Sunday, February 16, 2014

அகஸ்தியர் லோபாமுத்திரை திருமணம்! - வனபர்வம் பகுதி 97

The Marriage of Lopamudra with Agastya! | Vana Parva - Section 97| Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

விதரப்ப்ப நாட்டரசன் லோபாமுத்திரையை அகஸ்தியருக்கு அளித்தது; அகஸ்தியர் லோபாமுத்திரையை விலையுயர்ந்த ஆடைகளையும் ஆபரணங்களையும் கைவிடச் சொன்னது; பருவ காலத்தில் மனைவியை அணுகிய அகஸ்தியரிடம் விலையுயர்ந்த படுக்கை கோரிய லோபாமுத்திரை...

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இந்தப் பெண் {லோபாமுத்திரை} குடும்பக் கடமைகளை ஆற்றத் தகுந்த பருவத்தை அடைந்துவிட்டாள் என்று அகஸ்தியர் கருதியபோது, அவர் பூமியின் தலைவனான விதரப்ப்ப ஆட்சியாளனிடம் சென்று அவனிடம், "ஓ! மன்னா, உனது மகளான லோபாமுத்திரையை எனக்கு அளிக்குமாறு கோருகிறேன்" என்றார். இப்படி அந்த முனிவரால் சொல்லப்பட்ட விதரப்ப்ப நாட்டு மன்னன் நினைவிழந்தான். அவனது மகளை அந்த முனிவருக்கு {அகஸ்தியருக்கு) கொடுக்க விருப்பமில்லையென்றாலும், மறுப்பதற்கு அவன் துணியவில்லை. பிறகு அந்தப் பூமியின் தலைவன் தனது ராணியிடம் சென்று, "இந்த முனிவர் {அகஸ்தியர்} பெரும் சக்தியுள்ளவராக இருக்கிறார். அவர் கோபப்பட்டால், அவரது சாபமெனும் நெருப்பால் என்னை உட்கொண்டுவிடுவார். ஓ! இனிய முகம் கொண்டவளே, உனது விருப்பம் என்னவென்று என்னிடம் சொல்" என்றான்.


மன்னனின் இந்த வார்த்தைகளைக் கேட்டும் அவள் எவ்வார்த்தையையும் சொல்லவில்லை. துன்பத்துடன் ராணியுடன் இருக்கும் மன்னனைக் கண்ட லோபாமுத்திரை அவர்களைக் குறித்த நேரத்தில் அணுகி, "ஓ! ஏகாதிபதி, என்னைக் குறித்து நீர் வருத்தப்படலாகாது. ஓ! தந்தையே, என்னை அகஸ்தியருக்கு அளியும். அப்படி என்னை அளிப்பதால் உம்மைக் காத்துக் கொள்ளும்" என்றாள். தனது மகளின் இவ்வார்த்தைகளினால், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, மன்னன் {விதரப்ப்ப மன்னன்}, லோபாமுத்திரையைச் சிறப்புமிக்க அகஸ்தியருக்கு உரிய சடங்குகளுடன் கொடுத்தான்.

அவளை மனைவியாக அடைந்த அகஸ்தியர் லோபாமுத்திரையிடம், "இந்த விலையுயர்ந்த ஆடைகளையும் ஆபரணங்களையும் கைவிடு" என்றார். தனது தலைவனின் வார்த்தைகளைக் கேட்ட பெரிய கண்களையும், வாழைத்தண்டு போலச் சிறுத்துச் செல்லும் தொடைகளையும் கொண்ட அந்த மங்கை தனது அழகான விலையுயர்ந்த நுண்ணிய அமைப்புக் கொண்ட ஆடைகளைக் கைவிட்டாள். அவற்றைக் கைவிட்டு, கந்தலும் மரவுரியும், மான் தோலும் உடுத்தி நோன்பிலும் செயலிலும் தனது கணவனுக்கு இணையானவளாக ஆனாள். பிறகு கங்காத்துவாரத்தை {கங்கோத்ரியை} அடைந்த முனிவர்களில் சிறந்த ஒப்பற்றவர் {அகஸ்தியர்}, உதவிகரமாக இருந்த தனது மனைவியின் துணையுடன் கடும் தவம் இருந்தார். மிகவும் திருப்தியடைந்த லோபாமுத்திரையும், தனது கணவன் {அகஸ்தியர்} மீதிருந்து பெரும் மரியாதையால் அவருக்குச் சேவை செய்யத் தொடங்கினாள். மேன்மைமிக்க அகஸ்தியரும் தனது மனைவி மீது அளவற்ற அன்பை வெளிப்படுத்த ஆரம்பித்தார்.

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, கணிசமாகக் காலம் கடந்ததும், ஒரு நாள் அந்தச் சிறப்புமிக்க முனிவர் {அகஸ்தியர்}, பருவகாலத்தில் நீராடி தவப் பிரகாசத்துடன் ஒளிர்ந்த லோபாமுத்திரையைக் கண்டார். அந்தப் பெண்ணின் சேவைகளையும், சுத்தத்தையும், சுயக்கட்டுப்பாட்டையும், அருளையும், அழகையும் கண்டு மிகவும் திருப்தி கொண்ட அவர் அவளை மண உறவு கொள்ள அழைத்தார். இருப்பினும் அந்தப் பெண் {லோபாமுத்திரை}, தனது கரங்களைக் கூப்பி, நாணத்துடனும் அன்புடனும், "ஒரு கணவன், சந்தேகமற வாரிசுக்காகவே ஒரு மனைவியை மணக்கிறான். ஆனால் ஓ! முனிவரே, நான் உம்மீது வைத்திருக்கும் அன்பைப் போல, நீர் என் மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்துவதே உமக்குத் தகும். ஓ மறுபிறப்பாளரே {அந்தணரே}, எனது தந்தையின் அரண்மனையில் நான் வைத்திருந்ததைப் போன்ற படுக்கையில் நீர் என்னை அணுகுவதே உமக்குத் தகும். நீர் மலர்மாலை மற்றும் பிற ஆபரணங்களின் அலங்காரத்துடனும் இருக்க வேண்டும் என்றும், தெய்வீக ஆபரணங்கள் பூண்டு கொண்டு நான் உம்மை அணுக வேண்டும் என்றும் விரும்புகிறேன். இல்லையெனில், சிவப்புக்கறைகூடிய இந்தக் கந்தலுடையுடன் நான் உம்மை அணுக முடியாது. ஓ மறுபிறப்பாள முனிவரே, (அத்தகு சமயத்தில்) ஆபரணங்கள் பூணுவது பாவமுமாகாது" என்றாள்.

தனது மனைவியின் {லோபமுத்திரையின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அகஸ்தியர் "ஓ! அருளப்பட்டவளே, ஓ! கொடியிடையாளே, ஓ! லோபாமுத்திரையே, உனது தந்தையிடம் இருப்பது போல என்னிடம் செல்வம் இல்லை" என்றார். அதற்கு அவள், "தவத்தைச் செல்வமாகக் கொண்ட நீர், உமது தவச் சக்தியால், மனிதர்களின் உலகில் கிடைக்கும் அத்தனையையும் நிச்சயம் ஒருக்கணத்தில் கொண்டவரக்கூடியவர்" என்றாள். அகஸ்தியர், "நீ சொல்வது போலத்தான் இருக்கிறது. இருப்பினும் அஃது எனது தவப்பலனை வீணடித்துவிடும். எனது தவப்பலன்கள் தளராத வகையிலுள்ள காரியத்தை எனக்குச் சொல்" என்றார். பிறகு லோபாமுத்திரை, "ஓ தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே, எனது பருவ காலம் நீண்ட காலத்திற்கு நிலைக்காது. இருப்பினும், மற்றபடி {நான் கோரியது இல்லாமல்} நான் உம்மை அணுக விரும்பவில்லை. உமது (தவப்) பலன்களையும் எவ்வகையிலும் அழிக்க நான் விரும்பவில்லை. இருப்பினும், உமது அறத்திற்குப் பழுதேற்படாமல் நான் விரும்பியதைச் செய்வதே உமக்குத் தகும்" என்றாள்.

பிறகு அகஸ்தியர், "ஓ! அருளப்பட்டவளே {லோபமுத்திரையே}, இதுவே நீ உன் இதயத்தில் தீர்மானித்திருக்கும் உறுதியென்றால், நான் செல்வத்தைத் தேடி வெளியே செல்வேன். அதுவரை, நீ இவ்விடத்தில் உனது விருப்பப்படி இருந்துகொள்" என்றார்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்