Sunday, July 14, 2013

யுதிஷ்டிரன் சொன்ன உபாயம் - ஆதிபர்வம் பகுதி 148

The option chose by Yuthishthira | Adi Parva - Section 148 | Mahabharata In Tamil

(ஜதுக்கிரகப் பர்வம் - 6)

பதிவின் சுருக்கம் : வாரணாவதத்திற்குள் நுழைந்த பாண்டவர்கள்; பாண்டவர்களை அரக்கு மாளிகைக்கு இட்டுச் சென்ற புரோசனன்; மாளிகையின் தன்மையை அறிந்து கொண்ட யுதிஷ்டிரன்; சுரங்கம் தோண்ட வேண்டும் என்று பீமனிடம் சொன்ன யுதிஷ்டிரன்...

The option chose by Yuthishthira
Adi Parva - Section 148 | Mahabharata In Tamil
வைசம்பாயனர் சொன்னார், "பாண்டவர்கள் வருகையைக் கேள்விப்பட்ட (வாரணாவதத்தின்) குடிமக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டு, வேகமாக ஆயிரக்கணக்கான வாகனங்களில் வாரணாவதத்தைவிட்டு வெளியே வந்தனர். அந்த மனிதர்களில் சிறந்தவர்களுக்குக் {பாண்டவர்களுக்குக்} கொடுப்பதற்காக, சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ள பல வகைப் பரிசுப் பொருட்களுடன் அவர்கள் வந்தனர்.(1,2) வாரணாவதத்தின் மக்கள், குந்தி மைந்தர்களை அணுகி, "ஜெயம்" என்ற வார்த்தையைச் சொல்லி, அவர்களைச் சூழ்ந்து நின்றனர்.(3) இப்படி மக்களால் சூழப்பட்ட மனிதர்களில் புலியான யுதிஷ்டிரன், தேவர்களுக்கு மத்தியில் இருக்கும் வஜ்ரதாரியை {இந்திரன்} போலப் பிரகாசமாக இருந்தான்.(4) அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட அந்தப் பாவமற்றவர்கள், குடிமக்களால் நன்கு வரவேற்கப்பட்டு, மக்கள்தொகை நிறைந்ததும், அலங்காரமானதுமான அந்த வாரணாவதத்துக்குள் நுழைந்தனர்.(5)



ஓ! ஏகாதிபதியே, அந்த நகருக்குள் நுழைந்த அவ்வீரர்கள், முறையாகத் தங்கள் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிராமணர்களின் வசிப்பிடத்துக்குச் சென்றனர்.(6) பிறகு, நகர அதிகாரிகளின் வசிப்பிடங்களுக்கும், அதன்பின்பு சூதர்கள், மற்றும் வைசியர்கள் வசிப்பிடங்களுக்கும், ஏன் சூத்திரர்களின் வசிப்பிடங்களுக்கும் கூடச் சென்றனர்.(7) ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, குடிமக்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட பாண்டவர்கள், புரோசனனைத் தங்களுக்கு முன்னால் செல்லவிட்டு, அவனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(8)  பின்பு அவர்களுக்காகக் கட்டி வைக்கப்பட்ட அரண்மனைக்குச் சென்றனர்.  புரோசனன் அவர்களுக்கு முன்பு உணவையும், நீரையும், படுக்கைகளையும், தரைவிரிப்புகளையும், எல்லாவகைப் பொருட்களையும் வைத்தான்.(9) விலையுயர்ந்த ஆடைகளைப் பூண்டு கொண்ட பாண்டவர்கள், புரோசனனாலும், மக்களாலும் கொண்டாடப்பட்டு, வாரணாவதத்திலேயே தொடர்ந்து வாழ ஆரம்பித்தனர்.(10)

அப்படியே பாண்டவர்கள் அங்கே பத்து இரவுகள் தங்கினார்கள்.  அவ்வீடு சபிக்கப்பட்ட வீடாயிருப்பினும், புரோசனன் அவர்களிடம் "இஃது 'அருளப்பட்ட வீடு' என அழைக்கப்படுகிறது" என்று சொன்னான்.(11) அதன்பிறகு அந்த மனிதர்களில் புலிகள், விலையுயர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு அந்த மாளிகைக்குள் கைலாசத்திற்குள் புகும் குஹ்யகர்கள் (யக்ஷர்கள்} போல புரோசனனுடன் நுழைந்தனர்.(12) அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையான யுதிஷ்டிரன், அந்த வீட்டை ஆய்வு செய்து, பீமனிடம் அஃது எரியத்தக்கப் பொருட்களால்தான் கட்டப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவித்தான்.(13)

அரக்கைத் {அரக்கு} தயார் செய்யும்போது அதனுடன் கலக்கப்பட்ட நெய் மற்றும் கொழுப்பின் வாசத்தை நுகர்ந்து கண்ட யுதிஷ்டிரன் பீமனிடம், “ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, இவ்வீடு உண்மையிலேயே எரியத்தக்க பொருட்களாலேயே கட்டப்பட்டிருக்கிறது. நிச்சயமாக இது தெளிவாகத் தெரிகிறது.(14) நமது எதிரி, நம்பத்தகுந்த கட்டுமானக் கலைஞர்களைக் கொண்டு, சணல், குங்கிலியம், காய்ந்த புல், வைக்கோல், மூங்கில் ஆகியவற்றைத் தெளிந்த நெய்யில் ஊறவைத்து, அவற்றைக் கொண்டு இவ்வீட்டை அழகாகக் கட்டியிருக்கிறான். தீயவனும், பாவியும், துரியோதனனின் உத்தரவின்படி செயல்படுபவனுமான இந்தப் புரோசனன், என்னை நம்பிக்கைக்குரியவனாகக் காணும்போது எரித்தவிடலாம் என்ற நோக்கோடு இங்கே தங்கியிருக்கிறான்.(15,16) ஆனால், ஓ! பிருதையின் மகனே {பீமனே}, பெரும் புத்திக்கூர்மை கொண்ட விதுரர், இந்த ஆபத்தை உணர்ந்தே என்னை முன்கூட்டியே எச்சரித்திருக்கிறார்.(17) நம் மீது கொண்ட பாசத்தால், எப்போதும் நமது நன்மையையே விரும்பும் நமது சிறிய தகப்பனார், அனைத்தையும் அறிந்து கொண்டு, துரியோதனனின் கட்டளையால் இந்தப்பாவிகளால் கமுக்கமாகக் கட்டப்பட்ட இந்த ஆபத்தான வீட்டைப் பற்றி நமக்குச் சொல்லியிருக்கிறார்" என்றான்.(18)
இதைக் கேட்ட பீமன், "ஐயா, இஃது எரியத்தக்க பொருட்களால் கட்டப்பட்ட வீடு என்பதை நீர் அறிந்தால், உடனே நாம் இந்த இடத்தைவிட்டு அகன்று நாம் முதலில் தங்கியிருந்த இடத்திற்கே[1]திரும்புவது நமக்கு நன்மையைத் தரும்" என்றான்.(19)

[1] பாண்டவர்கள் வாரணாவதத்திற்கு வந்ததும், வேறெங்கோ ஒரு வீட்டில் தங்கியிருந்திருக்க வேண்டும். பிறகு, புரோசனனால் அழைக்கப்பட்டு அரக்கு மாளிகைக்கு வந்திருக்க வேண்டும்.

யுதிஷ்டிரன், "நாம் இங்கேயே வாழ வேண்டும் என்றே எனக்குத் தோன்றுகிறது. ஐயத்திற்கிடமில்லாமல் எச்சரிக்கையுடனும், உணர்வுகள் விழிப்பான நிலையிலும் நாம் வாழும்போதே, ஏதாவது செய்து இங்கிருந்து தப்புவதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.(20) புரோசனன் நமது முகச் சுருக்கங்களைக் கண்டு கொண்டால் {நாம் ஐயுறுகிறோம் என்பதை அறிய வந்தால்}, அவன் விரைவாகச் செயல்பட்டுத் திடீரென நம்மை எரித்துக் கொன்றுவிடக் கூடும்.(21) உண்மையில் புரோசனன் அவதூறையும், பழிபாவத்தையும் சிறிதும் மதிக்காதவனாவான். துரியோதனனின் உத்தரவுக்கிணங்கியே அந்தப் பாவி இங்குத் தங்கியிருக்கிறான்.(22) நாம் எரிக்கப்பட்டால் பீஷ்மர் கோபம் கொள்வாரா? அப்படிக் கோபப்பட்டுக் கௌரவர்களின் கோபத்திற்கு அவர் ஏன் ஆளாகப் போகிறார்?(23) அல்லது நமது பாட்டனான பீஷ்மரும், மற்ற குரு குலத்தின் காளைகளும், தீய காரியங்களுக்கு எதிராகச் சீறும் அறச்சீற்றம் கொண்டு கோபமடையவும் வாய்ப்பிருக்கிறது.(24) எவ்வாறிருப்பினும், எரிக்கப்படுவதற்கு அஞ்சி, நாம் இங்கிருந்து தப்பித்தோமென்றால், ஆட்சியை விரும்பும் துரியோதனன், நாம் இருக்கும் இடத்தைத் தேடித் தனது ஒற்றர்களைக் கொண்டு நமக்கு மரணத்தை ஏற்படுத்துவான்.(25)

நமக்கு அதிகாரமும் இல்லை; பலமும் இல்லை. ஆனால், துரியோதனன் இரண்டையும் கொண்டிருக்கிறான். நமக்கு நண்பர்களோ, கூட்டாளிகளோ இல்லை. ஆனால் துரியோதனன் இரண்டையும் கொண்டிருக்கிறான். நாம் செல்வமற்றிருக்கிறோம். துரியோதனனுக்கோ கருவூலம் முழுமையும் அவனது கட்டுக்குள் இருக்கிறது.(26) எந்த வழிமுறையைக் கையாண்டாவது நம்மை அவனால் கொல்ல முடியும் என்பது நமக்குத் தெளிவாகவில்லையா? எனவே, நாம் இந்தப் பாவியை (புரோசனனை) ஏமாற்றி, நாட்களைக் கடத்திச் சிறிது காலத்திற்கு நம்மை மறைத்துக் கொள்வோம் {தலைமறைவாக இருப்போம்}.(27) வேட்டையாடும் வாழ்வை நோற்று இப்பூமியில் திரிந்து வருவோம். அப்போது, தப்புவதற்குள்ள வழிகள் அனைத்தையும் நாம் அறிந்திருப்போம்.(28) மேலும், இன்றே, மிகக் கமுக்கமாக {இரகசியமாக} நமது அறைக்குள் ஒரு சுரங்கப் பாதையை உண்டாக்குவோம். இவ்வழியில் செயல்பட்டு, நாம் செய்வதனைத்தையும் மறைத்தே செய்து வந்தால், நெருப்பால் நம்மை உட்கொள்ள முடியாது.(29) நாம் இங்கேயே தங்கி, புரோசனனோ, வாரணாவத குடிமக்களோ அறியாத வண்ணம், நமது பாதுகாப்புக்கான அனைத்தையும் செய்ய வேண்டும், நாம் தப்புவதையும் அவர்களில் ஒருவரும் அறியக்கூடாது" என்றான்".(30)



ஆதிபர்வம் பகுதி 148ல் உள்ள சுலோகங்கள் : 30
ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்