Wednesday, July 10, 2013

விதுரரின் பிதற்றல் மொழி - ஆதிபர்வம் பகுதி 147

Vidura spoke in mlechha tongue | Adi Parva - Section 147 | Mahabharata In Tamil

(ஜதுக்கிரகப் பர்வம் - 5)

பதிவின் சுருக்கம் : தொடர்ந்து வந்த நகர மக்களைத் திருப்பி அனுப்பிய யுதிஷ்டிரன்; மிலேச்ச மொழியில் யுதிஷ்டிரனிடம் பேசிய விதுரன்...

Vidura spoke in mlechha tongueAdi Parva - Section 147 | Mahabharata In Tamil
வைசம்பாயனர் சொன்னார், "அதேவேளையில் பாண்டவர்கள் காற்றின் வேகத்தில் செல்லக்கூடிய நல்ல குதிரைகள் பூட்டப்பட்டத் தேரில் ஏறினர். தேர்களில் ஏறுவதற்கு முன்னர், பெரும் துயரத்துடன் பீஷ்மர், மன்னன் திருதராஷ்டிரன், சிறப்புமிகுந்த துரோணர், கிருபர், விதுரன் மற்றும் குரு குல மூத்தவர்களின் பாதங்களை அவர்கள் தொட்டனர்.(1,2) மூத்தவர்களை மரியாதையுடன் வணங்கிச் சிறுவர்களையும் தங்களுக்குச் சமமாக வாரியணைத்து, அரசகுல மகளிர் எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு, அவர்களை மரியாதையுடன் வலம் வந்து, நாட்டின் குடிமக்களிடமும் விடைபெற்றுக் கொண்டு, தங்கள் நோன்புகளின் மீது முழு மனம் வைத்து வாரணாவதத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர்.(3,4) பெரும் ஞானமுள்ள விதுரனும், குரு குலத்தின் காளைகளான மற்றவர்களும் மற்றும் குடிமக்கள் அனைவரும் பெரும் துயர் கொண்டு, குரு குலத்தின் புலிகளான அவர்களைச் சிறிது தூரத்திற்குப் பின் தொடர்ந்து சென்றனர்.(5)



பாண்டவர்களைத் தொடர்ந்த குடிமக்களில் சிலர் துன்பத்துடன் செல்லும் பாண்டுவின் மகன்களைக் கண்டு மிகவும் வருத்தத்துடன் சத்தமாக,(6) "தீய ஆன்மா கொண்ட மன்னன் திருதராஷ்டிரன் ஒரே கண்ணுடன் எந்தப் பொருளையும் பார்ப்பதில்லை. அந்தக் குரு குல ஏகாதிபதி அறத்தின் பக்கம் தனது பார்வையைச் செலுத்த மறுக்கிறான்.(7) பாவங்களற்ற யுதிஷ்டிரனோ, பலம்வாய்ந்த மனிதர்களின் முதன்மையான பீமனோ, அல்லது குந்தியின் (இளைய) மகனான தனஞ்சயனோ {அர்ஜுனனோ} இனி எப்போதும் குற்ற உணர்ச்சி (புரட்சிப் போர் தொடுக்கும் பாவத்தினால் உண்டாகும் குற்ற உணர்ச்சி) கொள்ளத் தேவையில்லை.(8) இவர்களே அமைதியுடன் இருக்கும்போது, மாத்ரியின் சிறப்புமிகுந்த மகன்களால் என்ன செய்ய முடியும்?

இவர்கள் தங்கள் தந்தையின் மூலம் நாட்டையடைந்ததைத் திருதராஷ்டிரனால் பொறுக்க முடியவில்லை.(9) பாண்டவர்கள் அந்தப் பாவகரப் பூமிக்கு நாடு கடத்தப்படுவதில் துயருற வேண்டிய பீஷ்மர், இந்தப் பெரும் அநீதியை எப்படி அனுமதித்தார்?(10) குரு குலத்தைச் சார்ந்த சந்தனுவின் மைந்தனான விசித்திரவீரியனும், அரசு முனியான பாண்டுவும் ஒரு தந்தையைப் போல நம்மைக் கவனித்துக் கொண்டனர்.(11) ஆனால் இப்போதோ, அந்த மனிதர்களில் புலியான பாண்டு தேவலோகம் உயர்ந்துவிட்டான். பாண்டுவின் மைந்தர்களான இந்த இளையவர்களைத் திருதராஷ்டிரனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(12) இந்த நாடு கடத்தலை {இவ்வாறு இவர்கள் நாடுகடத்தப்படுவதை} ஏற்காத நாமும், இந்த அற்புதமான நகரத்தையும், நமது இல்லங்களையும் துறந்து, யுதிஷ்டிரன் செல்லுமிடத்திற்கே செல்வோமாக" என்றனர்.(13)

யுதிஷ்டிரனோ, தானே துக்கத்துடன் வந்து கொண்டிருந்தாலும், வழியில் துயருற்ற குடிமக்களின் சொற்களைக் கேட்டுச் சிறிது நேரம் சிந்தித்து, அவர்களிடம்,(14) "மன்னன் {திருதராஷ்டிரர்} நமக்குத் தந்தையைப் போன்றவர்; மதிப்புக்குரியவர்; அவர் நமது ஆன்ம குருவும் நமக்கு முதன்மையானவரும் ஆவார். எப்போதுமே அவர் சொல்வதைச் ஐயம் இல்லாத இதயத்துடன் ஏற்று, செயல்படுத்துவதே நமது கடமையாகும்.(15) நீங்கள் எங்களது நண்பர்கள். எங்களை வலம் வந்து, உங்கள் அருளாசிகளால் எங்களை மகிழ்வித்து, உங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்புவீராக.(16) உங்களால் எங்களுக்குக் காரியமாக வேண்டிய காலம் வரும்போது, எங்களுக்கு நன்மை செய்யக்கூடியவையும், ஏற்புடையவையுமான செயல்களை நிச்சயமாக நீங்கள் சாதிப்பீர்கள்" என்றான்.(17)

இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்டதும், அக்குடிமக்கள் பாண்டவர்களை வலம் வந்து, தங்கள் ஆசிகளைக் கூறி, தத்தமது வசிப்பிடங்களுக்குத் திரும்பினர்.(18) பாண்டவர்களைக் குடிமக்கள் பின்தொடர்வது நின்றதும், நீதிகளனைத்தும் அறிந்த விதுரன், பாண்டவர்களில் மூத்தவனை {யுதிஷ்டிரனை} விழிப்படையச் செய்ய இவ்வாறு பேசினான்.(19) பிதற்றல் மொழியை (மிலேச்சர்களின் மொழி) நன்கறிந்தவனும், கல்விமானுமான விதுரன், மற்றவர் அறியாவண்ணம், அதே மொழியை நன்கறிந்த யுதிஷ்டிரனுக்கு மட்டுமே புரியும்போடி, "அரசியலின் அறிவியலுக்கு ஏற்ப எதிரியின் திட்டங்களைக் கண்டறிந்த ஒருவன், அவற்றைப் புரிந்து கொண்டதும், ஆபத்துகள் அனைத்தையும் விலக்கும் முறையில் நடந்து கொள்ள வேண்டும்.(20) உடலை வெட்டுவதற்கு, இரும்பால் செய்யப்படாத கூரிய ஆயுதங்களும் இருக்கின்றன என்பதை அறிந்த ஒருவன், அதைத் தடுக்கும் முறைகளையும் அறிந்திருந்தால், அவனுக்குப் பகைவரால் காயமேற்படுத்த முடியாது.(21)

வைக்கோலையும், மரத்தையும் உண்பவனோ {நெருப்போ}, பனியை உலர்த்துபவனோ {சூரியனோ}, ஆழ்ந்த கானகத்தின் துளையில் வசிப்பவர்களை {எலி, முயல் போன்றவைகளை} எரிக்க முடியாது என்பதை அறிந்த அறிவுள்ளவன் பாதுகாப்பாக வாழ்ந்திருப்பான்.(22) குருடன் வழியைப் பார்ப்பதில்லை. குருடனுக்குத் திசைகளின் அறிவும் கிடையாது. உறுதியற்ற ஒருவன் வளத்தை {செழிப்பை} அடைவதில்லை. இதை நினைவில் வைத்துக் கொண்டு, எப்போதும் விழிப்புடனிருப்பாயாக.(23) எதிரிகளால் கொடுக்கப்படும் இரும்பாலாகாத ஆயுதத்தை (எரியக்கூடிய வீடு) எடுக்கும் மனிதன், தனது வசிப்பிடத்தை நரியின் வசிப்பிடம் போல ஆக்கினால் ({பொந்துகளுடன்} வெளியே செல்லும் வழி பல வைத்தால்) நெருப்பிலிருந்து தப்பிக்கலாம்.(24) ஒரு மனிதன் பயணிப்பதனால் வழிகள் பற்றிய ஞானத்தை அடையலாம். நட்சத்திரங்களின் துணை கொண்டு திசையை அறியலாம். தன்னிடம் உள்ள ஐந்தைக் (ஐம்புலன்களைக்) கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒருவனை, அவனது எதிரிகளால் ஒடுக்க முடியாது" என்றான் {விதுரன்}.(25)

இப்படிச் சொல்லப்பட்ட பாண்டுவின் மகன் யுதிஷ்டிரன், கல்விமான்களில் முதன்மையான விதுரனிடம், "உம்மை நான் புரிந்து கொண்டேன்" என்றான். அப்போது விதுரன், பாண்டவர்களுக்குச் சில அறிவுரைகளைச் சொல்லிச் சிறிது தொலைவுக்கு அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற பிறகு, அவர்களை வலம் வந்து, அவர்களிடம் விடைபெற்று தனது வசிப்பிடத்திற்குத் திரும்பினான்.(26,27)

குடிமக்களும், பீஷ்மரும், விதுரனும் சென்ற பிறகு, குந்தி யுதிஷ்டிரனிடம் வந்து,(28) "மக்கள் முன்னிலையில் க்ஷத்ரி {விதுரன்} சொன்னது எதுவுமே விளங்கவில்லையே.  அவர் எதுவுமே சொல்லாதது போலவே இருந்தது. ஆனால் நீயும் அதே போன்ற வார்த்தைகளால், அதே குரலில், பதிலுரைத்தாய். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.(29) நாங்கள் அறிந்து கொள்வதில் தவறில்லை என்றால், நீயும், அவரும் பேசிக் கொண்ட அனைத்தையும் நான் கேட்க விரும்புகிறேன்" என்று கேட்டாள்.(30)

யுதிஷ்டிரன், "அறம் சார்ந்த விதுரர், நமக்காகக் கட்டப்பட்டிருக்கும் மாளிகை எளிதில் எரியத்தக்க பொருட்களால் ஆனது என்று என்னிடம் சொன்னார். மேலும், தப்பிக்கும் வழியை நீ அறியாமல் இருக்கக்கூடாது என்றும்,(31) தனது புலன்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஒருவன் முழு உலகத்தின் அரசாட்சியையும் அடைவான் என்றும் சொன்னார். அதற்கு நான், விதுரரிடம் "நான் உம்மைப் புரிந்து கொண்டேன்" என்று சொன்னேன்" என்றான் {யுதிஷ்டிரன்}".(32)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "பாண்டவர்கள் பங்குனி மாதத்தின் எட்டாவது நாளில், ரோஹிணி நட்சத்திரத்தில் வாரணாவதம் வந்து சேர்ந்து, அந்த நகரத்தையும், நகர மக்களையும் கண்டனர்".(33)


 ஆதிபர்வம் பகுதி 147ல் உள்ள சுலோகங்கள் :33
ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்