Wednesday, August 13, 2014

வீரர்களைத் தடுத்த கந்தர்வர்கள்! - வனபர்வம் பகுதி 238

Gandharvas forbode the soldiers!  | Vana Parva - Section 238  | Mahabharata In Tamil

(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)

இனிமையான காடுகளைக் கடந்து கடைசியாகத் துரியோதனன் தடாகத்தை அடைவது; தடாகத்தின் அருகில் கேளிக்கை விடுதிகளைக் கட்ட துனது பணியாட்களிடம் துரியோதனன் சொன்னது; அவ்வீரர்கள் கந்தர்வர்களால் தடுக்கப்பட்டது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பிறகு மன்னன் துரியோதனன் காடுவிட்டு காடு நகர்ந்து, கடைசியாகக் கால்நடை நிலையங்களை அடைந்து, தனது துருப்புகளை நிறுத்தினான். அவனின் {துரியோதனனின்} பணியாட்கள், நீரும் மரங்களும் அபரிமிதமாக இருக்கும் இனிமையான நன்கு அறியப்பட்ட இடத்தில் அவனுக்காக {துரியோதனனுக்காக} அனைத்து வசதிகளுடன் கொண்ட ஒரு வசிப்பிடத்தைக் கட்டினர். அந்த அரச வசிப்பிடத்திற்கு அருகிலேயே கர்ணனுக்கும், சகுனிக்கும், மன்னனின் {துரியோதனனின்} தம்பிகளுக்கும் தனித்தனியே வசிப்பிடங்களை எழுப்பினர். நாற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தனது கால்நடைகளை மன்னன் {துரியோதனன்} கண்டு, அதன் உறுப்புகளையும், குறிகளையும் ஆய்வு செய்து கணக்கெடுத்தான்.


கன்றுகளுக்கு அடையாளம் இடச் செய்து, பிறகு பழக்கப்படுத்தப்பட வேண்டிய கன்றுகள் குறித்து {இடையர்களை} குறிப்புகள் எடுக்க வைத்தான். மேலும் அவன் {துரியோதனன்}, எந்தப் பசுக்களின் கன்றுகள் இன்னும் பால் மறக்க வில்லை என்பதையும் கணக்கிட வைத்தான். மூன்று வயது முடிந்த ஒவ்வொரு கன்றையும் அடையாளம் இட்டு எண்ணி கணக்கிடும் வேலைகளை முடித்த அந்தக் குரு இளவரசன் {துரியோதனன்}, மாட்டு இடையர்களால் சூழப்பட்டு, மகிழ்ச்சியாக விளையாடி உலவ ஆரம்பித்தான். {அவனுடன் சென்றிருந்த} ஆயிரக்கணக்கான குடிமக்களும், படைவீரர்களும் அக்காட்டில் தங்களுக்குப் பிடித்தவாறெல்லாம் தேவர்களைப் போல விளையாடிக் கொண்டிருந்தனர். பாடுவது, ஆடுவது, இசைக்கருவிகளை இசைப்பது ஆகியவற்றில் நிபுணத்துவம் கொண்ட இடையர்களும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கன்னியர்களும் {virgins}, திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} இன்பங்களைக் கவனித்துக் கொள்ளத் தொடங்கினர். அரசகுல மங்கையரால் சூழப்பட்ட மன்னன் {துரியோதனன்}, தன்னை மகிழ்விக்க இருப்பவர்கள் மத்தியில் செல்வம், உணவு மற்றும் பல்வேறு பானங்களை அவர்கள் விருப்பத்திற்கேற்ப மகிழ்ச்சிகரமாகப் பிரித்துக் கொடுத்தான்.


தனது தொண்டர்களால் கவனிக்கப்பட்ட அம்மன்னன் {துரியோதனன்}, சுற்றிலும் இருந்த கழுதைப் புலிகளையும், எருமைகளையும், மான்களையும், காயல்களையும் {கவ்ய விலங்குகளையும்}, கரடிகளையும், பன்றிகளையும் கொல்ல ஆரம்பித்தான். அந்த ஆழ்ந்த கானகத்தில் ஆயிரக்கணக்கான விலங்குகளைத் தனது கணைகளால் துளைத்த அம்மன்னன் {துரியோதனன்}, அக்கானகத்தின் மிக இனிமையான பகுதிகளில் இருந்து மான்களைப் பிடிக்கச் செய்தான். ஓ! பாரதா {ஜனமேஜயா}, பால் குடித்து, இன்னும் பிற மதுரமான பொருட்களையும் உண்டு, பல இனிமையான காடுகளையும், மலரில் இருந்து கிடைத்த தேனால் மயக்கம் கொண்டு அலையும் வண்டுகளும், மயில்களின் ஓசையும் நிறைந்த தோப்புகளையும் கண்டு, கடைசியில் அம்மன்னன் துவைதவனத்தின் புனிதமான தடாகத்திற்கு வந்து சேர்ந்தான்.

அந்த மன்னன் அடைந்த பகுதி, மலரின் தேனால் மயக்கமுற்றிருந்த வண்டுகளாலும், நீல நிறத் தொண்டைகளில் இருந்து மதுரமான குரலை எழுப்பும் மயில்களும் நிறைந்து, ஏழிலைம்பாலைகள் {Saptacchadas}, புன்னை {Punnaga}, மகிழ {Vakula} மரங்களின் நிழலாலும் நிறைந்திருந்தது. உயர்ந்த செழிப்பையுடைய அம்மன்னன் {துரியோதனன்}, வஜ்ரத்தைத் தாங்கிச் செல்லும் தேவர்களின் தலைவனைப் {இந்திரனைப்} போல அங்கே சென்றான். ஓ! குருகுலத்தில் சிறந்தவனே {ஜனமேஜயா}, உயர்ந்த புத்தி கொண்ட நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அப்போது அந்தத் தடாகத்தின் அருகில், தனது மனைவியான துருபதன் மகளுடன் {திரௌபதியுடன்} சேர்ந்து, {ஒரு} பகலில் செய்யப்படும் ராஜரிஷி என்ற வேள்வியை, அந்த வனத்தில வாழும் மனிதர்கள் மற்றும் தேவர்களின் ஒப்புதலோடு செய்து கொண்டிருந்தான்.

ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்த இடத்தை அடைந்த துரியோதனன், தனது ஆயிரக்கணக்கான மனிதர்களிடம், "விரைவாக இங்கே கேளிக்கை {இன்ப} வீடுகள் {உத்தியானவனங்கள்} கட்டப்படட்டும்" என்று கட்டளையிட்டான். மன்னனின் உத்தரவின் பேரில் குற்றேவல் செய்பவர்கள் அந்தக் குருகுலத் தலைவனிடம் "அப்படியே ஆகட்டும்" என்ற வார்த்தைகளைச் சொல்லி, இன்பவீடுகளைக் கட்ட அந்தத் தடாகத்தின் கரையை நோக்கிச் சென்றனர். திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} தேர்ந்தெடுக்கப்பட்ட படைவீரர்கள் அந்தத் தடாகத்தின் பகுதியை அடைந்து, அந்த வனத்தின் வாயிலுக்குள் நுழைய முயன்ற போது, அங்கே எண்ணிலடங்கா கந்தர்வர்கள் தோன்றி அவர்களை நுழைய விடாமல் தடுத்தனர். ஏனெனில், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, தனது தொண்டர்களுடன் கூடிய கந்தர்வர்களின் மன்னன் {சித்திரசேனன்}, குபேரனின் வசிப்பிடத்தில் இருந்து முன்பே அங்கு வந்திருந்தான். அந்தக் கந்தர்வர்களின் மன்னன் பல்வேறு அப்சரசு இனங்களின் துணையோடும், தேவர்களின் மகன்களோடும் வந்திருந்தான். விளையாட்டுக்கும், கேளிக்கைக்குமாக அங்கு வந்திருந்த அவர்களால், அந்த வனம் அனைத்து மூலைகளிலும் நன்றாக அடைக்கப்பட்டிருந்தது.

கந்தர்வர்களின் மன்னனால் அத்தடாகம் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட, (குரு) மன்னனின் {துரியோதனனின்} பணியாட்கள், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, மன்னன் துரியோதனன் இருந்த இடத்திற்குச் சென்றனர். இவ்வார்த்தைகளைக் கேட்ட துரியோதனன், போரில் வெல்வதற்குக் கடினமான எண்ணற்ற தனது போர் வீரர்களை அழைத்து, அந்தக் கந்தர்வர்களை விரட்டுமாறு உத்தரவிட்டான். குரு படையின் முன்னணி வீரர்களான அவர்கள் மன்னனின் {துரியோதனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டு, துவைதவனத்தின் தடாகத்திற்குச் சென்று, அந்தக் கந்தர்வர்களிடம், "திருதராஷ்டிரன் மகனும் பலமிக்க மன்னனுமான துரியோதனன், இந்த இடத்தில் விளையாடுவதற்காக வருகிறார். எனவே, நீங்கள் ஒதுங்கி நில்லுங்கள்!" என்றனர்.

ஓ! மன்னா {ஜனமேஜயா}, இப்படிச் சொல்லப்பட்ட அந்தக் கந்தர்வர்கள் சிரித்தபடி, அந்த மனிதர்களிடம் கடும் வார்த்தைகளால், "உங்கள் தீய மன்னனான துரியோதனன் அறிவற்றவனாக இருக்க வேண்டும். உண்மையில் அப்படியில்லாமல் இருந்தால், சொர்க்க வாசிகளான எங்களைத் தனது வேலைக்காரர்களைப் போல எப்படி அவனால் {துரியோதனனால்} இப்படிக் கட்டளையிட முடியும்? முன்யோசனை இல்லாத நீங்களும் சந்தேகமற மரணத்தின் அருகில் இருக்கிறீர்கள். நீங்களும் அறிவற்ற முட்டாள்களாக இருப்பதால்தான் இந்தச் செய்தியை எங்களுக்குக் கொண்டு வரத் துணிந்திருக்கிறீர்கள்! குருக்களின் மன்னன் இருக்கும் இடத்திற்கு விரைவில் திரும்பிச் செல்லுங்கள். இல்லையெனில், இன்றே யமனின் வசிப்பிடம் செல்லுங்கள்" என்றனர். கந்தர்வர்களால் இப்படிச் சொல்லப்பட்ட மன்னனின் படையில் இருக்கும் மேம்பட்ட பாதுகாவலன் {படைத்தலைவன்}, மன்னன் துரியோதனன் இருந்த இடத்திற்குத் திரும்ப ஓடினான்."
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்