Sunday, January 26, 2014

தீர்த்தங்களான சமந்தபஞ்சகம்! - வனபர்வம் பகுதி 83அ

Samanthapanchaka declared as Thirtha! | Vana Parva - Section 83a | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களை பீஷ்மரிடம் சொல்லும் புலஸ்தியர்

புலஸ்தியர் {பீஷ்மரிடம்} சொன்னார், "ஓ மன்னா {பீஷ்மா}, அடுத்து ஒருவன், எதைப் பார்ப்பதாலேயே அனைத்துப் பாவங்களில் இருந்தும் அனைத்து உயிரினங்களும் விடுபடுமோ அந்த வணங்கப்படும் குருக்ஷேத்திரத்திற்குச் செல்ல வேண்டும். "நான் குருக்ஷேத்திரத்தில் வாழ்வேன்" என்று தொடர்ச்சியாகச் சொல்லும் ஒருவன் தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். காற்றால் அடித்துக் கொண்டுவரப்பட்ட குருக்ஷேத்திரத்தின் தூசி கூட ஒரு மனிதனை (அடுத்த பிறவியில்) அருள் வாழ்க்கை வாழ வைக்கும்.


சரஸ்வதிக்குத் {நதி} தெற்கிலும், திருஷத்வதிக்கு {நதி} வடக்கிலுமுள்ள குருக்ஷேத்திரத்தில் வசிக்கும் யாவரும் சொர்க்கத்திலேயே வசிக்கிறார்கள் என்றே சொல்லப்படுகிறது. ஓ வீரனே {பீஷ்மனே}, ஓ வீரர்களில் முதன்மையானவனே, ஒருவன் அங்கு ஒரு மாதத்திற்கு வசிக்க வேண்டும். ஓ பூமியின் தலைவா {பீஷ்மா}, அங்கே இருக்கும் பெரும் புனிதம் நிறைந்த பிரம்மக்ஷேத்திரத்திற்கு பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களும், முனிவர்களும், சித்தர்களும், சாரணர்களும், கந்தர்வர்களும், அப்சரஸ்களும், யக்ஷர்களும், நாகர்களும், ஓ பாரதா {பீஷ்மா} அடிக்கடி வருவார்கள்.

ஓ வீரர்களில் முதன்மையானவனே {பீஷ்மனே}, குருக்ஷேத்திரத்திற்குச் செல்ல வேண்டும் என்று ஒருவன் மனதால் நினைத்தாலும் அவனது பாவங்கள் அனைத்தும் அழிந்து, கடைசியாக அவன் பிரம்மனின் உலகத்தை அடைகிறான். ஓ குரு குலத்தின் மகனே, பக்தியுடைய மனதுடன் குருக்ஷேத்திரத்திற்குச் செல்பவன், ராஜசூய வேள்வி மற்றும் குதிரை வேள்விகளைச் செய்த பலனை அடைகிறான்.

பிறகு பெரும் பலசாலியும் (குபேரனின்) வாயில் காப்போனுமான யக்ஷன் மங்கநகனை {மந்துகனை_Yaksha called Mankanaka} வணங்குவதால், ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். ஓ அறம்சார்ந்த மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன் ஹரி எப்போதுமே இருக்கும் விஷ்ணுவின் பகுதிக்குச் செல்ல வேண்டும். அங்கே நீராடி பிறகு மூவுலகங்களின் படைப்பாளனான ஹரியை வணங்கும் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து விஷ்ணுவின் உலகத்திற்குச் செல்கிறான்.

பாரதா {பீஷ்மா}, பிறகு ஒருவன் மூன்று உலகங்களாலும் கொண்டாடப்படும் தீர்த்தமான பரிப்லவம் {Pariplava} என்ற தீர்த்தத்திற்குச் சென்று (அங்கு நீராடி), அக்னிஷ்டோமா மற்றும் அதிரத்ரா வேள்விகளைச் செய்வதைவிட அதிகமான பலனை அடையலாம். பிறகு, பிருத்வி தீர்த்ததை {Prithivi அடைந்து அங்கு ஆயிரம் பசுக்களைத் தானமாகக் கொடுத்த பலனை அடையலாம். ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு ஒரு பயணி சாலூகினி {Shalukini}சென்று, அங்கு தசாஸ்வமேதத்தில் நீராடி {Dasaswamedha} பத்து குதிரை வேள்விகளைச் செய்த பலன்களை அடையலாம். பிறகு நாகர்களின் அற்புதமான தீர்த்தமான சர்ப்பதேவி {Sarpadevi} என்ற தீர்த்தத்திற்குச் செல்லும் ஒருவன், அக்னிஷ்டோம வேள்வி செய்த பலனைப் பெற்று நாக உலகத்தை அடைவான். ஓ அறம்சார்ந்தவனே {பீஷ்மா}, பிறகு ஒருவன் வாயில் காப்போனான துவாரரக்ஷகனை {அருந்துகனை_Tarantuka} அடைய வேண்டும். பிறகு அங்கே ஒரு நாள் தங்குவதால், ஆயிரம் பசுக்களைத் தானமாகக் கொடுத்த பலனை அடையலாம். பிறகு புலன்களை அடக்கி, முறையான உணவு முறையுடன் பஞ்சநதத்தை {Panchananda} அடைந்து அங்கே கோடி {koti} என்ற தீர்த்தத்தில் நீராடி ஒரு குதிரை வேள்வியின் பலனை அடையலாம். பிறகு அசுவினி {Aswins} இரட்டையர்களின் தீர்த்தத்தை அடைவதால் ஒருவன் மேனி அழகைப் பெறலாம்.

ஓ அறம்சார்ந்தவனே {பீஷ்மா}, எங்கும் நிறைந்த விஷ்ணு வராக வடிவத்துடன் இருந்த வராக தீர்த்தத்தை {Varaha} அடைய வேண்டும். ஓ மனிதர்களில் முதன்மையானவனே, அங்கே நீராடுவதால் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைகிறான். ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன், ஜெயந்தியில் உள்ள சோம தீர்த்தத்தை {tirtha called Sama in Jayanti} அடைந்து அங்கே நீராடுவதால் ராஜசூய வேள்வி செய்த பலனை அடைகிறான். பிறகு, {Ekahansa} ஏகஹம்சத்தில்  நீராடும் ஒருவன் ஆயிரம் பசுக்களைத் தானம் கொடுத்த பலனை அடைகிறான். ஓ மன்னா {பீஷ்மா}, கிருதசௌச்சத்தை {Kritasaucha}அடையும் ஒரு பயணி சுத்தமான ஆன்மாவுடன் தாமரைக் கண் தெய்வத்தை (விஷ்ணுவை) அடைகிறான். பிறகு ஒருவன், முஞ்சவடம் {Munjavata} என்ற சிறப்பு மிகுந்த ஸ்தாணுவின் இடத்தை அடைய வேண்டும். அங்கே ஒரு இரவு உணவருந்தாமல் தங்குபன், கணபத்தியம் {கணங்களின் தலைவன்} என்ற நிலையை அடைகிறான். ஓ மன்னா {பீஷ்மா}, அங்கே யக்ஷிணி {tirtha called Yakshini} என்ற கொண்டாடப்படும் தீர்த்தமொன்று இருக்கிறது. அந்தத் தீர்த்தத்திற்குச் சென்று, அங்கே நீராடுபவன், தனது விருப்பங்கள் அனைத்தும் கனியும் வரத்தைப் பெறுகிறான். ஓ பாரதகுலத்தின் காளையே {பீஷ்மா}, அந்தத் தீர்த்தமே குருக்ஷேத்திரத்தின் வாயிலாகக் கருதப்படுகிறது. பிறகு ஆன்மாவை ஒருமுகமாக்கிக் கொண்ட பயணி அதை வலம் வர வேண்டும். புஷ்கரங்களுக்கு இணையான அது, ஜமதக்னியின் மகனான உயர் ஆன்ம ராமனால் {பரசுராமனால்} உருவாக்கப்பட்டது. அங்கே நீராடி, பித்ருக்களையும், தேவர்களையும் வணங்கும் ஒருவன், ஓ மன்னா {பீஷ்மா}, குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து அனைத்திலும் வெற்றிவாகை சூடுபவனாகிறான்.

பிறகு ஒரு பயணி ஒருமுகமான ஆன்மாவுடன் ராமஹ்ரதம் {Rama-hrada}என்ற இடத்தை அடைய வேண்டும். ஓ மன்னா {பீஷ்மா}, அங்கே பெரும் சக்தி படைத்த ராமன் {பரசுராமன்} தனது பலத்தால் க்ஷத்திரியர்களை அழித்து, ஐந்து தடாகங்களை {சமந்தபஞ்சகம் என்று முன்பே பார்த்திருக்கிறோம்} ஏற்படுத்தி, ஓ மனிதர்களில் புலியே {பீஷ்மா}, தன்னால் பலியானவர்களின் இரத்தத்தால் அவற்றை நிரப்பினான் என்று நாம் கேள்விப் படுகிறோம். அந்தத் தடாகங்களை க்ஷத்திரியர்களின் குருதியால் நிரப்பிய ராமன், தனது தந்தைக்கும், பாட்டன்களுக்கும் நீர்க்கடனைச் செலுத்தினான். இதனால் (நீர்க்கடனால்) திருப்தியடைந்த அந்த முனிவர்கள் ராமனிடம் {பரசுராமனிடம்}, "ஓ ராமா, ஓ ராமா, ஓ பெரும் நற்பேறு பெற்றவனே, நாங்கள் உன்னிடம் திருப்தியடைந்தோம். ஓ பிருகு குலத்தவனே, பித்ருக்கள் மீதான உனது மரியாதைக்கும், உனது வீரத்திற்கும், ஓ மேன்மையானவனே, நீ அருளப்பட்டிரு. நீ விரும்பும் வரத்தைக் கேள். ஓ பெரும் பிரகாசம் கொண்டவனே, நீ என்ன விரும்புகிறாய்?" என்று கேட்டனர்.

இப்படி (அவர்களால்) கேட்கப்பட்ட அடிப்பவர்களில் முதன்மையான ராமன், கரங்களைக் கூப்பியபடி அந்தரத்தில் நின்றுகொண்டிருந்த அப்பித்ருக்களிடம்,  "நீங்கள் என்னிடம் திருப்தியடைந்திருந்தால், நான் உங்கள் அருளுக்குத் தகுதிபடைத்தவனென்றால், ஓ பித்ருக்களே, எனக்கு மீண்டும் தவச்சடங்குகளில் மகிழ்ச்சி உண்டாக வேண்டும் என்று கோருகிறேன். மேலும், கோபத்தால் க்ஷத்திரிய குலத்தை அழித்த பாவம் அனைத்திலும் இருந்து உங்கள் சக்தியால் நான் விடுபட வேண்டும். எனது இந்தத் தடாகங்களும் உலகத்தோரால் தீர்த்தங்களெனக் கொண்டாடப்படட்டும்" என்று கேட்டான். ராமனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட பித்ருக்கள் பெரும் திருப்தியும், மகிழ்ச்சியும் கொண்டு அவனிடம், "பித்ருக்களுக்கான உனது மரியாதையால் உனது தவம் பெருகட்டும். நீ உனது கோபத்தால் க்ஷத்திரிய குலத்தை அழித்துவிட்டாய். அவர்கள் தங்கள் தீச்செயல்களால் அழிந்ததால், நீ ஏற்கனவே அந்தப் பாவத்தில் இருந்து விடுபட்டுவிட்டாய். இந்த உனது தடாகங்கள் சந்தேகமற தீர்த்தங்களாகவே ஆகும். இந்தத் தீர்த்தங்களில் நீராடும் ஒருவன், பித்ருக்களுக்கு நீர்க்கடன் செலுத்தினால், பித்ருக்கள் திருப்தியடைந்து, இவ்வுலகத்தில் சாதிக்கக் கடினமான அவனது விருப்பங்கள் நிறைவேறும் வரத்தை அவனுக்கு அளிப்பார்கள்" என்றனர்.

ஓ மன்னா {பீஷ்மா}, இந்த வரங்களை அருளிய பித்ருக்கள் பிருகு குல ராமனை {பரசுராமனை} மகிழ்ச்சியுடன் வணங்கி அங்கேயே மறைந்து போனார்கள். இப்படியே பிருகு குலத்தின் சிறப்புவாய்ந்த ராமனால் உண்டாக்கப்பட்ட அத்தடாகங்கள் புனிதமாகின. ஒருவன் பிரம்மச்சரிய வாழ்வுமுறை மேற்கொண்டு, புனிதமான நோன்புகள் நோற்று ராமனின் தடாகங்களில் நீராட வேண்டும். ஓ மன்னா {பீஷ்மா}, அங்கே நீராடி ராமனை {பரசுராமனை} வழிபடுவதால், ஒருவன் அபரிமிதமான தங்கத்தைத் தானம் கொடுத்த பலனை அடைகிறான்.



இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்