Sunday, January 26, 2014

நாரதரால் கிட்டும் நிகரற்ற உலகங்கள்! - வனபர்வம் பகுதி 83ஆ

Unrivalled regions attained through Narada! | Vana Parva - Section 83b| Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

தீர்த்தங்களில் நீராடுவது மற்றும் நோன்பிருப்பதன் பலன்களைப் பீஷ்மருக்குச் சொல்லும் புலஸ்தியர்

புலஸ்தியர் {பீஷ்மரிடம்} சொன்னார், "ஓ குருகுலத்தின் மகனே {பீஷ்மா}, அதன்பிறகு ஒரு பயணி வம்சமூலகத்தை {Vansamulaka} அடைந்து அங்கே நீராடுவதால் தனது குலத்தை வளர்க்கும் பலனைப் பெறுகிறான்.. ஓ பாரதர்களில் சிறந்தவனே {பீஷ்மா}, பிறகு காயசோதனம் என்ற தீர்த்தத்தை {Kayasodhana} அடையும் ஒருவன் அங்கே நீராடி, தன்னைச் சுத்திகரித்துக் கொண்ட பிறகு, சுத்திகரித்துக் கொண்ட அந்த உடலுடன் நிகரற்ற சிறந்த பேறு கொண்ட உலகத்தை சந்தேகமற அடைவான். ஓ அறம்சார்ந்தவனே {பீஷ்மா}, பிறகு ஒருவன், எந்த இடத்தில் பெரும் சக்தி கொண்ட விஷ்ணுவால் உலகங்கள் படைக்கப்பட்டனவோ, லோகோத்தாரம் {Lokoddara} என்ற பெயரால் மூவுலகங்களிலும் புகழ்பெற்ற அந்தத் தீர்த்தத்தை அடைய வேண்டும். மூவுலகங்களாலும் வழிபடப்படும் அந்தத் தீர்த்தத்தை அடையும் ஒருவன், ஓ மன்னா {பீஷ்மா}, அங்கே நீராடி எண்ணிலடங்கா உலகங்களைத் தானே ஈட்டிக் கொள்கிறான். பிறகு ஸ்ரீ எனும் தீர்த்தத்தை {tirtha called Sree} அடையும் ஒருவன் அங்கே நீராடி, பித்ருக்களையும், தேவர்களையும் வழிபட்டு உயர்ந்த செழிப்பை அடைகிறான்.


பிரம்மச்சரிய வாழ்வு முறையை மேற்கொண்டு, ஒருமுகம் கொண்ட ஆன்மாவுடன் ஒருவன் அடுத்ததாக கபிலம் என்ற தீர்த்தத்தை {tirtha called Kapila} அடைய வேண்டும். அங்கே நீராடி, தனது சொந்த பித்ருக்களையும், தேவர்களையும் வழிபடும் மனிதன் ஆயிரம் கபில வகை பசுக்களைத் தானம் செய்த பலனை அடைகிறான். பிறகு சூரியன் என்ற தீர்த்தத்தை {tirtha called Surya}  அடைந்து அங்கே நீராடி கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன் பித்ருக்களையும் தேவர்களையும் வணங்கி, முழுவதும் உண்ணாதிருப்பவன் அக்னிஷ்டோமா வேள்வியின் பலனை அடைந்து (கடைசியாக) சூரியனின் உலகத்தை அடைகிறான். பிறகு ஒரு பயணி கோபவனம் என்ற தீர்த்தத்தை {Gobhavana} அடைந்து அங்கே நீராடும் ஒருவன் ஆயிரம் பசுக்களை தானம் கொடுத்த பலனை அடைகிறான். ஓ குரு குலத்தின் மகனே {பீஷ்மா}, பிறகு ஒரு பயணி சங்கினீ என்ற தீர்த்தத்தை {tirtha called Shankhini} அடைந்து, அங்கே இருக்கும் தேவி தீர்த்தத்தில்{Devi-tirtha}நீராடி பெரும் பராக்கிரமத்தை அடைகிறான். ஓ மன்னா, பிறகு ஒருவன் சரஸ்வதியில் அமைந்திருக்கும் தரந்தகம் என்ற தீர்த்தத்தை {Tarandaka }அடைய வேண்டும். அந்தத் தீர்த்தம் யக்ஷர்களின் சிறப்புமிகுந்த தலைவனும் குபேரனின் வாயில் காப்போனுமான {துவாரரக்ஷகனின்) யக்ஷனின் தீர்த்தமாகும். ஓ மன்னா, அங்கே நீராடும் ஒருவன் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைகிறான்.

ஓ அறம்சார்ந்த மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன் பிரம்மவர்த்தம் {tirtha called Brahmavarta) என்றழைக்கப்படும் தீர்த்தத்தை அடைய வேண்டும். பிரம்மவர்த்தத்தில் நீராடும் ஒருவன் பிரம்மனின் உலகத்திற்கு உயர்கிறான். ஓ மன்னா, பிறகு ஒருவன் சுதீர்த்தம் {tirtha called Sutirtha} என்றழைக்கப்படும் அற்புதமான தீர்த்தத்தை அடைய வேண்டும். அங்கே தேவர்களுடன் சேர்ந்து பித்ருக்களும் நேரடியாகவே வசிக்கின்றனர். ஒருவன் அங்கே நீராடி பித்ருக்களையும் தேவர்களையும் வணங்க வேண்டும். இப்படிச் செய்வதால் ஒருவன் குதிரை வேள்வி செய்த பலனை அடைந்து (கடைசியாக) பித்ருக்களின் உலகத்தை அடைகிறான். இதன் காரணமாகவே ஓ அறம் சார்ந்தவனே {பீஷ்மா}, அம்புமதியில் {Amvumati} அமைந்திருக்கும் சுதீர்த்தம் அற்புதமானதாகக் கருதப்படுகிறது. ஓ பாரத குலத்தில் சிறந்தவனே, பிறகு காசீஸ்வரனின் {கோசேஸ்வரனின்} தீர்த்தத்தில் {Kasiswara} நீராடி ஒருவன் அனைத்து நோயிலும் இருந்து விடுபட்டு, வழிபடப்படும் பிரம்மனின் உலகத்தை அடைகிறான். பிறகு, அங்கே மாத்ரி {மாத்ரு} {Matri} என்று அழைக்கப்படும் தீர்த்தத்தில் நீராட  வேண்டும். மாத்ரி தீர்த்தத்தில் நீராடும் ஒருவன், ஓ மன்னா, பெரும் புத்திரப்பேறையும், பெரும் செழிப்பையும் அடைகிறான்.

பிறகு ஒருவன், கட்டுப்படுத்தப்பட்ட புலனுடனும், முறையான உணவுப்பழக்கத்துடனும் சீதவனம் {tirtha called Shitavanatirtha} என்றழைக்கப்படும் தீர்த்தத்தை அடைய வேண்டும். ஓ பெரும் மன்னா {பீஷ்மா}, வேறு எந்தத் தீர்த்தத்திற்கும் இல்லாத பலன் இந்தத் தீர்த்தத்திற்குச் சொல்லப்படுகிறது. ஒருவன் இங்கே செல்வதாலேயே புனிதத்தை அடைகிறான். தனது முடியை அந்தத் தீர்த்தத்ததில் கைவிடுவதால் {மழிப்பதால்} {தலை மயிரில் நீர் தெளிப்பதால் என்று வடமொழி மூலத்தில் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். ஆனால் கங்குலியின் ஆங்கில மொழிபெயர்ப்பில் casting off his hair என்றே இருக்கிறது}, ஓ பாரதா, ஒருவன் பெரும் அருளுடைமையை அடைகிறான். அங்கேயே இருக்கும் மற்றொரு தீர்த்தம் ஸ்வாவிலோமபாக {ஸ்வானலோமாபநயன} தீர்த்தம் {Shwavillomapaha} என்ற பெயரில் இருக்கிறது. ஓ மனிதர்களில் புலியே {பீஷ்மா}, அந்த நீரில் மூழ்கி கற்ற அந்தணர்கள் பெரும் திருப்தியை அடைகிறார்கள். ஓ மன்னா, நல்ல அந்தணர்கள், தங்கள் முடியை அந்தத் தீர்த்தத்தில் கைவிட்டு பிராணாயமத்தால் புனித நிலையை அடைந்து, கடைசியாக உயர்ந்த நிலையை அடைகின்றனர். ஓ மன்னா, அங்கே அந்தத் தீர்த்தத்தில் தசாஸ்வமேதிகா என்ற பெயருடைய தீர்த்தமும் {Dasaswamedhika} இருக்கிறது. ஓ மனிதர்களில் புலியே, அங்கே நீராடும் ஒருவன் உயர்ந்த நிலையை அடைகிறான்.

ஓ மன்னா {பீஷ்மா}, பிறகு ஒருவன் மனுஷ தீர்த்தம் என்ற தீர்த்தத்தை {tirtha called Manusha }அடைய வேண்டும். ஓ மன்னா வேடர்களின் கணைகளால் துன்புற்ற கருப்பு நிற மான்கள் அதன் நீரில் மூழ்கி மனித உருவை அடைந்தன. பிரம்மச்சரிய வாழ்வுமுறை கொண்டு, ஒருமுகமான ஆன்மாவுடன் ஒருவன் அந்தத் தீர்த்தத்தில் நீராடுவதால் தனது அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டு சொர்க்கத்தில் வழிபடப்படுகிறான். மனுஷ தீர்த்தத்திற்கு கிழக்கில் ஒரு குரோச தூரத்தில் சித்தர்கள் ஓய்ந்திருக்கும் ஆபாகம் என்ற ஆறு இருக்கிறது. அந்த இடத்தில் எவன் பித்ருக்களையும், தேவர்களையும் வழிபட்டு சாமை அரிசியைத் தானமளிக்கிறானோ, அவன் பெரிதான அறப்பலன்களை அடைகிறான். அங்கே ஒரு அந்தணனுக்கு உணவளிக்கப்பட்டாலும், அது ஒரு கோடி அந்தணர்களுக்கு உணவளித்ததற்கு இணையாகும். அந்தத் தீர்த்தத்தில் நீராடி, தேவர்களையும் பித்ருக்களையும் வழிபட்டு, ஒரு இரவு தங்கும் மனிதன் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைகிறான்.

ஓ மன்னா, பிறகு ஒருவன், பிரம்மனின் இடமான பிரம்மோதும்பரம் {Brahmodumvara} என்ற பெயரால் பூமியில் அறியப்படும் இடத்தை அடைய வேண்டும். ஏழு முனிவர்கள் இருக்கும் அந்தக் குளத்திலும், உயர் ஆன்ம கபிலரின் கேதாரம் என்ற தீர்த்தத்திலும் சுத்தமான மனதுடனும், கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடனும் நீராடும் ஒருவன் அங்கே இருக்கும் பிரம்மனைக் கண்டு, அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டு, பிரம்மனின் உலகத்தை அடைகிறான். கபிலரின் அணுகமுடியாத தீர்த்தமான கேதாரத்தை {tirtha called Kedara} அடைந்து, தனது தவ நோன்புகளால் தனது பாவங்களனைத்தையும் எரிக்கும் ஒருவன், விரும்பும் போது {அரூபமாக} மறையும் சக்தியை {அந்தர்த்தான சக்தியை} அடைகிறான். ஓ மன்னா {பீஷ்மா} பிறகு ஒருவன், சரகம் {சங்கர} என்று அழைக்கப்படும் தீர்த்தத்திற்குச் {tirtha called Saraka} சென்று அங்கே தேய்பிறையின் பதினான்காம் நாளில் {சதுர்த்தசியில்} மகாதேவனைக் {சிவனைக்} காணும் ஒருவன் தனது விருப்பங்கள் ஈடேறி சொர்க்கம் அடைகிறான்.

ஓ குருகுலத்தின் மகனே {பீஷ்மா}, சரகம், ருத்ரகோடி மற்றும் அங்கிருக்கும் கிணறுகள் மற்றும் தடாகங்களில் மூன்று கோடி {30 million} தீர்த்தங்கள் இருக்கின்றன. ஓ பாரதர்களின் தலைவனே {பீஷ்மா}, அங்கே அந்தத் தீர்த்தத்ததில் இலஸ்பதம் {சுத்தாஸ்பதம்} {Ilaspada.} என்ற பெயர் கொண்ட தீர்த்தமும் இருக்கிறது. அங்கே நீராடி, தேவர்களையும் பித்ருக்களையும் வழிபடும் ஒருவன், என்றும் நரகத்தில் மூழ்காது வாஜபேய வேள்வியின் கனியை அடைகிறான். பிறகு கிந்தானம், கிஞ்சப்பியம் {Kindana and Kinjapya} எனும் தீர்த்தங்களை அடையும் ஒருவன், ஓ பாரதா {பீஷ்மா} எண்ணிலடங்கா தானங்களும், கணக்கிலடங்கா வழிபாடுகளும் செய்த பலனை அடைகிறான். பிறகு, கலசீ என்ற பெயர் கொண்ட தீர்த்தத்தில் {tirtha called Kalasi } அர்ப்பணிப்புடனும், புலன்களைக் கட்டுப்படுத்தியும் நீராடும் மனிதன் அக்னிஷ்டோமா வேள்வி செய்த பலனை அடைகிறான். ஓ குருக்களின் தலைவா {பீஷ்மா}, சரகத்தின் {சங்கரத்தின்} கிழக்கே, உயர் ஆன்ம நாரதரின் அனாஜன்மா {அஜானந்தை-Anajanma என்ற பெயர் கொண்ட தீர்த்தமொன்று இருக்கிறது. அங்கே நீராடும் ஒருவன், ஓ பாரதா {பீஷ்மா}, தனது இறப்புக்குப் பிறகு, நாரதரின் கட்டளையின் பேரில் பலவகையான நிகரற்ற உலகங்களுக்குச் செல்கிறான்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்