Wednesday, January 22, 2014

சேதுவில் நீராடு! - வனபர்வம் பகுதி 82ஆ

Bathe in Sethu!| Vana Parva - Section 82b | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களைச் சொல்லும் புலஸ்தியர்

புலஸ்தியர் {பீஷ்மரிடம்} தொடர்ந்தார், "காய்கறிகளாலும், கிழங்குகளாலும், கனிகளாலும் தன்னைத் தாங்கிக் கொள்பவன், ஒரு அந்தணனுக்கு அதே பொருட்களை அவமரியாதை செய்யாமல், பக்தியுடன், கட்டணமாகக் கொடுக்கலாம். ஓ மன்னர்களில் சிறந்தவனே, அப்படிக் கொடுக்கப்படும் பரிசினால் கூட ஒரு ஞானவான் குதிரைவேள்வியில் கிடைக்கும் பலன்களை அடைந்துவிட முடியும். அந்தணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியவர்களில் சிறந்த மனிதர்கள் புஷ்கரையில் குளித்தால் மறுபிறவி என்ற கடமையில் இருந்து விடுபடுவார்கள். குறிப்பாக கார்த்திகை மாதத்தின் பௌர்ணமி நாளில் புஷ்கரைக்குச் செல்பவன், நித்தியமான பிரம்மனின் வசிப்பிடத்தை அடைவான். ஓ பாரதா {பீஷ்மா} கரங்களைக் கூப்பிய படி காலையும் மாலையும் புஷ்கரையை மனதால் நினைப்பவன், அனைத்து தீர்த்தங்களிலும் குளித்ததாகக் கருதப்படுகிறான்.


ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், பிறப்பிலிருந்து அவர்களால் செய்யப்பட்ட பாவங்கள் அனைத்தும் புஷ்கரையில் நீராடுவதன் மூலமாக அழிகிறது. ஓ மன்னா {பீஷ்மா}, மதுவைக் கொன்றவனே {மதுசூதனனே} தேவர்களில் முதன்மையானவன் என்பது போல புஷ்கரையும் அனைத்துத் தீர்த்தங்களிலும் முதன்மையானது. நூறு வருடங்கள் அக்னி ஹோத்திரம் செய்தவனின் தகுதியை, கார்த்திகை மாதம் முழுதும் புஷ்கரையில் தங்கியவன் பெறுகிறான். வெண்மையான மூன்று குன்றுகளும், மூன்று நீரூற்றுகளும் நீண்ட காலத்திற்கு முன்னர் இருந்து புஷ்கரை என்ற பெயரால் அறியப்படுகிறது. அதன் காரணம் என்னவென்று தெரியவில்லை. புஷ்கரைக்குச் செல்வது கடினம்; புஷ்கரையில் தவச்சடங்குகள் செய்வது கடினம்; புஷ்கரையில் தானம் கொடுப்பது கடினம்; புஷ்கரையில் வாழ்வதும் கடினம்.

சரியான உணவுப் பழக்கம் மற்றும் நோன்புகளுடன் புஷ்கரையில் பனிரெண்டு {12} இரவுகள் தங்கியபிறகு, ஒருவன், ஜம்பு மார்க்கம் செல்ல வேண்டும். தேவர்களும், முனிவர்களும், பித்ருக்களும் ஓய்ந்திருக்கும் ஜம்பு மார்க்கத்தை ஒருவன் அடைந்தால், அவன் குதிரை வேள்வி செய்த தகுதியை அடைந்து, தனது விருப்பங்கள் அனைத்தும் கனியக் காண்பான். அங்கே ஐந்து {5} இரவுகள் தங்கும் மனிதனின் ஆன்மா அனைத்துப் பாவங்களில் இருந்தும் கழுவப்படுகிறது. அவன் நரகத்திற்குள் மூழ்குவதே இல்லை, ஆனால் உயர்ந்த வெற்றியை அடைகிறான். ஜம்பு மார்க்கத்தை விட்டு அகன்றவன் அடுத்து {ஸ்}தண்டுலிகாஸ்ரமத்திற்கு செல்ல வேண்டும். அங்கே செல்பவன் யாரும் நரகத்தில் மூழ்குவதில்லை, ஆனால் பிரம்மலோகத்தை அடைகிறான்.  ஓ மன்னா, அதன் பின்பு, அகத்திய தடாகத்திற்கு {ஏரிக்கு} சென்று தங்குபவன், பித்ருக்கள், தேவர்கள் ஆகியோரை வழிபட்டு மூன்று {3} இரவுகள் உண்ணா நோன்பிருந்து அக்னிஷ்டோமா செய்வதன் பலனை அடைகிறான். காய்கறிகளையும், கனிகளையும் உண்டு வாழ்பவன் அங்கு சென்று கௌமாரம் என்ற நிலையை {முருகனின் நிலையை} அடைகிறான்.

அடுத்து, முழு உலகத்தாலும் வழிபடப்படும் கண்வரின் அழகான ஆசிரமத்திற்கு முன்னேற வேண்டும். ஓ பாரதகுலத்தின் காளையே, தெய்வீகத்தால் நிரம்பிய அந்தப் புனிதமான வனம், நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே இருக்கிறது. ஒருவன் அதற்குள் நுழைந்ததுமே, தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். முறையான உணவு பழக்கத்துடன் நோன்பிருந்து, பித்ருகளையும் தேவர்களையும் வழிபடுபவன், ஒருவரின் விருப்பங்களைக் கனிய வைக்கும் சக்தி படைத்தவனாக ஆவான். இந்த ஆசிரமத்தை ஒருமுறை வலம் வந்த பிறகு, ஒருவன் யயாதி (சொர்க்கத்திலிருந்து) விழுந்த இடத்திற்கு வர வேண்டும். அங்கே செல்பவன் குதிரை வேள்வி செய்ததன் பலனை அடைகிறான். பிறகு முறையான உணவு பழக்கத்துடன், புலன்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஒருவன் மஹாகாலம் என்ற இடத்திற்குச் செல்ல வேண்டும். பிறகு கோடி என்ற பெயரில் அழைக்கப்படும் தீர்த்தத்தில் நீராடும் ஒருவன் குதிரை வேள்வி செய்ததன் பலனை அடைகிறான்.

ஒரு அறம் சார்ந்த மனிதன் அடுத்து, மூன்று உலகிலும் பத்ரவடம் என்று அறியப்படும், உமையின் கணவனான ஸ்தாணுவின் தீர்த்தத்திற்குச் செல்ல வேண்டும். பத்ரவடத்திற்குச் செல்லும் மனிதர்களில் சிறந்தவர்கள் ஈசானனைக் கண்டு, ஆயிரம் பசுக்களைக் கொடையாகக் கொடுப்பதால் கிடைக்கும் பலனை அடைவார்கள். பிறகு மூன்று உலகங்களாலும் கொண்டாடப்படும் நர்மதை ஆற்றுக்கு வந்து, பித்ருக்களுக்கும், தேவர்களுக்கும் நீர்க்கடன்கள் கொடுப்பதால் ஒருவன் குதிரை வேள்வி செய்ததன் பலனை அடைகிறான். பிறகு பிரம்மச்சரிய வாழ்வுமுறையை மேற்கொண்டு, புலன்களை அடக்கி தென் கடலுக்குச் {இது வடமொழி மூலத்தில் தக்ஷிண சிந்து [சேது சமுத்திரமாக இருக்கலாம்] என்று அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் தென் கடல் {southern ocean} என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது} செல்பவன் அக்னிஷ்டோமா வேள்வி செய்ததன் பலனை அடைந்து சொர்க்கத்திற்கு உயர்வான். பிறகு சர்மண்வதி நதியை அடைந்து, முறையான உணவுப் பழக்கத்துடனும், புலன்களைக் கட்டுப்படுத்தியும் இருப்பவன், ரந்திதேவனின் கட்டளையின் பேரில் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலன்களை அடைகிறான்.

ஓ போர்வீரர்களின் அறம் சார்ந்த தலைவனே {பீஷ்மா}, அதன் பிறகு ஒருவன் இமயத்தின் மகனான அர்ப்புடம் செல்ல வேண்டும். அங்கு பழங்காலத்தில் பூமியைத் துளைத்தப்படி சென்ற ஒரு துளை இருந்தது. அங்கே, மூன்று உலகங்களாலும் கொண்டாடப்படும் வசிஷ்டரின் ஆசிரமம் இருக்கிறது. ஒரு இரவு அங்கு தங்குவதால் ஒருவனுக்கு ஆயிரம் பசுக்களைக் கொடையாகக் கொடுப்பதால் கிடைக்கும் பலன் கிடைக்கிறது. ஓ மன்னர்களில் புலியே {பீஷ்மா} பிரம்மச்சரிய வாழ்வு முறையை மேற்கொண்டு, பிங்கம் எனும் தீர்த்தத்தில் நீராடும் ஒருவன் நூறு கபிலைப் பசுக்களைத் தானம் கொடுப்பதன் பலனை அடைகிறான். ஓ மன்னா {பீஷ்மா}, ஒருவன் பிறகு, பிரபாசம் என்று அழைக்கப்படும் அற்புதமான தீர்த்தத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே எப்போதும் ஹுதாசனன் {அக்னி} நேரடியாகவே இருக்கிறான். ஓ வீரா {பீஷ்மா}, பவனனின் {இந்திரனின்} நண்பனான அவன் {அக்னி}, தேவர்களுக்கு வாயாக இருப்பவனாவான். தன்னை அடக்கி, சுத்திகரிக்கப்பட்ட ஆன்மா கொண்ட மனிதன் அந்தத் தீர்த்ததில் நீராடுவதால், அக்னிஷ்டோமா அல்லது அதிராத்ர வேள்வியால் கிடைக்கும் பலன்களை விட அதிக பலன்களை அடைகிறான்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்