Friday, June 28, 2013

பிரம்மாயுதத்தைப் பெற்ற அர்ஜூனன் - ஆதிபர்வம் பகுதி 135

Arjuna gained Brahmastra | Adi Parva - Section 135 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 71)

பதிவின் சுருக்கம் : மற்ற பிள்ளைகளைப் போலவே குறியை அடிக்க அர்ஜுனனையும் அழைத்த துரோணர்; அர்ஜுனனின் பதிலால் அகமகிழ்ந்தது; குறியை அடித்த அர்ஜுனன்; நீராடச் சென்ற துரோணரை பிடித்துக் கொண்ட முதலை; முதலையைக் கொன்று துரோணரை விடுவித்த அர்ஜுனன்; அர்ஜுனனுக்குப் பிரம்மாஸ்திரத்தைத் தந்த துரோணர்...

Arjuna gained Brahmastra | Adi Parva - Section 135 | 
Mahabharata In Tamil
வைசம்பாயனர் சொன்னார், "அனைவரும் தோற்றதும், துரோணர் புன்னகையுடன் அர்ஜுனனை அழைத்து, "உன்னால் அக்குறி அடிக்கப்பட வேண்டும்; எனவே, உனது பார்வையை அதில் செலுத்துவாயாக.(1) நான் உத்தரவிட்டதும் நீ உனது கணையை ஏவ வேண்டும். எனவே, ஓ! மகனே, வில் மற்றும் கணையுடன் ஒரு கணம் இங்கே நிற்பாகயாக" என்றார்.(2)

இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்ட அர்ஜுனன், குருவின் விருப்பப்படித் தனது வில்லை வளைத்து அப்பறவைக்குக் குறி வைத்து நின்றான்.(3) ஒரு நொடிக்குப் பிறகு துரோணர் மற்றவர்களிடம் கேட்டது போல, “ஓ! அர்ஜுனா, அங்கே இருக்கும் பறவையையும், மரத்தையும், என்னையும் பார்க்கிறாயா?" என்று கேட்டார்.(4)

அதற்கு அர்ஜுனன், "நான் அப்பறவையை மட்டுமே காண்கிறேன். உம்மையோ, அம்மரத்தையோ நான் காணவில்லை" என்றான்.(5)



வெல்லப்படமுடியாதவரான துரோணர், அர்ஜுனனிடம் பெரும் மனநிறைவு கொண்டு, அடுத்த நொடியில், பாண்டவர்களின் பலம் வாய்ந்த அந்தத் தேர்வீரனிடம் {அர்ஜுனனிடம்},(6) "நீ அக்கழுகைக் காண்கிறாயென்றால், அதைப் பற்றி விவரிப்பாயாக" என்று கேட்டார்.

அர்ஜுனன், "நான் அக்கழுகின் தலையை மட்டுமே காண்கிறேன், அதன் உடலைக் காணவில்லை" என்றான்.(7)

அர்ஜுனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட துரோணருக்கு மகிழ்ச்சியால் உடலெங்கும் மயிர்ச் சிலிர்ப்பு ஏற்பட்டது. பிறகு அவர் பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, "அடி" என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன், உடனே தனது கணையைப் பறக்க விட்டான்.(8) அந்தக் கூர்மையான கணையாது, வேகமாகச் சென்று, மரத்திலிருந்த கழுகின் தலையை அடித்துத் தரையில் வீழ்த்தியது.(9) அந்தக் காரியம் முடிந்ததும், துரோணர் ஓடி வந்து பல்குனனைத் {அர்ஜுனனைத்} தனது மார்புறக் கட்டித் தழுவிக் கொண்டு, துருபதனும் அவனது நண்பர்களும் ஏற்கனவே போரில் வீழ்ந்துவிட்டதாக நினைத்துக் கொண்டார்.(10)

சில காலம் கழித்து, ஓ! பாரதக் குலத்தின் காளையே, துரோணர் தனது சீடர்களை அழைத்துக் கொண்டு கங்கைக் கரைக்கு, அதன் புனிதமான நீரோட்டத்தில் நீராடச் சென்றார்.(11) துரோணர் அந்த நீரோட்டத்தில் இறங்கியதும், காலனால் அனுப்பப்பட்டது போன்ற பெரும் பலம் வாய்ந்த ஒரு முதலை அவரது தொடையைப் பற்றியது.(12) அந்த இக்கட்டிலிருந்து தன்பலத்தாலேயே அவரால் மீளமுடியும் என்றாலும், அவசரத்துடன் துரோணர், சீடர்களைத் தன்னைக் காக்கும்படி கேட்டார். அவர், "ஓ, இந்த விலங்கைக் கொன்று, என்னைக் காப்பாற்றுங்கள்" என்றார்.(13)

அவ்வார்த்தைகளைக் கேட்டதும், மற்ற சீடர்கள் திகைத்துப் போய் அவரவர் இடத்திலேயே நின்றாலும், பீபத்சு (அர்ஜுனன்), தடுக்கப்படமுடியாத தனது ஐந்து கூர்மையான கணைகளால் அந்த விலங்கை நீரிலேயே அடித்து வீழ்த்தினான். அர்ஜுனனின் தயார் நிலையைக் கண்ட துரோணர், அவனை அவரது சீடர்களிலேயே முதன்மையானவனாகக் கருதி அவனிடம் பெரும் மனநிறைவு கொண்டார். அந்த விலங்கு, அர்ஜுனனின் கணைகளால் இரு கூறுகளாகப் பிரிக்கப்பட்டதால்,(14-16) சிறப்புமிக்கத் துரோணர் ஆவியை விட்டிருந்த அம்முதலையிடமிருந்து விடுபட்டார்.

பிறகு பரத்வாஜரின் மகன் {துரோணர்} தேர்வீரனான அந்த அர்ஜுனனை அழைத்து,(17) “ஓ! பெரும் பலம்வாய்ந்தவனே, மிக மேன்மையானதும், தடுக்கப்பட முடியாததுமான இந்தப் பிரம்மாயுதத்தை {பிரம்மாஸ்திரத்தை} ஏவவும்,  திரும்பப் பெறவும் கூடிய முறைகளுடன் பெற்றுக் கொள்வாயாக.(18) இருப்பினும், நீ எப்போதும் இதை மனித எதிரியின் மீது பயன்படுத்தக் கூடாது. தாழ்ந்த சக்தி கொண்ட எந்த எதிரியின் மீது இஃது ஏவப்பட்டாலும், இந்த முழு அண்டத்தையே எரித்துவிடும். (19) ஓ! குழந்தாய், மூவுலகத்திலும் இதற்கு ஒப்பான ஆயுதம் இல்லை என்று சொல்லப்படுகிறது. எனவே நான் சொல்வதைக் கேட்டு, இதைக் கவனத்துடன் வைத்துக் கொள்வாயாக.(20) ஓ! வீரா, எப்போதாவது மனிதனல்லாத எதிரி உன்னுடன் போர் புரியும்போது, அவனது மரணத்திற்காக நீ இதைப் பயன்படுத்தலாம்" என்றார்.(21)

தனக்குச் சொல்லப்பட்டதை ஏற்று, உறுதிகூறிய அந்தப் பீபத்சு {அர்ஜுனன்}, குவிந்த கரங்களுடன் அந்தப் பெரும் ஆயுதத்தைப் பெற்றுக் கொண்டான். குரு அவனிடம் மறுபடியும்,(22) "இவ்வுலகத்தில் உன்னை விஞ்சிய வில்லாளி இருக்க மாட்டான். நீ எந்த எதிரியாலும் வெல்லப்பட முடியாதவனாக இருப்பாய். நீ பெரும் சாதனைகளைச் செய்வாய்" என்று சொன்னார் {துரோணர்}.(23)


ஆதிபர்வம் பகுதி 135ல் உள்ள சுலோகங்கள் : 23
ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்