Monday, January 20, 2014

பீஷ்மர் புலஸ்தியர் சந்திப்பு - வனபர்வம் பகுதி 81

Bhishma ment Pulastya | Vana Parva - Section 81 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

துயரத்தில் இருந்த பாண்டவர்களை நாரதர் சந்திப்பது; நாரதரிடம் யுதிஷ்டிரன் தீர்த்தயாத்திரையின் பயன்களை விவரமாகக் கேட்பது; பீஷ்மர் புலஸ்தியர் சந்திப்பை நாரதர் சொல்ல ஆரம்பித்தது...

வைசம்பாயனர் சொன்னார், "தனஞ்சயன் {அர்ஜுனன்} குறித்து வருத்தத்துடன் இருந்த தனது தம்பிகள் மற்றும் கிருஷ்ணையின் {திரௌபதியின்} வார்த்தைகளைக் கேட்ட மன்னன் யுதிஷ்டிரன் பெரும் துயர் கொண்டான். அந்த நேரத்தில் (தனது எதிரில்) தேவலோக முனிவரான நாரதர் பிரம்ம அழகுடன், வேள்வி நெய்யால் சுடர்விட்டு எரியும் நெருப்புப் போல பிரகாசித்துக் கொண்டு நிற்பதைக் கண்டான். அவர் {நாரதர்} வந்ததைக் கண்ட மன்னன் யுதிஷ்டிரன், தனது தம்பிகளுடன் எழுந்து நின்று அந்தச் சிறப்பு மிக்கவரை வழிபட்டான். சக்தியால் பிரகாசித்த குருக்களின் அழகான தலைவன் {யுதிஷ்டிரன்}, நூறு வேள்விகள் செய்த தேவனை {இந்திரனை}, தேவர்கள் சூழ்ந்து கொண்டதைப் போல, தனது தம்பிகளால் சூழப்பட்டு நின்றான்.


பிருதையின் {குந்தியின்} மகன்களான தனது தலைவர்களுக்குக் கட்டுப்பட்டு, அறநெறிகளின் விதிகளுக்குக் கீழ்ப்படிந்து இருந்த யக்ஞசேனி {திரௌபதி}, வேதங்களுக்கு சாவித்ரியைப் போல, மேருவின் சிகரத்திற்கு சூரியக் கதிரைப் போல இருந்தாள். சிறப்புமிக்க நாரதமுனிவர், அந்த வழிபாட்டை ஏற்றுக் கொண்டு தர்மனின் மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} சரியான முறையில் ஆறுதலளித்தார். ஓ பாவங்களற்றவனே {ஜனமேஜயா}, உயர்ந்த ஆன்மா கொண்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம் பேசிய அந்த முனிவர், "ஓ அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, நீ எதைத் தேடிக் கொண்டிருக்கிறாய், என்னால் உனக்கு ஆகவேண்டியது என்ன என்பதை எனக்குச் சொல்" என்று கேட்டார். இதற்கு தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, தனது தம்பிகளுடன் சேர்ந்து, தேவர்களாலும் மதிக்கப்படும் நாரதரை வணங்கி, கரங்களைக் கூப்பியபடி, "ஓ பெரும்பேறு பெற்றவரே, நீ அனைத்து உலகங்களாலும் கொண்டாடப்படுபவர், உமக்கு என்னிடம் திருப்தியுண்டானால், எனது விருப்பங்கள் அனைத்தும் உமது அருளால் ஏற்கனவே நிறைவேறிவிட்டதாகக் கருதுகிறேன். ஓ அற்புதமான நோன்புகள் கொண்டவரே, ஓ பாவங்களற்றவரே, நான் எனது தம்பிகளுடன் சேர்த்து உமது கருணைக்குத் தகுதிபடைத்தவர்களாக இருந்தால், ஓ முனிவர்களில் சிறந்தவரே, எனது மனதில் இருக்கும் சந்தேகத்தைப் போக்குவதே உமக்குத் தகும். புனிதமான நீர்நிலைகளையும், அங்கு அமைந்திருக்கும் கோவில்களையும் காணவிரும்பி உலகத்தைச் சுற்றுபவர்களுக்கு {தீர்த்த யாத்திரை செய்பவர்களுக்கு} என்ன சிறப்பு ஏற்படும் என்பதை எனக்கு விவரமாகச் சொல்வதே உமக்குத் தகும்" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.

நாரதர், "ஓ மன்னா {யுதிஷ்டிரா}, முன்பு புலஸ்தியரிடம் இருந்து புத்திசாலியான பீஷ்மர் அறிந்து கொண்டதைக் கவனத்துடன் கேள். ஓ அருளப்பட்டவனே {யுதிஷ்டிரா} முன்பொரு காலத்தில், அறம்சார்ந்தவர்களில் முதன்மையான பீஷ்மர், ஓ மன்னா, தேவ முனிவர்களும், கந்தர்வர்களும், தேவர்களும் கூட ஓய்வெடுக்கும் பகுதியான கங்கையின் தோற்றுவாய்க்கு அருகில், அந்த அழகான, புனிதமான இடத்தில், முனிவர்களின் துணையுடன் பித்ருய நோன்பை {முன்னோர்களை [பித்ரு தேவதைகளை] வழிபடும் நோன்பு} நோற்றுக் கொண்டு வாழ்ந்து வந்தார். அப்படி அவர் அங்கே வாழ்ந்த போது, அந்தப் பிரகாசிப்பவர் {பீஷ்மர்}, அவரது தானத்தின் மூலம் பித்ருக்களையும், தேவர்களையும், முனிவர்களையும் சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ள விதிகளின் படி திருப்திப்படுத்தினார். அப்படிச் செய்து கொண்டிருக்கும்போது, ஒரு காலத்தில் அந்த சிறப்புமிக்கவர் {பீஷ்மர்}, தனது அமைதியான பாராயணத்தின் {ஒப்புவித்தலின்} போது தோற்றத்தில் அழகான முனிவர்களில் சிறந்த புலஸ்தியரைக் கண்டார் {பீஷ்மர்}.

அழகால் பிரகாசிக்கும் அந்தத் தவத் துறைவியைக் கண்டு பெரும் மகிழ்ச்சியடைந்து, மிகுந்த ஆச்சரியமடைந்தார். ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அந்த அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையான பீஷ்மர், அந்த அருளப்பட்ட முனிவரை சடங்குவிதிகளின் படி வழிபட்டார். தன்னைச் சுத்திகரித்துக் கொண்டு, ஆழ்ந்த கவனத்துடன், தனது தலையில் அர்க்கியாவுடன் {பூஜைக்குத் தேவையான திரவியத்துடன்} அந்த பிரம்ம முனிவரை {பிரம்மரிஷியை} அணுகினார். பிறகு தனது பெயரை {பீஷ்மர்} உரக்கச் சொல்லியபடி, அவரிடம் {புலஸ்தியரிடம்}, "ஓ அற்புத நோன்புள்ளவரே {புலஸ்தியரே}, நீர் அருளப்பட்டிரும். நான் உமது அடிமையான பீஷ்மன். உமது காட்சி எனக்குக் கிடைத்ததால், நான் எனது பாவங்கள் அனைத்திலும் இருந்து விடுபட்டேன்" என்றார். ஓ யுதிஷ்டிரா, இதைச் சொன்ன அந்த அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையான பீஷ்மர், தனது பேச்சை நிறுத்தி அமைதியாகக் கரம் கூப்பி நின்றார். நோன்புகளாலும், வேத கல்வியாலும், உடல் வற்றி மெலிந்து போயிருந்த குருக்களில் முதன்மையான பீஷ்மரைக் கண்ட அந்த முனிவர் {புலஸ்தியர்} பெரும் மகிழ்ச்சியில் மூழ்கினார்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்