Friday, February 28, 2014

ரிஷ்யசிருங்கரிடம் வந்த விலைமகள் - வனபர்வம் பகுதி 111

The courtesan came to Rishyashringa! | Vana Parva - Section 111| Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

மன்னன் லோமபாதனிடம் உறுதி கூறி வந்த விலைமகள் ஒரு மிதக்கும் ஆசிரமத்தை அமைத்து, ரிஷ்யசிருங்கர் இருக்கும் இடத்தை அடைதல்; ரிஷ்யசிருங்கர் விலைமகளை உபசரித்தல்; சிறிது நேரம் விளையாடிவிட்டு செல்லல்; விலைமகளைப் பிரிந்ததும் ரிஷ்யசிருங்கர் சோகத்துடன் அமர்ந்திருத்தல்.; ரிஷ்யசிருங்கரின் தந்தையான விபாண்டகர் கேட்ட கேள்வி….

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! பரதனின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, மன்னனின் {லோமபாதனின்} நோக்கத்தை நிறைவேற்ற, அவனது உத்தரவின் பேரிலும், தனது திட்டம் நிறைவேறும் பொருட்டும், அவள் {விலைமகள்} ஒரு மிதக்கும் ஆசிரமத்தைத் {ஓடத்தில் ஆசிரமம்} தயார் செய்தாள். அந்த மிதக்கும் ஆசிரமத்தில் பலதரப்பட்ட கனிகள் மற்றும் மலர்களுடன் கூடிய செயற்கை மரங்களும், இனிமையான பழங்கள் கொடுக்கக்கூடிய அழகிய புதர்களும், கொடிகளும், மந்திரத்தால் வரவழைக்கப்பட்டது போன்று பார்ப்பதற்கு இனிமையாக மனதைக் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தன. அவள் அந்த ஓடத்தைக் காசியபர் மகனின் {விபாண்டகரின்} ஆசிரமத்திற்கு அருகே கட்டி, அந்தத் தவசி {விபாண்டகர்} வாடிக்கையாக வெளியே செல்லும் நேரத்தை அறிந்து வர ஆட்களை அனுப்பினாள். அவள் {விலைமகள்} ஒரு சந்தர்ப்பத்தைக் கண்டு, ஒரு திட்டம் தீட்டி, தொழிலால் விலைமகளான, சாமர்த்தியசாலியான தனது மகளை {விலைமகளை} அனுப்பினாள். அந்தப் புத்திசாலிப் பெண்ணும், அந்த ஆன்மிக மனிதனின் {ரிஷ்யசிருங்கரின்} அருகே அந்த ஆசிரமத்திற்குச் சென்று அந்தத் தவசியின் மகனைக் கண்டாள்.


அந்த விலைமகள் {ரிஷ்யசிருங்கரிடம்}, "ஓ! தவசியே! ஆன்மிக அர்ப்பணிப்பாளர்கள் {முனிவர்கள்} அனைவரும் நலமாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். உமது ஆசிரமத்தில் கனிகளும் கிழங்குகளும் அபரிமிதமாகச் சேமிக்கப்பட்டுள்ளது என நினைக்கிறேன். உம்மைக் காணவே நான் இங்கு வந்துள்ளேன். தவம்பயிலும் தவசிகளின் பயிற்சி பெருகுகிறது என்று நினைக்கிறேன். உமது தந்தையின் ஆவி தளராமல் இருக்கிறது என்றும், அவர் உம்மிடம் திருப்தியுடன் இருக்கிறார் என்றும் நினைக்கிறேன். ஓ! புரோகித சாதியைச் சேர்ந்த ரிஷ்யசிருங்கரே! உமது ஆய்வுகளைச் சரியாக முன்னெடுக்கிறீர் என்றும் நினைக்கிறேன்" என்றாள்.

ரிஷ்யசிருங்கர் {அந்த விலைமகளிடம்}, "நீர் ஒளிக்குவியல் போல ஒளிரும் காந்திமிக்கவராக இருக்கிறீர். நீர் வணக்கத்திற்குரியவர் என்று கருதுகிறேன். நான் உமது பாதங்களைக் கழுவ நீர் தருகிறேன். என்னிடம் இருக்கும் கனிகளையும் கிழங்குகளையும் நான் உமக்குத் தருகிறேன். புனிதமான புல்லால் செய்யப்பட்டு, கருப்பு மான் தோலால் மூடப்பட்ட இந்த ஆசனத்தில் திருப்தியாக, வசதியாக அமரும். உமது ஆசிரமம் எங்கே இருக்கிறது? ஓ! அந்தணரே, நீர் தேவர்களைப் போன்ற முகத்தோற்றம் கொண்டிருக்கிறீர். நீர் இப்போது கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் ஆன்மிக நோன்பு யாது?" என்று கேட்டார்.

அதற்கு அந்த விலைமகள் {ரிஷ்யசிருங்கரிடம்}, "ஓ காசியபரின் மகனே {பேரனே}, இந்த மலைகளுக்கு அப்பால் மூன்று யோஜனை தூரத்தில் ஒரு அழகான இடத்தில் எனது ஆசிரமம் இருக்கிறது. நான் உம்மைப்போன்ற மனிதர்களால் வணங்கத்தக்கவர் அல்ல. மேலும் நான் கால் கழுவவும் நீர் வாங்குவதில்லை. நான் தான் உமக்கு வணக்கங்கள் தெரிவிக்க வேண்டும். ஓ அந்தணரே! எனது கரங்களால் உம்மைக் கட்டி அணைத்துக் கொள்வதே நான் பயிலும் எனது ஆன்மிக நோன்பாகும்" என்றாள்.

ரிஷ்யசிருங்கர் {அந்த விலைமகளிடம்}, "நான் உமக்குக் கடுக்காய் கனிகள் {gallnut}, நெல்லிக்கனிகள் {myrobalan}, காரூஷக் கனிகள் {Karusha} {இது என்ன கனியென்று தெரியவில்லை}, மணற்பாங்கான இடங்களில் விளையும் வாதுமை {பாதாம், மணிப்பன்குகள்} {Inguda} மற்றும் அத்திப்பழம் {Indian fig} போன்ற கனிந்த பழங்களைக் கொடுப்பேன். அவை உமக்குத் திருப்தியைத் தந்தால் நீர் அதை மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்ளலாம்" என்றார்.

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "அவர் {ரிஷ்யசிருங்கர்} கொடுத்த ஏற்புடைய அனைத்தையும் அவள் {விலைமகள்} புறந்தள்ளினாள். பிறகு பொருந்தாத உணவுவகைகளை அவருக்குக் கொடுத்தாள். அவை ரிஷ்யசிருங்கருக்கு ஏற்புடையதாகவும், அழகானவையாகவும் இருந்தன. நறுமணமிக்க ஒரு மலர்மாலையையும், அணிந்து கொள்ள ஒளிரும் ஆடைகளையும், முதல்தரமான பானங்களையும் அவருக்கு {ரிஷ்யசிருங்கருக்கு} கொடுத்து சிரித்து மகிழ்ந்தாள். பிறகு அவரோடு விளையாடி, சிரித்து மிகவும் மகிழ்ந்தாள். அவரது பார்வையில் படும்படி அவள் பந்து விளையாடிய போது உயர்ந்து செல்லும் கொடி இரண்டாக உடைந்ததைப் போல இருந்தாள். அவரது உடலைத் தனது உடலால் அடிக்கடித் தொட்டு, மீண்டும் மீண்டும் ரிஷ்யசிருங்கரை அணைத்துக் கொண்டாள்.

பிறகு அவள் {விலைமகள்} சால, அசோக, திலக மரங்களில் இருந்து குச்சிகளை வளைத்து ஒடித்தாள். மயக்கத்தில் மூழ்கிய அவள் {விலைமகள்}, நாணம் கொண்டு அந்தப் பெரும் தவசியின் மகனை மயக்கினாள். ரிஷ்யசிருங்கரின் இதயம் தன்னால் தீண்டப்பட்டதை அறிந்த அவள் திரும்பத் திரும்பத் அவரது உடலைத் தன் உடலால் தொட்டும், பார்வையை அவர் மீது செலுத்தியும் மெதுவாக அங்கிருந்து சென்றுவிட்டாள். அப்படிச் செல்லும்போது அவள் நெருப்புக்குக் காணிக்கை செலுத்த வேண்டும் என்று அவரிடம் சொல்லிச் சென்றாள்.

அவள் {விலைமகள்} சென்ற பிறகு ரிஷ்யசிருங்கர் காதலில் மூழ்கி தனது உணர்வை இழந்தார். அவரது மனம் முழுவதும் அவளிடம் இருந்ததால் அது வெறுமையா இருந்தது. அதே நேரத்தில், தனது சாதிக்குச் சரியான கல்வியைப் பெற்று, ஆன்மிகத் தவத்தைக் கடந்த அவரது {ரிஷ்யசிருங்கரின்} இதயம் சுத்தமானதாக இருந்தது. சிங்கத்தைப் போன்ற பழுப்பு நிறக் கண்களுடனும், நகத்தின் நுனிவரையுள்ள உடல் முழுவதும் முடிகளுடனும் இருந்த காசியபரின் மகன் {விபாண்டகர்} அங்கே வந்தார். அவர் வந்து, சோகத்துடனும் தனியாகப் பெருமூச்சுவிட்டபடியும், மேல்நோக்கிய கண்களுடனும் அமர்ந்திருக்கும் தனது மகனை {ரிஷ்யசிரருங்கரைக்} கண்டார்.

துயருற்றிருந்த தனது மகனிடம் {ரிஷ்யசிருங்கரிடம்} விபாண்டகர், "என் மகனே, வேள்விக்கான விறகை இன்னும் ஏன் நீ எடுத்து வரவில்லை. தினமும் செய்ய வேண்டிய சேவைகளைச் சரியாகச் செய்திருக்கிறாய், என்று நினைக்கிறேன். வேள்விக்குத் தேவையான கரண்டிகளைச் சுத்தம் செய்விட்டாயா? கொண்டு வந்திருக்கும் பொருட்களை வைத்து நெருப்புக்கு வேள்வி செய்திருப்பாய் என்று நினைக்கிறேன். எதுவும் தேவைப்படும் நிலையில் நீ இல்லை என்று நினைக்கிறேன். ஓ! மகனே {ரிஷ்யசிருங்கனே}, நீ சோகத்துடன் உணர்விழந்து இருப்பது போலத் தெரிகிறாயே. நீ ஏன் இன்று சோகமாக இருக்கிறாய்? இந்த இடத்திற்கு யார் வந்தார் என்று என்னைக் கேட்கவிடு?" என்றார் {விபாண்டகர்}


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்