Sunday, February 16, 2014

செல்வம் தேடிய அகஸ்தியர்! - வனபர்வம் பகுதி 98

Agastya's quest for wealth! | Vana Parva - Section 98| Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

செல்வத்தைத் தேடிச் சென்ற அகஸ்தியர், மன்னர்கள் சுருதர்வான், பிரத்னஸ்வன் மற்றும் திரஸதஸ்யு ஆகியோரிடம் சென்று செல்வம் வேண்டுதல்; அவர்களது வரவு செலவுகள் சமமாக இருப்பதைக் கண்டு அவர்களிடம் இருந்து எதையும் பெறாமல், அவர்களது ஆலோசனையின் பேரில் இல்வலனிடம் செல்ல உத்தேசிப்பது...

லோமசர் தொடர்ந்தார், "ஓ குருகுலத்தின் மகனே {யுதிஷ்டிரா}, அகஸ்தியர் பிறகு, மற்ற மன்னர்களை விடச் செல்வந்தனாகக் கருதப்பட்ட மன்னன் சுருதர்வானிடம் செல்வத்தை இரந்து கேட்கச் சென்றார். அந்த ஏகாதிபதி, குடத்தில் பிறந்த முனிவர் {அகஸ்தியர்} தனது நாட்டின் எல்லைக்கு வந்திருப்பதை அறிந்து, தனது அமைச்சர்களுடன் சென்று அந்தப் புனிதமான மனிதரை மரியாதையுடன் வரவேற்றான். மன்னன், முதலில் அர்க்கியத்தைக் (நறுமணமூட்டப்பட்ட குடிநீர்) கொடுத்து, பணிவுடன் கரங்கள் கூப்பி வணங்கி, அம்முனிவரின் வருகைக்கான காரணத்தைக் கேட்டான். அதற்கு அகஸ்தியர், "ஓ பூமியின் தலைவா, செல்வம் விரும்பியே நான் இங்கு வந்திருக்கிறேன் என்பதை அறிந்து கொள். மற்றவர்கள் யாரும் பாதிக்காதவாறு உன்னால் இயன்ற பங்கை எனக்குக் கொடு" என்று கேட்டார்.


லோமசர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "வரவும் செலவும் சமமாக இருப்பதை அம்முனிவரிடம் தெரிவித்த மன்னன் {சுருதர்வான்}, "ஓ கற்றவரே, எனது உடைமைகளில் இருந்து நீர் விரும்பிய செல்வத்தை எடுத்துக் கொள்ளும்" என்று சொன்னான். இருப்பினும் எப்போதும் இருபுறமும் சம பார்வை பார்க்கும் அந்த முனிவர், ஏகாதிபதியின் வரவு செலவுகளின் சமத்தன்மையைக் கண்டு, தான் எந்தச் சூழ்நிலையிலும் மன்னனிடம் இருந்து எதை எடுத்தாலும் ஏதாவது ஓர் உயிரினம் பாதிக்கப்படும் என்பதை நினைத்துப் பார்த்தார். ஆகையால், அம்முனிவர் சுருதர்வானையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு பிரத்னஸ்வனிடம் சென்றார். பின்னவனும், தனது நாட்டின் எல்லையில் அவரது வருகையை அறிந்து உரிய முறையில் வரவேற்றான். பிரத்னஸ்வனும் அர்க்கியம் மற்றும் பாதங்களைக் கழுவிக்கொள்ள நீரும் கொடுத்தான். பிறகு அந்த ஏகாதிபதி, அவர்களின் வருகைக்கான காரணத்தைக் கேட்டான். அகஸ்தியர், "ஓ பூமியின் தலைவா, செல்வம் விரும்பியே நாங்கள் இங்கு வந்திருக்கிறோம் என்பதை அறிந்து கொள். மற்றவர்கள் யாரும் பாதிக்காதவாறு உன்னால் இயன்றதை எங்களுக்குக் கொடு" என்று கேட்டார்.

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "தனது வரவும் செலவும் சமமாக இருப்பதைக் காட்டிய அந்த ஏகாதிபதி, "இதை அறிந்த பிறகு, நீர் விரும்பியதை எடுத்துக் கொள்ளும்" என்றான். இருப்பினும் எப்போதும் இருபுறமும் சம பார்வை பார்க்கும் அந்த முனிவர், ஏகாதிபதியின் வரவு செலவுகளின் சமத்தன்மையைக் கண்டு, தான் எந்தச் சூழ்நிலையிலும் மன்னனிடம் இருந்து எதை எடுத்தாலும் அனைத்து உயிரினங்களும் பாதிக்கப்படும் என்பதை நினைத்துப் பார்த்தார். பிறகு அகஸ்தியர், சுருதர்வான் மற்றும் மன்னன் பிரத்னஸ்வன் ஆகியோர் புருகுத்சன் மகனான பெரும் செல்வம் படைத்த திரஸதஸ்யுவிடம் சென்றனர். அந்த உயர் ஆன்ம திரஸதஸ்யு தனது நாட்டின் எல்லையில் அவர்களது வருகையை அறிந்து, அங்குச் சென்று அவர்களை உரிய முறையில் வரவேற்றான். இக்ஷவாகு குலத்தில் வந்த ஏகாதிபதிகளில் சிறந்தவனான அவன், அவர்கள் அனைவரையும் உரிய முறையில் வணங்கி, அவர்கள் வருகையின் காரணத்தைக் கேட்டான். அகஸ்தியர், "ஓ பூமியின் தலைவா, செல்வம் விரும்பியே நாங்கள் இங்கு வந்திருக்கிறோம் என்பதை அறிந்து கொள். மற்றவர்கள் யாரும் பாதிக்காதவாறு உன்னால் இயன்றதை எங்களுக்குக் கொடு" என்று கேட்டார்.

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "தனது வரவும் செலவும் சமமாக இருப்பதைக் காட்டிய அந்த ஏகாதிபதி, "இதை அறிந்த பிறகு, நீர் விரும்பியதை எடுத்துக் கொள்ளும்" என்றான். இருப்பினும் எப்போதும் இருபுறமும் சம பார்வை பார்க்கும் அந்த முனிவர், ஏகாதிபதியின் வரவு செலவுகளின் சமத்தன்மையைக் கண்டு, தான் எந்தச் சூழ்நிலையிலும் மன்னனிடம் இருந்து எதை எடுத்தாலும் அனைத்து உயிரினங்களும் பாதிக்கப்படும் என்பதை நினைத்துப் பார்த்தார். பிறகு ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்த மன்னர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, அம்முனிவரிடம் ஒன்றாக, "ஓ அந்தணரே {அகஸ்தியரே}, இந்தப் பூமியில் உள்ளவர்களிலேயே அதிகச் செல்வமுடைய இல்வலன் என்ற தானவன் ஒருவன் இருக்கிறான். நாம் அனைவரும் சேர்ந்து இன்று அவனை அணுகி, செல்வத்தை இரந்து கேட்போம்" என்றனர்.

லோமசர் தொடர்ந்தார், "ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இந்தப் பரிந்துரை அவர்கள் அனைவருக்கும் சரியானதாகத் தோன்றியது. ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அதன் பிறகு அவர்கள் அனைவரும் ஒன்றாக இல்வலனிடம் சென்றார்கள்."


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்