Tuesday, August 12, 2014

சகுனி அளித்த உறுதி! - வனபர்வம் பகுதி 237

The assurance given by Sakuni!  | Vana Parva - Section 237  | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)

கர்ணன், துவைதவனம் செல்வதற்கு துரியோனனுக்கு அனுமதியளிக்குமாறு திருதராஷ்டிரனிடம் வேண்டியது; திருதராஷ்டிரன் முதலில் மறுத்து, பின்பு ஏற்றது; துரியோதனன் துவைதவனத்தை அடைந்தது....

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பிறகு அனைவரும் மன்னன் திருதராஷ்டிரனைக் காணச் சென்றனர். ஓ! ஜனமேஜயா, அவனைக் கண்டு, அவனது நலம் விசாரித்து, பதிலுக்கு அவனால் {திருதராஷ்டிரனால்} அவர்களின் நலம் விசாரிக்கப்பட்டனர். பிறகு, ஏற்கனவே அவர்களால் ஏவப்பட்ட சமங்கன் {சங்கவன்} என்ற பெயர் படைத்த ஒரு மாட்டு இடையன் மன்னனை அணுகி கால்நடைகளைக் குறித்துப் பேசினான். ஓ! மன்னா {ஜனமேஜயா}, பின்பு ராதையின் மகனும் {கர்ணனும்}, சகுனியும் சேர்ந்து திருதராஷ்டிரனிடம், "ஓ! கௌரவரே {திருதராஷ்டிரரே}, நமது கால்நடை நிலையங்கள் இப்போது இனிமையான இடத்தில் இருக்கின்றன. அவற்றை எண்ணுவதற்கும், குட்டிகளைக் குறித்துக் கொள்வதற்கும் நேரம் வந்துவிட்டது {கணக்கெடுப்பு எடுப்பதற்கு நேரம் வந்துவிட்டது}. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இதுவே உமது மகன் வேட்டைக்குச் செல்வதற்கு அற்புதமான காலமாகும். எனவே, துரியோதனன் அங்குச் செல்வதற்கு அனுமதி கொடுப்பதே உமக்குத் தகும்" என்றனர்.




திருதராஷ்டிரன், "ஓ! குழந்தாய்! மான் துரத்தலும் {வேட்டையாடுவதும்}, கால்நடைகளை ஆய்வு செய்தலும் மிகச் சரியானதே! உண்மையில் இதுவிஷயத்தில் இடையர்கள் நம்பத்தக்கவர்கள் அல்ல என்பதே என் எண்ணம். ஆனால், மனிதர்களில் புலிகளான பாண்டவர்கள் அந்தக் கால்நடை நிலையங்களுக்கு அருகில் இருப்பதாக நாம் கேள்விப்படுகிறோம். எனவே, நீங்கள் அங்குச் செல்லக்கூடாது என்றே நான் நினைக்கிறேன். வஞ்சகமான வழிகளில் வீழ்த்தப்பட்ட அவர்கள் பெரும் துயரத்துடன் அந்த ஆழ்ந்த கானகத்தில் வாழ்கிறார்கள். ஓ! ராதேயா {கர்ணா}, அவர்கள் பெரும் பலம்மிக்க வீரர்களும், இயற்கையிலேயே திறன் வாய்ந்தவர்களும் ஆவார்கள். இப்போது அவர்கள் தவத்திற்குத் தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள். மன்னன் யுதிஷ்டிரன் கோபம் தூண்டப்பட்டுப் பாதிப்படைய மாட்டான். ஆனால் பீமன், இயற்கையிலேயே உணர்ச்சிகள் மிக்கவன் ஆவான். யக்ஞசேனனின் மகள் {திரௌபதி}, தானே சக்தியாக இருக்கிறாள். கர்வமும், அறியாமையம் கொண்ட நீங்கள் நிச்சயம் குற்றம்புரிவீர்கள். தவத்தகுதி பெற்ற அவள் நிச்சயம் உங்களை எரித்துவிடுவாள். அல்லது வாள்களும் ஆயுதங்களும் கொண்ட அந்த வீரர்கள் {பாண்டவர்கள்} உங்களை எரித்துவீடுவார்கள்! அல்லாமலும், எண்ணிகையில் சக்தியுடைய நீங்கள் {எண்ணிக்கையில் அதிகமான நீங்கள்} அவர்களை எந்த விதத்திலாவது காயப்படுத்த முனைந்தால், அது மிகவும் முறையற்ற செயலாகிவிடும். நீங்கள் அதில் வெல்லவும் முடியாது என்பது எனது எண்ணம்.


வலிமையான கரங்கள் கொண்ட அர்ஜுனனும் கானகம் திரும்பிவிட்டான். ஆயுதங்கள் பெற்றிருக்காத போதே பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்} முழு உலகையும் வென்றிருக்கிறான். இப்போது ஆயுதங்களைப் பெற்றிருக்கிற பலமிக்க வீரனான அவனால் {அர்ஜுனனால்}, உங்கள் அனைவரையும் கொல்ல முடியாதா? அல்லது எனது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து நீங்கள் கவனமாக அங்குச் சென்றாலும், தொடர்ந்து உண்மையற்றவர்களாக இருந்த காரணத்தால் மனக்கலக்கம் அடையும் உங்களால் அங்கு மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அல்லது உங்களுடைய ஏதாவது ஒரு படைவீரன் யுதிஷ்டிரனுக்குத் தீங்கு செய்தால், அது முன்பே திட்டமிடப்படாத செயலாக இருந்தாலும், அக்குற்றம் உங்களையே சாரும். எனவே, கணக்கெடுக்கும் வேலைக்கு நம்பிக்கைக்குரிய வேறு ஏதாவது மனிதன் செல்லட்டும். பாரதா {இங்கு துரியோதனா என்ற பொருள் வரும் என நினைக்கிறேன். ஆனால் திருதராஷ்டிரன் கர்ணனிடம்தான் பேச ஆரம்பிக்கிறான்}, நீயே அங்குச் செல்வதை நான் முறையாக எண்ணவில்லை" என்றான் {திருதராஷ்டிரன்}.

சகுனி, "பாண்டு மகன்களின் மூத்தவன் {யுதிஷ்டிரன்} அறநெறிகளை அறிந்தவன். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சபைக்கு மத்தியில், பனிரெண்டு வருடங்கள் தான் கானகவாசம் செய்வதாக அவனே சூளுரைத்திருக்கிறான். பாண்டுவின் மற்ற மகன்கள் அனைவரும் அறம் சார்ந்தவர்களும், யுதிஷ்டிரனுக்குக் கீழ்ப்படிந்தவர்களும் ஆவர். குந்தியின் மகனான யுதிஷ்டிரன், நம்மிடம் எப்போதும் கோபம் கொள்ள மாட்டான். உண்மையில், வேட்டைப் பயணம் செல்லவே நாங்கள் மிகவும் விரும்புகிறோம். அப்படிச் செல்லும் போது, நமது கால்நடைகளைக் கணக்கிடுவதை மேற்பார்வையிடும் வாய்ப்பையும் பெறுவோம். பாண்டுவின் மகன்களைக் காண எங்களுக்கு எண்ணமில்லை. பாண்டவர்கள் வசிக்கும் இடத்திற்கு நாங்கள் செல்ல மாட்டோம். அதே போல எங்கள் தரப்பில் இருந்து எந்தத் தவறான நடவடிக்கையும் எழாது" என்றான் {சகுனி}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "சகுனியால் இப்படிச் சொல்லப்பட்ட அந்த மனிதர்களில் தலைவனான திருதராஷ்டிரன், தனக்கு அதில் அதிக விருப்பம் இல்லாவிட்டாலும், துரியோதனனும் அவனது ஆலோசகர்களும் {அமைச்சர்களும், கர்ணனும், சகுனியும்} அங்குச் செல்ல அனுமதி கொடுத்தான். அந்த ஏகாதிபதியால் {திருதராஷ்டிரனால்} அனுமதி அளிக்கப்பட்ட காந்தாரிக்குப் பிறந்த அந்த இளவரசன் {துரியோதனன்}, கர்ணனின் துணையுடன், பெரும் படை சூழ சென்றான். அவனுடன் {துரியோதனனுடன்}, துச்சாசனன், பெரும் புத்திக்கூர்மை கொண்ட சுபலனின் மகன் {சகுனி}, அவனது பல தம்பிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மங்கையரும் சென்றனர். துவைதவனம் என்ற பெயரால் அறியப்பட்ட அத்தடாகத்தைக் காண தனது மனைவியருடன் அந்த வலிமைவாய்ந்த கரங்கள் கொண்ட இளவரசன் புறப்பட்ட போது, (ஹஸ்தினாபுரத்தின்} குடிமக்களும் தங்கள் தங்கள் மனைவியருடன் அவனைத் தொடர்ந்தனர். எட்டாயிரம் {8000} தேர்கள், முப்பதாயிரம் {30000} யானைகள், ஒன்பதாயிரம் {9000} குதிரைகள், பல்லாயிரம் தரைப்படை வீரர்கள், கடைகள், கூடாரங்கள், வணிகர்கள், பாடகர்கள், வேட்டையில் நன்கு பயின்ற நூற்றுக்கணக்கானவர்களும் ஆயிரக்கணக்கானவர்களும் அவனைத் தொடர்ந்து சென்றனர். ஓ! மன்னா {ஜனமேஜயா}, அம்மன்னன் {துரியோதனன்} புறப்பட்ட போது, அவனைத் தொடர்ந்து சென்ற பெரிய மக்கள் கூட்டம், மழைக்காலக் காற்றின் ஆழ்ந்த இரைச்சலைப் போலப் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது. தனது தொண்டர்களுடனும், வாகனங்களுடனும் துவைதவனத்தை அடைந்த மன்னன் துரியோதனன், {அத்தடாகத்திலிருந்து} நான்கு மைல்கள் {கவ்யூதி அல்லது இரண்டு க்ரோசம்} தொலைவில் தங்கினான்.

இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்