Wednesday, July 31, 2013

அந்தணர் சொன்ன துரோணர் துருபதன் கதை! - ஆதிபர்வம் பகுதி 168

Drona and Drupada story said by the Brahmana! | Adi Parva - Section 168 | Mahabharata In Tamil

(சைத்ரரதப் பர்வம் - 02)

பதிவின் சுருக்கம் : துரோணர் மற்றும் துருபதன் வரலாற்றை சுருக்கமாகச் சொன்ன பிராமணர்; பரசுராமரிடம் இருந்து ஆயுதங்களை அடைந்த துரோணர்; துருபதனை வீழ்த்தி அவனது நாட்டை இரண்டாகப் பிரித்த துரோணர்...

பிராமணர், "கங்கை நதியானது, சமவெளியை அடையும் பகுதியின் அருகில், கடுந்தவங்களுக்குத் தன்னை அர்ப்பணித்த ஒரு பெரும் முனிவர் இருந்தார். கடும் நோன்புகள் நோற்றுப் பெரும் ஞானம் கொண்ட அவர் பரத்வாஜர் என்ற பெயர் பெற்றிருந்தார்.(1) ஒரு நாள் தனது சுத்திகரிப்பு காரியங்களுக்காகக் கங்கைக்கு வந்த அவர், அப்சரஸ் கிரிடச்சி தனது சுத்திகரிப்பை முடித்துக் கொண்டு கரையில் நின்று கொண்டிருந்ததைக் கண்டார்.(2) அப்போது, மெல்லிய காற்று எழுந்தது. அங்கே நின்று கொண்டிருந்த அப்சரசின் ஆடையை விலக்கியது. ஆடை விலகிய அவளைக் கண்ட முனிவர் காமங்கொண்டார்.(3) இளமையிலிருந்தே தன்னை அடக்கிக் கடுமையான நோன்புகள் நோற்றிருந்தும், அவர் காமனின் ஆளுமையை உணர்ந்தார். அதன்காரணமாக அவரது உயிர்நீர் வெளியே வந்தது. அப்படி அது வெளியே வந்தபோது, அவர் அஃதை ஒரு குடத்தில் (துரோணம்) பிடித்தார்.(4) அப்படிப் பானையில் பாதுகாக்கப்பட்ட அந்த நீரால் அவருக்குத் துரோணர் என்று அழைக்கப்பட்ட ஒரு மகன் பிறந்தார். துரோணர் அனைத்து வேதங்களையும், அதன் பல கிளைகளையும் கற்றுத் தேர்ந்தார்.(5)

பரத்வாஜருக்குப் பிருஷதன் என்ற பாஞ்சால மன்னன் நண்பனாக இருந்தான். துரோணர் பிறந்த நேரத்தில், பிருஷதன் துருபதன் என்ற பெயர் கொண்ட மகனைப் பெற்றான்.(6) பிருஷதனின் மகனான அந்த க்ஷத்திரியக்காளை {துருபதன்}, தினமும் பரத்வாஜரின் ஆசிரமத்திற்குச் சென்று, துரோணருடன் விளையாடவும், கல்வி கற்கவும் செய்தான்.(7) பிருஷதன் இறந்த பிறகு, துருபதன் அரியணை ஏறினான். அவ்வேளையில் (பெரும் பிராமண வீரரான) ராமன் {பரசுராமன்} (தனது ஓய்வை அறிவித்துக் கானகம் புறப்படும் மாலை வேளையில்) தனது செல்வங்களையெல்லாம் கொடுத்துவிடத் தீர்மானித்திருக்கிறார் என்பதைத் துரோணர் கேள்விப்பட்டார்.(8) இதைக் கேட்ட பரத்வாஜரின் மகன் {துரோணர்}, கானகத்திற்குள் ஓய்வுக்காகப் புகப் போகும் ராமனிடம் {பரசுராமனிடம்} சென்று, "ஓ பிராமணர்களில் சிறந்தவரே, என்னைத் துரோணன் என்று அறிந்து கொள்ளும். நான் உம்மிடம் செல்வத்தை அடைய வந்திருக்கிறேன்" என்றார்.(9) அதற்கு ராமன், "நான் அனைத்தையும் கொடுத்துவிட்டேன். இப்போது என்னிடம் இருப்பதெல்லாம், எனது இந்த உடலும், எனது ஆயுதங்களும் மட்டும்தான். ஓ அந்தணா, எனது உடலோ, எனது ஆயுதங்களோ, இந்த இரண்டில் ஒன்றை நீ என்னிடம் கேட்கலாம்" என்றார்.(10)

அதற்குத் துரோணர், "ஐயா, உமது ஆயுதங்களை (அதன் மர்மங்களுடன்), அதைத் தொடுக்கவும், திரும்பப் பெறவும் உரிய வழிகளுடன் எனக்குத் தருவீராக" என்று கேட்டார்.(11)

பிராமணர் தொடர்ந்தார், "பிருகு குலத்தில் வந்த ராமன், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லித் தனது ஆயுதங்களையெல்லாம் துரோணருக்குக் கொடுத்தார். இதனால், துரோணர் வெற்றிமகுடம் சூடியவராகத் தன்னை நினைத்துக் கொண்டார்.(12) பெரும் சக்தி வாய்ந்த ஆயுதங்களையெல்லாம் ராமனிடம் இருந்து பெற்ற துரோணர், பிரம்மாயுதத்தை அழைத்து மிகவும் மகிழ்ந்து, அதைப் பெற்றதால், அனைத்து மனிதர்களிலும் மேன்மையை அடைந்தார்.(13) அந்தப் பெரும் சக்திவாய்ந்த பரத்வாஜரின் மகன், மன்னன் துருபதனிடம் சென்றார். மனிதர்களில் புலியான அந்த ஏகாதிபதியை அணுகிய அவர், "என்னை உனது நண்பனாக அறிந்து கொள்" என்றார்.(14)

இதைக் கேட்ட துருபதன், "தாழ்ந்த பிறப்பு பிறந்தவன், சுத்தமான உயர்ந்த பிறப்பில் வந்தவனிடம் நண்பனாக இருக்க முடியாது, ரதவீரனல்லாதவன், ரதவீரனின் நண்பனாக முடியாது. அப்படியே மன்னனல்லாதவன், ஒரு மன்னனுக்கு நண்பனாக முடியாது. எனவே, (நமது) முந்தைய நட்பை ஏன் (மீட்க) விரும்புகிறீர்?" என்று சொன்னான்.(15)

பிராமணர் தொடர்ந்தார், "பெரும் புத்திசாலித்தனத்தைக் கொடையாகக் கொண்ட துரோணர், இதனால் பெரும் துன்பத்துக்குள்ளாகி, பாஞ்சால மன்னனை அவமதிக்கச் சரியான சந்தர்ப்பத்தை மனத்தில் நிச்சயித்துக் கொண்டு, யானையின் பெயரால் அழைக்கப்படும் குருக்களின் (கௌரவர்களின்) தலைநகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்குச்} சென்றார்.(16) அங்கே பீஷ்மர் தனது பேரப்பிள்ளைகளை, பரத்வாஜரின் மகனிடம் {துரோணரிடம்} கல்வி கற்க சீடர்களாக அனுப்பிவைத்தார்.(17) துரோணருக்கு அனைத்து விதமான செல்வங்களையும் பரிசளித்தார். மன்னன் துருபதனை அவமதிக்க விரும்பிய துரோணர், தனது சீடர்கள் அனைவரையும் கூட்டி, "பாவங்களற்றவர்களே, நீங்கள் ஆயுதக்கல்வி கற்ற பிறகு, நான் மனத்தில் நினைத்திருப்பதை எனக்குக் குருதட்சணையாகத் தர வேண்டும்" என்று கேட்டார். அர்ஜுனனும் மற்றவர்களும் தங்கள் குருவிடம், "அப்படியே ஆகட்டும்" என்றனர்.(18,19)

அப்போது, நினைத்த குறியை அடித்து, ஆயுதங்களில் திறமையடைந்த பாண்டவர்களிடம், தனது குருதட்சணையைக் கேட்கும் வகையில்,(20) "பிருஷதனின் மகன் துருபதன், சத்திரவதிக்கு {அஹிசத்திரம்} மன்னனாவான். அவனிடம் இருந்து அவனது நாட்டைப் பறித்து, என்னிடம் கொடுங்கள்" என்று கேட்டார்.(21)

பாண்டவர்கள் போரில் துருபதனை வீழ்த்தி, அவனை அவனது அமைச்சர்களுடன் கைதியாக்கித் துரோணரிடம் கொடுத்தனர்.(22) வீழ்ந்த அந்த ஏகாதிபதியிடம் {துருபதனிடம்}, துரோணர், "ஓ மன்னா, நான் உனது நட்பைக் கோருகிறேன்; மன்னனல்லாதவன் மன்னனின் நட்பை நாடத் தகுதியில்லாதவனாகையால்,(23) ஓ யக்ஞசேனா {துருபதா}, நான் உனது நாட்டை நமக்குள் இரண்டாகப் பிரித்துக் கொள்ளத் தீர்மானிக்கிறேன். நீ பாகீரதிக்கு (கங்கைக்கு) தெற்கே உள்ள நாட்டை ஆண்டுக் கொள்வாயாக. அதே வேளை வடக்கை நான் ஆண்டுக் கொள்கிறேன்" என்றார்".(24)

பிராமணர் தொடர்ந்தார், "ஞானமுள்ள பரத்வாஜரின் மகனால் இப்படிச் சொல்லப்பட்ட பாஞ்சால மன்னன், பிராமணர்களில் சிறந்தவரான அந்த மனிதர்களில் முதன்மையானவரிடம் {துரோணரிடம்},(25) "ஓ பரத்வாஜரின் உயர் ஆன்ம மகனே, நீ அருளப்பட்டிருப்பாயாக. நான் நமக்குள் நிலைத்த தெய்வீகமான நட்பை விரும்புகிறேன்" என்றான்.(26)

இப்படி ஒருவருக்கொருவர் ஒரு நிரந்தர ஒப்பந்தத்தை தங்களுக்குள் நிறுவிக் கொண்டனர். பிறகு துரோணரும் பாஞ்சால மன்னனும், அவரவர் எங்கிருந்து வந்தனரோ அங்கேயே சென்றனர்.(27) ஆனால் இந்த அவமதிப்பு மன்னனின் மனத்திலிருந்து ஒரு நொடிப்பொழுதும் அகலவில்லை. இதயத்தில் துன்பம் கொண்ட அந்த மன்னன் தனது நாட்களை அப்படியே போக்கினான்" {என்றார் ஏகச்சக்கர நகரத்தில் பாண்டவர்கள் வசித்திருந்த பிராமணனின் வீட்டிற்கு விருந்தினராக வந்த அந்தப் பிராமணர்}.(28)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்