Thursday, December 26, 2013

அலியாவாய் என்று சபித்தாள் ஊர்வசி! - வனபர்வம் பகுதி 46ஆ

Be an eunuch cursed Urvasi! | Vana Parva - Section 46b | Mahabharata In Tamil

(இந்திரலோகாபிகமன பர்வத் தொடர்ச்சி)

சித்திரசேனன் சொல்கேட்டு அர்ஜுனனிடம் சென்று தனது விருப்பத்தை ஊர்வசி உரைத்தல்; கண்களையும் காதுகளையும் மூடிக் கொண்ட அர்ஜுனன் ஊர்வசியைத் தாயாகக் கருதுவதாக பதிலுரைத்தல்; அப்சரஸ்களின் நிலையை ஊர்வசி எடுத்துச் சொல்லல்; அர்ஜுனன் மீண்டும் மறுத்தல்; ஊர்வசி அர்ஜுனனைச் சபித்தல்; இக்காரியங்களை அறிந்த இந்திரன் அர்ஜுனனுக்குச் சமாதானம் சொல்லல்....

வைசம்பாயனர் சொன்னார் "ஓ மனிதர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, அழகான கண்களைக் கொண்ட ஊர்வசி, அர்ஜுனனுடைய மாளிகை வாயிலை அடைந்து, வாயில்காப்போனிடம் சில வார்த்தைகளைச் சொல்லி அனுப்பினாள். (உத்தரவு கிடைத்ததும்), அவள் {ஊர்வசி} விரைவாக அந்த பிரகாசமான, அழகான அரண்மனைக்குள் நுழைந்தாள். ஆனால், ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, அவளைத் தனது மாளிகையில் இரவு நேரத்தில் பார்த்த அர்ஜுனன், இதயத்தில் பயத்தால் பீடிக்கப்பட்டு, அவளை உரிய மரியாதையுடன் அழைக்க வெளியே வந்தான். விரைவில் அவளைக் கண்ட பிருதையின் மகன் {அர்ஜுனன்}, அடக்கத்தால் {Modesty} தனது கண்களை மூடிக்கொண்டான். அவளை {ஊர்வசியை} வணங்கிய அவன் {அர்ஜுனன்}, தன்னை விட உயர்ந்த ஒருவரிடம் {குருவைப் போன்ற மூத்தவருக்கு} செய்யும் வழிபாட்டை அந்த அப்சரஸுக்குச் {ஊர்வசிக்குச்} செய்தான். பிறகு, அர்ஜுனன், "ஓ அப்சரஸ்களில் முதன்மையானவளே, நான் எனது சிரம் தாழ்த்தி உன்னை வணங்குகிறேன். ஓ மங்கையே, உன் கட்டளைகளை நீ எனக்குத் தெரியப்படுத்து. நான் உனது பணியாள் {அடிமை} போல உனக்குக் காத்திருப்பேன்" என்றான் {அர்ஜுனன்}


வைசம்பாயனர் தொடர்ந்தார், "பல்குனனின் {அர்ஜுனனின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட ஊர்வசி, தனது உணர்ச்சிகளை இழந்தாள். விரைவில் அவள் {ஊர்வசி}, அர்ஜுனனிடம், கந்தர்வனான சித்திரசேனனுக்கும் தனக்கும் நடைபெற்ற உரையாடலை எடுத்துரைத்தாள். மேலும் அவள் {ஊர்வசி}, "ஓ மனிதர்களில் சிறந்தவரே {அர்ஜுனரே}, சித்திரசேனனுக்கும் எனக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலையும், நான் ஏன் இங்கு வந்தேன் என்பதையும் சொல்கிறேன். நீர் இங்கு வந்ததும், ஓ அர்ஜுனரே,  மகேந்திரன் {இந்திரன்} ஒரு பெரிய அழகான சபையைக் கட்டினார். அதில் தேவலோக விழாக்கள் அனைத்தும் நடைபெறும். ஓ மனிதர்களில் சிறந்தவரே {அர்ஜுனரே}, அந்த சபைக்கு, ருத்திரர்களும், ஆதித்தியர்களும், அசுவினிகளும் வசுக்களும் வந்தனர். அங்கே பல பெரும் முனிவர்களும், அரசமுனிகளும், சித்தர்களும், சாரணர்களும், யக்ஷர்களும், பெரும் நாகர்களும் கூட வந்தனர். ஓ அகன்ற கண்கள் உடையவரே {அர்ஜுனரே}, சூரியனையும் சந்திரனையும் போன்ற பிரகாசமிக்க அந்தச் சபையின் உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் தகுதிக்கேற்றபடியும், மரியாதைக்கேற்றபடியும், வீரத்திற்கு ஏற்றாற்படியும் ஆசனங்களில் அமர்ந்தனர். ஓ சக்ரனின் மகனே {அர்ஜுனரே}, கந்தர்வர்கள் வீணை மீட்டி தெய்வீக இசையுடன் கூடிய அழகான பாடல்களைப் பாடினர். ஓ குரு குலத்தைத் தழைக்கச் செய்பவரே {அர்ஜுனரே}, முக்கியமான தேவதைகள் {அப்சரஸ்கள்} அனைவரும் அங்கே நடனமாடினர்.


பிறகுதான், ஓ பிருதையின் மகனே {குந்தியின் மகனே அர்ஜுனரே}, நீர் உமது நிலைத்த பார்வையை என் மேல் செலுத்தினீர். தேவர்களின் சபை முடிந்ததும், உமது தந்தையால் கட்டளையிடப்பட்ட தேவர்கள் அனைவரும் அவர்களது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் சென்றனர். முக்கியமான தேவதைகளும் {அப்சரஸ்களும்} தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பினர். மற்றவர்களும் கூட, ஓ எதிரிகளைக் கொல்பவரே {அர்ஜுனரே}, உமது தந்தையின் {இந்திரனின்} கட்டளைக்கிணங்கி அவரிடம் விடைபெற்று சென்றனர். அதன்பிறகுதான், சக்ரனால் {இந்திரனால்} அனுப்பப்பட்ட சித்திரசேனன் எனது வசிப்பிடத்திற்கு வந்தார். ஓ தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடையவரே, அவர் {சித்திரசேனன்}, என்னிடம், "ஓ அழகான நிறம் கொண்டவளே, நான் தேவர்கள் தலைவனால் {இந்திரனால்} அனுப்பப்பட்டேன். மகேந்திரனுக்கும் {இந்திரனுக்கும்}, எனக்கும், உனக்கும் ஏற்புடைய வகையில் ஒரு காரியத்தைச் செய். ஓ அழகான இடை கொண்டவளே, போர்க்களத்தில் சக்ரனைப் {இந்திரனைப்} போன்ற வீரனும், எப்போதும் பெருந்தன்மை கொண்டவனுமான அர்ஜுனனைத் திருப்தி செய்ய முயற்சி செய்" என்றார். இவையே அவர் சொன்ன வார்த்தைகளாகும். இப்படியே, ஓ பாவங்களற்றவரே {அர்ஜுனரே}, அவராலும் {சித்திரசேனராலும்}, உமது தந்தையாலும் கட்டளையிடப்பட்டு, ஓ எதிரிகளைக் கொல்பவரே {அர்ஜுனரே}, உமக்காகக் காத்திருப்பதற்காக, நான் உம்மிடம் வந்திருக்கிறேன். உமது நற்குணங்கள் எனது இதயத்தைக் கவர்ந்தன. அதனால் நான் ஏற்கனவே காம தேவனின் ஆளுகைக்குள் விழுந்துவிட்டேன். ஓ வீரரே, நான் அதை எப்போதும் பேணிக் காப்பேன். அது எனது விருப்பமும் கூட" என்றாள் {ஊர்வசி}.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இச்சூழலில் சொர்க்கத்திலிருந்தபோது, அர்ஜுனன் அவளது {ஊர்வசியின்} அழுத்தமான பேச்சால் நாணமுற்றான். தனது காதுகளைத் தனது கைகளால் மூடிக் கொண்ட அவன் {அர்ஜுனன்}, "ஓ அருளப்பட்ட மங்கையே {ஊர்வசியே}, நீ என்னிடம் இப்படிப் பேசுகிறாயே! எனது கேட்கும் உணர்வுக்கு ஐயோ. ஓ அழகிய முகம் கொண்டவளே, எனது மதிப்பீட்டின் படி நீ என்னைவிட உயர்ந்தவரின்  மனைவிக்குச் {wife of a superior} சமமானவளாவாய். நீ எனக்கு நற்பேறுபெற்ற குந்தியை {தாயைப்} போன்றவளும், இங்கிருக்கும் இந்திரனின் ராணியான சச்சியைப் போன்றவளுமாவாய். இதுவே எனது விருப்பம். நான் அதை எப்போதும் பேணிக் காப்பேன். ஓ மங்களமானவளே, இதில் சந்தேகமே கிடையாது. ஓ அருளப்பட்டவளே, நான் உன்னை நிலைத்த பார்வையுடன் பார்த்தது உண்மைதான். ஆனால் அதற்குக் காரணம் இருக்கிறது. ஓ ஒளிரும் புன்னகையுடையவளே, நான் அதை உனக்கு உண்மையாகச் சொல்வேன். "பளபளக்கும் மங்கையான இவள் கௌரவ குலத்தின் தாயாக இருப்பாள்" என்று மனதினில் நினைத்தே, மகிழ்ச்சியுடன் கண்களை அகல விரித்து உன்னை நிலைத்த பார்வை கொண்டு பார்த்தேன். ஓ அருளப்பட்ட தேவதையே {அப்சரஸே}, நீ எனது குலத்தின் தாயாக இருந்து, என்னைவிட மேன்மையானவர்களுக்கும் மேன்மையானவளாக இருப்பதால், நீ என்னைக் கருதி மற்ற உணர்வுகளை வளர்ப்பது தகாது" என்றான் {அர்ஜுனன்}.

அர்ஜுனனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட ஊர்வசி, "தேவர்கள் தலைவனின் மகனே {அர்ஜுனரே}, அப்சரஸ்களான நாங்கள் சுதந்திரமானவர்கள், தேர்வு செய்வதில் கட்டுப்பாடில்லாதவர்கள். ஆகையால், நீர் என்னை உமக்கு மேன்மையானவளாக மதிப்பிடுவது தகாது. புரு குலத்தின் மகன்கள் பேரர்கள் ஆகிய அனைவரும், தங்கள் தவத் தகுதிகளின் தொடர்ச்சியாக இங்கே வந்து எங்களுடன் விளையாடுவார்கள். அதனால் அவர்கள் எந்தப் பாவமும் அடைவதில்லை. ஆகையால், ஓ வீரரே, உமது கண்டிப்பைக் குறைத்துக் கொள்ளும். என்னை வெளியே அனுப்புவது உமக்குத் தகாது. நான் ஆசையால் எரிந்து கொண்டிருக்கிறேன். நான் உமக்கு என்னை அர்ப்பணித்திருக்கிறேன். ஓ தகுந்த மரியாதை அளிப்பவரே {அர்ஜுனரே}, என்னை ஏற்றுக் கொள்ளும்" என்று பதிலுரைத்தாள் {ஊர்வசி}.

அர்ஜுனன், "ஓ சுத்தமானக் களங்கமற்ற குணம் கொண்ட அழகான மங்கையே {ஊர்வசியே}, கேள். நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன். நான்கு திசைகளும், அதற்கு குறுக்காக உள்ள திசைகளும் {எட்டு திக்குகளும்}, ஏன் தேவர்களும் கூட கேட்கட்டும். ஓ பாவமற்றவளே, எனக்கு குந்தி, மாத்ரி, சச்சி ஆகியோர் எப்படியோ, அதே போல நீயும் எனது குலத்தின் தாயே. எனது மரியாதைக்கு உரியவளே, நான் உனக்குத் தலைவணங்கி, உனது பாதங்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கேட்டுக் கொள்கிறேன். ஓ அழகான நிறம் கொண்டவளே, திரும்பிச் செல். நீ எனது சொந்தத் தாயைப் போல என்னால் வழிபடத்தகுந்தவள். நீ என்னை மகனைப் போலப் பாதுகாப்பதே உனக்குத் தகும்" என்று மறுமொழி கூறினான்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "பார்த்தனால் {அர்ஜுனனால்}, இப்படிச் சொல்லப்பட்ட ஊர்வசி, கோபத்தால் தனது உணர்வுகளை இழந்தாள். அவள் {ஊர்வசி}, கோபத்தால் நடுங்கி, தனது புருவங்களைச் சுருக்கி, அர்ஜுனனைப் பார்த்து, "ஒரு பெண், உமது தந்தையின் உத்தரவின் பேரிலும், அவளது சொந்த விருப்பத்தின் பேரிலும், உமது மாளிகைக்கு வந்திருக்கிறாள். காமனின் கணைகளால் துளைக்கப்பட்ட அந்தப் பெண்ணை நீர் அவமதித்து விட்டீர். ஆகையால், ஓ பார்த்தரே {அர்ஜுனரே}, நீர் உமது ஆண்மையை {ஆண் தன்மையை} இழந்து, இழிந்த அலியாகி, மகளிருக்கு மத்தியில் ஆடற்கலைஞராக உமது பொழுதைக் கழிப்பீர்" என்று சபித்தாள் {ஊர்வசி}.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படி அர்ஜுனனைச் சபித்த ஊர்வசியின் உதடுகள் அதன் பின்பும் நடுங்கியபடியே இருந்தன. அவள் {ஊர்வசி} நீண்ட மூச்சுகளை விட்டபடியே இருந்தாள். விரைவில் அவள் {ஊர்வசி} தனது சொந்த வசிப்பிடத்திற்குத் திரும்பினாள். எதிரிகளைக் கொல்பவனான அர்ஜுனன், நேரத்தைக் கடத்தாமல் சித்திரசேனனைத் தேடிக் கண்டுபிடித்து, அவனிடம், அன்றிரவு ஊர்வசிக்கும் தனக்கும் இடையில் நடந்த சம்பவங்களைச் சொன்னான். அவன் {அர்ஜுனன்} சித்திரசேனனிடம் நடந்தது அத்தனையும் சொல்லி, தனக்கு அவள் {ஊர்வசி} சாபமிட்டத்தையும் திரும்பத் திரும்பச் சொன்னான். சித்திரசேனன் இவை அனைத்தையும் சக்ரனிடம் {இந்திரனிடம்} சொன்னான். அந்த ஹரிவாஹனன் {இந்திரன்}, தனது மகனை {அர்ஜுனனைத்} தனிமையில் அழைத்து, இனிமையான வார்த்தைகளால் சமாதானம் கூறி, புன்னகையுடன், "ஓ உயிரினங்களில் சிறந்தவனே {அர்ஜுனா}, ஓ குழந்தாய், பிருதை {குந்தி} உன்னை அடைந்ததால், இன்று அவள் {குந்தி} உண்மையிலேயே அருளப்பட்ட தாயானாள். ஓ பலம் பொருந்திய கரம் கொண்டவனே {அர்ஜுனா}, நீ இப்போது, உனது பொறுமையாலும், சுயக்கட்டுப்பாட்டாலும் முனிவர்களையும் வீழ்த்திவிட்டாய். ஆனால், ஓ தகுந்த மரியாதை கொடுப்பவனே, ஊர்வசி உனக்கிட்ட சாபம் உனக்கு நன்மையையே பயக்கும். ஓ குழந்தாய், நீ நல்ல இடத்திலேயே நிற்பாய். ஓ பாவங்களற்றவனே {அர்ஜுனனே}, பூமியில் நீ {வனவாசத்தில்} பதிமூன்றாவது {13} வருடத்தை, எவரும் அறியாமல் கழிக்க வேண்டும் அல்லவா? அப்போதுதான் நீ ஊர்வசியின் இந்தச் சாபத்திற்கு ஆளாவாய். ஆண்மையின்றி ஆடற்கலைஞராக ஒரு வருடம் கழித்த பிறகு, நீ உனது சக்தியைத் திரும்ப அடைவாய்" என்றான் {இந்திரன்}.

சக்ரனால் {இந்திரனால்} இப்படிச் சொல்லப்பட்ட அந்த எதிரி வீரர்களைக் கொல்பவனான பல்குனன் {அர்ஜுனன்}, பெரும் மகிழ்ச்சியை அடைந்து, சாபத்தைக் குறித்து நினைப்பதை நிறுத்தினான். பிறகு, பாண்டுவின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, கந்தர்வனான சித்திரசேனனுடன் சொர்க்கத்தின் பல பகுதிகளில் பெரும் கொண்டாட்டத்துடன் விளையாடினான்"

"பாண்டு மகனின் {அர்ஜுனனின்} இந்த வரலாற்றைக் கேட்கும் எந்த மனிதனின் ஆசைகளும் காமவிகார முடிவை நோக்கி ஓட முடியாது {ஆசையால் உண்டாகும் காம விகாரங்கள் முழுவதும் தொடராமல் முடிவடையும்} [The desires of the man that listeneth to this history of the son of Pandu never run after lustful ends]. தேவர்கள் தலைவனின் மகனான பல்குனனின் {அர்ஜுனனின்} இந்த சுத்தமான நடத்தையை பரிதாபத்துடன் கேட்கும் மனிதர்களில் முதன்மையானவர்கள், கர்வம், அகந்தை, கோபம் மற்றும் பிற குறைகளையெல்லாம் களைந்து, சொர்க்கத்தை அடைந்து, பேரின்பத்துடன் அங்கே விளையாடுவார்கள்."



இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்