Saturday, April 12, 2014

யுதிஷ்டிரன் அழுகை! - வனபர்வம் பகுதி 143

Yudhishthira's lament! | Vana Parva - Section 143 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

கடும் பாதைகளைக் கடந்து வந்த திரௌபதி மயங்கி விழுவது; பாண்டவர்கள் அதிர்ச்சியுறுவது; யுதிஷ்டிரன் அழுது புலம்புவது; பிறகு பீமன் யுதிஷ்டிரனின் கட்டளையின்பேரில் கடோத்கசனை வரவழைப்பது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பாண்டுவின் உயர்ஆன்ம மகன்கள் {பாண்டவர்கள்} இரண்டு மைல்கள் தூரம் முன்னேறுவதற்குள், கால்நடையாகச் செல்லும் பயணத்திற்குப் பழக்கப்படாத திரௌபதி விழுந்தாள். பாஞ்சாலனின் {துருபதனின்} அப்பாவி மகள் {திரௌபதி} இந்தத் துன்பத்தால் ஏற்பட்ட களைப்பினாலும், தனது அதீத மென்மையாலும் மயங்கினாள். ஒன்றுக்கொன்று நெருக்கத்துடன் யானையின் துதிக்கையைப் போன்று இருந்த தனது தொடைகளை ஒரு ஆதரவுக்காக பற்றிக் கொண்டிருந்தவள், நடுங்கியவாறு வாழை மரம் விழுவதைப் போலத் திடீரென விழுந்தாள். அந்த அழகானவள் {திரௌபதி} ஒடிந்த கொடி போல விழுவதைக் கண்ட நகுலன் முன்னே ஓடி வந்து அவளைத் தாங்கிப் பிடித்தான். அவன் {நகுலன்}, "ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, பாஞ்சாலன் மகளான இந்தக் கரிய விழியாள் {திரௌபதி}, களைப்பால் தரையில் விழுந்துவிட்டாள். எனவே, ஓ! பரதனின் மகனே {யுதிஷ்டிரரே}, நீர் இவளைக் கவனியும். துன்புறத்தகாதவளும் மெல்ல நடப்பவளுமான இந்த மங்கை {திரௌபதி} இப்படிப்பட்ட கடும் நிலைகளை அடைய நேரிட்டது. பயணக் களைப்பால் இவள் {திரௌபதி} மிகுந்த துன்பத்தை அடைந்திருக்கிறாள். ஓ! வலிமைமிக்க மன்னா {யுதிஷ்டிரரே}, எனவே நீர் இவளைத் தேற்றும்" என்றான் {நகுலன்}.


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "நகுலனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னனும் {யுதிஷ்டிரனும்}, பீமனும், சகாதேவனும் மிகுந்த துக்கத்துடன் அவளை {திரௌபதியை} நோக்கி விரைவாக ஓடி வந்தனர். பலமற்று, முகம் வாடியிருக்கும் அவளைக் கண்ட குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, அவளை {திரௌபதியை} வாரி மடியில் எடுத்துக் கொண்டு புலம்ப ஆரம்பித்தான். யுதிஷ்டிரன், "வசதிக்குப் பழக்கப்பட்ட இவள் {திரௌபதி}, நன்றாகப் பாதுகாக்கப்பட்டு, படுக்கையில் அற்புதமான விரிப்புகள் கொண்ட அறைகளில் தூங்க வேண்டிய இந்த அழகானவள் {திரௌபதி}, இப்படித் தரையில் விழுந்து கிடக்கிறாளே! ஐயோ! அனைத்து அற்புதமான பொருட்களுக்கும் தகுதி வாய்ந்த இவளுடைய {திரௌபதியுடைய} மிருதுவான பாதங்களும், தாமரை போன்ற முகமும் இப்படி என்னால் (மட்டுமே) கருநீல நிறத்தை அடைந்தனவே. ஓ! என்ன காரியம் செய்தேன்! பகடைக்கு அடிமையான முட்டாளாகி, வனவிலங்குகள் நிறைந்த கானகத்தில் கிருஷ்ணையையும் {திரௌபதியையும்} என்னுடன் அழைத்துக் கொண்டு திரிந்தேனே! பாண்டுவின் மகன்களைத் தலைவர்களாக அடைந்தால் மகிழ்ச்சியுடன் இருப்பாள் என்ற நம்பிக்கையிலேயே துருபதர்களின் மன்னனான இவளது தந்தை {துருபதன்} இந்த அகன்ற கண்ணுடையவளை {திரௌபதி} அளித்தான். நம்பிய எதையும் அடையாமல், பயணத்தின் களைப்பினாலும், சோகத்தாலும், பாவியான என்னால் தரையில் விழுந்து உறங்குகிறாளே" என்று புலம்பினான் {யுதிஷ்டிரன்}.

வைசம்பாயனர் {ஜனமேயனிடம்} சொன்னார், "நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் இப்படிப் புலம்பிக் கொண்டிருந்தபோது, தௌமியரும் பிற முக்கிய அந்தணர்களும் அந்த இடத்திற்கு வந்தனர். பிறகு அவர்கள் மரியாதை நிறைந்த தங்கள் ஆசிகளால் அவனை {யுதிஷ்டிரனைச்} சமாதானப்படுத்தினர். ராட்சசர்களை விரட்ட வல்ல மந்திரங்களைச் சொல்லி சில சடங்குகளையும் செய்தனர். (பாஞ்சாலியின்) உடல்நிலை தேறுவதற்கான மந்திரங்களை அந்தப் பெருந்துறவிகளை உரைத்தனர். பாண்டவர்களின் ஆறுதல் தரும் உள்ளங்கைகளால் தொடப்பட்டும், நீர்த்துளிகள் அடங்கிய குளிர்ந்த காற்று வீசப்பட்டும் ஆறுதல் அடைந்த அவள் {திரௌபதி}, படிப்படியாகப் புலனுணர்வை அடைந்தாள். களைப்படைந்த அந்த அப்பாவிப் பெண் {திரௌபதி} புலனுணர்வு அடைவதைக் கண்ட பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்}, அவளை {திரௌபதியை} மான் தோலில் கிடத்தி ஓய்வெடுக்கச் செய்தனர். அனைத்து மங்கலக் குறிகளும் கொண்டு சிவந்திருந்த அவளுடைய {திரௌபதியுடைய} கால்களை, வில்லின் நாணால் வடுபட்ட தங்கள் கைகளால் நகுலனும் சகாதேவனும் மெல்லப் பிடித்து விட்டனர். குருக்களில் முதன்மையானவனான நீதிமானான யுதிஷ்டிரனும் அவளுக்கு ஆறுதல் அளித்தவாறே பீமனிடம், "ஓ! பீமா, (நம்முன்னால்) இன்னும் கடக்க வேண்டிய கடுமை நிறைந்தனவும் பனிமூடியனவுமான பல மலைகள் உள்ளன. நீண்ட கரமுடையவனே {பீமா}, இந்தக் கிருஷ்ணை {திரௌபதி} இவை யாவையும் எப்படிக் கடக்கப் போகிறாள்?" என்று கேட்டான். அதற்குப் பீமன், "ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, உம்மையும், இந்த இளவரசியையும் {திரௌபதியையும்}, மனிதர்களில் காளையரான இந்த இரட்டையர்களையும் {நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோரையும்} நானே சுமந்து செல்ல முடியும். எனவே, ஓ! மன்னர் மன்னா {யுதிஷ்டிரரே}, உமது மனதில் துயரத்தை வளர்த்துக் கொள்ளாதீர். அல்லது, ஓ! பாவமற்றவரே {யுதிஷ்டிரரே}, உமது உத்தரவின் பேரில், என் பலத்துக்குச் சமமானவனும், விண்ணை அதிகாரம் செய்யவல்லவனும் ஹிடிம்பையின் மகனுமான வலிமைமிக்கக் கடோத்கசன் நம் அனைவரையும் சுமந்து செல்வான்" என்றான் {பீமன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பிறகு யுதிஷ்டிரனின் அனுமதியுடன், பீமன் தனது ராட்சச மகனை நினைத்தான். தந்தையால் {பீமனால்} நினைக்கப்பட்ட மாத்திரத்தில் பக்திமிக்கக் கடோத்கசன் பாண்டவர்களையும், அந்தணர்களையும் வணங்கியவாறு கூப்பிய கரங்களுடன் அங்கே தோன்றினான். அவர்களும் அவனை {கடோத்கசனை} பாசத்துடன் விசாரித்தனர். பிறகு அவன் {கடோத்கசன்}, கடும் பராக்கிரமம் கொண்ட தனது தந்தையிடம் {பீமனிடம்}, "உம்மால் நினைக்கப்பட்டதால், நான் உம்மைச் சேவிப்பதற்காக அதிவிரைவாக வந்தேன். ஓ! நீண்ட கரம் கொண்டவரே, எனக்குக் கட்டளையிடும். நீர் என்ன கட்டளையிட்டாலும் அதை என்னால் நிச்சயம் செய்ய முடியும்" என்றான். இதைக் கேட்ட பீமசேனன், அந்த ராட்சசனைத் {கடோத்கசனைத்} தனது மார்புறத் தழுவினான்.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்