Wednesday, January 22, 2014

விஷ்ணுவின் கருணைக்காக தவமிருந்த தேவர்கள்! - வனபர்வம் பகுதி 82இ

Gods ascetism for the grace of Vishnu!| Vana Parva - Section 82c | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களைச் சொல்லும் புலஸ்தியர்

புலஸ்தியர் {பீஷ்மரிடம்} தொடர்ந்தார், "ஓ பாரத குலத்தின் காளையே {பீஷ்மா}, பிறகு சரஸ்வதி நதி கடலோடு கலக்கும் பகுதிக்குச் செல்லும் ஒருவன் நூறு பசுக்களை தானம் கொடுப்பதால் கிடைக்கும் பலனை அடைந்து சொர்க்கத்தையும் அடைந்து, எப்போதும் அக்னியைப் போல பிரகாசித்துக் கொண்டிருப்பான். கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன், அங்கிருக்கும் நீர்நிலைகளின் மன்னனான தீர்த்தத்தில் நீராடி பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் நீர்க்கடன் செய்து மூன்று இரவுகள் அங்கே வாழ்ந்தால் அவன் சந்திரனைப் போன்று பிரகாசித்து, குதிரை வேள்வி செய்ததன் பலனை அடைவான். ஓ பாரதர்களில் சிறந்தவனே {பீஷ்மா}, அதன் பிறகு ஒருவன், துர்வாச முனிவரால் விஷ்ணுவுக்கு வரமளிக்கப்பட்ட வரதானம் என்ற தீர்த்தத்திற்கு செல்ல வேண்டும். வரதானத்தில் நீராடுபவன் ஆயிரம் பசுக்களை தானம் கொடுத்ததன் பலனை அடைகிறான். பிறகு ஒருவன், புலன்களை அடக்கி, முறையான உணவுமுறையுடன் துவாராவதிக்குச் {துவாரகைக்குச்} செல்ல வேண்டும். அங்கு பிண்டாரகத்தில் {தீர்த்தத்தில்} நீராடி, அபரிமிதமான தங்கத்தைக் கொடையாகக் கொடுத்த பலனை அடையலாம். ஓ அருளப்பட்டவனே {பீஷ்மா}, அங்கு தாமரை சின்னம் பொறிக்கப்பட்ட நாணயங்களும், திரிசூலக் குறி கொண்ட தாமரைகளையும் காணலாம் என்பது விவரிக்க அற்புதமானது. ஓ வீரர்களை அடக்குபவனே, மனிதர்களில் காளையே, அங்கே மகாதேவன் {சிவன்} நேரடியாக இருக்கிறான்.


ஓ பாரதா {பீஷ்மா}, பிறகு சிந்து நதி கடலுடன் சந்திக்கும் பகுதியை அடைந்து, கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன் ஒருவன் வருண தீர்த்தத்தில் நீராட வேண்டும். அங்கே நீராடி, பித்ருக்களுக்கும், முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் நீர்க்கடன் செலுத்துபவன், ஓ பாரதகுலத்தின் காளையே, வருண உலகத்தை அடைந்து அங்கே தன்னொளி பெற்று பிரகாசிக்கிறான். ஞானவான்கள் அங்கிருக்கும் தெய்வத்தை சங்குகர்ணேஸ்வரன் என்ற பெயரால் வழிபடுபவன், குதிரையை வேள்வி செய்வதால் ஏற்படுவதைப் போன்று பத்து மடங்கு பலனை அடைகிறான். ஓ பாரத குலத்தின் காளையே அந்தத் தீர்த்தத்தை வலம் வந்த ஒருவன், ஓ குருக்களில் முதன்மையானவனே {பீஷ்மா}, மூன்று உலகத்தாலும் திரிமி {சமி} என்ற பெயரால் அறியப்பட்டு கொண்டாடப்படும் தீர்த்தத்திற்குச் செல்ல வேண்டும். அந்தத் தீர்த்தம் அனைத்துப் பாவங்களையும் கழுவுகிறது. அங்கேதான் தேவர்கள் பிரம்மனையும், மகேஸ்வரனையும் {சிவனையும்} வணங்குகிறார்கள். அங்கே நீராடிய பிறகு, தேவர்களால் சூழப்பட்ட ருத்திரரை வணங்குபன் பிறவியில் இருந்து செய்த பாவங்களில் இருந்து விடுபடுகிறான். ஓ மனிதர்களில் சிறந்தவனே, அங்கேதான் திரிமி {சமி} அனைத்து தேவர்களாலும் வழிபடப்பட்டான். ஓ மனிதர்களில் சிறந்தவனே, அங்கே நீராடும் ஒருவன் குதிரை வேள்வி செய்ததன் பலனை அடைகிறான். ஓ பெரும் புத்திகூர்மை கொண்டவனே, அண்டத்தைப் படைத்தவனான விஷ்ணு, தைத்தியர்களையும், தானவர்களையும் கொன்ற பிறகு தன்னைச் சுத்திகரித்துக் கொள்ள அந்தத் தீர்த்தத்திற்கே சென்றான்.

ஓ அறம்சார்ந்தவனே {பீஷ்மனே}, அதன் பிறகு ஒருவன் அனைவராலும் கொண்டாடப்படும வசோர்த்தாரைக்குச் செல்ல வேண்டும். அந்தத் தீர்த்தத்தை அடைந்ததுமே ஒருவன் குதிரை வேள்வி செய்ததன் பலனை அடைகிறான். ஓ குருக்களில் சிறந்தவனே, ஆன்மாவை அடக்கி, கவனம் சிதறாமல், தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் நீர்க்கடன் செலுத்தும் ஒருவன் விஷ்ணுவின் உலகத்தை அடைந்து வணங்கப்படுகிறான். ஓ பாரதகுலத்தின் காளையே அந்தப் புனிதமான தடாகத்தில் வசுக்கள் இருக்கின்றனர். அங்கே நீராடி அதன் நீரை அருந்துபவன், வசுவாகிறான் என்று கருதப்படுகிறது. அனைத்துப் பாவங்களையும் அழிக்கும் சிந்தூத்தமம் என்ற ஒரு கொண்டாடப்படும் தீர்த்தம் இருக்கிறது. ஓ மனிதர்களில் சிறந்தவனே, அங்கே நீராடும் ஒருவன் அபரிமிதமான தங்கத்தைத் தானம் கொடுத்த பலனை அடைகிறான். பிறகு சுத்திகரிக்கப்பட்ட ஆன்மாவுடனும், சுத்தமான நடத்தையுடனும் பத்ரதுங்கத்தை  அடையும் ஒருவன் உயர்ந்த நிலையால் அருளப்பட்டிருக்கும் பிரம்மலோகத்தை அடைவான். பிறகு, சித்தர்களால் அடையப்பட்ட இந்திரனின் குமாரிகளின் தீர்த்தத்தை அடைய வேண்டும். ஓ மனிதர்களில் சிறந்தவனே {பீஷ்மா}, அங்கு நீராடுபவன் இந்திரலோகத்தை அடைகிறான். அந்தக் குமாரிகள் தீர்த்தத்திலேயே ரேணுகா என்ற தீர்த்தம் இருக்கிறது. அதுவும் சித்தர்களால் அடையப்பட்டதே. அங்கு நீராடும் ஒரு அந்தணன் சந்திரனைப் போலப் பிரகாசிக்கிறான். பிறகு பஞ்சநதம் என்று அழைக்கப்படும் தீர்த்தத்தை அடைந்து, புலன்களை அடக்கி, முறையான உணவு முறையுடன் இருப்பவன் சாத்திரங்களில் ஒன்றன் பின் ஒன்றாகச் சொல்லப்பட்டிருக்கும் ஐந்து வேள்விகளின் பலன்களை அடைகிறான். பிறகு, ஓ மன்னா, ஒருவன் அற்புதமான பகுதியான பீமையை அடைய வேண்டும். ஓ பாரதர்களில் சிறந்தவனே அங்கே யோனி என்று அழைக்கப்படும் அந்தத் தீர்த்ததில் நீராடும் மனிதன் (தனது அடுத்த பிறவியில்), முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட காது குண்டலங்களுடன் தேவதையின் மகனாகப் பிறந்து, நூறாயிரம் {ஒரு லட்சம்} பசுக்களைத் தானம் கொடுத்ததன் பலனை அடைகிறான்.

அடுத்து ஸ்ரீகுண்டம் {கிரிகுஞ்சம்} என்று மூன்று உலகங்களாலும் கொண்டாடப்படும் இடத்தை அடைந்து, பெருந்தகப்பனை {பிரம்மாவை} வணங்கும் ஒருவன், ஆயிரம் பசுக்களைத் தானம் கொடுத்ததன் பலனை அடைகிறான். ஓ அறம் சார்ந்தவனே, ஒருவன் பிறகு விமல் என்ற அற்புதமான தீர்த்தத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே தங்க மற்றும் வெள்ளி நிற மீன்களைக் காணலாம். அங்கு நீராடும் ஒருவன் வாசவனின் {இந்திரனின்} உலகத்தை அடைந்து, தனது ஆன்மாவைச் சுத்தப்படுத்திக் கொண்டு அனைத்துப் பாவங்களையும் கழுவி உன்னத நிலையை அடையலாம். பிறகு விதஸ்தை என்ற தீர்த்தத்தை அணுகி, பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் நீர்க்கடன் செலுத்தும் ஒருவன், வாஜபேய வேள்வியில் கிடைக்கும் பலனை அடையலாம். விதஸ்தை என்ற பெயரால் பாவங்களை அழிக்கும் தீர்த்தம், நாகன் {பாம்பு} தக்ஷகனின் வசிப்பிடமான காஷ்மீர நாட்டில் இருக்கிறது. அங்கே நீராடும் மனிதன் வாஜபேய வேள்வியின் பலனை அடைந்து, அனைத்துப் பாவங்களில் இருந்தும் தனது ஆன்மாவைக் கழுவி, உயர்ந்த உன்னத நிலையை அடைகிறான்.

ஒருவன் பிறகு,  வடவம் {மலதை} என்று மூன்று உலகங்களாலும் கொண்டாடப்படும் இடத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு மாலைப்பொழுதில் உரிய சடங்குகளுடன் நீராடும் ஒருவன், தனது சக்தியில் சிறந்ததை வெளிப்படுத்தி நெய் மற்றும் பாலில் வேக வைத்த அரிசியை ஏழு சுடர் கொண்ட தெய்வத்துக்கு {அக்னிக்கு} படைக்க வேண்டும். பித்ருக்களுக்கு {முன்னோர்களுக்கு} மரியாதை செலுத்தும் விதமாக அங்கு செய்யப்படும் தானம், அளவற்றதாக ஞானவான்கள் கூறுகின்றனர். முனிவர்கள், பித்ருக்கள், தேவர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்களின் பல இனங்கள், குஹ்யர்கள், கிண்ணரர்கள், யக்ஷர்கள், சித்தர்கள், வித்யாதரர்கள், ராட்சசர்கள், தைத்தியர்கள், ருத்திரர்கள், ஏன் பிரம்மனும் கூட, ஓ மன்னா, தங்கள் புலன்களை அடக்கி, ஆயிரம் வருடம் விஷ்ணுவின் கருணைக்காகத் தவம் இருந்து, பால் மற்றும் நெய்யில் சமைக்கப்பட்ட அரசியை கேசவனுக்குப் படைத்து, ஏழு ரிக்குகளுடன் தங்கள் கடன்களைச் செலுத்தினர். ஓ மன்னா, இதனால் திருப்தியடைந்த கேசவன் {விஷ்ணு}, ஐசுவரியம் எனும் எட்டுமடங்கான தன்மையையும், மேலும் அவர்கள் விரும்பிய பலவற்றையும் கொடுத்தான். இவற்றை அருளிய அந்தத் தெய்வம், அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த போதே மேகத்துக்குள் மறையும் மின்னல் போல மறைந்து போனான். பாரதா {பீஷ்மா}, இதன்காரணமாகவே அந்தத் தீர்த்தம் சப்தசரு என்ற பெயரால் அறியப்படுகிறது. அந்த இடத்தில் ஏழு சுடர் கொண்ட தெய்வத்திற்கு {அக்னிக்கு}, சருவைப் படைப்பவன், நூறாயிரம் {ஒரு லட்சம்} பசுக்களைத் தானம் கொடுத்ததன் பலனையும், நூறு ராஜசூயம் மற்றும் நூறு குதிரை வேள்விகள் செய்த பலனையும் அடைகிறான்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்