Tuesday, February 25, 2014

பேசுபவர்கள் மீது கல்லெறிந்த மலை! - வனபர்வம் பகுதி 110அ

The hill threw stones on utterers! | Vana Parva - Section 110a| Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

யுதிஷ்டிரன் ஹேமகூட மலையில் சில அதிசயங்களைக் காண்பது; பிறகு நந்தை அபரநந்தை ஆகிய நதிகளில் நீராடி கௌசி நதி இருக்கும் இடத்திற்கு செல்வது; லோமசர் யுதிஷ்டிரனுக்கு ரிஷ்யசிருங்கரின் கதையைச் சொல்ல ஆரம்பிப்பது...

வைசம்பாயனர் {ஜனமேஜயா} சொன்னார், "ஓ! பாரதகுலத்தில் தலைவா {ஜனமேஜயா}! பிறகு குந்தியின் அந்த மகன் {யுதிஷ்டிரன்}, பாவங்கள் குறித்த பயத்தை அழிக்கும் தன்மை கொண்ட நந்தை, அபரநந்தை ஆகிய இரு நதிகளை மெதுவாக அடைந்தான். பிறகு அந்த மனிதர்களின் பாதுகாவலன் {யுதிஷ்டிரன்}, ஆரோக்கியத்திற்கு இருப்பிடமான *ஹேமகூடம்1 என்ற மலையை அடைந்து, அங்கே வியப்பிற்குரிய, ஆச்சரியப்படத்தக்க காட்சிகள் பலவற்றைக் கண்டான். அங்கே ஏதும் வார்த்தைகளை உச்சரித்தாலே, உடனே மேகங்கள் கூடின, ஆயிரக்கணக்கான கற்களும் விழுந்தன. இக்காட்சியைக் கண்ட மக்கள் துயருற்று, அந்த மலையை ஏற இயலாதவர்களானார்கள். அங்கே எப்போதும் காற்று வீசிக்கொண்டிருந்தது, வானம் எப்போதும் மழையைக் கொட்டிக் கொண்டே இருந்தது. மேலும் புனித ரித்துகளின் ஒலி {வேத ஒலி} கேட்டுக் கொண்டிருந்தாலும், அங்கே {வேதம் உரைப்பவர்கள்} யாரும் தென்படவில்லை.


மாலையிலும், காலையிலும் தேவர்களுக்குக் காணிக்கைகளைச் சுமந்து செல்லும் அருள் நிறைந்த நெருப்பு அங்கே தென்பட்டது. தவப்பயிற்சிகள் தடைபடும் வண்ணம் அங்கே பூச்சிகள் கடித்தன. அங்கே ஆன்மாவைச் சோகம் பீடித்து, மனிதர்கள் நோய்வாய்ப்பட்டனர். இதைப் போன்ற பல விசித்திரமான குணங்களைக் கண்ட பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, மீண்டும் இந்த அற்புத காரியங்கள் குறித்து லோமசரிடம் கேட்டான்.

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! எதிரிகளைக் கொல்வபனே, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, நாங்கள் ஏற்கனவே கேட்டவற்றை இப்போது நான் சொல்லப் போகிறேன். அதைக் கவனமான மனதுடன் கேள். ரிஷபம் என்ற இந்தச் சிகரத்தில், முன்பொரு சமயம் அதே பெயர் {ரிஷபர்} கொண்ட தவசி ஒருவர் இருந்தார். அவர் பல நூறு வருடங்கள் தனது உயிரைத் தக்க வைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தார். நோன்புகளுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த அவர் மிகுந்த கோபக்காரராகவும் இருந்தார். அவர் {ரிஷபர்} பலபேர் தன்னைக் குறித்துப் பேசுவதைக் கண்டு கோபத்துடன் அந்த மலையிடம், "இங்கே வார்த்தைகளை உச்சரிக்கும் எவர் மீதும், நீ கற்களை எறியவேண்டும். மேலும் அவன் ஒலி எழுப்புவதைத் தடுக்கும் வண்ணம் நீ காற்றையும் அழைக்க வேண்டும்" என்றார். இதுதான் அந்தத் தவசி {ரிஷபர்} சொன்னது.

ஆக இந்த இடத்தில் எந்த மனிதனும் வார்த்தைகளை உச்சரித்தால், அவன் கர்ஜிக்கும் மேகங்களால் தடைசெய்யப்படுகிறான். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இப்படி இந்தக் காரியங்கள் அனைத்தும் அந்தப் பெருந்தவசியால் ஏற்பட்டது. கோபத்தால் அவர் மற்றச் செயல்களுக்கும் {இங்கே} தடையேற்படுத்தினார். ஓ மன்னா! பழங்காலத்தில் தேவர்கள் நந்தைக்கு வந்த போது, திடீரென அந்தத் தேவர்களைப் பார்க்க நிறைய மனிதர்கள் (அங்கே) கூடினர். இருப்பினும் தேவர்களும், அவர்களின் தலைவனான இந்திரனும் தாங்கள் அவர்களால் காணப்படுவதை விரும்பாததால், அந்த இடத்தில் மலைகளின் உருவில் தடைகளை ஏற்படுத்தி அதை அடைவதற்கரியதாக மாற்றினர். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}!, அந்த நாள் முதல், மலைபோல் தெரியும் அதன் மேல் மனிதர்கள் தங்கள் பார்வையை எப்போதும் செலுத்த முடியவில்லை. பார்த்தாலும், அவர்களால் அதை ஏற முடியவில்லை.

தவவாழ்க்கை வாழாத எவரும் அந்தப் பெரிய மலையைக் காண முடியாது, காண முடிந்தாலும் அதை ஏற முடியாது. ஆகையால், ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}! உனது நாவைக் கட்டுக்குள் வை. அந்தக் காலத்தில் அந்தத் தேவர்கள் அனைவரும் அங்கேதான் சிறந்த வேள்விச் சடங்குகளைச் செய்தனர். ஓ! பரதனின் மகனே {யுதிஷ்டிரா}, இந்த நாளில் கூட நாம் அக்குறிப்புகளை அங்கே காணலாம். இங்கே இருக்கும் புல்கூடப் புனிதமான குசப்புல் {வெட்டிவேர்} போன்ற உருவைக் கொண்டிருக்கிறது. இங்கே இருக்கும் தரை, புனிதமான புற்களால் மூடப்பட்டிருக்கிறது. ஓ! மனிதர்களின் தலைவா! இங்கே இருக்கும் பல மரங்கள், பலி விலங்குகள் கட்டப்படும் இடங்கள் போலவே இருக்கின்றன.

ஓ! பரதனின் மகனே {யுதிஷ்டிரா}, தேவர்களும், தவசிகளும் இங்கே இன்னும் தங்கள் வசிப்பிடங்களை வைத்திருக்கின்றனர். அவர்களது புனித நெருப்பு {வேள்வி நெருப்பு} காலையிலும் மாலையிலும் காணப்படுகிறது. ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, இங்கே நீராடும் ஒருவனின் பாவம் உடனே அழிக்கப்படுகிறது. ஓ குருகுலத்தில் மிகவும் போற்றத்தக்கவனே {யுதிஷ்டிரா}, நந்தையில் நீ நீராடிய பிறகு, விஸ்வாமித்திரர் கடுந்தவம் இருந்த அற்புதமான இடமான கௌசிகி நதிக்குச் செல்ல வேண்டும்" என்றார் {லோமசர்}. பிறகு மன்னனும் {யுதிஸ்டிரன்} தனது சேவகர்களுடன் தனது உடலை அங்கே கழுவி கொண்டு, காண்பதற்கினிய, குளிர்ந்த, சுத்தமான நீரையுடைய கௌசிகி நதிக்குச் சென்றான்.

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, இந்தச் சுத்தமான தெய்வீக நதியின் பெயர் கௌசிகி. கவனத்தைக் கவர்கின்ற இந்த மகிழ்ச்சிகரமான ஆசிரமம் விஸ்வாமித்திரருடையது. மேலும் புனிதமான பெயரைக் கொண்ட இதோ இந்த ஆசிரமம் பலம்வாய்ந்த ஆன்மா கொண்ட காசியபருடையது. அவருக்கு நோன்புகளுக்குத் தன்னை அர்ப்பணித்து, ஆசைகளை முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ரிஷ்யசிருங்கர் என்ற மகன் ஒருவர் இருந்தார். அவர் {ரிஷ்யசிருங்கர்}, தனது நோன்புகளின் சக்தியால் இந்திரனை மழை பொழிய வைத்தார்; பேய்களான பலனையும் விருத்திரனையும் கொன்ற அந்தத் தேவன் {இந்திரன்அவர் {ரிஷ்யசிருங்கர்} மீதிருந்த பயத்தால் பஞ்ச காலத்திலும் மழையைப் பொழிந்தான். காசியபரின் பலம்வாய்ந்த சக்தி மிக்க மகன் {ரிஷ்யசிருங்கர்} பெண்மானுக்குப் பிறந்தவராவார். அவர் {ரிஷ்யசிருங்கர்} லோமபாதனின் நாட்டில் பெரிய அற்புதத்தைச் செய்தார். அவர் பயிர்களை மீட்டெடுத்த போது, மன்னன் லோமபாதன், சூரியன் தனது மகள் சாவித்திரியைக் கொடுத்தது போல, தனது மகள் சாந்தையை அவருக்குத் {ரிஷ்யசிருங்கருக்கு} திருமணம் செய்து கொடுத்தான்" என்றார் {லோமசர்}.


1. [ஹேமகூட மலை, கர்நாடக மாநிலத்தின் வடக்கே உள்ள ஹம்பி என்ற இடத்தில் இருக்கிறது. மேலே உள்ள படம் அந்த மலையின் படம்தான்]

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்