Monday, May 19, 2014

நிவாதகவசர்கள்! - வனபர்வம் பகுதி 168

Nivata Kavachas! | Vana Parva - Section 168 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

மாதலி செலுத்திய இந்திரனின் தேரில் சென்ற அர்ஜுனன் நிவாதகவசர்களின் நகரத்தை அடைந்தது; அர்ஜுனனின் சங்கு முழக்கத்தில் பயந்திருந்த நிவாதகவசர்களோடு அவன் போர் புரியத் தொடங்கியது...

அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்} சொன்னான், "சில இடங்களில் நடைபெற்ற பெருமுனிவர்களின் துதிகளுக்குப் பிறகு நான், (ஒரே நீளமாகத் தொடர்ந்து சென்று) வற்றாத நீர்த் தலைவனான கடலைக் கண்டேன். பாயும் பாறைகள் இடம் பெயர்வது போலவும், ஒன்றாகச் சந்தித்து உருண்டு செல்வது போலவும் அலைகள் எழும்பின. அங்கே ரத்தினங்கள் நிறைந்த மரப்பட்டைகள் சுற்றிலும் (காணப்பட்டது) இருந்தன. அங்கே திமிங்கலங்களும், ஆமைகளும், மகரங்களும் நீரில் பாதி மூழ்கியிருக்கும் பாறைகளைப் போலத் தெரிந்தன. சுற்றிலும் நீரில் மூழ்கியிருந்த ஆயிரக்கணக்கான உருளையான சங்குகள் இரவு நேர வானில் தெரியும் ஒளிபொருந்திய மேகங்களைப் போலத் தெரிந்தன. ஆயிரங்களுக்கு மேல் ஆயிரங்களாகக் குவியல் குவியலாக ரத்தினங்கள் மிதந்தன. சுழற்சியுடன் கூடிய வன்மையான காற்று வீசிக்கொண்டிருந்தது பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது.

சக்திமிக்க அலைகள் கொண்ட அனைத்து நீர்நிலைகளின் தலைவனைக் {கடலைக்} கண்ட பிறகு, அங்கிருந்து குறைந்த தூரத்திலேயே தானவர்கள் நிறைந்த அந்தப் பேய் நகரத்தைக் கண்டேன். பூமிக்கு அடியில் விரைவாகச் சென்று கொண்டிருந்த தானவர்கள் இருந்த அங்கேயும் கூட, தேரைச் செலுத்துவதில் திறன்மிக்க மாதலி {இந்திரனின் தேரோட்டி}, அத்தேரில் உறுதியாக அமர்ந்து சக்தியுடன் அதைச் செலுத்தினான். சில இடங்களில் மோதி, அந்நகரத்தைத் தனது தேரின் சடசடப்பொலியில் நடுங்க வைத்தான் {மாதலி}. வானத்தில் ஏற்படும் மேக கர்ஜனை போன்று இருந்த அத்தேரின் சடசடப்பொலியைக் கேட்ட தானவர்கள் என்னைத் தேவர்கள் தலைவன் {இந்திரன்} என்று எண்ணி அச்சமுற்றனர். பிறகு இதயத்தால் பயந்திருந்த அவர்கள் {தானவர்கள்} அனைவரும், தங்கள் கரங்களில் விற்களையும், கணைகளையும், வாள்களையும், ஈட்டிகளையும், கோடரிகளையும், கதாயுதங்களையும், தண்டங்களையும் தாங்கியபடி நின்றனர்.

பிறகு தங்கள் நகரத்தைக் காக்க வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்த அச்சம் நிறைந்த மனம் கொண்ட தானவர்கள், அங்கிருக்கும் எதையும் கண்டுபிடிக்காதவாறு {நகரத்தின்} வாயில்களை அடைத்தனர். அதன்பிறகு பயங்கர ஒலி கொண்ட தேவதத்தம் என்ற எனது சங்கை எடுத்து, மிகுந்த உற்சாகத்தோடு மீண்டும் மீண்டும் எனது காற்றைச் செலுத்தினேன் {ஊதினேன்}. அந்த முழுச் சூழலையே நிறைத்த அவ்வொலி எதிரொலிகளை எழுப்பியது. இதனால் பெரும் உயிரினங்கள் பயந்து (தங்களை) ஒளித்துக் கொண்டன. பிறகு, ஓ! பாரதா {யுதிஷ்டிரரே}, திதியின் வாரிசுகளான அந்த நிவாட கவசர்கள் ஆபரணங்கள் பூண்டபடி ஆயிரக்கணக்கில் தங்கள் தோற்றத்தைக் காட்டினர். வித்தியாசமான கவசங்களைப் பூண்டு, தங்கள் கரங்களில் பலதரப்பட்ட ஆயுதங்களும், இரும்பு ஈட்டிகளும், கதாயுதங்களும், தண்டங்களும், சூலங்களும், பட்டாக்கத்திகளும், சக்கரங்களும், சதாக்னிகளும், பூசுண்டிகளும், பலதரப்பட்ட வாட்களையும் எடுத்துக் கொண்டனர்.

ஓ! பாரதர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, ரதம் செலுத்த வேண்டிய முறை குறித்து நிச்சயித்துக் கொண்ட மாதலி, தரை அளவில் தனது குதிரைகளைச் செலுத்தினான். விரைவாகச் செல்லும் அந்தக் குதிரைகளை அவன் செலுத்திய வேகத்தால் என்னால் எதையும் பார்க்க முடியவில்லை. இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தானவர்கள் வித்தியாசமான தங்கள் இசைக்கருவிகள் மூலம் ஒலியெழுப்பினர். அவ்வொலியால் மதியிழந்த அச்சமுற்ற மீன்கள் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் திடீரென விரைந்து ஓடின. ஒரு பெரும் படை எனக்கு எதிராகக் கிளம்பியது. அந்தப் பேய்கள் எனக்கெதிராக நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் கூரிய கணைகளை அடித்தனர்.

பிறகு, ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, நிவாதகவசர்களை அழிக்கும்படியாக அந்தப் பேய்களுக்கும் எனக்குமான பயங்கரப் போர் மூண்டது. அந்தப் பெரும்போருக்கு தேவ முனிவர்களும், தானவ முனிவர்களும், பிரம்ம முனிவர்களும், சித்தர்களும் வந்திருந்தனர். வெற்றியை விரும்பிய அம்முனிவர்கள், தாரைக்கான (நடைபெற்ற) போரில் இந்திரனுக்குச் செய்தது போல (துதி) என்னைத் துதித்து இனிய வார்த்தைகள் கூறினர்.

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்