், அவளை மனம் நிறைய வைத்தான்.(25)

தேவயானியும், விரதத்தை ஏற்றுக் கொண்டிருந்த அந்த இளைஞனுடன் தான் தனியாக இருந்த போதெல்லாம் தனது பாடல்களாலும், இனிமையான நடத்தையாலும் கவனித்துக் கொண்டாள்.(26) கசன் அவ்வுறுதியை ஏற்று ஐநூறு வருடங்கள் கடந்த பிறகு, தானவர்கள் அவனது நோக்கத்தை அறிந்து கொண்டனர்.(27) ஒரு பிராமணனைக் கொல்வதில் எந்தத் தயக்கமும் இல்லாத அவர்கள், அவனிடம் மிகுந்த கோபம் கொண்டனர். ஒருநாள், கானகத்தில் தனியாக மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த கசனைக் கண்டனர். பிருஹஸ்பதியின் மீதிருந்த கோபத்தாலும், இறந்தோரை உயிர்ப்பிக்கும் தங்கள் ஞானம் {சஞ்சீவனி} வெளியாகாமல் இருக்கவும், அவனை அங்கேயேக் கொன்றனர்.(28) அவனைக் கொன்று, அவனது உடலை துண்டு துண்டாக்கி ஓநாய்களுக்கும், நரிகளுக்கும் இட்டனர். (மாலை சந்தியில்) பசுக்கள், தங்களைக் கவனித்துக் கொண்ட அவனில்லாமல் {கசனில்லாமல்}, தங்கள் கொட்டகைக்குத் திரும்பின.(29)  ஓ பாரதா {ஜனமேஜயா}, கசனில்லாமல் மாடுகள் திரும்பியதைக் கண்ட தேவயானி தனது தந்தையிடன் சென்று பின்வருமாறு கேட்டாள்.(30)

அவள் {தேவயானி}, "உமது மாலைநேர நெருப்பு மூட்டப்பட்டுவிட்டது. சூரியனும் மறைந்துவிட்டான். ஓ தந்தையே! மாடுகள் தங்களை மேய்த்தவர் இல்லாமல் திரும்பிவிட்டன. உண்மையில் கசனை எங்கும் காண முடியவில்லை.(31) ஒன்று கசன் தொலைந்து போயிருக்க வேண்டும். அல்லது இறந்திருக்க வேண்டும் என்பது வெளிப்படையானது. ஓ தந்தையே! நான் உண்மையாகச் சொல்கிறேன். அவரில்லாமல் நான் வாழமாட்டேன்" என்றாள்.(32)

இதைக்கேட்ட சுக்ரன், "நான் அவனை மீட்டெடுக்கிறேன்" என்று சொல்லி, "அவன் வரட்டும்" என்றார். இறந்தோரை மீட்கும் அறிவியலைப் பயன்படுத்திக் கசனை வரச்சொல்லிச் சுக்ரன் கட்டளையிட்டார்.(33) தன்னைத் தின்ற ஓநாய்களின் வயிறுகளைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்த கசன், இதயத்தில் மகிழ்ச்சி கொண்டு, தனது குருவின் முன் வந்து நின்றான்.(34) அவனது தாமதத்திற்கான காரணம் கேட்கப்பட்டதால், பார்கவரின் மகளிடம் {தேவயானியிடம்} அவன் பேசினான். உண்மையில், அந்த பிராமணரின் மகள் கேட்டதால், அவளிடம், "ஓ சுத்தமான நடத்தை உள்ளவளே! நான் இறந்து போனேன். குசப்புல்லாலும் {தர்ப்பை}, விறகு குச்சிகளாலும் ஆன வேள்விக்குத் தேவையான எரிபொருளை நான் சுமந்து கொண்டு,(35) இருப்பிடம் திரும்பும் போது, ஓர் ஆலமரத்தினடியில் அமர்ந்தேன். மாடுகள் அனைத்தையும் ஒன்றாகத் திரட்டி, அந்த ஆலமரத்தின் நிழலில் நிறுத்தியிருந்தேன்.(36) அசுரர்கள் என்னைக் கண்டு, என்னிடம், "நீ யார்?" என்று கேட்டனர்.  நான், "பிருஹஸ்பதியின் மைந்தன்" என்றேன்.(37) இப்படித் தானவர்களிடம் நான் சொன்னவுடன், அவர்கள் என்னைக் கொன்று, எனது உடலைத் துண்டு துண்டாக வெட்டி, நரிகளுக்கும் ஓநாய்களுக்கும் கொடுத்தனர். பிறகு, அவர்கள் தங்கள் இதயத்தில் மகிழ்ந்து அவர்களது இல்லத்திற்குத் திரும்பினர்.(38) ஓ இனிமையானவளே! பின்னர், அந்த உயர் ஆன்ம பார்கவரின் கட்டளையால், நான் முழுவதுமாக மீட்கப்பட்டு உன் முன் நிற்கிறேன்" என்றான்.(39)

மற்றுமொரு சந்தர்ப்பத்தில், தேவயானி கேட்டதற்கிணங்க, அந்தப் பிராமணன் கசன் கானகத்திற்குள் சென்றான். அவன் பூக்களைப் பறித்துக் கொண்டிருக்கும்போது, தானவர்கள் அவனைக் கண்டனர். அவனை மறுபடியும் கொன்று, அவனது உடலை அரைத்துக் கூழாக்கி கடல் நீரில் கலந்தனர்.(40) நீண்ட நேரமாகியும் அவனைக் காணாததால், அந்த மங்கை மறுபடியும் தனது தந்தையிடம் சென்று செய்தியைச் சொன்னாள். அறிவியலின் துணை கொண்டு அந்தப் பிராமணரால் கட்டளையிடப்பட்ட கசன், தனது குரு, மற்றும் குருவின் மகள் முன்னிலையில் வந்து நின்று, நடந்தது அனைத்தையும் நடந்தபடியே சொன்னான்.(41)

பிறகு மூன்றாவது முறையாக அவனைக் கொன்ற அசுரர்கள், அவனை எரித்து, சாம்பலாக்கி, அந்தச் சாம்பலை, அவர்களின் குரு அருந்தும் மதுவில் கலந்துவிட்டனர்.(42) மறுபடியும் தேவயானி தனது தந்தையிடம் வந்து, "ஓ தந்தையே! கசன், மலர்களைச் சேகரிக்கச் சென்றார். ஆனால் இன்னும் அவரைக் காணவில்லை.(43) அவர் தொலைந்துவிட்டார் அல்லது இறந்துவிட்டார் என்பது உறுதி. நான் உங்களுக்கு உண்மையாகச் சொல்கிறேன். அவரில்லாமல் நான் வாழமாட்டேன்" என்றாள்.(44)

இதைக் கேட்ட சுக்ரன், "ஓ மகளே! அந்தப் பிருஹஸ்பதியின் மகன், இறந்தோர் உலகம் சென்றுவிட்டான். எனது அறிவியலால் அவன் எத்தனை முறை மீட்கப்பட்டாலும், அவன் மீண்டும் மீண்டும் கொல்லப்படுவான். உண்மையில், நான் என்ன செய்ய?(45) ஓ தேவயானி, வருந்தாதே, அழாதே. ஓ மகளே! பிராமணர்களாலும், இந்திரனுடன் சேர்ந்த தேவர்களாலும், வசுக்களாலும், அசுவினிகளாலும், அசுரர்களாலும், ஏன் உண்மையில், மொத்த அண்டத்தாலும், எனது சக்திக்காக ஒரு நாளைக்கு மூன்று முறை நான் வணங்கப்படும்போது, உறுதியாக நீயும் வணங்கப்படுகிறாய். உன்னைப்போன்ற ஒருத்தி, இறந்து போவோருக்காக வருந்தக்கூடாது. நான் அவனை எத்தனை முறை மீட்டாலும் அவன் மறுபடியும் கொல்லப்படுவான். அவனை இறவாமல் வைத்திருக்க இயலாது" என்றார்.(46,47)

அதற்கு மறுமொழியாகத் தேவயானி, "ஓ தந்தையே! அவர் ஒரு முனிவரின் பேரனும், ஒரு முனிவரின் மகனுமாவார். முதுமையான அங்கீரஸின் பேரனும், கடலைப் போன்ற தகுதிவாய்ந்த பிருஹஸ்பதியின் மைந்தனுமான ஒருவருக்காக நான் ஏன் வருந்தக்கூடாது?(48) அவர் ஒரு பிரம்மச்சாரியாக வேறு இருந்தார். ஓர் துறவியாக அவர் எப்போதும் விழிப்புடனும் எல்லாவற்றிலும் திறமைவாய்ந்தவராகவும் இருந்தார். நான் உண்ணாதிருந்து, கசனின் வழியிலேயே செல்வேன். ஓ தந்தையே! அந்த அழகான கசன், எனது அன்புக்குரியவன்" என்றாள்."(49)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "அந்தப் பெரும் முனிவர் காவியர், தேவயானி சொன்னதை நினைத்துத் துயர்கொண்டு, கோபத்தால் உரத்துப் பேசினார். "என்னுடன் இருக்கும் எனது சீடனைக் கொன்று, நிச்சயமாக இந்த அசுரர்கள் என்னைக் காயப்படுத்தவே (எனக்குத் துரோகம் செய்யவே) எண்ணுகின்றனர்.(50) இந்த ருத்ர வழிபாட்டாளர்கள், என்னை அவர்களது குற்றத்தில் பங்கெடுக்கச் செய்து, என்னைப் பிராமணத் தன்மையை இழக்கச் செய்கின்றனர். உண்மையில் இந்தக் குற்றத்திற்கு ஒரு கொடூர முடிவு இருக்கிறது. ஒரு பிராமணனைக் கொல்லும் குற்றம் என்பது இந்திரனையே எரித்துவிடக் கூடியது" என்று சொல்லிவிட்டு, தேவயானியால் அவரசப்படுத்தப்பட்டு, மரணத்தின் கோரப்பற்களுக்குள் நுழைந்த கசனுக்குச் சுக்ரன் கட்டளையிடத் தொடங்கினார். ஆனால், அந்த அறிவியலின் துணை கொண்டு கட்டளையிடப்பட்ட கசன், தனது குருவுக்கு நேரப்போகும் அபாயத்தை நினைத்து பயந்து, தளர்ந்த குரலில்,(51) அந்தக் குருவின் வயிற்றுக்குள் இருந்து, "ஓ தலைவரே! என்னிடம் கருணை கொள்ளுங்கள். நான் கசன் உம்மை வழிபடுகிறேன். என்னிடம் உமது அன்புக்குரிய மகனைப் போல் நடந்து கொள்ளுங்கள்" என்றான்."

வைசம்பாயனர் தொடர்ந்தார், "சுக்ரன், "ஓ பிராமணா, நீ எந்த வழியில் எனது வயிற்றில் நுழைந்தாய்? இப்போது நீ எங்கே இருக்கிறாய்? இந்தக்கணத்தில் இந்த அசுரர்களை விட்டகன்று, தேவர்களிடம் செல்லப்போகிறேன்" என்றார்.(52)

கசன், "உமது கருணையால், நான் எனது நினைவை இழக்கவில்லை. நிச்சயமாக எனக்கு என்ன நேர்ந்தது என்று என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது. எனது துறவின் அறங்கள் அழியவடையவில்லை. எனவே, எனது இந்தத் தாங்க முடியாத வலியைத் தாங்கிக் கொள்ள முடிகிறது.(53) ஓ காவியரே, அசுரர்களால் நான் கொல்லப்பட்டு, எரிக்கப்பட்டுச் சாம்பலாகக் குறைக்கப்பட்டு, உமது மதுவில் கலக்கப்பட்டு, மதுவை நீர் அருந்தும்போது உமக்குள் வந்தேன். நீர் இருக்கும் வரை அசுரர்களின் திறமை அழியாது, குறிப்பாக அந்த பிராமண அறிவியல் {பிரம்ம மாயை} அழியாது" என்றான்.(53)

இதைக்கேட்ட சுக்ரன் தனது மகளிடம், "ஓ மகளே! உனக்கு என்ன நன்மையை நான் செய்ய முடியும்? எனது இறப்பால்தான், கசன் தனது உயிரைப் பெறுவான். ஓ தேவயானி, கசன் என்னுள் இருக்கிறான். எனது வயிற்றைக் கிழித்து வருவதைத் தவிர அவன் வெளியே வர வேறு வழி இல்லை" என்றார்.(54) அதற்குத் தேவயானி, "இரண்டு தீமையும் என்னை நெருப்பைப் போல் சுட்டெரிக்கும். கசனின் இறப்பும், உமது இறப்பும் எனக்கு ஒன்றேயாம். கசன் இறந்தாலும், நீர் இறந்தாலும் நான் எனது உயிரைத் தாங்க முடியாது" என்றாள்.(55)

பிறகு சுக்ரன் சொன்னார், "ஓ பிருஹஸ்பதியின் மகனே, தேவயானி உன்னைப் பெரிதும் மதிப்பதால், நிச்சயமாக நீ ஏற்கனவே வெற்றி மகுடம் தரித்து விட்டாய். நிச்சயமாகக் கசனின் உருவத்தில் இருக்கும் இந்திரனாக நீ இல்லாவிட்டால், நான் இன்று உனக்குச் சொல்லப்போகும் அறிவியலை ஏற்றுக் கொள்வாயாக.(56) யாராலும் உயிருடன் எனது வயிற்றைவிட்டு வெளியே வரமுடியாது. இருப்பினும், ஒரு பிராமணன் கொல்லப்படலாகாது. எனவே, உனக்கு கற்பிக்கும் அறிவியலை ஏற்றுக் கொள்வாயாக.(57) எனது மகனாக உனது வாழ்க்கையைத் தொடங்குவாயாக. என்னால் உனக்குக் கொடுக்கப்படும் ஞானத்தைப் பெற்றுக்கொண்டு, என்னை மீட்டெடுப்பாயாக. எனது உடலை விட்டு வெளியே வந்து, கருணையோடு நடந்து கொள்வதில் கவனமாக இருப்பாயாக" என்றார்."(58)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "குருவால் அளிக்கப்பட்ட அறிவியலைப் பெற்றுக் கொண்ட அந்த அழகான கசன், அவரது வயிற்றைக் கிழித்துக் கொண்டு, வளர்பிறையின் பதினைந்தாவது நாளில் முளைக்கும் முழு நிலவாக வெளியே வந்தான்.(59) தனது குருவின் உடல் தவங்களின் குவியல் போல் கிடப்பதைக் கண்ட கசன், அவரைத் தான் கற்ற அந்த அறிவியலின் துணை கொண்டு மீட்டெடுத்தான். அவரை மதிப்புடன் வழிபட்ட கசன், தனது குருவிடம்,(60) "ஞானமில்லாத எனக்கு நீர் செய்தது போலவே, ஒருவனது காதுகளுக்குள், ஞானம் எனும் அமுதத்தினை ஊற்றும் ஒருவரை நான் தந்தையாகவும் தாயாகவும் மதிப்பேன். இந்தப் பெரும் சேவையை நினைவு கூரும் எவனாலும், எப்படி நன்றிகெட்டனாகி அப்படிப்பட்டவரைக் காயப்படுத்த முடியும்?(61) ஞானத்தைக் கொடுக்கும், உலகத்தின் பொருட்களனைத்திலும் பொக்கிஷமான தனது குருவால் ஞானமடைந்து, அவருக்கே காயத்தை ஏற்படுத்துபவர்கள் இந்த உலகத்தால் வெறுக்கப்பட்டு, இறுதியில் பாவங்கள் செய்தவர்கள் செல்லும் உலகத்தை அடைவர்" என்றான்."(62)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "கல்விமானான அந்தச் சுக்ரன், மதுவின் மயக்கத்தால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, அந்தப் பானத்தால் ஏற்பட்ட பெருத்த இழப்பை எண்ணிப்பார்த்து, நினைவு மங்கிய நிலையில் கசனைத் தான் அந்த மதுவுடன் விழுங்க வேண்டி வந்ததை நினைத்துப் பார்த்து, பிராமணர்களின் நடத்தை விதிகளைச் சீர்திருத்த எண்ணம் கொண்டார். அந்த உயர் ஆன்ம உசானஸ், கோபத்துடன் தரையிலிருந்து எழுந்து,(63,64) "இந்த நாள் முதல், மயக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், மது அருந்தும் பிராமணன் பாவியாவான். அவன் தனது எல்லா அறங்களையும் இழந்ததாகக் கருதப்படுவான். அவன் ஒரு பிராமணனைக் கொன்ற பாவத்தைத் தாங்கியவனாவான். அவன் இந்த உலகத்திலும் மற்ற உலகங்களிலும் வெறுக்கப்படுவான்.(65) இந்த நடத்தை மற்றும் கௌரவ விதியை எல்லா பிராமணர்களுக்கும் உரித்தாக்குகிறேன். நேர்மையான பிராமணர்களும், பெரியோர்களை மதிப்போரும், தேவர்களும், இந்த மூன்று உலகமும் இதைக் கேட்கட்டும்" என்று சொல்லிவிட்டு,(66) அந்த உயர் ஆன்மாவைக் கொண்டவர், விதியால் நல்ல மதியை இழந்த தானவர்களை அழைத்து, துறவிகளின் துறவியான அவர், அவர்களிடம்,(67) "மூடர்களான தானவர்களே, கசன் அவனது நோக்கத்தை அடைந்து விட்டான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவன் இனி என்னுடன்தான் வசிப்பான். இறந்தோரை மீட்கும் ஞானத்தை அடைந்த அவன், பிரம்மனுக்கு நிகரான பலத்துடன் இருப்பான்" என்றார்."(68)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "பார்கவர் இப்படிச் சொல்லிவிட்டுத் தனது பேச்சை நிறுத்தினார். தானவர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்து, தங்கள் இல்லங்களுக்குச் சென்றனர்.(69) கசனும், முழுவதுமாக ஆயிரம் வருடங்கள் தனது குருவுடன் இருந்து, அனுமதியைப் பெற்றுக் கொண்டு, தனது வசிப்பிடமான தேவலோகத்திற்குத் திரும்பத் தயாரானான்" {என்றார் வைசம்பாயனர்}.(70)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்