Thursday, November 21, 2013

கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா! - வனபர்வம் பகுதி 12ஆ

I give all my griefs to you Krishna!  | Vana Parva - Section 12b | Mahabharata In Tamil

(அர்ஜனாபிகமன பர்வத் தொடர்ச்சி)

திரௌபதி கிருஷ்ணனிடம் தனது துயரை உரைத்தல்

வைசம்பாயனர் தொடர்ந்தார், "கிருஷ்ணனுக்கு உயிரான அந்தச் சிறப்புமிக்க பாண்டவன் {அர்ஜுனன்}, கிருஷ்ணனிடம் இவற்றைச் சொல்லி முடித்தான். ஜனார்த்தனன், (பிருதையின் {குந்தியின்} மகனுக்கு மறுமொழியாக), "நீ என்னுடையவன், நான் உன்னுடையவன். என்னுடையவை எல்லாம் உன்னுடையவையாகும்! உன்னை வெறுப்பவன் என்னையும் வெறுக்கிறான்! உன்னைத் தொடர்பவன் என்னையும் தொடர்கிறான்! பிறரால் வெல்லமுடியாதவனே, நீயே நரன், நான் நாராயணன். அல்லது ஹரி! நாம் மனிதர்களின் உலகத்தில் ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காக முனிவர்களான நரன் மற்றும் நாராயணனாக இருந்தோம். பார்த்தா {அர்ஜுனா}, எனக்காக நீயும், உனக்காக நானும் இருக்கிறோம்! பாரத குலத்தின் காளையே {அர்ஜுனா}, நம்மில் இருக்கும் வித்தியாசங்களை யாராலும் புரிந்து கொள்ள முடியாது!" என்று கிருஷ்ணன் சொன்ன போது அர்ஜுனன் ஊமையானான்.


வைசம்பாயனர் தொடர்ந்தார், "கோபமாக இருந்த வீரம் நிறைந்த மன்னர்களுக்கு மத்தியில் சிறப்புமிக்க கேசவன் {கிருஷ்ணன்} இப்படிச் சொன்ன போது, திருஷ்டத்யும்னன் மற்றும் தனது வீர சகோதரர்களால் சூழப்பட்ட தாமரை இலைகள் போன்ற கண்களைக் கொண்ட பாஞ்சாலி {திரௌபதி}, பாதுகாப்புத்தர விரும்பி கோபத்துடன் பேசிக்கொண்டு, மைத்துனர்களுடன் அமர்ந்திருந்த அனைவருக்கும் புகலிடமானவனை {ரட்சகனை} {கிருஷ்ணனை} அணுகினாள்.

"அனைத்துப் பொருட்களையும் படைப்பதில் நீ ஒருவனே பிரஜாபதி என்றும் அனைத்து உலகங்களையும் படைத்தவன் நீ என்றும் அசிதரும், தேவலரும் சொல்லியிருக்கின்றனர். கட்டுப்படுத்தப்பட முடியாதவனே {கிருஷ்ணா}, மதுசூதனா {ஓ மதுவைக் கொன்றவனே}, நீயே வேள்வி என்றும், நீயே வேள்வியைச் செய்பவன் என்றும், நீயே நடத்தப்படும் வேள்வியை ஏற்றுக் கொள்பவன் என்றும், நீயே விஷ்ணு என்றும் ஜமதக்னேயர் சொல்கிறார். ஆண்மக்களில் சிறந்தவனே {கிருஷ்ணா}, நீயே மன்னிப்பு என்றும், நீயே உண்மை என்றும் முனிவர்கள் சொல்கிறார்கள்! நீயே உண்மையில் இருந்து பிறந்த வேள்வி என்று காசியபர் சொல்கிறார்! மேன்மையானவனே {கிருஷ்ணா}, சத்தியர்களுக்கும், சிவன்களுக்கும் நீயே தேவன் என்றும், நீயே அனைத்துப் பொருட்களின் படைப்பாளனும் தலைவனும் ஆவாய் என்றும் நாரதர் சொல்கிறார். மனிதர்களில் புலி போன்றவனே {கிருஷ்ணா}, பொம்மைகளை வைத்து விளையாடும் சிறு பிள்ளையைப் போல, பிரம்மன், சங்கரன், சக்ரன் உள்ளிட்ட தேவர்களை வைத்து நீயே விளையாடுகிறாய்! மேன்மையானவனே {கிருஷ்ணா} வானம் உனது தலையாலும், பூமி உனது பாதத்தாலும் மூடியிருக்கிறது. இந்த உலகங்கள் உனது கருவறைகளாக இருக்கின்றன. நீயே நித்தியமானவன்! வேத அறிவு, ஆன்மசக்தி மற்றும் தவத்தால் பரிசுத்தமானவர்களும், ஞானத்தால் ஆன்ம பார்வையைக் கொண்டவர்களுமான முனிவர்கள், பொருட்களில் சிறந்த பொருள் நீயே என்று சொல்கின்றனர்.

ஆண்மக்களின் தலைவனே அறச்செயல்களுக்குத் தங்களை அர்ப்பணித்து, போர்க்களத்தில் புறமுதுகிடாமல், சாதனைகள் அனைத்தும் சாதித்த எல்லா அரசமுனிகளுக்கும் நீயே புகலிடமாய் இருக்கிறாய். அனைத்திற்கும் நீயே தலைவனாக இருக்கிறாய். எங்கும் நிறைந்திருப்பவனாக நீயே இருக்கிறாய். அனைத்துப் பொருட்களின் ஆன்மாவாக நீயே இருக்கிறாய். அனைத்திலும் வியாபித்து செயல்படும் சக்தியாக நீயே இருக்கிறாய். ஏழு உலகங்களும், அதை ஆள்பவர்களும், நட்சத்திர சேர்கைகளும், அடிவானத்தின் பத்து புள்ளிகளும், வான், நிலவு, சூரியன் ஆகியவை அனைத்தும் உன்னிலேயே நிறுவப்பட்டிருக்கின்றன! பலம் நிறைந்த கரம் கொண்டவனே {கிருஷ்ணா}, (உலகம் சார்ந்த) உயிரினங்களின் அறநெறிகளும், அண்டத்தின் நிலையாமையும், உன்னில் நிறுவப்பட்டிருக்கின்றன! அனைத்து உயிரினங்கள், தேவர்கள், மனிதர்கள் ஆகிய அனைத்திற்கும் உயர்ந்த தலைவனாக {கடவுளாக} நீயே இருக்கிறாய்! எனவே, {மதுசூதனா} மதுவைக் கொன்றவனே {கிருஷ்ணா}, பாசத்தால் உந்தப்பட்டு என்னைப் பொறுத்துக் கொள். நான் இப்போது எனது கவலைகளை உன்னிடம் சொல்லப் போகிறேன்!

கிருஷ்ணா, பிருதையுடைய {குந்தியுடைய} மகன்களின் மனைவியும், திருஷ்டத்யும்னனின் தங்கையும், உனது தோழியுமான {நண்பருமான} என்னைப் போன்ற ஒருத்தி, சபையில் எப்படி இழுத்துச் செல்லப்படலாம்! ஐயோ, எனது மாதவிடாய்க் காலத்தில், ரத்தக்கறையுடன், ஒற்றையாடையுடன் நடுங்கிக் கொண்டும் அழுது கொண்டும் இருந்த நான் குருக்களின் சபைக்கு இழுத்துச் செல்லப்பட்டேன்! அந்தச் சபையில் இருந்த மன்னர்களுக்கு மத்தியில் ரத்தக்கறையுடன் இருந்த என்னைக் கண்ட திருதராஷ்டிரனின் தீய மகன்கள் எள்ளி நகையாடினர்! மதுவைக் கொன்றவனே {கிருஷ்ணா}, பாண்டுவின் மகன்களும், பாஞ்சாலர்களும், விருஷ்ணிகளும் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே {உயிருடன் இருக்கும்போதே} என்னை அடிமையாகக் கொள்ளும் தங்கள் விருப்பத்தைச் சொல்ல தைரியம் கொண்டனர்!

கிருஷ்ணா, விதிப்படி நான் திருதராஷ்டிரருக்கும் பீஷ்மருக்கும் மருமகளாவேன்! இருப்பினும், ஓ மதுவைக் கொன்றவனே, பலவந்தமாக என்னை அடிமையாகக் கொள்ள விரும்பினர்! தாங்கள் மணந்து கொண்ட மனைவியான நான் கொடுமையான முறையில் நடத்தப்பட்டபோது (அசைவில்லாமல்) பார்த்துக் கொண்டிருந்த போர்க்களத்தில் பலம்வாய்ந்தவர்களும் முதன்மையானவர்களுமான பாண்டவர்களை நான் குற்றம்சாட்டுகிறேன்! பீமேசேனரின் பலத்திற்கு ஐயோ, அர்ஜுனரின் காண்டீவத்திற்கு ஐயோ. ஜனார்த்தனா, அற்ப மனிதர்களால் நான் அவமதிக்கப்பட்டு துன்பறுவதை அவர்கள் இருவரும் கண்டனர். பலவீனமான கணவன் கூட, தான் மணந்த மனைவியைக் காப்பான். அந்த நித்தியமான அறநெறியை அறம்சார்ந்தவர்கள் தவறாமல் பின்பற்றுவர். மனைவியைக் காப்பதால் ஒருவன் தனது சந்ததியைக் காக்கிறான். சந்ததியைக் காப்பதால் அவன் தன்னையே காத்துக் கொள்கிறான். ஒருவன் தன் மனைவியிடத்தில் தானே பிறக்கிறான். ஆகையால், மனைவியானவள் ஜெயா என்று அழைக்கப்படுகிறாள்.

ஒரு மனைவியும் தனது கருவறையில் புகுந்து அவனே அவளுக்குப் பிறப்பதால் தனது தலைவனைக் {கணவனைக்} காக்க வேண்டும்! பாதுகாப்பு கோரும் யாரையும் பாண்டவர்கள் கைவிடுவதில்லை. இருப்பினும், அப்படிக் கோரிய என்னைக் கைவிட்டார்கள்! எனது ஐந்து கணவர்களால் அபரிமிதமான சக்தி கொண்ட ஐந்து மகன்களைப் பெற்றேன்யுதிஷ்டிரரால் பிரதிவிந்தியனையும், விருகோதரரால் {பீமனால்} சூதசோமனையும், அர்ஜுனரால் சுரூதகீர்த்துயம், நகுலரால் சதானிகனையும், இளையவரால் {சகாதேவனால்} சுரூதகர்மனையும் பெற்றெடுத்தேன். அவர்கள் அனைவரும் அசைக்கமுடியாத ஆற்றல் பெற்றவர்களாக இருக்கிறார்கள். ஜனார்த்தனா {கிருஷ்ணா}, அவர்களுக்காகவாவது என்னைக் காப்பது முக்கியமில்லையா? கிருஷ்ணா, உனது மகன் பிரத்யும்னனைப் போன்றே அவர்களும் {எனது மகன்களும்} பெரும் வீரர்களே! அவர்கள் அனைவரும் வில்லாளிகளில் முதன்மையானவர்களாகவும், எந்த எதிரியாலும் போர்க்களத்தில் வெல்லப்பட முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள். அவ்வளவு சக்தி உடையவர்கள் திருதராஷ்டிரர் மகன்களின் தீங்குகளை ஏன் பொறுத்துக் கொள்ள வேண்டும்? ஏமாற்றப்பட்டு, நாட்டை இழந்து, அடிமைகளாக்கப்பட்டனர். நானும் எனது மாதவிடாயின் போது, மேனியில் ஒற்றையாடையுடன் சபைக்கு இழுத்துச் செல்லப்பட்டேன்.

மதுசூதனா {மதுவைக் கொன்றவனே {கிருஷ்ணா}, யாராலும் நாணேற்ற முடியாத காண்டீவத்திற்கு ஐயோ, அர்ஜுனரையும், பீமரையும், உன்னையும் காத்துக் கொள். ஓ கிருஷ்ணா, {இவ்வளவையும் செய்த பிறகும்) துரியோதனன் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டதால், பீமரின் பலத்திற்கு ஐயோ, அர்ஜுனரின் வீரத்திற்கு ஐயோ. மதுசூதனா {மதுவைக் கொன்றவனே}, அவனே {துரியோதனனே} முன்பும், சிறு பிள்ளைகளாக {பிரம்மச்சாரிகளாக} இருந்த குற்றமற்ற பாண்டவர்களை அவர்களது தாயுடன் நாட்டைவிட்டுத் துரத்தினான். பீமருக்கு உணவில் கடும் விஷத்தைக் கலந்து கொடுத்ததும் அந்தப் பாவியே. ஆனால், ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, பீமர் கடும் விஷத்தையும் உணவுடன் சேர்த்து செரித்தார். அல்லது அன்றே பீமரின் நாட்கள் முடிந்திருக்கும்.

கிருஷ்ணா, இந்தத் துரியோதனனே, வீட்டிற்கருகில் பிரமாணம் என்ற ஆலமரத்தடியில் நின்று கொண்டு, தூங்கிக்கொண்டிருந்த பீமரை, அவர் எதிர்பாராத விதத்தில் கங்கைக்குள் தள்ளவிட்டுவிட்டு நகரத்திற்குத் திரும்பினான். ஆனால் குந்தியின் மகனான பலம் பொருந்திய கரங்களுடைய பீமசேனர், தூக்கத்தில் இருந்து எழுந்து, கட்டுக்களை அவிழ்த்து, நீரில் இருந்து எழுந்து வந்தார். இந்தத் துரியோதனனே கடும் விஷம் நிறைந்த கருநாகங்களை பீமசேனர் உடல் முழுவதும் கடிக்க வைத்தான். ஆனால் இந்த எதிரிகளைக் கொல்பவர் சாகவில்லை. விழித்தெழுந்த குந்தியின் மகன் அனைத்து நாகங்களை அடித்து நொறுக்கி, துரியோதனனின் விருப்பத்துகந்த தேர்ப்பாகனை தனது இடது கையால் கொன்றார்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்