Thursday, March 20, 2014

மறைந்து தோன்றிய சரஸ்வதி நதி! - வனபர்வம் பகுதி 130

Saraswati disappeared and became visible! | Vana Parva - Section 130 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

சரஸ்வதி நதி, சமசோபேசம், பிரபாசம், விபாசம், காஷ்மீரம், மானசசரோவரம், வாதிகண்டம், உஜ்ஜனகம், கௌசவம், பிருகுதுங்கம், விதஸ்தம், ஜலா, உபஜலா நதிகள், ஆகிவற்றின் பெருமைகளை லோமசர் யுதிஷ்டிரனுக்குச் சொல்வது; உசீநரன் கதையைச் சொல்லத் துவங்குவது...

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! பாரதக் குலத்தின் மகனே! மனிதர்கள் தங்கள் கடைசி மூச்சை இங்கே விடும்போது, அவர்கள் சொர்க்கத்திற்குச் செல்கின்றனர். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}! ஆயிரமாயிரம் மனிதர்கள் இந்த இடத்திற்கு இறப்பதற்காக வருகின்றனர். தக்ஷன் இங்கே வேள்வியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அவனால் {தக்ஷனால்}, "இந்த இடத்தில் இறக்கும் மனிதர்கள் சொர்க்கத்தில் ஒரு இடத்தை வெல்வார்கள் {பெறுவார்கள்}" என்ற ஒரு அருள்வாக்குச் சொல்லப்பட்டது. நீர் நிறைந்த, அழகான, புனிதமான நதியான சரஸ்வதி இங்கேதான் இருக்கிறது; ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, இங்கேதான் சரஸ்வதி மறைந்த விநசனம் என்ற இடம் இருக்கிறது. இங்கேதான் நிஷாதர்களின் நாட்டு வாயில் இருக்கிறது. அவர்கள் மீதுள்ள வெறுப்பால்தான் சரஸ்வதி, நிஷாதர்கள் தன்னைக் காணாதவாறு பூமிக்குள் நுழைந்தாள்.


சரஸ்வதி மீண்டும் அவர்களுக்குக் {நிஷாதர்களுக்கு} காட்சி தந்த சமசோபேசம் என்ற புனிதமான இடமும் இங்குதான் இருக்கிறது. இங்கேதான் அவள் {சரஸ்வதி} கடலை நோக்கி ஓடும் புனிதமான நதிகளுடன் இணைகிறாள். ஓ! எதிரிகளை வீழ்த்துபவனே {யுதிஷ்டிரா}, இங்கேதான் பெருமுனிவரான அகஸ்தியரை லோபமுத்திரை தனது தலைவனாக ஏற்றுக் கொண்ட புனிதமான இடமான சிந்து இருக்கிறது. ஓ! சூரியனைப் போன்று பிரகாசிப்பவனே {யுதிஷ்டிரா}, இந்திரனுக்குப் பிடித்தமானதும், அனைத்துப் பாவங்களையும் விலக்கவல்லதுமான பிரபாசம் எனும் புனிதத் தீர்த்தம் இங்கே தான் இருக்கிறது. இதோ இங்குதான் விஷ்ணுபதம் என்ற பகுதி இருக்கிறது.

இங்குதான் காண்பதற்கினிய புண்ணிய நதியான விபாசம் இருக்கிறது. இந்த ஓடையில்தான் {விபாசத்தில்தான்} தனது மகன்களின் மரணத்தால் ஏற்பட்ட துயரத்தின் காரணமாகப் பெருமுனிவரான வசிஷ்டர் தனது உறுப்புகளைக் கட்டிக் கொண்டு விழுந்தார். அவர் அந்நீரில் இருந்து கட்டுகளற்றவராக எழுந்தார். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, புனிதமான தவசிகளால் அடிக்கடி தரிசிக்கப்படும் காஷ்மீரம் என்ற பகுதியை இதோ உனது தம்பிகளுடன் பார். ஓ! பாரதக் குலத்தின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, இங்கேதான் அக்னிக்கும் பெருமுனிவரான காசியபருக்கும், நகுஷனுக்கும், வடக்கு திசையின் தவசிகளுக்கு விவாதம் நடந்தது. ஓ! பெரும் இளவரசே {யுதிஷ்டிரா}, இதோ இங்கேதான் மானசசரோவரத்தின் வாசல் இருக்கிறது. இந்த மலையின் மத்தியில்தான், ராமர் {பரசுராமர்} ஒரு இடைவெளியைத் திறந்தார். ஓ! கலங்காத பராக்கிரமம் கொண்ட இளவரசே, இங்கேதான் நன்கறியப்பட்ட பகுதியான வாதிகண்டம் இருக்கிறது. இது விதேகத்திற்கு வடக்கில் இருக்கிறது. விதேகத்தின் வாயில் இதற்கு {வாதிகண்டத்திற்கு} அருகிலேயே இருக்கிறது.

ஓ! மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரா}, இந்த இடம் தொடர்பாக மற்றுமொரு குறிப்பிடத்தக்க செய்தி இருக்கிறது. ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும், விரும்பும் உரு கொள்ளும் தெய்வமான சிவன், உமையுடனும் தன்னைத் தொடர்பவர்களுடனும் காணப்படுகிறான். இந்தத் தடாகத்தில்தான், தங்கள் குடும்பத்தின் நன்மையை விரும்பும் மக்கள், பிநாகபாணிக்கு {பிநாகம் என்ற வில்லைத் தாங்கிய சிவனுக்கு} சித்திரை மாதத்தில் வேள்விகள் நடத்துவர். அர்ப்பணிப்புமிக்க மனிதர்கள், தங்கள் ஆசைகளைக் கட்டுப்படுத்தி, இந்தத் தடாகத்தில் நீராடி, பாவங்களில் இருந்து விடுபட்டு, சந்தேகமர புனிதமான இடங்களை அடைகின்றனர். புனிதத்தவசியான வசிஷ்டரும் அவரது மனைவி அருந்ததியும், தவசியான யவக்கிரியும் மன அமைதி அடைந்த உஜ்ஜனகம் என்ற புண்ணியத் தீர்த்தம் இங்கேதான் இருக்கிறது. இங்கே இருக்கும் கௌசவம் என்ற தடாகத்தில் கௌசேசயம் {நூறு இதழ் கொண்ட தாமரை} என்ற பெயர்கொண்ட தாமரைகள் வளர்கின்றன. இங்கேதான் ருக்மிணியின் புனிதமான ஆசிரமம் இருக்கிறது. இங்கே தான் அவள் {ருக்மிணி} கோபம் என்ற தீய ஆர்வத்தை {குணத்தை} வென்று அமைதியை அடைந்தாள்.

ஓ! இளவரசே {யுதிஷ்டிரா}! பிருகுதுங்கத்தில் இருக்கும் தியானங்களின் மனிதனைப் பற்றி நீ ஏதாவது கேள்விப்பட்டிருப்பாய் என்று நினைக்கிறேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அங்கே ஒரு உயர்ந்த சிகரம் இருக்கிறது. ஓ மன்னர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, அங்கேதான் மனிதர்களின் பாவங்களைக் கரைக்கும் புனிதமான ஓடையான விதஸ்தம் இருக்கிறது. அந்த ஓடை மிகுந்த குளுமையுடன் தெளிந்த நீரை உடையது. அது பெரும் முனிவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஓ இளவரசே {யுதிஷ்டிரா}, யமுனையின் இருமருங்கிலும் பாயும் ஜலா மற்றும் உபஜலா என்ற புனிதமான நதிகளைப் பார். இங்கே வேள்வி செய்ததன் மூலம் மன்னன் உசீநரன் {உசீநரனின் மகன் சிபி என்று நினைக்கிறேன்} இந்திரனின் பெருமைகளைக் கடந்தான். ஓ! பாரதக் குல வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, உசீநரனின் தகுதியைச் சோதிப்பதற்காகவும் அவனுக்கு வரங்களை அளிப்பதற்காகவும் இந்திரனும் அக்னியும் சேர்ந்து, அந்த வேள்விக்களதில் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். இந்திரன் பருந்தின் உருவத்தையும், அக்னி புறாவின் உருவத்தை எடுத்து அந்த மன்னனிடம் வந்தனர். பருந்தின் மீது கொண்ட பயத்தின் காரணமாகப் புறா, பாதுகாப்பு கோரி அம்மன்னனின் தொடையில் அமர்ந்தது.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்