Wednesday, March 19, 2014

குதிரை வேள்வி செய்த பரதன்! - வனபர்வம் பகுதி 129

Bharata performed horse sacrifice! | Vana Parva - Section 129 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

வேள்விகள், தீர்த்தங்கள், வேள்விகள் செய்த மன்னர்கள் அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்கள் என்று யுதிஷ்டிரனுக்கு லோசமர் சொன்னவை...

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ மன்னா! பழங்காலத்தில் உயிரினங்களின் தலைவனே {பிரம்மனே} இங்கு இஷ்டீகிருதம் {Ishtikrita} என்ற ஆயிரம் {1000} வருட வேள்வியைச் செய்திருக்கிறான். நாபாகனுடைய மகனான அம்பரீஷனும் யமுனையாற்றுக்கு அருகில் வேள்வியைச் செய்திருக்கிறான். அப்படி வேள்வியைச் செய்து பத்துப் பத்மங்கள் {ஒரு பத்மம் = நூறு கோடி {100,00,00,000} (தங்கக்காசுகளை) வேள்வியைக் கவனித்த புரோகிதர்களுக்குக் கொடுத்து, தனது வேள்விகளாலும் தவத்தாலும் உயர்ந்த வெற்றியை அடைந்தான்.

ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, நகுஷனின் மகனான அளவிடமுடியா சக்தி கொண்டவனும், புனித வாழ்வு வாழ்ந்தவனுமான யயாதி முழு உலகத்தையும் ஆட்சி செய்து வேள்விகள் செய்தது இந்தப் பகுதியில்தான். அவன் {யயாதி} இந்திரனுடன் போட்டிப் போட்டு வேள்விகளை இங்கே செய்தான். பல விதமான வடிவங்களிலுள்ள வேள்வி மேடைகள் பூமியை நிறைப்பதையும், யயாதியின் பக்தி நிறைந்த செயல்களின் தாக்கத்தின் மூலம் உலகம் எப்படி மூழ்கியிருக்கிறது என்பதையும் பார். இது ஓர் இலை கொண்ட ஒரு வன்னி மரம். இது அற்புதமான தடாகம்.


பரசுராமரின் தடாகங்களையும், நாராயணனின் ஆசிரமத்தையும் பார். ஓ பூமியின் பாதுகாவலா {யுதிஷ்டிரா}, அளவற்ற சக்தி படைத்த ரிசீகரின் மகன், இந்தப் பாதையின் வழியே சென்று, பூமியின் இந்தப் பகுதியில் மீது உலாவி, யோகச் சடங்குகளைப் பயிலும் ரௌப்பிய {Raupya} ஆற்றையும் இதோ பார். ஓ! குரு குலத்தின் மகிழ்ச்சியே {யுதிஷ்டிரா}, உரல்களைப் போன்ற காதணிகளோடு கூடிய ஒரு பெண் பிசாசு (ஒரு அந்தணப் பெண்ணிடம்) கூறியதும் பரம்பரையாக வந்ததுமான கதையைக் கேள். (அவள் {அந்தப் பெண் பிசாசு}), "யுகாந்தரத்தில் தயிரை உண்டு, அச்சுதஸ்தலத்தில் வாழ்ந்து, பூதலயத்தில் நீராடியதால், நீ உனது மகன்களுடன் வாழ்வாய். ஓ பாரதக் குலத்தின் மிக நேர்மையானவனே {யுதிஷ்டிரா}, இங்கே ஒரு இரவைக் கழித்த பிறகு, இரண்டாவது இரவில் நடக்கும் சம்பவங்கள் பகல் பொழுதில் நடந்த சம்பவங்களுக்கு முற்றிலும் வித்தியாசமானவையாக இருக்கும். இன்றிரவை நாம் இதே இடத்தில் கழிப்போம்.

ஓ! பாரதக் குலத்தின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, இதுவே குருக்களின் போர்க்கள வாயிலாகும். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இதே இடத்தில்தான் நகுஷனின் மகனான ஏகாதிபதி யயாதி வேள்விச் சடங்குகளைச் செய்து, அபரிமிதமான ரத்தினங்களைக் கொடையாகக் கொடுத்தான். இந்திரனும் அந்தப் புனிதமான சடங்குகளின் மூலம் திருப்தியடைந்தான். இது பிலக்ஷாவதரணம் என்ற பெயரில், யமுனையாற்றின் கரையில் இருக்கும் அற்புதமான புனித நீராட்டுப் பகுதியாகும். பண்பட்ட மனம் கொண்ட மனிதர்கள் இதைச் சொர்க்கத்திற்கான வாயில் என்று சொல்கிறார்கள். ஓ! மதிப்பிற்குரிய ஐயா {யுதிஷ்டிரா}, சாரஸ்வத மன்னன் இங்கே வேள்விச்சடங்குகளைச் செய்த பிறகு, வேள்விக்கம்புகளை உரலாகப் பயன்படுத்திய உயர்ந்த வகையிலான தவசிகள் அந்தப் புனிதச் சடங்கின் இறுதியில் தங்கள் புனித நீராடலைச் செய்தனர்.

ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, இங்கே மன்னன் பரதன் வேள்விச் சடங்குகளைச் செய்தான். குதிரை வேள்வியைச் செய்ய, இங்கே தான் அவன் வேள்விப்பசுவான குதிரையைச் சுதந்திரமாக விட்டான். அந்த ஏகாதிபதி {பரதன்} முழு உலகத்தின் ஆட்சியையும் நேர்மையாக வெற்றிக் கொண்டான். ஒரு முறைக்குப் பலமுறை கருநிறம் கொண்ட குதிரையை விட்டான். ஓ மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, தவசிகளின் தலைவரான சம்வர்த்தரால் பாதுகாக்கப்பட்ட மருத்தன் இந்த இடத்தில் தான் அற்புதமான வேள்விகளைச் செய்து வெற்றியடைந்தான். ஓ! மன்னர்களின் ஆட்சியாளனே {யுதிஷ்டிரா}, இந்த இடத்தில் நீராடும் ஒருவன், அனைத்து உலகங்களையும் கண்டு, தீயச் செயல்களில் இருந்து சுத்தப்படுத்தப் படுவான். ஆகையால், நீ இந்த இடத்தில் நீராட வேண்டும்" என்றார் {லோமசர்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பாண்டு மகன்களில் மிகவும் போற்றுதலுக்குரியவன் {யுதிஷ்டிரன்} பிறகு, தனது தம்பிகளுடன் நீராடினான். சக்திவாய்ந்த தவசிகள் வாழ்த்துப் பாடினார்கள். பிறகு அவன் {யுதிஷ்டிரன்} லோமசரிடம், "உண்மையின் பலம் கொண்டவரே {லோமசரே}, இந்தப் பக்தி நிறைந்த செயலின் அறத்தால், நான் அனைத்து உலகங்களையும் காண்கிறேன். இந்த இடத்தில் இருந்து, நான் பாண்டுவின் மகன்களில் புகழத்தக்கவனும், வெள்ளைக் குதிரையில் சவாரி செய்பவனுமான அர்ஜுனனைக் காண்கிறேன்" என்றான்.

லோமசர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! தோள்வலிமை மிக்கவனே {யுதிஷ்டிரா}, அது உண்மையே. உயர்ந்த வகையிலான தவசிகளால் இவ்வாறு அனைத்து உலகங்களைக் காண முடியும். தன்னையே முழுப் புகலிடமாக நம்பி இருக்கும் மனிதர்களால் மொய்க்கப்படும் புனிதமான இந்தச் சரஸ்வதியைப் {சரஸ்வதி நதியைப்} பார். ஓ! மனிதர்களில் மிகவும் புகழத்தக்கவனே {யுதிஷ்டிரா}, இங்கே நீராடிய பிறகு, நீ அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டவனாவாய். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, இங்கே தான் சாரஸ்வத மன்னனுக்காக, தெய்வீகத் தவசிகளும், பூலோகத் தவசிகளும், அரசத்தவசிகளும் வேள்விச்சடங்குகளைச் செய்தனர். இதுவே உயிரினங்களின் தலைவனுடைய {பிரம்மனுடைய} வேள்விப்பீடமாகும். இது எல்லாப்புறங்களிலும் ஐந்து யோஜனை தூரம் கொண்டதாகும். வேள்வி செய்வதையே பழக்கமாகக் கொண்ட பெருமைமிக்கக் குருக்களின் களம் இதுவே" என்றார் {லோமசர்}.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்