Monday, February 17, 2014

ராமன், பரசுராமன் மோதல்! - வனபர்வம் பகுதி 99ஆ

The encounter between Rama and Parasurama! | Vana Parva - Section 99b| Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

பரசுராமன் தசரத ராமனைச் சந்தித்து தனது வில்லைக் கொடுத்துப் பரிசோதிப்பது; பரசுராமனின் கர்வத்தைப் பங்கப்படுத்திய ராமன்; சக்தியை இழந்த பரசுராமன் பிறகு வதூசரம் என்ற நதிக்குச் சென்று தனது இழந்த சக்தியை மீண்டும் பெறுவது...

வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ! பாரதா {ஜனமேஜயா}, லோமசரின் வார்த்தைகளைக் கேட்ட யுதிஷடிரன் தனது தம்பிகளுடனும், கிருஷ்ணையுடனும் {திரௌபதியுடனும்} சேர்ந்து அங்கே {கங்காத்துவாரத்தில்} நீராடி, தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் நீர்க்கடன்களைச் செலுத்தினான். ஓ! மனிதர்களில் காளையே {ஜனமேஜயா}, யுதிஷ்டிரன் அந்தத் தீர்த்தத்தில் நீராடிய பிறகு, அவனது உடல் அதிகப் பிரகாசத்துடன் ஒளிர்ந்து, எதிரிகளின் கண்களுக்கு அரூபமானான். ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} லோமசரிடம், "ஓ! சிறந்தவரே, ஏன் ராமனின் {பரசுராமனின்} சக்தியும் பலமும் எடுக்கப்பட்டது? அதன் பிறகு அவர் எப்படி அதை மீட்டெடுத்தார்? ஓ! மேன்மையானவரே, நான் உம்மிடம் கேட்கிறேன். அனைத்தையும் சொல்வீராக" என்றான்.

லோமசர் சொன்னார், "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, (தசரதன் மகனான) ராமன் மற்றும் பிருகு குலத்தின் புத்திகூர்மைகொண்ட ராமன் {பரசுராமன்} ஆகியோரின் வரலாறுகளைக் கூறுகிறேன் கேள். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ராவணனின் அழிவிற்காக விஷ்ணு தனது சொந்த உடலுடன், சிறப்புமிக்கத் தசரதனிடத்தில் பிறந்தான். தசரதனின் மகன் {ராமன்} பிறந்ததும், அயோத்தியையில் நாம் அவனைக் கண்டோம். பிறகுதான் ரிசகரின் மகனான பிருகு குலத்தின் ரேணுகா மூலம் பிறந்த ராமன் {பரசுராமன்}, களங்கமற்ற செயல்கள் புரிந்த தசரதனின் மகனான ராமனைக் குறித்துக் கேள்விப்பட்டு அயோத்திக்குச் சென்றார். ஆர்வ மிகுதியால் அவர் க்ஷத்திரியர்களுக்கு மரணத்தைக் கொடுத்த தெய்வீக வில்லையும் தசரத மைந்தனின் பராக்கிரமத்தை உறுதி செய்ய எடுத்துச் சென்றார்.

பிருகு குலத்தின் ராமன் {பரசுராமன்} தனது நாட்டுக்குள் வந்ததை அறிந்த தசரதன், அந்த வீரரை உரிய மரியாதையுடன் அழைத்துவர தனது சொந்த மகனான ராமனை அனுப்பி வைத்தான். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, தசரதனின் மகன் தன்னை அணுகுவதையும், ஆயுதங்களுடன் தயாராக இருப்பதையும் கண்ட பிருகு குல ராமன் {பரசுராமன்} புன்னகையுடன் அவனிடம் {தசரத ராமனிடம்}, ஓ! மன்னா, ஓ! மேன்மையானவனே, க்ஷத்திரிய குலத்தை அழிக்க நான் பயன்படுத்திய கருவியான எனது கைகளில் இருக்கும் இந்த வில்லில், உன்னால் இயன்றால், உனது பலத்தையெல்லாம் பிரயோகித்து நாணேற்று" என்று சொன்னார். இப்படிச் சொல்லப்பட்ட தசரதன் மகன் {ராமன்}, "ஓ சிறப்புமிக்கவரே, என்னை இப்படி அவமதிப்பது உமக்குத் தகாது. நான் க்ஷத்திரிய வகையின் அறங்களுக்குத் தாழ்ந்த மறுபிறப்பாளர் {அந்தண} வகையைச் சார்ந்தவனல்ல. குறிப்பாக இக்ஷவாகுவின் வழித்தோன்றல்கள் யாரும் தங்கள் கரங்களின் பராக்கிரமம் குறித்துத் தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை" என்றான்.

பிறகு தசரதன் மகனிடம் {ராமனிடம்}, பிருகு குல ராமன் {பரசுராமன்}, "அனைத்துத் தந்திரப் பேச்சுகளையும் நிறுத்து. ஓ மன்னா! இந்த வில்லை எடு" என்றார். இதற்குத் தசரதனின் மகனான ராமன், பிருகு குல ராமனின் {பரசுராமனின்} கைகளில் இருந்த க்ஷத்திரியர்களுக்கு அழிவைக் கொடுத்த வில்லைக் கோபத்துடன் வாங்கினான். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அந்தப் பெரும் பலம் வாய்ந்த வீரன் {தசரத ராமன்} புன்னகையுடன் சிறு முயற்சியும் இல்லாமல், அந்த வில்லில் நாண்பூட்டி அனைத்து உயிரினங்களையும் பயங்கொள்ளச் செய்யும் நாணொலியை எழுப்பினான். தசரதனின் மகனான ராமன், பிருகுவின் ராமனிடம் {பரசுராமனிடம்}, "இதோ. இந்த வில்லுக்கு நாண் பூட்டிவிட்டேன். ஓ! அந்தணரே, நான் வேறு என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான். அதற்கு ஜமதக்னியின் மகனான ராமன் {பரசுராமன்}, தசரதனின் சிறப்புமிக்க மகனிடம் {ராமனிடம்} ஒரு தெய்வீகக் கணையைக் கொடுத்து, "ஓ! வீரனே {தசரத ராமா}, இந்தக் கணையை வில்லின் நாணில் பொருத்தி, நாணை உனது காது வரை இழு" என்றார்.

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இதைக் கேட்ட தசரதனின் மகன் {ராமன்} கோபத்தில் எரிந்து, "நீர் சொன்னதை நான் கேட்டேன். மன்னித்தும் விட்டேன். ஓ! பிருகு குலத்தின் மகனே {பரசுராமனே}, நீர் கர்வம் நிறைந்து இருக்கிறீர். பெருந்தகப்பனின் {பிரம்மாவின்} கருணையால் பெற்ற சக்தியைக் கொண்டே நீர் க்ஷத்திரியர்களுக்கு மேன்மையானவராக இருக்கிறீர். அதனால் தான் நீர் என்னை அவமதிக்கிறீர். எனது சுய உருவைப் பாரும். நான் உமக்குப் பார்வையைத் தருகிறேன்" என்றான்.

ஓ! பாரதா, ஓ! யுதிஷ்டிரா, பிறகு பிருகு குலத்தின் ராமன் தசரதன் மகனின் உடலில் வசுக்களுடன் கூடிய ஆதித்தியர்களையும், ருத்ரர்களையும், மருதர்களுடன் கூடிய சத்யஸ்களையும், பித்ருக்களையும், ஹூதாசனனையும், நட்சத்திரக் குவியல்களையும், கோள்களையும், கந்தர்வர்களையும், ராட்சசர்களையும், யஹர்களையும், ஆறுகளையும், தீர்த்தங்களையும், பிரம்மனால் அடையாளங்காட்டப்பட்ட முனிவர்களில் நித்தியமான வாலகில்யர்களையும், தெய்வீக முனிவர்களையும், கடல்களையும், மலைகளையும், உபநிஷத்துகள், வசத்துகளுள், வேள்விகளுடன் கூடிய வேதங்களையும், சமன்களின் உயிர்த்தோற்றத்தையும், ஆயுத அறிவியலையும், மழையுடன் கூடிய மேகங்களையும், மின்னலையும் கண்டார்.

பிறகு சிறப்புமிக்க விஷ்ணு அந்தக் கணையை அடித்தான். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, இடி மற்றும் எரிகற்களின் ஓசை உலகத்தை நிறைத்து வானத்தில் மின்னல் தோன்ற ஆரம்பித்தது. பூமியின் பரப்பு மீது தூசி மற்றும் மழை பொழிய ஆரம்பித்தது. சுழற்காற்றும், பயங்கரச் சத்தமும் அனைத்தையும் அதிரச் செய்தன. பூமி நடுங்க ஆரம்பித்தாள். ராமனின் கரங்களால் அடிக்கப்பட்ட அந்தக் கணை மற்ற ராமனின் {பரசுராமனின்} சக்தியைக் குழப்பி, {தசரத} ராமனின் கரங்களுக்கே திரும்ப வந்து சேர்ந்தது. இப்படி உணர்வை இழந்த பார்க்கவர் {பரசுராமன்}, மீண்டும் சுயநினைவை அடைந்து விஷ்ணு சக்தியின் வடிவமான {தசரத} ராமனைப் பணிந்தார்.

அந்த விஷ்ணுவின் கட்டளையின் பேரில் அவர் மகேந்திர மலைகளுக்குச் சென்றார். அதுமுதல் அந்தப் பெரும் தவசி அச்சத்துடனும் அவமானத்துடனும் அங்கே வசிக்க ஆரம்பித்தார். பிறகு ஒரு வருடம் கழிந்ததும் சக்தி இழந்து கர்வபங்கப்பட்டு, துயரத்தில் இருந்த ராமனைக் {பரசுராமனைக்} கண்ட பித்ருக்கள் அவரிடம், "ஓ! மகனே, விஷ்ணுவை அணுகிய நீ நடந்து கொண்ட முறை சரியானதல்ல. மூன்று உலகங்களிலும் அவன் உனது வழிபாட்டுக்குகந்தவன். ஓ! மகனே, போ. வதூசரம் என்ற பெயர் கொண்ட புண்ணிய நதிக்குச் செல். அந்த நதியில் இருக்கும் அனைத்துத் தீர்த்தங்களிலும் நீராடி உனது இழந்த சக்தியை மீட்டெடு. ஓ! ராமா {பரசுராமா}, அந்த நதியில், தெய்வீகக் காலத்தில், உனது பெரும்பாட்டனான பிருகு தவம்பயின்று பெரும் பலனடைந்த தீப்தோத்தம் என்ற தீர்த்தங்கள் இருக்கின்றன" என்றனர். ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, இப்படி அவர்களால் சொல்லப்பட்ட ராமன் {பரசுராமன்}, தனது பித்ருகளுக்குப் பிரியாவிடை கொடுத்து அந்தத் தீர்த்தங்களுக்குச் சென்று தனது சக்தியை மீண்டும் அடைந்தார். இது பழங்காலத்தில் களங்கமற்ற ராமனுக்கு {பரசுராமனுக்கு}, (தசரதன் மகனின் {ராமனின்} உருவத்தில் இருந்த) விஷ்ணுவை சந்தித்த பிறகு ஏற்பட்ட நிலையாகும்" என்றார் {லோமசர்}.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்