Saturday, June 29, 2013

அரங்கேற்றக் களம் - ஆதிபர்வம் பகுதி 136

Debut field | Adi Parva - Section 136 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 72)

பதிவின் சுருக்கம் : அரங்கத்தைக் கட்டத் தேவையான நிலத்தை அளந்த துரோணர்; குறித்த நாளில் இளவரசர்களின் வீர அரங்கேற்றம் நடந்தது; தங்கள் ஆற்றலை வெளிப்படுத்திய இளவரசர்கள்; பீமனும், துரியோதனனும் மோதிக் கொள்ள ஆயத்தமானது...

Debut field | Adi Parva - Section 136 | Mahabharata In Tamil
வைசம்பாயனர் சொன்னார், “ஓ! பாரதகுலத்தோனே, திருதராஷ்டிரன் மற்றும் பாண்டுவின் மகன்கள் ஆயுதத் திறமையை அடைந்து விட்டதைக் கண்ட துரோணர், ஓ! ஏகாதிபதியே, கிருபர், சோமதத்தன், பாஹ்லீகர், மற்றும் கங்கையின் புத்திசாலி மகன் (பீஷ்மர்), வியாசர், விதுரன் ஆகியோரது முன்னிலையில் மன்னன் திருதராஷ்டிரனிடம்,(1,2) “ஓ! குரு மன்னர்களில் சிறந்தவரே, உமது மகன்கள் தங்கள் கல்வியை முடித்துவிட்டனர். ஓ! மன்னா, உமது அனுமதியுடன் அவர்கள் தங்கள் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தட்டும்" என்றார்.(3)

இதைக்கேட்ட மன்னன் இதயம்நிறைந்த மகிழ்ச்சியுடன், “ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, நீர் பெரும் செயலைச் சாதித்திருக்கிறீர். பரிசோதனை நிகழும் இடத்தையும் நேரத்தையும், அஃது எப்படி நடக்க வேண்டும் என்பதையும் எனக்குக் கட்டளையிடுவீராக.(4) என் குருட்டுத் தன்மை, எனக்கு ஏற்படுத்தியிருக்கும் துயர், எனது பிள்ளைகளின் ஆயுத வீரத்தைக் காணும் பாக்கியமுள்ளோரிடம்  என்னை பொறாமை கொள்ள வைக்கிறது.(5) ஓ! க்ஷத்ரி (விதுரா), துரோணர் சொல்வதையெல்லாம் செய்து கொடுப்பாயாக. ஓ! அறத்துக்குத் தன்னை அர்ப்பணித்திருப்பவனே, இதைவிட ஏற்புடையது {இனிமையானது} எனக்கு வேறெதுவும் இல்லை என்று நினைக்கிறேன்" என்றான்.(6)

மன்னனுக்குத் தேவையான உறுதிகளைக் கொடுத்துவிட்டு, விதுரன் தனது பணியைச் செய்யப் புறப்பட்டான். பெரும் ஞானம் கொண்ட துரோணர், கிணறுகளும், நீரூற்றுகளும் கொண்ட, மரங்கள் மற்றும் அடர்த்தியான புதர்களற்ற ஒரு நிலத்தை அளந்தார். அப்படி நிலத்தை அளந்த துரோணர், நல்ல நட்சத்திரம் கொண்ட ஒரு சந்திர நாளில், நடக்கும் காரியத்திற்குச் சாட்சியாக அங்கே கூடி நிற்கும் குடிமக்களுக்கு மத்தியில் தேவர்களுக்குக் காணிக்கை கொடுத்தார்.(7-9) அதன்பிறகு, ஓ! மனிதர்களில் காளையே, மன்னனின் சிற்பிகள், அந்த இடத்தில், பல்வேறு ஆயுதங்களுடன் தரமான ஒரு பெரிய அரங்கத்தைச் சாத்திரங்களில் சொல்லியுள்ளபடி அமைத்தனர். மேலும் அவர்கள் மற்றுமொரு பெரிய அரங்கத்தைப் பெண் பார்வையாளர்களுக்காக அமைத்தனர்.(10) குடிமக்களும் அவர்களுக்குத் தகுந்தது போல மேடைகளைத் தங்களுக்கு அமைத்துக் கொண்டனர். செல்வந்தர்கள் அகலமாகவும், விசாலமாகவும் குடில்களைத் தங்களுக்கு அமைத்துக் கொண்டனர்.(11)

நிச்சயிக்கப்பட்ட அரங்கேற்ற நாள் வந்ததும், தெய்வீக அழகுடன் சுத்தமான தங்கத்தால் கட்டப்பட்டு, முத்துச் சரங்களாலும், விலைமதிப்பில்லா வைடூரியம் போன்ற கற்களாலும் அலங்கரிக்கப்பட்ட அந்த அரங்கத்தினுள், பீஷ்மர், கிருபர், குருக்களில் முன்னவர்கள் ஆகியோரை முன் நடக்க விட்டு, மன்னன் {திருதராஷ்டிரன்} தனது அமைச்சர்களுடன் நுழைந்தான்.(12,13) ஓ! வெற்றியாளர்களில் முதன்மையானவனே, நற்பேறு அருளப்பட்ட காந்தாரி, குந்தி மற்றும் அரச குடும்பத்தின் மற்ற மகளிர் ஆகியோர் பகட்டான ஆடையுடுத்தி, தெய்வீக மங்கையர் சுமேரு {மேரு} மலைமீது ஏறுவது போலப் பணிப்பெண்களுடன் இன்பமாக அம்மேடையில் ஏறினர். பிராமணர்கள், க்ஷத்திரியர்களுடன் கூடிய நால்வகை மக்களும், இளவரசர்களின் ஆயுதத் திறனைக் காணும் ஆவலில், நகரத்தை விட்டகன்று, அந்த இடத்திற்கு ஓடி வந்தனர். அந்தக் காணற்கரிய காட்சியைக் காண அனைவரும் அமைதியற்றுக் காத்திருந்தனர். ஒரு நொடிப் பொழுதில் அங்கே பெரும் கூட்டம் கூடியது.(14-16) துந்துபி மற்றும் பேரிகைகளின் ஒலியும், பல குரலொலிகளும் சேர்ந்த ஒலி, கலங்கும் சமுத்திர ஒலியைப் போலிருந்தது.(17)

இறுதியாக, துரோணர் வெண்ணிற ஆடையுடன், பூணூல் பூட்டி, வெண்ணிறத் தாடியுடன், வெள்ளை மாலை அணிந்து, வெண்ணிற சந்தனக் குழம்பை மேனியில் பூசிக் கொண்டு தனது மகனுடன் அரங்கத்தினுள் நுழைந்தார். அக் காட்சியானது, மேகமற்ற வானில் சந்திரன் செவ்வாய்க்கிரகத்துடன் காட்சியளிப்பது போல இருந்தது.(18,19) அந்தப் பரத்வாஜர் {துரோணர்} உள்ளே நுழைந்ததும், நேரத்தில் பூஜை செய்து, மந்திரங்கள் நன்கறிந்த பிராமணர்களை மங்கலச் சடங்குகளைச் செய்ய வைத்தார்.(20)

இனிமையான இசையுடன் பரிகாரச் சடங்குகள் செய்து அவை நிறைவடைந்த பிறகு, பல்வேறு ஆயுதங்களுடன் சிலர் அந்த அரங்கின் உள்ளே நுழைந்தனர்.(21) இடுப்புக் கச்சையை வாரினால் வாரிக் கட்டிக் கொண்டவர்களும், பெரும் தேர்வீரர்களுமான அந்தப் பாரதக் குலத்தவர் (இளவரசர்கள்), தங்கள் கைகளில் கவசக் கையுறைகளை அணிந்து, விற்களுடனும் அம்பறாத்தூணிகளுடனும் உள்ளே நுழைந்தனர்.(22) யுதிஷ்டிரனைத் தலைமையாகக் கொண்ட அந்தத் துணிவுமிக்க இளவரசர்கள், தங்கள் வயதுக்குத் தகுந்த வரிசையில் உள்ளே நுழைந்து, ஆயுதங்களில் தங்கள் அற்புதமான திறன்களைக் காட்சிப்படுத்தினர்.(23) அப்போது, சில பார்வையாளர்கள் கீழே இறங்கும் அம்புகளுக்கேற்ப அச்சத்தால் தங்கள் தலையைக் கீழே சாய்த்தனர். சிலர் அச்சமில்லாமல் அக்காட்சியை ஆச்சரியமாகப் பார்த்தனர்.(24)

அந்த இளவரசர்கள், குதிரையை லாவகமாகச் செலுத்தித் தங்கள் பெயர் பொறித்த குறித்த இலக்குகளைத் தங்கள் கணைகளால் அடித்தனர்.(25) வில் மற்றும் கணையைப் பயன்படுத்துவதில் தங்கள் இளவரசர்களின் ஆற்றலைக் கண்ட பார்வையாளர்கள், தாங்கள் கந்தர்வர்களின் நகரத்தைக் காண்கிறோமோ என்று நினைத்து வியப்பில் ஆழ்ந்தனர்.(26) ஓ! பாரதா, திடீரெனச் சில நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் "நன்று செய்தீர்! சரியாகச் செய்தீர்!" எனத் தங்கள் கண்களை அகலவிரித்து ஆச்சரியக் கூக்குரலிட்டனர்.(27) தங்கள் திறமைகளையும், வில் மற்றும் கணையைப் பயன்படுத்துவதில் தங்கள் கைத்திறனையும், தேர்களைக் கட்டுப்படுத்தும் திறனையும், குதிரை மற்றும் யானையின் முதுகில் இருந்து போரிடும் திறனையும்(28) தொடர்ச்சியாகச் செய்து காட்டிய அந்தப் பெரும் பலம் கொண்ட வீரர்கள், தங்கள் வாட்களையும், கேடயங்களையும் எடுத்துக் கொண்டு அந்த ஆயுதங்களுடன் விளையாடத் தொடங்கினர்.(29) பார்வையாளர்கள் இளவரசர்களின் சுறுசுறுப்பையும், கட்டுடலையும், கருணையையும், அமைதியையும், வலுவான பிடியையும், வாள் மற்றும் கேடயத்தில் அவர்கள் கொண்ட திறனையும் கண்டு அதிசயித்தனர்.(30)

பிறகு, விருகோதரனும் {பீமனும்}, சுயோதனனும் {துரியோதனனும்}, (போரின் தன்மையை நினைத்து) உள்ளுக்குள் மகிழ்ந்து, கையில் கதாயுதங்களுடன் ஒற்றைச் சிகர மலைகள் இரண்டைப் போல அரங்கத்தினுள் நுழைந்தனர்.(31) அந்தப் பெரும் பலம் கொண்ட வீரர்கள் தங்கள் இடுப்புக் கச்சைகளை இறுகக் கட்டிக் கொண்டு, தங்கள் சக்தி அத்தனையையும் வரவழைத்து, இரண்டு சினம் கொண்ட யானைகள் ஒரு பெண் யானைக்காகப் போட்டியிட்டு முழங்குவதைப் போலவே முழங்கினர்.(32) சினம் கொண்ட யானைகளைப் போல இருந்த அந்தப் பலம்வாய்ந்த வீரர்கள் இருவரும், அரங்கத்தை வலமாகவும், இடமாகவும் சுற்றினர்.(33) விதுரன் இளவரசர்களின் சாதனைகளையெல்லாம் திருதராஷ்டிரனுக்கும், பாண்டவர்களின் தாய்க்கும் {குந்தி}, காந்தாரிக்கும் விவரித்துச் சொன்னான்” {என்றார் வைசம்பாயனர்}.(34)



ஆதிபர்வம் பகுதி 136ல் உள்ள சுலோகங்கள் : 34
ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்