Saturday, June 29, 2013

அர்ஜூனன் மாயாஜாலம் - ஆதிபர்வம் பகுதி 137

Arjuna showed his profound skill | Adi Parva - Section 137 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 73)

பதிவின் சுருக்கம் : சினம் கொண்ட பார்வையாளர்கள் துரியோதனனுக்கு ஆதரவாகவும், பீமனுக்கு ஆதரவாகவும் பிரிந்து நின்றது; பீமதுரியோதன மோதலை நிறுத்திய துரோணர்; அர்ஜுனன் செய்து காட்டிய மாயாஜாலத்தில் மயங்கிய மக்கள்; வாயிலில் கரவோசையைக் கேட்டுத் திரும்பிய மக்கள்; பரபரப்புடன் எழுந்து நின்ற துரியோதனன்...

Arjuna showed his profound skill | Adi Parva - Section 137 | 
Mahabharata In Tamil
வைசம்பாயனர் சொன்னார், "பலம் பொருந்திய குரு மன்னனும், பீமனும் அரங்கத்தினுள் நுழைந்ததும், பார்வையாளர்கள் தங்கள் மனவேற்றுமையால் ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக இருபிரிவாகப் பிரிந்தனர்.(1) சிலர், "குருக்களின் வீர மன்னனைப் பாருங்கள்", சிலர், "பீமனைப் பாருங்கள்!" என்றும் கூவினர். இப்படிப்பட்ட கூவல்களின் காரணமாக அங்கே திடீரெனப் பெருங்கூச்சல் எழுந்தது.(2) அந்த இடம் ஒரு கலங்கிய கடலைப் போலக் காட்சி அளித்ததைக் கண்ட புத்திசாலியான பரத்வாஜர் {துரோணர்}, தனது மகன் அஸ்வத்தாமனை அழைத்து,(3) "பயிற்சியில் தேர்ந்தவர்களும்,  பெரும்பலம் கொண்டவர்களுமான இவ்விரு வீரர்களையும் தடுத்து நிறுத்துவாயாக. பீமனுக்கும், துரியோதனனுக்குமான இந்த மோதலால் கூட்டத்தின் கோபம் தூண்டப்படக் கூடாது" என்றார்”.(4)


வைசம்பாயனர் தொடர்ந்தார், "பிரளயகாலத்தில் உருவாகும் காற்றினால் கொந்தளிக்கிற இரு கடல்களைப் போலத் தங்கள் கதாயுதங்களை உயர ஓங்கியபடி இருவரும் நிற்கையில், குரு மைந்தன் {அஸ்வத்தாமன்} அவர்களைத் தடுத்து நிறுத்தினான்.(5) அப்போது துரோணர் அரங்கத்தினுள் நுழைந்து, இசைக்கலைஞர்களைத் தங்கள் இசையை நிறுத்தச் சொல்லி, மேகங்களைப் போன்ற ஆழ்ந்த குரலில் இந்த வார்த்தைகளைச் சொன்னார்,(6) "என் மகனிடம் நான் கொண்டுள்ளதைப் போன்றே என் அன்புக்குரியவனும், அனைத்து ஆயுத திறன்மிக்கவனும், இந்திரனின் மைந்தனும், இந்திரனின் தம்பிக்கு (விஷ்ணு) ஒப்பானவனுமான இந்தப் பார்த்தனைப் {அர்ஜுனன்} அனைவரும் காண்பீராக" என்றார்.(7)

பரிகாரச் சடங்குகளை மனநிறைவாகச் செய்த அந்த இளைஞன் பல்குனன் {அர்ஜுனன்}, தனது கையுறை கவசத்தையும், தங்கத்தாலான உடற்கவசத்தையும் தரித்து, அம்பறாத்தூணியில் கணைகளை நிறைத்துக் கைகளில் வில்லேந்தி, அரங்கிலிருந்த கூட்டத்தின் முன்பு, மாலை நேர சூரியனின் கதிர்களால் வானவில்லின் நிறம்பெற்ற, மின்னலுடன் கூடிய மேகம் போலக் காட்சியளித்தான்.(8,9) மொத்தக் கூட்டமும் அர்ஜுனனைக் கண்டதும் பெருமகிழ்ச்சி அடைந்து, தங்கள் சங்குகளை எடுத்து முழக்கினர். இன்னிசை வாத்தியங்களும் இசைக்கப்பட்டன.(10)

"குந்தியின் அழகிய மகன் இவன்", "இவனே பாண்டவர்களில் நடுவன் (மூன்றாமவன்)", "இவனே பெரும்பலம்வாய்ந்த இந்திரனின் மகன்", "இவனே குரு குலத்தைக் காக்கப் போகிறவன்",(11) "இவனே ஆயுதந்தரித்தவர்களில் முதன்மையானவன்", "இவனே அறத்தைக் கடைப்பிடிப்பவர்களில் முதன்மையானவன்", "இவனே சரியான நடத்தையுள்ளவர்களில் முதன்மையானவன்", "இவனே ஞானக் காரியங்களின் பெரும் கொள்கலன்" என்று கூட்டத்தில் இருந்து ஆச்சரியக் கூச்சல்கள் எழுந்தன.(12)

இந்தப் பாராட்டுகளைக் கேட்டதால், குந்தி ஆனந்தக் கண்ணீர் வடித்தாள், அவள் மார்பில் சுரந்த பாலுடன் அக்கண்ணீர் சேர்ந்து, அவளது மார்பை நனைத்தது.(13) மனிதர்களில் முதல்வனான திருதராஷ்டிரன் இந்தக் கூச்சல்களால் காதடைத்து, மகிழ்ச்சியுடன் விதுரனிடம்,(14) “ஓ! க்ஷத்ரி {விதுரா}, கலங்கிய பெருங்கடல் போல, வானுலகிற்கே கேட்குமளவு ஏன் இப்படித் தீடீரெனக் கூச்சல் எழுகிறது?" என்று கேட்டான்.(15)

விதுரன், “ஓ! பெரும்பலம்வாய்ந்த ஏகாதிபதியே, பாண்டு மற்றும் பிருதையின் {குந்தியின்} மகனான பல்குனன் {அர்ஜுனன்}, தனது கவசங்களை அணிந்து கொண்டு அரங்கத்தினுள் நுழைந்திருக்கிறான். அதனால்தான் இந்தக் கூச்சல் எழுகிறது" என்றார்.(16)

திருதராஷ்டிரன், “ஓ! பெரும் ஆன்மா கொண்டவனே, புனித நெய்யைப் போன்றிருக்கும் பிருதையிடம் உதித்த இந்த மூன்று நெருப்புகளாலும், உண்மையில் அருளப்பட்டவனாகவும், கருணை செய்யப்பட்டவனாகவும், பாதுகாக்கப்பட்டவனாகவும் என்னை நான் உணர்கிறேன் " என்றான்”.(17)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "மகிழ்ச்சியில் திளைத்திருந்த பார்வையாளர்கள் தங்கள் சுய உணர்வு அடைந்தனர். பீபத்சு {அர்ஜுனன்}, ஆயுதங்களில் தனது கரநளினத்தைக் அரங்கத்திலுள்ளோருக்குக் காட்சிப்படுத்தினான்.(18) அவன், ஆக்னேய ஆயுதத்தால் நெருப்பை உண்டாக்கினான், வாருண ஆயுதத்தால் நீரை உண்டாக்கினான், வாயவ்யா ஆயுதத்தால் (வாயு அஸ்திரம்} காற்றை உண்டாக்கினான். பர்ஜன்ய ஆயுதத்தால் {மேகாஸ்திரம்) மேகங்களை உண்டாக்கினான்.(19) மேலும் அவன், பௌமா ஆயுதத்தால் நிலத்தை உண்டாக்கினான், பர்வதேய ஆயுதத்தால் {பர்வதாஸ்திரம்} மலைகளை உருவாக்கினான். பிறகு அவன், அந்தர்தான ஆயுதத்தால் முன்பு உண்டாக்கிய அனைத்தையும் மறையவைத்தான்.(20)

அந்தக் குருவுக்கு விருப்பமானவன் {அர்ஜுனன்} ஒரு நொடியில் உயர்ந்து காணப்பட்டான், மறுநொடியில் தாழ்ந்து {குள்ளமாகக்} காணப்பட்டான். ஒரு நொடியில் தேர்த்தட்டிலும், மறுநொடியில் தேரின் நடுவிலும், அதற்கடுத்த நொடியில் தரையிலும் அவன் காணப்பட்டான்.(21) கரங்களைத் திறமையாகப் பயன்படுத்த பயிற்சி பெற்ற அந்த வீரன், பல கணைகளைக் கொண்டு சில மென்மையான, சில கடுமையான, சில அடர்த்தியான இலக்குகளை அடித்துக் காட்டினான்.(22) நகர்ந்து கொண்டே இருக்கும் இரும்புப் பன்றியின் வாயில் ஐந்து கணைகளை ஒரே கணை போலத் தடையில்லாமல் தனது வில் நாணிலிருந்து எய்தான்.(23) கயிற்றில் தொங்கியபடி அங்குமிங்கும் ஆடிக்கொண்டிருக்கும் துளையிடப்பட்ட மாட்டின் கொம்பில் இருபத்தியொரு கணைகளைச் செலுத்தினான்.(24) ஓ! பாவங்களற்றவனே, இப்படி அர்ஜுனன், வாள், வில், கதை ஆகிய ஆயுதங்களில் தனக்கு உண்டான ஆழமான நிபுணத்துவத்தைக் காட்டி அந்த அரங்கத்தை வலம் வந்தான்.(25)

ஓ! பாரதனே, அந்தக் கண்காட்சி நல்லபடியாக முடிந்ததும், அரங்கத்திலிருந்த பார்வையாளர்களின் குதூகலம் அடங்கியது. இசைக்கருவிகளின் ஒலி நின்றது, அப்போது, வாயிலருகே கைதட்டும் ஒலி கேட்டது. அவ்வொலியானது, தட்டுபவரின் பலத்தையும், சக்தியையும் முன்னறிவிக்கும் வகையில் இடிச்சத்தம் போலக் கேட்டது.(26,27) ஓ! மன்னா, அங்கே கூடியிருந்த கூட்டமானது, அந்நொடியில் இவ்வொலியைக் கேட்டு, "பூமியின் மலைகள் பிளந்தனவா? அல்லது பூமியே பிளந்துவிட்டதா? அல்லது வானத்தில் மேகங்கள் கூடி முழங்குகின்றனவா?" என்று நினைத்த பார்வையாளர்கள் அனைவரும் வாயிலை நோக்கினர்.(29) ஐந்து நட்சத்திரங்களின் கூட்டமான ஹஸ்த நட்சத்திரத்துடன் கூடிய சந்திரன் போலத் துரோணர், குந்தியின் மைந்தர்களான ஐந்து சகோதரர்கள் சூழ நின்றிருந்தார்.(30)

எதிரிகளைத் தண்டிப்பவனான துரியோதனன், செருக்குள்ள தனது நூறு சகோதரர்களுடனும், அஸ்வத்தாமனுடனும் பரபரப்புடன் எழுந்து நின்றான்.(31) ஒங்கிய ஆயுதங்களுடன் கூடிய தனது நூறு சகோதரர்கள் சூழவும், கையில் கதாயுதத்துடனும் நின்றிருந்த அந்த இளவரசன் {துரியோதனன்}, தானவர்களை எதிர்த்து போரிடச் செல்கையில் தேவர்களால் சூழப்பட்ட புரந்தரன் {இந்திரன்} போல இருந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(32)


ஆதிபர்வம் பகுதி 137ல் உள்ள சுலோகங்கள் : 32

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்