Thursday, December 26, 2013

இந்திரன் யுதிஷ்டிரனுக்கு செய்தி அனுப்புதல் - வனபர்வம் பகுதி 47

Indra sent word to Yudhishthira | Vana Parva - Section 47 | Mahabharata In Tamil

(இந்திரலோகாபிகமன பர்வத் தொடர்ச்சி)

இந்திரலோகத்திற்கு லோமசர் வருகை; இந்திரன் லோமசருக்கு அர்ஜுனனைக் குறித்து விளக்குதல்; இந்திரன் யுதிஷ்டிரனிடம் சென்று அவனைப் பாதுகாக்குமாறு லோமசரைப் பணித்தல்; அர்ஜுனனும் யுதிஷ்டிரனைப் பாதுகாக்குமாறு லோமசரிடம் வேண்டுதல்; லோமசர் புறப்பாடு; காம்யக வனத்தில் யுதிஷ்டிரனை லோமசர் காண்பது...

வைசம்பாயனர் சொன்னார் "ஒரு நாள் பெருமுனிவரான லோமசர் {Rishi Lomasa}, தனது பயணங்களின் போது, தேவர்கள் தலைவனைக் {இந்திரனைக்} காணும் விருப்பத்தோடு இந்திரனின் வசிப்பிடத்திற்குச் சென்றார். அந்தப் பெருமுனிவர் {லோமசர்} தேவர்கள் தலைவனை {இந்திரனை} அணுகி, மரியாதையுடன் அவனை வணங்கினார். அப்போது பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} வாசவனின் {இந்திரனின்} பாதி ஆசனத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டார். பல பெருமுனிவர்களால் வணங்கப்பட்ட அந்த அந்தணர்களில் முதன்மையானவர் {லோமசர்} சக்ரனின் {இந்திரனின்} விருப்பப்படி ஒரு அற்புதமான ஆசனத்தில் அமர்ந்தார். இந்திரனின் ஆசனத்தில் அமர்ந்திருந்த அர்ஜுனனைக் கண்ட அந்த முனிவர், க்ஷத்திரியனான அர்ஜுனன் சக்ரனின் {இந்திரனின்} ஆசனத்தை எப்படி அடைந்தான் என்று நினைத்தார். தேவர்களே வழிபடும் அந்த ஆசனத்தை அடைய அவன் {அர்ஜுனன்} தகுதி வாய்ந்த செயலைச் செய்திருக்கக் கூடும் என்றும், அவன் (தனது தவத்தகுதியால்) என்னென்ன உலகங்களை வென்றிருக்கக் கூடும் என்று தனது மனதில் நினைத்துக் கொண்டார்.


அந்த முனிவர் {லோமசர்} அப்படி தனது நினைவுகளில் மூழ்கியிருந்தபோது, விரித்திரனைக் கொன்றவனான சக்ரன் {இந்திரன்} இது குறித்து அறிந்தான். இவற்றை அறிந்த சச்சியின் தலைவன் {இந்திரன்}, லோமசரிடம் புன்னகையுடன், "ஓ பிரம்ம முனிவரே {பிரம்மரிஷியே}, உமது மனதில் ஓடிக் கொண்டிருப்பதைக் குறித்து கேளும். மனிதர்களின் உலகில் பிறப்பெடுத்திருக்கும் இவர் மரணத்திற்குரிய {நர மனிதன்} அல்ல. ஓ பெரும் முனிவரே, இந்த பலம்வாய்ந்த கரங்கள் கொண்ட வீரன் {அர்ஜுனன்} குந்தியிடம் பிறந்த எனது மகனாவான். சில காரியங்களுக்காக ஆயுதங்களை அடையவே இவன் {அர்ஜுனன்} இங்கு வந்திருக்கிறான். ஐயோ! உயர்ந்த தகுதிகள் கொண்ட பழங்காலத்து முனிவனான இவனை உம்மால் உணர முடியவில்லையா? ஓ அந்தணரே {லோமசரே}, இவன் யார் என்றும், எதற்காக என்னிடம் வந்திருக்கிறான் என்றும் சொல்கிறேன் கேளும். பழங்காலத்து அற்புதமான முனிவர்களான இருவர் உலகத்தில் நரன் என்றும் நாராயணன் என்றும் அழைக்கப்பட்டனர். ஓ அந்தணரே {லோமசரே}, அவர்கள் தான் ரிஷிகேசனும் {கிருஷ்ணனும்}, தனஞ்சயனும் {அர்ஜுனனும்} என்பதை அறிவீராக. நரன் என்றும் நாராயணன் என்றும் உலகத்தால் அறியப்பட்டு, மூன்று உலகங்களாலும் கொண்டாடப்படும் அந்த முனிவர்கள், குறிப்பிட்ட காரியத்தை சாதிப்பதற்காகவும், அறம்பெறவும் உலகத்தில் பிறந்திருக்கிறார்கள்.

சித்தர்களாலும், சாரணர்களாலும் வழிபடப்படும், பதரி {Vadari} என்ற பெயரால் உலகத்தால் அறியப்படும் அவர்களது புனிதமான ஆசிரமம், கங்கையின் மூலம் ஆரம்பிக்கும் இடத்தில் அமைந்திருக்கிறது. ஓ அந்தணரே {லோமசரே}, விஷ்ணு மற்றும் ஜிஷ்ணு ஆகியோரின் அந்த ஆசிரமத்தை சிறப்பு மிகுந்த முனிவர்களாலும், ஏன் தேவர்களாலும் கூட காண முடியாது. ஓ பிரம்ம முனிவரே, பிரகாசமிக்க அந்த முனிவர்கள் எனது விருப்பத்தின் பேரில், பூமி பாரத்தைக் குறைக்க வேண்டி, பெரும்பலத்துடன் பூமியில் பிறந்திருக்கிறார்கள். இதையும் தவிர்த்து, தாங்கள் பெற்ற வரத்தின் காரணமாக கர்வம் கொண்ட நிவாதகவசர்கள் என்ற ஒரு குறிப்பிட்ட அசுர வகையினர், எங்களுக்குக் காயம் ஏற்படுத்துவதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். தங்களது பலத்தால் தற்பெருமை பேசிக்கொண்டு, தேவர்களை அழிக்க அவர்கள் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். வரத்தைப் பெற்ற பிறகு அவர்கள் தேவர்களை மதிப்பதில்லை. கடுமையும் பலமும் கொண்ட அந்த தானவர்கள் பாதாளப்பகுதியில் வசிக்கிறார்கள். அனைத்து தேவர்களும் ஒருங்கிணைந்தும் அவர்களுடன் போரிட இயலாத நிலையுள்ளது.

ஓ மேன்மையானவரே {லோமசரே}, மதுவைக் கொன்றவரும், உலகத்தில் கபிலர் என்று அறியப்பட்டவரும், சிறப்புமிக்க சகரனின் மகன்களைத் தனது பார்வையாலேயே எரித்தவருமான அந்த அருளப்பட்ட விஷ்ணுவை {கிருஷ்ணனை} அவர்கள் பலத்த சத்தங்களுடன் பூமியின் குடல் பகுதியில் சந்திக்கும்போது, ஓ அந்தணரே, அந்த வெல்லப்படமுடியாத ஹரி {கிருஷ்ணன்} எங்களுக்கு பெரும் சேவையைச் செய்யக் கூடும். அவரோ {கிருஷ்ணனோ} அல்லது பார்த்தனோ {அர்ஜுனனோ} அல்லது இருவரும் சேர்ந்தோ எங்களுக்கு சந்தேகமற பெரும் சேவையைச் செய்யக்கூடும். பெரும் ஏரியில் தனது பார்வையாலேயே நாகர்களைக் கொன்ற ஹரி {கிருஷ்ணன்}, நிச்சயம் நிவாதகவசர்கள் என்று அழைக்கப்படும் அசுரர்களையும் அவர்களைத் தொடர்பவர்களையும் கொல்லும் தகுதி படைத்தவரே. ஆனால், முக்கியமற்ற இந்தப் பணியில் மதுவைக் கொன்றவனை {மதுசூதனனான கிருஷ்ணனை} ஈடுபட வலியுறுத்த வேண்டியதில்லை. ஆற்றல்களின் குவியலாக பலம் பொருந்தியிருக்கும் அவர் {கிருஷ்ணன்}, தனது ஆற்றல்களைப் பெருக்கினால், இந்த முழு அண்டமும் எரிந்துவிடும்.

இந்த அர்ஜுனனும் அவர்களைக் கொல்லத் தகுதிவாய்ந்தவனே. இந்த வீரன் அவர்களைப் {நிவாதகவசர்களைப்} போர்க்களத்தில் கொன்ற பிறகு, மனிதர்களின் உலகத்திற்குத் திரும்பிச் செல்வான். நீர் எனது பரிந்துரையின் பேரில் பூமிக்கு செல்லும். காம்யக வனத்தில் வாழும் வீரம்மிகுந்த யுதிஷ்டிரனைக் காண்பீர். பல்குனனை {அர்ஜுனனைக்} குறித்து கவலைப்பட வேண்டாம் என்றும், ஆயுதக்கலையில் பரிசுத்தமான வலிமை கொள்ளாமல், ஆயுதங்களில் நிபுணத்துவம் அடையாமல், அவனால் {அர்ஜுனனால்} பீஷ்மரிடமோ, துரோணரிடமோ மற்றவர்களிடமோ போர்க்களத்தில் போராட முடியாது என்பதால், ஆயுதங்கள் அனைத்திலும் நிபுணத்துவம் அடைந்த பிறகு, அந்த வீரன் பூமி திரும்புவான் என்றும் போர்க்களத்தில் கலங்காத வீரம் கொண்ட அந்த அறம் சார்ந்த யுதிஷ்டிரனிடம், என் சார்பாகச் சொல்லும். மேலும் அந்தச் சிறப்புமிக்க யுதிஷ்டிரனிடம், பலம்வாய்ந்த கரங்கள் கொண்ட குடகேசன் {சுருள் முடி கொண்ட அர்ஜுனன்}, ஆயுதங்களை அடைந்த பிறகு, தெய்வீக நடனம், குரலிசை, கருவியிசை ஆகிய அறிவியல்களிலும் நிபுணத்துவம் அடைந்திருக்கிறான் என்பதையும் சொல்லும். மேலும் அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} "ஓ மனிதர்களின் மன்னா {யுதிஷ்டிரா}, நீ உனது தம்பிகளை அழைத்துக் கொண்டு பல்வேறு புண்ணியத்தலங்களைக் காண வேண்டும். பல்வேறு புனித நீர்நிலைகளில் நீராடி உங்கள் பாவங்களைத் தொலைத்தால், உங்கள் இதய நோய் கொஞ்சம் குறையும். பிறகு உங்கள் பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்ட பிறகு, உங்கள் நாட்டை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும்" என்றும் சொல்லும். ஓ அந்தணர்களில் முதன்மையானவரே {லோமசரே}, பூமியில் உலவிக் கொண்டிருக்கும் யுதிஷ்டிரனை உமது தவச்சக்தியால் பாதுகாப்பதே உமக்குத் தகும். மலைகளில் கடினமான பகுதிகளிலும், முரட்டுத்தனமான புல்வெளிகளிலுமே கடும் ராட்சசர்கள் எப்போதும் வாழ்கிறார்கள். அந்த நரமாமிச உண்ணிகளிடம் இருந்து மன்னனைக் காப்பாற்றும்" என்று சொன்னான் {இந்திரன்}.

லோமசரிடம் மகேந்திரன் இப்படிப் பேசிய பிறகு, பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்} அந்த முனிவரிடம் மரியாதையுடன், "எப்போதும் பாண்டுவின் மகனைக் {யுதிஷ்டிரனைக்} காப்பாற்றும். ஓ மனிதர்களில் சிறந்தவரே, உம்மால் காக்கப்படும் மன்னன் {யுதிஷ்டிரன்}, பல்வேறு புண்ணியத்தலங்களுக்குச் சென்று அந்தணர்களுக்குத் தானங்கள் செய்யட்டும்" என்றான்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "அந்தப் பெரும் பலம்வாய்ந்த தவசியான லோமசர் அவர்கள் இருவருக்கும் "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி, காம்யக வனத்தை அடைய விரும்பி பூமிக்குக் கிளம்பினார். அந்த வனத்தை அடைந்து, அந்த எதிரிகளைக் கொல்பவனும் குந்தியின் மகனுமான நீதிமானான யுதிஷ்டிரனைத் தவசிகளும், அவனது தம்பிகளும் சூழக் கண்டார்.



இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்