Tuesday, January 21, 2014

புஷ்கரையின் பலனைச் சொன்ன புலஸ்தியர் - வனபர்வம் பகுதி 82அ

The merit of Pushkara said by Pulastya | Vana Parva - Section 81a | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

புஷ்கரையின் பலனைச் சொல்லும் புலஸ்தியர்

புஷ்கர், அஜ்மீர் மாவட்டம், ராஜஸ்தான், இந்தியா
புலஸ்தியர் {பீஷ்மரிடம்} சொன்னார், "ஓ அற்புத நோன்புகள் கொண்டவனே, அறநெறிகளை அறிய அருளப்பட்டவனே, உனது பணிவு, தன்னடக்கம், உண்மை ஆகியவற்றில் நான் திருப்தி கொண்டேன். ஓ பாவமற்றவனே, உனது மூதாதையர்கள் தயவால் நீ பெற்ற இந்த குணங்களால் நான் உன்னிடம் மிகுந்த திருப்தி கொண்டுள்ளேன். ஓ மகனே, அதனாலேயே உனக்கு என் காட்சி கிடைத்தது. ஓ பீஷ்மா, எனது கண்கள் அனைத்தையும் ஊடுருவும். நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல். ஓ பாவங்களற்றவனே, ஓ குரு குலத்தில் முதன்மையானவனே, நீ எதைக் கேட்டாலும், நான் உனக்கு அதை அருளுவேன்" என்றார்.


பீஷ்மர் {புலஸ்தியரிடம்}, "ஓ அதிகமாக அருளப்பட்டவரே,  மூவுலகங்களாலும் வழிபடப்படும் நீர் என்னிடம் திருப்தி அடைந்திருப்பதாலும், மேன்மையான உமது காட்சியை நான் கண்டதாலும், நான் ஏற்கனவே வெற்றியடைந்து விட்டதாகக் கருதுகிறேன். ஆனால், ஓ அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையானவரே, உமது உதவியைப் பெற எனக்குத் தகுதியுண்டானால், நான் எனது சந்தேகங்களை உம்மிடம் கேட்கிறேன், அவைகளை நீர் களைய வேண்டும். ஓ புனிதமானவரே, எனக்கு தீர்த்தங்கள் சம்பந்தமாக சில அறச் சந்தேகங்கள் இருக்கின்றன. அவற்றைக் குறித்து என்னிடம் விரிவாகப் பேசுவீராக. நான் அவற்றைக் கேட்க விரும்புகிறேன். ஓ தேவர்களைப் போன்றவரே, ஓ மறுபிறப்பாளரான {பிராமணரான} முனிவரே, (கோவில்களைத் தரிசித்து) உலகம் சுற்றுபவர்களுக்குக் கிடைக்கும் பலன் யாது? இதை எனக்கு நிச்சயமாகச் சொல்லும்" என்று கேட்டார்.

அதற்கு புலஸ்தியர் {பீஷ்மரிடம்}, "ஓ மகனே, கவனமாகக் கேள். முனிவர்களின் புகலிடமாக இருக்கும் தீர்த்தங்களால் ஏற்படும் பலனை நான் உனக்குச் சொல்கிறேன். யாருடைய கரங்கள், பாதம், மனது, அறிவு, தவம் மற்றும் செயல்கள் அவனது முழு கட்டுப்பாட்டில் இருக்கின்றனவோ, அவன் தீர்த்தங்களின் கனிகளை அனுபவிக்கிறான். எவன் பரிசுகள் பெறுவதில்லையோ, எவன் தன்னடக்கம் கொண்டவனோ, எவன் கர்வமற்றவனோ அவன் தீர்த்தங்களின் கனிகளை அனுபவிக்கிறான். எவன் பாவமில்லாமல் இருக்கிறானோ, எவன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செயல்படுகிறானோ, எவன் அதிகமாக உண்ணாதிருக்கிறானோ, எவன் தனது புலன்களை முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறானோ, எவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டிருக்கிறானோ, அவன் தீர்த்தங்களின் கனிகளை அனுபவிக்கிறான்.

ஓ மன்னா {பீஷ்மா}, எவன் கோபத்தில் இருந்து விடுபட்டிருக்கிறானோ, எவன் உண்மைச் சார்ந்து இருக்கிறானோ, எவன் தனது நோன்புகளில் உறுதியாக இருக்கிறானோ, எவன் அனைத்து உயிர்களையும் தன்னைப் போலவே கருதுகிறானோ, அவன் தீர்த்தங்களின் கனிகளை அனுபவிக்கிறான். வேதங்களில் முனிவர்கள், வேள்விகள் மற்றும் அதன் கனிகளை இப்போதைக்கும், எதிர்காலத்திற்கும் தீர்மானித்து வைத்திருக்கின்றனர். ஓ பூமியின் தலைவா {பீஷ்மா}, வேள்விகளுக்குப் பல பொருட்கள் தேவைப்படுவதாலும், பல காரியங்கள் செய்யப்பட வேண்டும் என்பதாலும், அந்த வேள்விகளை ஒரு ஏழையால் செய்ய முடியாது. ஆகையால், இவை மன்னர்களாலும் அல்லது செழிப்பும் செல்வமும் கொண்ட மனிதர்களாலும் மட்டுமே செய்ய முடியும். ஓ மனிதர்களின் தலைவா {பீஷ்மா}, இருப்பினும், செல்வமற்ற மனிதர்கள், கூட்டணி இல்லாதவர்கள், தனிப்பட்டவர்கள், மனைவி மக்கள் இல்லாதவர்கள், எந்தக் காரியமும் அற்றவர்கள் ஆகியோரால் அந்த வேள்விகள் செய்வதற்கு ஒப்பான புனிதமான கனிகளைப் பெற முடியும். அவற்றை போர்வீரர்களில் சிறந்த உனக்கு நான் இப்போது சொல்வேன்.

ஓ பாரத குலத்தில் சிறந்தவனே {பீஷ்மனே}, தீர்த்தங்கள் பரதேசிகளாய்ச் செல்பவர்களுக்கு உயர்ந்த பலனைத் தருவதாலும், முனிவர்களின் உயர்ந்த புதிர்களை உள்ளடக்கியிருப்பதாலும், அவை வேள்விகளை விட மேன்மை கொண்டவை. தீர்த்தத்திற்கு சென்றும், ஒருவன் மூன்று இரவுகள் உண்ணா நோன்பு இருக்கவில்லை {விரதமிருக்கவில்லை} என்றாலும், எப்போதேனும் தங்கத்தையோ, பசுக்களையோ  தானமே கொடுத்ததில்லை என்றாலும், அவனே ஏழை. ஒருவன் அக்னிஷ்தோமா செய்வதாலும், இன்னும் பிற வேள்விகளைச் செய்து பெரும் பரிசுகள் கொடுப்பதாலும் ஏற்படும் பலனை விட, ஒருவன் தீர்த்தத்திற்கு பரதேசியாய்ச் செல்வதால் ஏற்படும் பலன் அதிகம். மனிதர்களின் உலகில், மூன்று உலகங்களாலும் கொண்டாடப்படும் தேவர்களுக்குத் தேவனின் {சிவனின்} தீர்த்தமொன்று *புஷ்கரை என்ற பெயரில் உள்ளது. அங்கு பரதேசியாய் செல்லும் ஒருவன் அந்த தெய்வத்துக்கு {சிவனுக்கு} இணையானவனாகிறான். ஓ குரு குலத்தில் உயர்ந்த ஆன்மா கொண்ட மகனே {பீஷ்மா}, ஒரு நாளின் இரு சந்தி வேளைகளிலும் {அதிகாலை மற்றும் மாலைப்பொழுது, அதாவது பகலும் இரவும் சந்திக்கும் வேளைகளிலும்}, நடுப்பகலிலும், நூறாயிரம் கோடி தீர்த்தங்கள் புஷ்கரையில் சங்கமித்திருக்கும். ஓ மேன்மையானவனே {பீஷ்மா}, புஷ்கரையில் ஆதித்தியர்கள், வசுக்கள், ருத்திரர்கள், சத்யஸ்கள், மருதர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆகியோர் அதில் எப்போதும் தங்கியிருக்கின்றனர். ஓ மன்னா {பீஷ்மா}, அங்கேயே தேவர்களும், தைத்தியர்களும், பிரம்மமுனிவர்களும் தங்கள் தவ அர்ப்பணிப்புகளைச் செய்து பெரும் பலனையும், கடைசியாக தெய்வத் தன்மையையும் அடைந்தனர்.

தன்னடக்கம் கொண்ட மனிதர்கள், மனதால் புஷ்கரையை நினைத்தாலே, தங்கள் பாவங்கள் கழுவப்பட்டு, சொர்க்கத்தில் மதிக்கப்படுகிறார்கள். ஓ மன்னா {பீஷ்மா}, தாமரையைத் தனது ஆசனமாகக் கொண்டிருக்கும் சிறப்பு மிக்க பெருந்தகப்பன் {பிரம்மன்}, இந்தத் தீர்த்தத்தில் பெரும் மகிழ்ச்சியுடன் வசித்தார். ஓ அருளப்பட்டவனே, இந்தப் புஷ்கரையிலேயே முனிவர்களுடன் கூடிய தேவர்கள் முற்காலத்தில் பெரும் தகுதிகளை அடைந்தனர். கடைசியாக உயர்ந்த வெற்றியையும் அடைந்தனர். தேவர்கள் மற்றும் பித்ருக்களின் வழிபாட்டுக்குத் தன்னை அர்ப்பணித்திருக்கும் ஒரு மனிதன், இந்தத் தீர்த்ததில் குளித்தால், குதிரை வேள்வியில் கிடைக்கும் பலன்களை விட பத்து மடங்கு அதிகமான பலனை அடைவான் என்று ஞானமுள்ளவர்களால் சொல்லப்பட்டுள்ளது. ஒ பீஷ்மா,  புஷ்கர வனத்திற்குச் சென்று, ஒரு அந்தணருக்கேனும் உணவளிப்பவன், அந்தச் செயலால் அன்று {உணவளித்த அன்று} முதல் என்றும் மகிழ்ச்சியாக இருப்பான்.

---------------------------------------------------------------------

* புஷ்கரை இராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் மாவட்டத்தில் இருக்கிறது.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்