Sunday, February 16, 2014

வாதாபியைச் செரித்த அகஸ்தியர்! - வனபர்வம் பகுதி 99அ

Agastya digested Vatapi! | Vana Parva - Section 99a| Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

செல்வத்தைத் தேடிச் சென்ற அகஸ்தியருக்கு வாதாபியின் இறைச்சியை இல்வலன் படைப்பது; வாதாபியை உண்ட அகஸ்தியர் அவனைச் செரித்தது; அகஸ்தியருக்கும், மூன்று மன்னர்களுக்கும் இல்வலன் செல்வங்களைக் கொடுத்து அனுப்பியது...

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "அந்த மன்னர்களும், பெரும் முனிவரும் {அகஸ்தியரும்} அவனது ஆட்சிப் பகுதிக்குள் வந்ததை அறிந்து இல்வலன் தனது அமைச்சர்களுடன் சென்று அவர்களை முறைப்படி வழிபட்டான். ஓ குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரா} அந்த அசுரர்களின் இளவரசன் {இல்வலன்} அவர்களை விருந்தோம்பலுடன் வரவேற்று உற்சாகப்படுத்தி, (ஆடாக மாறிய) தனது தம்பியின் {வாதாபியின்} சுத்திகரிக்கப்பட்ட இறைச்சியைக் கொடுத்தான். பெரும் பலம் வாய்ந்த அசுரனான வாதாபி ஆட்டிறைச்சியாகி சமைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அரச முனிகள் துயரமடைந்து உற்சாகமிழந்து, தங்களை இழந்தனர். ஆனால் முனிவர்களில் சிறந்த அகஸ்தியர் அந்த அரச முனிகளிடம், "வருத்தத்தை வளர்க்காதீர்கள். நான் அந்தப் பெரும் அசுரனை உண்பேன்" என்றார்.


பிறகு அந்தப் பெரும் பலம் வாய்ந்த முனிவர் {அகஸ்தியர்} அற்புதமான ஆசனத்தில் அமர்ந்தார். அசுரர்களின் இளவரசனான இல்வலன் உணவைப் புன்னகையுடன் பரிமாறினான். அகஸ்தியர் (ஆடாக மாறிய) வாதாபியின் அந்த முழு இறைச்சியையும் உண்டார். இரவு உணவு முடிந்ததும் இல்வலன் தனது தம்பியை அழைத்தான். ஆனால், ஓ! குழந்தாய் {யுதிஷ்டிரா}, அந்த முனிவரின் வயிற்றில் இருந்து ஓரளவு காற்று மட்டுமே மேகத்தின் கர்ஜனையைப் போன்ற உரத்த சத்தத்துடன் வெளி வந்தது. இல்வலன் திரும்பத் திரும்ப "ஓ! வாதாபியே, வெளியே வா" என்று சொன்னான். பிறகு முனிவர்களில் சிறந்தவரான அகஸ்தியர் வெடித்துச் சிரித்து, "அவனால் எப்படி வெளிவர முடியும்? நான் ஏற்கனவே அந்தப் பெரும் அசுரனைச் செரித்து விட்டேன்" என்றார்.

தனது தம்பி செரிக்கப்பட்டதைக் கண்ட இல்வலன் துயரமடைந்து, உற்சாகமிழந்து, தனது அமைச்சர்களுடன் கரங்கள் கூப்பி அந்த முனிவரிடம், "நீர் எதற்காக இங்கு வந்திருக்கிறீர்? நான் உமக்கு என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான். புன்னகையுடன் அகஸ்தியர் இல்வலனிடம், "ஓ! அசுரா, நீ பெரும் பலசாலி என்றும், அபரிமிதமான செல்வம் படைத்தவன் என்றும் நாங்கள் அறிவோம். இந்த மன்னர்கள் அவ்வளவு செழிப்பாக இல்லை. எனக்கும் செல்வத்தின் தேவை அதிகமாக இருக்கிறது. மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் எங்களுக்கு உன்னால் என்ன கொடுக்க முடியுமோ அதைக் கொடு" என்றார். இப்படிக் கேட்கப்பட்ட இல்வலன் முனிவரை வணங்கி, "நான் கொடுக்க எண்ணியிருப்பதை நீர் சொன்னால், பிறகு நான் உமக்குச் செல்வத்தைக் கொடுப்பேன்" என்றான்.

இதைக் கேட்ட அகஸ்தியர், "ஓ! பெரும் அசுரா, நீ இம்மன்னர்கள் ஒவ்வொருவருக்கும் பத்தாயிரம் பசுக்களையும், பல பொற்காசுகளையும் தர உத்தேசித்திருக்கிறாய். எனக்கு அதைவிட இரு மடங்கையும், ஒரு தங்கத் தேரையும், நினைவைப் போல வேகமாகச் செல்லும் இரு குதிரைகளையும் தர உத்தேசித்திருக்கிறாய். நீ இப்போது விசாரித்தாயானால், உனது தேர் தங்கத்தாலானது என்பதை அறிவாய்" என்றார். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, அதன் பிறகு இல்வலன் சில விசாரணைகளைச் செய்து, தான் கொடுக்க எண்ணிய தேர் தங்கத்தாலானதே என்பதை உறுதி செய்தான். பிறகு அந்தத் தைத்தியன் இதயத்தில் சோகத்துடன், நிறைந்த செல்வத்தையும், அந்தத் தேரையும், அதில் பூட்டப்பட்டிருந்த விரவா, சுரவா என்ற இரு புரவிகளையும் {குதிரைகளையும்} கொடுத்தான். ஓ !பாரதா {யுதிஷ்டிரா}, அந்தப் புரவிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மன்னர்களையும் அகஸ்தியரையும் அனைத்துச் செல்வங்களுடன் அகஸ்தியரின் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றன. பிறகு அந்த அரச முனிகள் அகத்தியரிடம் அனுமதி பெற்று, தங்கள் சொந்த நகரங்களுக்குத் திரும்பினர்.

அகஸ்தியர் (அந்தச் செல்வத்தை வைத்து) தனது மனைவி லோபாமுத்திரை விரும்பிய அனைத்தையும் செய்தார். பிறகு லோபாமுத்திரை, "ஓ! சிறப்புமிக்கவரே, நீர் எனது அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றிவிட்டீர். நீர் என்னிடம் பெரும் சக்திபடைத்த பிள்ளையைப் பெற்றுக் கொள்ளும்" என்றாள். அதற்கு அகஸ்தியர், "ஓ! அருளப்பட்ட அழகானவளே, உனது நடத்தையால் நான் மிகவும் திருப்தி கொண்டேன். உனது வாரிசைக் குறித்து நான் சொல்லப்போவதைக் கேள். நீ ஆயிரம் மகன்களை விரும்புகிறாயா? அல்லது பத்து மகன்ளுக்குச் சமமான நூறு மகன்களை விரும்புகிறாயா? அல்லது நூறு மகன்களுக்குச் சமமான பத்து மகன்களை விரும்புகிறாயா? அல்லது ஆயிரம் பேரை வீழ்த்தும் ஒரு மகனை விரும்புகிறாயா?" என்று கேட்டார். அதற்கு லோபாமுத்திரை, "ஓ தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே ஆயிரம் பேருக்குச் சமமான ஒரு பிள்ளை பெற என்னை அனுமதியும். பல தீயவர்களைவிட ஒரு நல்ல கற்ற மகனே விரும்பத்தகுந்தவன்" என்றாள்.

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அப்படியே ஆகட்டும்" என்று சொன்ன அந்தப் பக்திமானான முனிவர் தனக்குச் சமமான நடத்தையும், தனக்கு அர்ப்பணிப்புள்ளவளுமான தனது மனைவியை அறிந்தார். அவள் கருவுற்றதும், அவர் கானகத்திற்குச் சென்றார். அந்த முனிவர் சென்றதும், அந்தக்கரு ஏழு வருடங்களாக வளர ஆரம்பித்தது. ஏழாம் ஆண்டு முடிந்ததும், பெரும் கல்வி கற்றவரான திரிதஸ்யு தன்னொளிப் பிரகாசத்துடன் கருவறையில் இருந்து வெளியே வந்தார். அந்தப் பெரும் அந்தணர், பெரும் சக்தி கொண்ட சிறப்புமிக்கத் துறவி ஒரு முனிவரின் மகனாகத் தனது பிறப்பை அடைந்து, கருவறையில் இருந்து வெளியே வந்ததும் வேதங்களையும், உபநிஷத்துகளையும், அங்கங்களையும் உரைக்க ஆரம்பித்தார். குழந்தையாக இருக்கும்போதே பெரும் சக்தி பெற்ற அவர் வேள்விக்கான எரிபொருளைத் தனது தந்தையின் ஆசிரமத்திற்குச் சுமந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அதனால் இத்மவாஹன் (வேள்வி விறகைச் சும்பபவர்) என்ற பெயரில் அழைக்கப்பட்டார். தனது மகனை இத்தகு அறங்களுடன் கண்ட முனிவர் {அகஸ்தியர்} பெரிதும் மகிழ்ந்தார்.

ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, இப்படியே அகஸ்தியர் தனது மூதாதையர்கள் நிமித்தமாக அற்புதமான மகனைப் பெற்றெடுத்து அவர்கள் {மூதாதையர்கள்} விரும்பிய அற்புதமான உலகங்களை அடைய வைத்தார். அந்தக் காலத்தில் இருந்தே இந்த இடம் அகஸ்தியரின் ஆசிரமமாக அறியப்படுகிறது. ஓ! மன்னா, உண்மையில் இது பிரஹ்ரதக் குலத்தைச் சார்ந்த வாதாபியைக் கொன்ற அகஸ்தியரின் பல அழகுகளைக் கொண்ட அருளப்பட்ட ஆசிரமமே.

தேவர்களாலும் கந்தர்வர்களாலும் வழிபடப்படும் இந்தப் புனிதமான பாகீரதி நதி, ஆகாயத்தில் காற்றால் ஆட்டம்போடும் நீண்ட முக்கோண வடிவக் கொடியைப் போல விரைவாக ஓடுகிறது. அங்கே பாறைகள் நிறைந்த மலை உச்சிகளில் ஓடி, கீழ்நோக்கி இறங்கி, பயந்த பெண்பாம்பு போல மலைகளின் இறக்கத்தில் ஓடி, மகாதேவனின் சடாமுடியில் இருந்து வெளியேறும் அவள், தென்னாட்டிற்குள் பிரவாகமாக ஓடி, தாயைப் போல நன்மை செய்து, விருப்பமான மனைவியைப் போலக் கடலுக்கு விரைந்தோடி அதனுடன் கலக்கிறாள். பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, நீ விரும்பியவாறு அந்தப் புனித நதியில் நீராடு. ஓ! யுதிஷ்டிரா, அங்கே முனிவர்களால் வழிபடப்பட்டு, மூன்று உலகங்களாலும் கொண்டாடப்படும் பிருகு தீர்த்தத்தைப் பார். அங்கே நீராடிய (பிருகு குல) ராமன் {பரசுராமன்} (தசரதனின் மகனான) ராமனால் இழந்த சக்தியை மீண்டும் பெற்றான். ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, இங்கே உனது தம்பிகளுடனும் கிருஷ்ணையுடன் {திரௌபதியுடனும்} நீராடினால், தசரதனின் மகனுடன் பகை கொண்ட நடந்த போரில் ராமனின் {பரசுராமனின்} சக்தி இழந்து போய் மீண்டும் இங்கே அடைந்ததைப் போலத் துரியோதனனால் எடுக்கப்பட்ட உனது சக்தியை நீ மீண்டும் அடைவாய்." என்றார் {லோமசர்}.



இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்