Friday, April 04, 2014

வன்காற்றும்! பெருமழையும்!! - வனபர்வம் பகுதி 142

Gust and torrential rain! | Vana Parva - Section 142 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

கந்தமாதன மலையை நோக்கிப் புறப்பட்ட பாண்டவர்கள் நடுவழியில் வன்காற்றிலும், பெருமழையிலும் சிக்கிக் கொண்டு தனித்தனியாகப் பதுங்கியிருந்ததும், காற்றும் மழையும் ஓயந்த பிறகு மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்கியதும்....

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ மன்னா {ஜனமேஜயா}, அளவிடமுடியாத சக்தி கொண்ட, வில்லாளிகளில் முதன்மையானவர்களான அவர்கள் {பாண்டவர்கள்}, முழுவதும் நீட்டி இழுக்கப்பட்டு நாணேற்றப்பட்ட விற்களைத் தாங்கிக் கொண்டும், அம்பறாத்தூணிகள் மற்றும் கணைகளைத் தாங்கிக் கொண்டும், உடும்புத்தோலாலான விரலுறைகளைத் தரித்துக் கொண்டும், வாட்களோடும், அந்தணர்களில் சிறந்தவர்களை உடனழைத்துக் கொண்டு, பாஞ்சாலியுடன் {திரௌபதியுடன்} கந்தமாதனத்தை நோக்கிச் சென்றார்கள். அவர்கள் தங்கள் வழியில், தேவர்களும், முனிவர்களும் அடிக்கடி வந்து போகும், பல தடாகங்களையும், நதிகளையும், மலைகளையும், கானகங்களையும், மலையுச்சிகளில் அகன்று விரிந்த தங்கள் நிழல்களைப் பரப்பும் மரங்களையும், அனைத்துக் காலங்களின் கனிகளுடன் பூத்துக் குலுங்கும் மரங்கள் நிறைந்த இடங்களையும் கண்டனர். தங்கள் மனங்களை உள்ளடக்கி, கனிகள் மற்றும் கிழங்குகளை மட்டுமே உண்ட அந்த வீரர்கள், பல்வேறு வகையான விலங்குகளைக் கண்டு கொண்டே கொடும்பாறைகள் நிறைந்த கடினமான, முரட்டுத்தனமான பாதைகளைக் கடந்து சென்றனர். இப்படியே அந்த உயர் ஆன்மா உடையவர்கள், கின்னரர்கள் மற்றும் அப்சரசுகள் அடிக்கடி வந்து போகும் இடமும் முனிவர்களும், சித்தர்களும், தேவர்களும் வசிக்கும் இடமுமான அந்த மலையின் {கந்தமாதனம்} சமீபத்தை அடைந்தனர்.


ஓ! மனிதர்களின் தலைவா, அந்த வலிமைமிக்க வீரர்கள் அந்தக் கந்தமாதன மலையை அடைந்த போது, அங்கே ஆவேசமான காற்று எழுந்து கனமான மழை பொழிந்தது. இதன் காரணமாக உலர்ந்த இலைகளுடன் கூடிய தூசிப்படலம் மேகமாகத் திடீரென எழுந்து பூமியையும், காற்றையும் வானத்தையும் மூடியது. ஆகாயம் இப்படிப் புழுதியால் மூடிய போது, (பாண்டவர்கள்) யாரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளவோ, பேசிக்கொள்ளவோ இயலவில்லை. இருளால் அடைபட்ட கண்களுடனும், பாறைகளைத் தூக்கிய காற்றால் தள்ளப்பட்டும், இருந்த அவர்களால் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ள முடியவில்லை. பிறகு காற்றினால் முறிக்கப்பட்டுத் தரையில் விழும் மரங்களால் பெரும் சத்தம் உண்டாயிற்று. வன்காற்றால் திசைதிருப்பப்பட்ட அவர்கள், "வானமே இடிந்து விழுகிறதோ; அல்லது பூமியோ மலைகளோ வெடிக்கின்றனவோ" என்று நினைத்தார்கள்.

அந்த வன்காற்றுக்குப் பயந்த அவர்கள் வழியோரத்தில் இருக்கும் மரங்களையும், எறும்புப் புற்றுகளையும், நிலக்குடைவுகளையும் {மேடு பள்ளங்களையும்} கைகளால் தேடி உணர்ந்து ஆங்காங்கு பதுங்கினார்கள். வலிமைமிக்கப் பீமசேனன் கைகளில் வில்லுடன் கிருஷ்ணையைத் {திரௌபதியைத்} தாங்கிப் பிடித்தபடி ஒரு மரத்தினடியில் நின்றான். நீதிமானான யுதிஷ்டிரன் தௌமியருடன் சேர்ந்து பெருங்காட்டில் பதுங்கினான். புனித நெருப்பைச் சுமந்த சகாதேவன் பாறைக்கிடையில் பதுங்கினான். நகுலனுடன் சேர்ந்து  லோமசர் மற்றும் பெரும் தவம் பயின்ற பிற அந்தணர்கள் பயத்தில் ஆளுக்கொரு மரத்திற்கடியில் நின்றனர். காற்றுத் தணிந்து, புழுதி அடங்கியதும் அங்கே அடர்த்தியான நீர் {பெரிய நீர்த்திவலை} கொண்ட பெருமழை பொழிந்தது. தொடர்ந்து வஜ்ரம் வீசப்பட்டது போன்ற ஒரு பேரோலி சடசடவெனக் கேட்டது. விரைவாக மின்னிய மின்னல் அருள் நிறைந்த மேகங்களுடன் தனது விளையாட்டை ஆரம்பித்தது. வேகமான காற்றின் துணையுடன் மழை இடைவெளியில்லாமல் எல்லாப்புறங்களையும் நிரப்பியபடி பொழிந்தது.

ஓ! மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, அங்கே சுற்றிலும் சேறுடன் கலங்கலாக நுரை பொங்கும் பெரும் ஆறுகள் ஓடத் தொடங்கின. அவை {அந்நதிகள்} மிகப்பெரும் நீர்த்தொகுதிகளாகப் பரந்து விரிந்து நுரை தள்ளியபடி பயங்கர ஒலியுடன் மரங்களை வேருடன் அகற்றி விரைந்து சென்றன. ஓ பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயா} அந்தப் பேரொலி நின்று, காற்றும் தணிந்த பிறகு, அவர்கள் அனைவரும் தங்கள் பதுங்கிடங்களில் இருந்து எச்சரிக்கையுடன் வெளிவந்து ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர். பிறகு அந்த வீரர்கள் கந்தமாதன மலையை நோக்கிப் புறப்பட்டனர்.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்