Friday, February 28, 2014

பெண்ணை வர்ணித்த ரிஷ்யசிருங்கர் - வனபர்வம் பகுதி 112

Rishyasringa described the woman! | Vana Parva - Section 112| Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

தன் தந்தையான விபாண்டகரிடம், தான் சந்தித்த அயல் மனிதரைக் குறித்து ரிஷ்யசிருங்கர் சொல்வது…

ரிஷ்யசிருங்கர் {தந்தை விபாண்டகரிடம்} சொன்னார், "இன்று இங்கே தலையில் முடி நிறைந்த கூந்தலுடைய ஒரு ஆன்மிக மாணவர் வந்தார். அவர் உயரமாகவும் இல்லை கட்டையாகவும் இல்லை. அவர் நல்ல மனமுடையவராகவும், பொன்னிறமாகவும், தாமரை இதழ்களைப் போன்ற பெரிய கண்களையுடையவராகவும், தேவரைப் போலப் பிரகாசிக்கும் அழகுடன் இருந்தார். சூரியனைப் போன்று அவர் அழகில் பிரகாசித்தார். அவரது பார்வை அருள் நிறைந்து கருமையுடன் இருந்தது. சடைபின்னிய அவரது கூந்தல் நீலமும் கருப்பும் கலந்து நீளமாகவும், நறுமணம் பூசப்பட்டும், தங்க இழைகள் பின்னப்பட்டும் இருந்தது.


அவரது கழுத்தில் வானத்தில் மின்னும் மின்னலைப் போன்ற அழகிய ஆபரணம் ஒன்று இருந்தது. அவருடைய கழுத்துக்குக் கீழே ஒரு முடி கூட இல்லாத இரண்டு சதைப் பந்துகள் மிக அழகிய உருவத்துடன் இருந்தன. அவருடைய இடை கொடிபோன்று மெலிதாகவும், நாபி அழகாகவும், விலாப்புறம் மென்மையாகவும் இருந்தன. எனது இடையில் இருக்கும் மேகலையைப் போல {அரைஞான் கயிறு} போல அவரது ஆடைக்குக் கீழே ஒரு தங்க இழை இருந்தது. அவரது பாதங்களில் அழகிய உரு கொண்ட ஏதோ ஒன்று {கொலுசு} கிளு கிளு சத்தத்தை உண்டாக்கியது. இந்த ஜெபமாலையைப் போல அவரது மணிக்கட்டிலும் இருந்த ஆபரணங்களும் அதே போன்ற ஒலியை எழுப்பின.


ஆபரணங்களுடன் அவர் நடக்கும்போது, நீரில் மகிழ்ச்சியாகத் திளைக்கும் அன்னங்கள் எழுப்பும் ஒலியைப் போல ஒரு ஒலி எழுகிறது. அவர் தனது மேனியில் அற்புதமான வடிவமைப்புடன் கூடிய ஆடை அணிந்திருந்தார். எனது ஆடைகள் அவருடையதைப் போல அழகாக இல்லை. அவரது முகம் காண்பதற்கு அழகாக இருந்தது. அடக்கப்பட்ட அவரது குரல் இதயத்துக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அவரது பேச்சு ஆண்குயிலின் பாட்டுக்கு இணையாக இருந்தது. அதைக் கேட்டபோது, அந்த இசை உள்ளிருக்கும் ஆன்மாவைத் தொட்டது. இளவேனிற்காலத்துக் காடு, தென்றலால் தழுவப்படும்போது எப்படி அருள் நிறைந்து இருக்கிறதோ அப்படி, ஓ தந்தையே {விபாண்டகரே}, காற்று அவர் மீதும் படும்போது அற்புதமான நறுமணத்தைக் கொடுக்கிறது.


தலையில் நன்றாக முடியப்பட்ட கேசமும், முன் நெற்றியில் இரண்டாகப் பிரிக்கப்பட்ட வகிடும் அவருக்கு இருக்கின்றன. அவருடைய இரண்டு கண்களும் சக்கரவாகப் பறைவைகளைப் போன்ற மிகுந்த அழகாக இருக்கின்றன. அவருடைய வலது கையில் ஒரு விசித்திரமான பழம் {பந்து} வைத்திருந்தார். அது தரையை அடைந்து, மீண்டும் மீண்டும் ஆச்சரியமான வகையில் வானத்திற்கு எழுகிறது. அவர் அதை அடித்து, தன்னைத் தானே சுற்றி, தென்றலால் நகர்த்தப்படும் மரம் போலச் சுழன்றார். ஓ! தந்தையே, நான் அவரைக் கண்ட போது, தேவர்களின் குமாரன் என நினைத்தேன். எனது இன்பமும் மகிழ்ச்சியும் அளவற்றதாக இருந்தது.

அவர் எனது உடலை அணைத்துக் கொண்டு, எனது சடா முடியைப் பிடித்து, எனது வாயை நோக்கிக் குனிந்து, அவரது வாயுடன் எனது வாயையும் பொருத்தி, மிகவும் இனிமையான ஒரு சத்ததை உண்டாக்கினார். அவர் தனது கால்களைக் கழுவ நீருக்காகக் கவலை கொள்ளவில்லை. என்னால் கொடுக்கப்பட்ட கனிகளையும் அவர் மதிக்கவில்லை. தான் கடைப்பிடிக்கும் ஆன்மிக நோன்பு இதுதான் என்று அவர் என்னிடம் சொன்னார். உயர்ந்த மனிதரான அவர் நான் பருக மிகுந்த மனம் உள்ள பானம் ஒன்றைக் கொடுத்தார். நான் அதனால் பெரும் இன்பத்தை அனுபவித்தேன். எனது கால்களுக்கு அடியில் தரை நகர்வதைப் போல உணர்ந்தேன்.

தங்க இழையால் கட்டப்பட்ட இந்த அழகிய மாலை அவருக்கே சொந்தமானது. அவர் ஆர்வத்துடனும் பக்தியுடனும் மாலைகளைப் பிரித்துப் போட்டு அவரது ஆசிரமத்திற்குத் திரும்பினார். அவருடைய பிரிவு எனது இதயத்துக்குச் சோகத்தைக் கொடுக்கிறது. எனது உணர்வுகள் எரிச்சலைக் கொடுக்கின்றன. அவரிடம் எவ்வளவு விரைவாகச் செல்ல முடியுமோ அவ்வளவு விரைவாகச் செல்ல வேண்டும் என்பது எனது விருப்பம். என்னுடன் இங்கே நடந்து திரிய எனக்கு அவர் வேண்டும். ஓ தந்தையே, இந்தக் கணமே என்னை அவரிடம் செல்ல விடுங்கள். அவர் பயிலும் ஆன்மிகப் பயிற்சி என்ன வகையானது? உயர்ந்த பக்தியுடைய அவருடன் அதே போன்ற வாழ்வு வாழ விரும்புகிறேன்.

வர் எவ்வகைத் தவம் புரிகிறாரோ அவ்வண்ணமே தவம் புரிய எனக்கு விருப்பமிருக்கிறது. அவரைக் காணாமல் இருப்பதனால் எனது மனம் துன்பமடைகிறது" என்றார் {ரிஷ்யசிருங்கர்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்