Thursday, January 23, 2014

நானே அவனை முதலில் கண்டேன்! - வனபர்வம் பகுதி 82ஈ

I saw him first!| Vana Parva - Section 82d | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களைச் சொல்லும் புலஸ்தியர்

புலஸ்தியர் {பீஷ்மரிடம்} தொடர்ந்தார், "ஒருவன் வடவத்தை விட்டு, ரௌத்திரபதம் என்ற இடத்திற்கு முன்னேறி, மகாதேவனைக் {சிவனைக்} கண்டு குதிரை வேள்வியின் பலனை அடைவான். பிறகு தனது ஆன்மாவைக் கட்டுக்குள் வைத்து பிரம்மச்சரிய வாழ்வு முறை வாழ்ந்த மணிமத் {மணிமான்} என்ற இடத்தை அடைந்து, அங்கு ஒரு இரவு தங்குபவன், ஓ மன்னா, அக்னிஷ்டோமா வேள்வியைச் செய்த பலனை அடைவான். ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன் முழு உலகத்தாலும் கொண்டாடப்படும் தேவிகை என்ற இடத்திற்குச் செல்ல வேண்டும். ஓ பாரத குலத்தின் காளையே {பீஷமா}, அங்கேதான் அந்தணர்கள் உண்டானார்கள் என்று நாம் கேள்விப்படுகிறோம். மேலும் திரிசூலம் தாங்குபவனின் {சிவனின்} பகுதியான உலகத்தால் கொண்டாடப்படும் பகுதியும் அங்கிருக்கிறது. ஒருவன் தேவிகையில் நீராடி, மகேஸ்வரனை {சிவனை} வழிபட்டு, தனது சக்திக்குத் தக்கவாறு பால் மற்றும் நெய்யில் அரசியைச் சமைத்து படையல் வைப்பவன், ஓ பாரத குலத்தின் காளையே {பீஷ்மா}, அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும் வேள்வியைச் செய்தவனின் தகுதியை அடைவான். ருத்ரனின் மற்றும் ஒரு தீர்த்தமான காமகியமும் அங்கே இருக்கிறது. அதில் தேவர்கள் தங்கியிருக்கின்றனர். அங்கே நீராடிய மனிதன் விரைவாக வெற்றியை அடைவான். மேலும் அங்கிருக்கும் யஜனம், பிரம்மவாலுகம், புஷ்பாம்பம் ஆகியவற்றின் நீரையும் தொடும் ஒருவன் தனது மறுபிறவியின் சோகத்திலிருந்தும் விடுபடுகிறான்.




தேவர்களும், முனிவர்களும் ஓய்ந்திருக்கும் அந்தப் புனிதமான தீர்த்தமான தேவிகை ஐந்து யோஜனை நீளமும் {1யோஜனை = 8 மைல்}, அரை யோஜனை அகலமும் கொண்டது. ஓ மன்னா அதன் பிறகு ஒருவன் தீர்க்கசத்திரம் எனும் இடத்தை நோக்கி முன்னேற வேண்டும். அங்கே பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களும், சித்தர்களும், பெரும் முனிவர்களும், முறையான நோன்பு நோற்று, முதற்படியான சபதங்களை ஏற்றும் அவற்றை உரைத்தும் நீண்ட காலம் தொடரும் வேள்வியைச் செய்து கொண்டிருக்கின்றனர். ஓ மன்னா, தீர்க்கசத்தரத்திற்கு மட்டும் செல்லும் ஒருவன், ராஜசூயம் மற்றும் குதிரை வேள்விகளின் பலன்களுக்கு மேன்மையான பலனை அடைகிறான். அதன்பிறகு ஒருவன் தனது புலன்களைக் கட்டுப்படுத்தி, முறையான உணவுமுறையுடன் சரஸ்வதி {ஆறு} மேருவின் மார்பில் மறைந்து சமசம், சிவோத்பேதம் மற்றும் நாகத்பேதம் ஆகிய இடங்களில் மீண்டும் வெளியாகும் விநசனத்திற்குச் சென்று அக்னிஷ்தோம வேள்வி செய்த பலனை அடையலாம். சிவோத்பேதத்தில் நீராடுவதால் ஒருவன் ஆயிரம் பசுக்களை தானம் கொடுத்த பலனை அடைகிறான். நாகோத்பேதத்தில் நீராடுவதால் ஒருவன் நாகர்களின்  உலகத்தை அடைகிறான்.

பிறகு ஒருவன், அடைவதற்கு அரிதான ஷசயான தீர்த்தத்தை அடைய வேண்டும். ஓ பாராத {பீஷ்மா}, அங்கே, நாரைகள் சச என்ற உருவத்தில் மறைந்து ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில் மீண்டும் தோன்றுகின்றன. ஓ பாரத குலத்தின் தலைவனே, அந்த சரஸ்வதியில் ஒருவன் நீராட வேண்டும். அப்படி அங்கே நீராடினால், ஓ மனிதர்களில் புலியே {பீஷ்மா}, ஒருவன் சந்திரனைப் போன்ற பிரகாசத்தைப் பெற்று, ஆயிரம் பசுக்களை தானம் கொடுத்த பலனை அடையலாம். ஓ குரு குலத்தவனே, பிறகு ஒருவன் குமாரகோடி எனும் தீர்த்தத்தை அடைந்து புலன்களை அடக்கி, அங்கே நீராடி, தேவர்களையும் பித்ருக்களையும் வழிபட வேண்டும். இப்படிச் செய்வதால், ஒருவன் பத்தாயிரம் பசுக்களைத் தானம் கொடுத்த பலனை அடைந்து, தனது மூதாதையர்களை உயர்ந்த உலகங்களுக்கு அனுப்புகிறான்.

ஓ அறம்சார்ந்தவனே {பீஷ்மா}, பிறகு ஒருவன், தனது ஆன்மாவைக் கட்டுப்படுத்தி, முன்பொரு காலத்தில் ஒரு கோடி முனிவர்கள் கூடிய இடமான ருத்ரகோடி என்ற இடத்திற்குச் செல்ல வேண்டும். ஓ மன்னா, மகாதேவனைக் காணும் எதிர்பார்ப்பில் பெரும் மகிழ்ச்சியில் மூழ்கி, அங்கே அந்த முனிவர்கள் கூடினர். அவர்கள் ஒவ்வொருவரும், "நானே முதலில் தெய்வத்தைக் காண்பேன்!", " நானே முதலில் தெய்வத்தைக் காண்பேன்!" சொல்லிக் கொண்டனர். ஓ மன்னா {பீஷ்மா} ஆன்மாவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் அந்த முனிவர்களிடையே சச்சரவைத் தவிர்க்க யோகத்தின் தலைவன் {சிவன்}, தனது யோக சக்தியால் தன்னை ஒரு கோடி உருவங்களாகப் பெருக்கிக் கொண்டு, அவர்கள் ஒவ்வொரு முன்பும் நின்றான். அனைத்து முனிவர்களும், "நானே அவனை முதலில் கண்டேன்" என்று சொன்னார்கள். ஆன்மாக்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆழ்ந்த அர்ப்பணிப்பு கொண்ட அந்த முனிவர்களிடம் திருப்தி கொண்ட மகாதேவன், அவர்களுக்கு வரமாக, "இந்த நாள் முதல் உங்கள் தர்மம் பெருகட்டும்" என்று சொன்னார்.

ஓ மனிதர்களில் புலியே {பீஷ்மனே}, சுத்தமான மனதுடன் ருத்திரகோடியில் நீராடும் ஒருவன் குதிரை வேள்வி செய்யும் பலனை அடைந்து, தனது முன்னோர்களை விடுவிக்கிறான். பிறகு ஒருவன், ஓ மன்னா {பீஷ்மா}, பெரிதும் புனிதமான கொண்டாடப்படும் பகுதியான சரஸ்வதி கடலில் சங்கமிக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும். ஓ மன்னா, அங்கே, பிரம்மனின் தலைமையில் தேவர்களும், தவத்தைச் செல்வமாகக் கொண்ட முனிவர்களும், சித்திரை மாதத்தின் வளர்பிறை பதினான்காம் நாளில் {சதுர்த்தசியில்} கேசவனை வழிபடுகிறார்கள். ஓ மனிதர்களில் புலியே, அங்கே நீராடுவதால் ஒருவன் அபரிமிதமான தங்கத்தைத் தானமாகக் கொடுத்த பலனை அடைந்து தனது அனைத்துப் பாவங்களையும் கழுவிக்கொண்டு, பிரம்மனின் உலகத்திற்கு உயர்கிறான். ஓ மன்னா, அந்த இடத்தில் முனிவர்கள் பலர் பல வேள்விகளைச் செய்திருக்கிறார்கள்.  அந்தப் பகுதிக்குச் செல்வதால் ஒருவன் ஆயிரம் பசுக்களைக் கொடையாகக் கொடுத்த பலனை அடைகிறான்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்